search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police encounter"

    • மொபைலை பறி கொடுக்காமல் இருக்க, கீர்த்தி கெட்டியாக பிடித்து கொண்டார்
    • காவல் அதிகாரிகளின் துப்பாக்கி சூட்டில் ஜிதேந்திராவிற்கு காலில் குண்டடி பட்டது

    உத்தர பிரதேச மாநில காசியாபாத் நகரின் ஏபீஈஎஸ் பொறியியல் கல்லூரியில் (ABES Engineering College) முதலாம் ஆண்டு பி.டெக் படித்து வந்தவர் 19 வயதான கீர்த்தி சிங்.

    கீர்த்தி, கடந்த அக்டோபர் 27 அன்று காசியாபாத்தின் மசூரி பகுதியிலிருந்து ஒரு பணிக்காக ஹாபூர் வரை பேருந்தில் செல்ல வேண்டியிருந்தது. இதனால் அங்குள்ள பேருந்து நிலையத்தை அடைய ஒரு ஆட்டோ ரிக்ஷாவில், தனது தோழி தீக்ஷா ஜிண்டாலுடன் தேசிய நெடுஞ்சாலையில் (NH-9) சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர் ஆட்டோவிற்கு அருகில் ஒரு மோட்டார் பைக் வந்தது. அதை பல்பீர் என்பவர் ஓட்டி வந்தார்; ஜிதேந்திரா (28) என்பவர் பின்னால் அமர்ந்திருந்தார். கீர்த்தி சென்ற ஆட்டோவிற்கு அருகில் அந்த மோட்டார் பைக் இணையாக வந்தது.

    அப்போது ஜிதேந்திரா, திடீரென கீர்த்தியின் கையிலிருந்த மொபைல் போனை பறிக்க முயன்றார். இதை எதிர்பாராத கீர்த்தி, மொபைலை பறி கொடுக்காமல் இருக்க அதனை கெட்டியாக பிடித்து கொண்டார். அந்த திருடர்கள் பைக்கை வேகமாக செலுத்தியதால், கீர்த்தி ஆட்டோவிலிருந்து கீழே விழுந்து, விழுந்த வேகத்தில் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார்.

    இந்த விபத்தில் கீர்த்திக்கு பலமான காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அங்குள்ளவர்கள் உதவியுடன் கீர்த்தி அருகில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    ஆனால் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, சிகிச்சை பலனின்றி துரதிர்ஷ்டவசமாக கீர்த்தி உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளை காவல்துறை தீவிரமாக தேடி வந்ததில் பைக்கை ஓட்டி வந்த பல்பீர் காவலர்களிடம் சிக்கினார்.

    இதற்கிடையே, காவலர்கள் கங்கா நதி சாலையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு மோட்டார் பைக்கில் கீர்த்தியை தாக்கிய ஜிதேந்திராவும் மற்றொரு நபரும் சென்றனர். அவர்களை காவல்துறை அதிகாரிகள் நிற்க சொல்லி சைகை செய்தும் நிற்காமல் வேகமாக தப்பித்தனர்.

    உடனடியாக காவல் அதிகாரிகள் அவர்களை பின் தொடர்ந்த போது, இருவரில் ஒருவர் துப்பாக்கியால் காவலர்களை சுட தொடங்கினார். இதில் காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்து காவல் அதிகாரிகள் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர்.

    இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் ஜிதேந்திரா, காலில் குண்டடிபட்டு கீழே விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜிதேந்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தப்பியோடி விட்ட அவருடன் பயணம் செய்த மற்றோருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    கடந்த 2020ல் குண்டர்கள் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஜிதேந்திராவிற்கு எதிராக பல காவல் நிலையங்களில் 12 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாநிலம் முழுவதும் இதுவரை 10,900 என் கவுண்டர்கள் நடந்துள்ளன.
    • 185-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கார் பகுதியை சேர்ந்தவர் குர்பான். பிரபல ரவுடி.

