search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1காங்கிரஸ்"

    • ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 930 டோஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
    • 12 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,270 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடந்தது. காலை 7 மணி முதல் மாலை வரை முகாம் நடந்தது.

    இதில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாவது தவணை செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, 6 பேரூராட்சிகள், 333 ஊராட்சி பகுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. மாவட்டத்தில் முகாமிற்காக நேற்று ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 930 டோஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

    நேற்று மாலை வரையில் 36 ஆயிரத்து 687 பேர் முதல், 2-வது மற்றும் பூஸ்டர் டோஸ்களும், 12 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

    • செங்கரைப்பா ளையத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஊராட்சிமன்ற தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
    • 1,600 வீடுகளுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வைப்பதற்காக குப்பைத்தொட்டிகளை வழங்கி பேசினார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அடுத்த குளூர் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குப்பைத்தொட்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    செங்கரைப்பா ளையத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஊராட்சிமன்ற தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஒன்றியகுழு தலைவர் கணபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழை ப்பாளராக மாவட்ட கூடுதல் கலெக்டர் மதுபாலன் கலந்து கொண்டு கிராமங்கள்தோறும் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் ஊராட்சியில் உள்ள சுமார் 1,600 வீடுகளுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வைப்பதற்காக குப்பைத்தொட்டிகளை வழங்கி பேசினார்.

    இதில் தோட்டக்காடு நல்லப்பகவுண்டர் அறக்கட்டளை நிர்வாகிகள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரோஜா, ஊராட்சி செயலாளர் வெ ங்கடாசலம், வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் மண்டல துணை தாசில்தார் கலைவாணி நன்றி கூறினார்.

    • கரூர் மக்கள் நீதிமன்றத்தில் 1,166 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
    • 4 அமர்வுகள் நடைபெற்றது

    கரூர்:

    கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தினை கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான ஆர்.சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

    கரூரில் 3 அமர்வுகள், குளித்தலையில் 1 என 4 அமர்வுகள் நடைபெற்றது. கரூர் மாவட்டம் முழுவதும் 3,128 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு 1,166 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மாவட்ட சட் டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் எம்.பாக்கியம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.  

    கபிலர்மலையில் அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,250-க்கு விற்பனையானது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அண்ணாநகர், செல்லப்பம்பாளையம், பெரிய மருதூர், சின்ன மருதூர், சின்ன சோளிபாளையம், ஆனங்கூர், பிலிக்கல்பாளையம் , அய்யம்பாளையம், வடகரையாத்தூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், மாரப்பம்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். கரும்பை வெட்டி செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர்.

    பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்.வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் தயாரிக்கின்றனர் .பின்னர் வெல்லங்களைநன்கு உலர வைத்து 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயார் செய்கின்றனர். தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம ஏல சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர் .

    வெல்ல சிப்பங்களை வாங்கிச் செல்வதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெல்ல சிப்பங்களை வாங்கி லாரிகள் மூலம் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர் .

    கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ1,180-க்கும், அச்சுவெல்லம் ரூ1,190- க்கும் விற்பனையானது. நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம்ரூ 1,220-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ .1,250-க்கும் விற்பனையானது. கரும்பு ஒரு டன் ரூ.2,500 வரை விற்பனையாகிறது. வரத்து குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    உ.பி. மாநிலத்தின் கிழக்குப்பகுதி பொதுச்செயலாளராக இன்று பொறுப்பேற்கும் பிரியங்கா காந்தி டுவிட்டரில் தொடங்கிய கணக்கை சில மணி நேரத்தில் 70 ஆயிரம் அபிமானிகள் பின்தொடர்ந்தனர். #PriyankaonTwitter #Priyanka #PriyankaTwitter
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கிழக்குப்பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக இன்று பொறுப்பேற்கும் பிரியங்கா காந்திக்கு லக்னோ நகரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதற்கிடையில், பிரியங்கா காந்தியை இனி டுவிட்டரிலும் பின்தொடரலாம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று பகல் 12 மணிவாக்கில் ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்தது.


    அந்த புதிய டுவிட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி இன்னும் எந்த கருத்தும் பதிவு செய்யப்படாத நிலையில் இன்று மாலை 4 மணிக்குள் 70 ஆயிரம் அபிமானிகள் அவரை பின்தொடர்ந்துள்ளனர். #PriyankaonTwitter #Priyanka #PriyankaTwitter
    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. #SSLC #HSC #ExamTimeTable
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. #SSLC #HSC #ExamTimeTable

    2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறப்பு பள்ளிகளுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. இதில் எந்தவித மாற்றம் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு டிசம்பர் 10-ந் தேதி தொடங்கி 22-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அந்த அட்டவணை வருமாறு:-

    எஸ்.எஸ்.எல்.சி.

    10-ந் தேதி (திங்கட்கிழமை) - தமிழ் முதல் தாள்

    11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - தமிழ் இரண்டாம் தாள்

    13-ந் தேதி (வியாழக்கிழமை) - ஆங்கிலம் முதல் தாள்

    14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - ஆங்கிலம் இரண்டாம் தாள்

    17-ந் தேதி (திங்கட்கிழமை) - கணிதம்

    18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - விருப்ப பாடம்

    19-ந் தேதி (புதன்கிழமை) - அறிவியல்

    22-ந் தேதி (சனிக்கிழமை) - சமூக அறிவியல்

    பிளஸ்-1

    10-ந் தேதி (திங்கட்கிழமை) - தமிழ்

    11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம்

    12-ந் தேதி (புதன்கிழமை) - தகவல் தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.

    14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் அண்ட் டைட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண்மை அறிவியல், நர்சிங் (பொது), நர்சிங் (தொழிற்கல்வி).

    17-ந் தேதி (திங்கட்கிழமை) - இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி.

    19-ந் தேதி (புதன்கிழமை) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ரானிக் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், அலுவலக மேலாண்மை மற்றும் செக்கரட்டரிஷிப், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.

    22-ந் தேதி (சனிக்கிழமை) - வேதியியல், கணக்குபதிவியல், புவியியல்.

    பிளஸ்-2

    10-ந் தேதி (திங்கட்கிழமை) - தமிழ்

    11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம்

    12-ந் தேதி (புதன்கிழமை) - தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.

    14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - கணிதம், வணிகவியல், மைக்ரோபயாலஜி, விலங்கியல், நியூட்ரிசியன் அண்ட் டைட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, வேளாண்மை நடைமுறைகள், நர்சிங் (தொழிற்கல்வி), நர்சிங் (பொது).

    17-ந் தேதி (திங்கட்கிழமை) - இயற்பியல், பொருளியல், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் மற்றும் அப்ளையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.

    19-ந் தேதி (புதன்கிழமை) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கோட்பாடு.

    22-ந் தேதி (சனிக்கிழமை) - வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.

    மேற்சொன்ன அனைத்து தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கும். 10 மணியில் இருந்து 10.10 மணி வரை வினாத்தாளை படிப்பதற்கும், 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடைத்தாளின் முதல் பக்கத்தை நிரப்புவதற்கும், 10.15 மணி முதல் 12.45 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 
    சிரியாவில் ராட்சத சவ குழியில் 1,500 அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. #Syria
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

    இந்த உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.  அவர்களின் தலைநகராக ராக்கா நகரம் விளங்கியது.



    அந்த நகரத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்பதற்கு கடும்போர் நடந்தது. இந்தப் போரில் அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல் நடத்தின. அவ்வாறு நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இது சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு வழிவகுத்தது.