    உத்தரபிரதேச மாநிலத்தின் கவுசாம்பி, பிரதாப்கார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடு, கடைகளில் புகுந்து கொள்ளை அடிப்பதில் குர்பான் கில்லாடி. மேலும் தன்னை எதிர்த்த பலரையும் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் குர்பான் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி என 13-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த குர்பானை பிடிக்க உத்தரபிரதேச போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். குர்பான் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் உத்தரபிரதேச போலீசார் அறிவித்து இருந்தனர். இதுபோல சுல்தான்பூர் போலீசாரும் குர்பான் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என கூறியிருந்தனர்.

    இந்த நிலையில் கவுசாம்பி மாவட்டம் மஞ்சன்பூர் பகுதியில் உள்ள ஒரு சர்க்கரை ஆலை அருகே குர்பான் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடி படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    இன்று அதிகாலை 5 மணி அளவில் அதிரடி படை போலீசார், மஞ்சன்பூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரவுடி குர்பானை போலீசார் கண்டுபிடித்தனர். அவனை சரணடையும்படி போலீசார் கூறினர். ஆனால், அவன் சரணடைய மறுத்து போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். போலீசாரும் எதிர்தாக்குதல் நடத்தினர்.

    போலீசார் நடத்திய என்கவுண்டரில் ரவுடி குர்பான் குண்டு பாய்ந்து சரிந்து விழுந்தான். அவனை மீட்ட போலீசார், அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கவுசாம்பி மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரிஜேஷ் ஸ்ரீவத்சவா கூறியதாவது:-

    கவுசாம்பி மஞ்சன்பூரில் ரவுடி ஒருவர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அதிரடி படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்களை பார்த்ததும் அங்கு பதுங்கி இருந்த ரவுடி போலீசாரை நோக்கி சுட்டான். போலீசாரும் திருப்பி சுட்டதில் அவன் மயங்கி விழுந்தான். போலீசார் அவனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை நடத்தியதில் அந்த ரவுடி இறந்திருப்பது தெரியவந்தது.

    இறந்த ரவுடி யார்? என விசாரித்த போது, அவன் போலீசார் தேடிய குர்பான் என தெரியவந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உத்தரபிரதேச முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் கடந்த 2017-ம் ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து ரவுடிகளை ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்காக சிறப்பு அதிரடி படை அமைக்கப்பட்டு அவர்கள் ரவுடிகளை வேட்டையாடி வருகிறார்கள்.

    மாநிலம் முழுவதும் இதுவரை 10,900 என் கவுண்டர்கள் நடந்துள்ளன. இதில் 185-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்று குர்பான் என்ற ரவுடியும் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.

    போலீஸ் என்கவுண்ட்டரில் பலியான ரவுடி ஆனந்தன் பிரேத பரிசோதனை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நேற்று நடந்தது.
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் போலீஸ்காரர் ராஜவேலுவை (வயது 35) அரிவாளால் வெட்டிய வழக்கில் ராயப்பேட்டை பி.எம்.தர்கா பகுதியை சேர்ந்த 9 ரவுடிகள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இதில் ஆனந்தன் (25) என்ற ரவுடி, போலீஸ்காரர் ராஜவேலுவின் ‘வாக்கி-டாக்கி’யை திருடி தரமணி பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள புதர் பகுதியில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன், சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா ஆகியோர் ரவுடி ஆனந்தனை மட்டும் தனியாக போலீஸ் ஜீப்பில் தரமணி பகுதிக்கு அழைத்து சென்றனர்.

    சம்பவ இடத்தில் ‘வாக்கி-டாக்கி’யை எடுக்கும்போது, ரவுடி ஆனந்தன் அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென்று சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவின் கையை வெட்டினார். பின்னர் உதவி கமிஷனர் சுதர்சனத்தையும் தாக்க முயன்றார். இதையடுத்து அவர் மீது ‘என்கவுண்ட்டர்’ பிரயோகம் நடத்தப்பட்டது. உதவி கமிஷனர் சுதர்சன் ரவுடி ஆனந்தனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அவரது இடதுபக்க மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் அவர் பலியானார்.