    இந்த நிலையில் அந்த நகரத்தில் ராட்சத சவ குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 1,500 அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    இவர்கள் அனைவரும் அமெரிக்க கூட்டுப்படையின் வான்தாக்குதலில் பலியானவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. இதுவரை அங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், வான்தாக்குதல்கள் காரணமாக ராக்கா நகரின் 85 சதவீத பகுதி அழிக்கப்பட்டு விட்டதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது. #Syria #DeadBody
    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதன்மை தேர்வு முடிவு டிசம்பர் மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. #TNPSC #GroupI
    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-1(டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1)-ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு(2017) பிப்ரவரி 19-ந் தேதி நடந்தது. அதற்கான தேர்வு முடிவு 21.7.2017 அன்று வெளியிடப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து 13.10.2017, 14.10.2017 மற்றும் 15.10.2017 ஆகிய தேதிகளில் முதன்மை தேர்வு நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் வருகிற டிசம்பர் மாதம் இறுதிக்குள் வெளியிட உத்தேசிக்கப்பட்டு அது தொடர்பான விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    விடைத்தாள்கள் திருத்தும் பணி மிகவும் நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் ரகசியம் காப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடனும் நடைபெற்று வருவதால் தேர்வர்கள் இதுகுறித்து அவ்வப்போது வெளியாகும் தவறான, அவதூறான செய்திகள் குறித்து கவலைப்பட தேவையில்லை. மேலும் ஏமாற்றுக்காரர்கள் மற்றும் இடைத்தரகர்களின் தவறான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #TNPSC 
    பார்முலா1 கார்பந்தயத்தில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 331 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். #LewisHamilton #FormulaOne
    சுஜூகா:

    இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட இந்த போட்டியில் 17-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள சுஜூகா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரமான 307.471 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் அதிவேகமாக சீறிப்பாய்ந்தனர்.



    இதில் முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 27 நிமிடம் 17.062 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி முதலிடத்தை பிடித்து, அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். தொடர்ச்சியாக அவர் பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். மொத்தத்தில் இந்த சீசனில் ஹாமில்டனின் 9-வது வெற்றியாக அமைந்தது. அவரை விட 12.919 வினாடி பின்தங்கிய பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 2-வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார். ஹாமில்டனின் பிரதான எதிரியான 4 முறை சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டதால் அவருக்கு 8 புள்ளிகளே கிடைத்தன.

    இதுவரை நடந்துள்ள 17 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 331 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். வெட்டல் 264 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வால்டெரி போட்டாஸ் 207 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 18-வது சுற்று போட்டி அமெரிக்காவில் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. #LewisHamilton #FormulaOne
    பார்முலா1 கார்பந்தயத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 32 நிமிடம் 29.845 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார். #LewisHamilton #Formula1
    ஹாக்கென்ஹீம்:

    இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 11-வது சுற்றான ஜெர்மனி கிராண்ட்பிரி அங்குள்ள ஹாக்கென்ஹீம் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 306.458 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் 14-வது வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 32 நிமிடம் 29.845 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்ததுடன், அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார்.

    இந்த சீசனில் அவரது 4-வது வெற்றி இதுவாகும். அவரை விட 4.5 வினாடி பின்தங்கிய பின்லாந்தின் வால்டெரி போட்டாஸ் 2-வது இடம் பெற்றார். முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட உள்ளூர் வீரர் செபாஸ்டியன் வெட்டலின் கார் துரதிர்ஷ்டவசமாக 55-வது சுற்றின் போது விபத்துக்குள்ளாகி பாதியில் வெளியேற நேரிட்டது. போர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்றுள்ள செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ), ஈஸ்ட்பான் ஒகான் (பிரான்ஸ்) முறையே 7, 8-வது இடங்களை பிடித்தனர்.