    இதையடுத்து அவரது உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இரவோடு இரவாக அவரது உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறைக்கு மாற்றப்பட்டது.


    ரவுடி ஆனந்தன் உடலை பார்ப்பதற்காக வந்த மாஜிஸ்திரேட்டு சாண்டில்யன்


    தமிழகத்தில் நடைபெறும் ‘என்கவுண்ட்டர்’ சம்பவங்களை பொறுத்தவரையில் அரசு சார்பில் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும். அதன்படி ரவுடி ஆனந்தன் என்கவுண்ட்டர் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சைதாப்பேட்டை கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு சாண்டில்யன் நியமிக்கப்பட்டார்.

    அவர் உடனடியாக விசாரணை களத்தில் இறங்கினார். தரமணியில் என்கவுண்ட்டர் நடந்த இடத்தை நேற்று காலை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மதியம் 12.20 மணியளவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டிருந்த ரவுடி ஆனந்தன் உடலை வந்து பார்வையிட்டார். ஆனந்தன் உடலை அவரது சகோதரர் அருண், சித்தப்பா மனோகரன் ஆகியோர் மாஜிஸ்திரேட்டு சாண்டில்யன் அடையாளம் காட்டினார்.

    பின்னர் ஆனந்தன் உடலில் எத்தனை குண்டுகள் பாய்ந்திருக்கிறது? என்பதை கண்டறிவதற்காக முதலில் ‘எக்ஸ்-ரே’ எடுக்கப்பட்டது. இதில் அவரது இடது பக்க மார்பு பக்கத்தின் உள்ளே ஒரு குண்டு மட்டும் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து ரவுடி ஆனந்தனின் பிரேத பரிசோதனை மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை நடந்தது. மாஜிஸ்திரேட்டு சாண்டில்யன் முன்னிலையில் உடல்கூறு அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் செல்வநாயகம், டாக்டர் குகன் ஆகியோர் பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

    பிரேத பரிசோதனையின்போது ரவுடி ஆனந்தன் உடலை துளைத்திருந்த துப்பாக்கி குண்டு வெளியே எடுக்கப்பட்டு, தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது. பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ரவுடி ஆனந்தன் உடல் பிரேத பரிசோதனையையொட்டி, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவரது வீடு அமைந்துள்ள ராயப்பேட்டை வி.எம்.தர்கா, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறை வளாகம், ராயப்பேட்டை போலீஸ்நிலையம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 
    தமிழகத்தில் ரவுடிகளின் அட்டகாசம் தலை தூக்கும் போது போலீசார் என்கவுண்டர் மூலம் அவர்களை முடிவுக்கு கொண்டு வருவது வழக்கம். அதன்படி கடந்த 1998-ம் ஆண்டு முதல் இதுவரை 23 என்கவுண்டர்கள் நடந்து உள்ளன.
    சென்னை:

    தமிழகத்தில் ரவுடிகளின் அட்டகாசம் தலை தூக்கும் போது போலீசார் என்கவுண்டர் மூலம் அவர்களை முடிவுக்கு கொண்டு வருவது வழக்கம். தற்போது போலீசாரை தாக்கிய ரவுடி ஆனந்தன் தரமணி அருகே சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளான். இது குற்றச்செயலில் ஈடுபடும் ரவுடிகளுக்கு மீண்டும் விடுக்கப்பட்டு உள்ள ஒரு எச்சரிக்கை மணி ஆகும்.

    கடந்த 1998-ம் ஆண்டு முதல் இதுவரை 23 என்கவுண்டர்கள் நடந்து உள்ளன. தமிழகத்தை உலுக்கிய அதன் விவரம் வருமாறு:-

    1998-ம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரி அருகே நடந்த மோதலின் போது ரவுடி ஆசைத்தம்பியும், அவனது கூட்டாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    2002-ம் ஆண்டு தமிழக போலீஸ் படை பெங்களூர் சென்று அங்கு பதுங்கி இருந்த இமாம் அலி உள்ளிட்ட 5 பேரை சுட்டுக் கொன்றது. அப்போது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    2003-ல் சென்னையில் வெங்கடேச பண்ணையார், மற்றும் சென்னையை கலக்கிய அயோத்தி குப்பம் வீரமணி ஆகியோர் என் கவுண்டர் செய்யப்பட்டனர்.