    11 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 188 புள்ளிகளுடன் முதலிடத்திலும், செபாஸ்டியன் வெட்டல் 171 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். 12-வது சுற்று போட்டி வருகிற 29-ந்தேதி ஹங்கேரியில் நடக்கிறது. 
    மும்பை ஐ.ஐ.டி. உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி மானியம் வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் உள்ள பிரபலமான உயர்கல்வி நிறுவனங்களான டெல்லி ஐ.ஐ.டி., மும்பை ஐ.ஐ.டி., பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எஸ்சி மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களான மணிப்பால் உயர்கல்வி அகாடமி, ராஜஸ்தான் மாநிலம் பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்ப விஞ்ஞான கழகம் (பிட்ஸ் பிலானி), ஜியோ இன்ஸ்டிடியூட் ஆகியவற்றுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு மானியமாக ரூ.1,000 கோடி வழங்குகிறது. கல்வியின் தரத்தை அதிகரித்து இந்த உயர்கல்வி நிறுவனங்களை உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக மேம்படுத்தும் வகையில் இந்த நிதி உதவி வழங்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.

    இந்தியாவில் உள்ள 800 பல்கலைக்கழங்களில் ஒரு பல்கலைக்கழகம் கூட உலக அளவிலான தகுதி பட்டியலில் முதல் 100 இடங்களிலோ அல்லது முதல் 200 இடங்களிலோ இடம்பெறவில்லை என்றும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 
    கைலாய யாத்திரை சென்ற 1,500 இந்தியர்கள் நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தவிக்கிறார்கள். 19 தமிழர்கள் உள்பட 143 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். #KailashMansarovar #Pilgrims #NepalRescued
    புதுடெல்லி:

    சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்திய பகுதியில் கைலாய மானசரோவர் ஏரி அமைந்துள்ளது. இங்கு சென்று வழிபட ஏராளமான பக்தர்கள் நேபாள நாட்டின் வழியாக யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

    இந்த ஆண்டும் கடந்த சில வாரங்களாக மானசரோவருக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

    மானசரோவர் அமைந்துள்ள திபெத்திய பகுதியிலும், அங்கு செல்வதற்கான நேபாள நாட்டின் மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மோசமான வானிலை நிலவி வருகிறது. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.



    இதன் காரணமாக மானசரோவருக்கு சென்ற இந்திய பக்தர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். குறிப்பாக நேபாள நாட்டின் சிமிகோட் பகுதியில் 525 பக்தர்களும், ஹில்சா என்னும் இடத்தில் 550 பேரும், திபெத்திய பகுதியில் 500 பக்தர்களும் என 1,500-க்கும் மேற்பட்டோர் மோசமான வானிலை காரணமாக தாங்கள் தங்கியிருந்த பகுதிகளில் இருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

    குறிப்பாக புனித யாத்திரை மேற்கொண்ட வயதான ஆண்களும், பெண்களும் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் இவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது.

    இதைத்தொடர்ந்து மத்திய அரசு மானசரோவருக்கு யாத்திரை மேற்கொண்டுள்ள இந்திய பக்தர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் இறங்கியது.

    இதுதொடர்பாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று நேபாள அரசுடன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்திய பக்தர்களை மீட்பதற்கு ராணுவ ஹெலிகாப்டர்களை உடனடியாக அனுப்பி வைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

    ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன்



    மேலும் அவர் தனது டுவிட்டர் பதிவில், மானசரோவருக்கு யாத்திரை மேற்கொண்டவர்களை பத்திரமாக மீட்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து தகவல் வெளியிட்டார்.

    அதில், நேபாளத்தில் சிக்கி பரிதவிக்கும் பக்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் உதவிகள் வழங்க நேரடி தொலைபேசி வசதி(ஹாட்லைன்) ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.

    நேபாளத்தில் பரிதவிக்கும் இந்திய பக்தர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் ஹாட்லைனில் தொடர்பு கொள்வதற்கான போன் நம்பர்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. பிரணவ் கணேஷ்(முதன்மை செயலாளர்-தூதரக அதிகாரி), 977-9851107006, தமிழில் அறிந்து கொள்ள ஆர்.முருகன், 977-9808500642 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய பக்தர்களை மீட்பது தொடர்பாக சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

    நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் நேபாள்கஞ்ச் மற்றும் சிமிகோட் பகுதிகளுக்கு தனது பிரதிநிதிகளை அனுப்பி வைத்துள்ளது. யாத்திரை சென்ற பக்தர்களுடன் அவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். மேலும் அனைத்து பக்தர்களுக்கும் தேவையான உணவு மற்றும் தங்கும் இடங்களுக்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.