    2004-ம் ஆண்டு பல ஆண்டுகளாக 3 மாநில அரசுக்கு சிம்ம சொப்பன மாக விளங்கிய சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

    2007-ல் சென்னையை கலங்க வைத்த ரவுடி வெள்ளை ரவி வீழ்த்தப்பட்டான். 2010-ம் ஆண்டு நீலாங்கரையில் திண்டுக்கல் பாண்டியும், அவனது கூட்டாளியும் என்கவுண்டர் செய்யப்பட்டனர். அதே ஆண்டில் கோவையில் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த டாக்சி டிரைவர் மோகன கிருஷ்ணன் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டான்.

    2012-ம் ஆண்டு சென்னையில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட வட மாநில வாலிபர்கள் 5 பேர் ஒரே நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    அதே ஆண்டு சிவகங்கையில் போலீஸ்காரர் ஒருவர் கொலையில் தொடர்புடைய பிரபு, பாரதி ஆகியோர் என்கவுண்டர் செய்யப்பட்டார்கள்.

    2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மதுரையில் ரவுடிகள் இருளாண்டி, சகுனி கார்த்தி ஆகியோர் சுட்டு கொல்லப்பட்டனர். தற்போது சென்னையில் ரவுடி ஆனந்தனை போலீசார் சுட்டு விழ்த்தி உள்ளார்கள்.

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ரவுடிகள் முழுவதும் ஒடுக்கப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

    ஜெயலலிதா ஆட்சியில் 2002-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2003-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 11 ரவுடிகளை போலீசார் சுட்டு வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Encounter #ChennaiEncounter
    சென்னை ராயப்பேட்டையில் காவலர் ராஜவேலுவை வெட்டிய ரவுடி ஆனந்தன் இன்று என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Chennai #Encounder
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டை பி.எம்.தர்கா குடிசைப் பகுதியில் ஒரு கும்பல் தகராறில் ஈடுபடுவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் தகவல் வந்தது.

    இதனையடுத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ராஜவேலு உடனடியாக அங்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு சில இளைஞர்கள் கும்பலாக சேர்ந்து மது அருந்தி விட்டு ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். போலீஸ்காரர் ராஜவேலு  அவர்களை எச்சரித்தார். உடனடியாக கலைந்து செல்லுமாறு கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல் திடீரென ராஜவேலுவை தாக்கியது. அவரை பார்த்து தனியாகத்தான் வந்துள்ளான். போட்டு தள்ளுங்கடா என்று கூறிய படியே போலீஸ்காரர் ராஜவேலுவை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. அவர்களிடம் இருந்து ராஜவேலு  தப்பிக்க முயன்றார். ஆனால் விடாமல் அக்கும்பலை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாக்கினர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவுடி ஆனந்தன் போலீஸ்காரர் ராஜவேலுவை அரிவாளால் சரமாரியாக வெட்டினான். இதில் அவரது தலையில் 16 இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டது. இடது காது, கன்னம் ஆகிய இடங்களிலும் வெட்டு விழுந்தது. உடனடியாக ரவுடி ஆனந்தனும் கூட்டாளிகளும் தப்பி சென்று விட்டனர்.

    இதனை தொடர்ந்து ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ்காரர் ராஜவேலு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் தையல் போடப்பட்டுள்ளது. டாக்டர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக ரவுடி ஆனந்தன் அவனது கூட்டாளிகள் ஜிந்தா, அஜித், வேல்முருகன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், போலீசாரிடம் இருந்து ரவுடி ஆனந்தன் தப்பிச்சென்றதாகவும், அவரை பிடிக்கும் முயற்சியில் அவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவரது சடலம் ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
    ×