    சிமிகோட்டில் தங்கியிருக்கும் வயதில் மூத்தோர் அனைவருக்கும் உடற்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மருத்துவ உதவியும் அளிக்கப்படுகிறது. இதேபோல் ஹில்சா பகுதியில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தரும்படி அங்குள்ள போலீஸ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிமிகோட் பகுதியில் சிக்கித் தவிக்கும் பக்தர்களை மாற்றுப்பாதைகளில் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் இந்த பாதைகள் அனைத்தும் சிமிகோட்-நேபாள்கஞ்ச் பாதையைப் போன்றே சிக்கலானது என்றும் கூறப்படுகிறது.

    மேலும் ஹில்சா பகுதியில் மற்ற இடங்களை விட மிகவும் மோசமான வானிலை நிலவுவதால் இப்பகுதியில் இருந்து விரைவாக இந்திய பக்தர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் சிமிகோட், ஹில்சா பகுதிகளில் நேற்றும் மோசமான வானிலை காணப்பட்டது. இதனால் இந்திய பக்தர்களை மீட்பது சற்று கடினம் என்று கருதப்பட்டது.

    எனினும் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. சிமிகோட் மற்றும் ஹில்சா பகுதிகளில் இருந்து 143 இந்திய பக்தர்கள் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்களில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தீனதயாளன் என்பவர் உள்பட 19 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதற்காக 7 சரக்கு விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தமிழர்களுடன் சிமிகோட்டில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்ட ஒரு விமானம் பிற்பகல் 1.55 மணிக்கு நேபாள்கஞ்ச் வந்தடைந்தது.

    பின்னர் அங்கிருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு அவர்கள் காரில் அழைத்து செல்லப்பட்டனர். காத்மாண்டுவில் சிறிது ஓய்வுக்கு பின்னர், அவர்கள் சாலைமார்க்கமாகவே உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு புறப்பட்டு உள்ளனர்.

    அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்து தந்தனர். எனவே விரைவில் அவர்கள் சென்னைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மானசரோவருக்கு மாண்டியா, ராமநகரா, மைசூரு ஆகிய பகுதிகளில் இருந்து 290 பேர் கைலாய யாத்திரை சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

    நேபாளத்தில் தவிக்கும் இவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி தனது மாநிலத்தின் சார்பில் பிரதிநிதிகளை நேபாள்கஞ்ச் பகுதிக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

    இதற்கிடையே, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமச்சந்திரன்(வயது 69) இந்த பயணத்தின்போது உயிர் இழந்தது, தெரிய வந்துள்ளது. இவர், தனது மனைவியுடன் மானசரோவருக்கு கடந்த மாதம் 18-ந்தேதி பயணம் மேற்கொண்டார்.

    நேற்று முன்தினம் மானசரோவரில் கிரிவலம் சென்றபோது கடும் குளிர் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு ராமச்சந்திரன் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    அவரது உடல் நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் கேரளாவைச் சேர்ந்த லீலா(வயது 56), ஆந்திராவின் சத்தியலட்சுமி ஆகிய 2 பெண்களும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    லீலா, மானசரோவருக்கு சென்றுவிட்டு தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பியபோது இறந்துள்ளார். கேரளாவில் இருந்து யாத்திரை சென்ற 40 பேரில் இவரும் ஒருவர். ஆந்திர மாநிலத்தின் சத்திய லட்சுமி திபெத்திய பகுதியில் மரணம் அடைந்தது தெரிய வந்துள்ளது.
     #KailashMansarovar #Pilgrims #NepalRescued #Tamilnews 
    ×