search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோழி"

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 கோழிகள் காணாமல் போயின.
    • விவசாயி திருடன், திருடன் என கூச்சலிட்டு உள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியில், விவசாயி ஒருவர் கால்நடை மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 கோழிகள் காணாமல் போயின. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 மர்மநபர்கள், அவரது தோட்டத்தில் கோழிகளை திருட முயன்றுள்ளனர். கோழிகள் மற்றும் கால்நடைகளின் சத்தம் கேட்டு அங்கு வந்த விவசாயி, இவர்களைப் பார்த்து திருடன், திருடன் என கூச்சலிட்டு உள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடி அந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்ற போது, அரிவாளை காட்டி அவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து லாவகமாக அவர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், தர்ம அடி கொடுத்து, பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது அவர்கள் தென்காசியை சேர்ந்த காளிதாஸ், பல்லடம் லட்சுமி மில்ஸ் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பது தெரிய வந்தது. 2பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்கள் வருகிற 14-ந்தேதி வரை நடக்கிறது.
    • இதில் பங்கேற்று கோழிகளுக்கு தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளுமாறு கால்நடை வளர்ப்போர்களை கேட்டுக்கொள்கிறோம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு இலவசமாக காலத்திற்கு ஏற்றவாறு முகாம்கள் நடத்தி தடுப்பூசிப் பணியை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்திற்கு முன்னர் பிப்ரவரி மாதத்தில் வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் தற்போது கோழிகளை தாக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி முகாம்களை கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.

    எனவே கோழிப்பண்ணையாளர்கள் 8 வார வயதிற்கு மேல் உள்ள கோழிகள் மற்றும் குஞ்சுகளுக்கு இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். வருடத்திற்கு இருமுறை தடுப்பூசி செலுத்தி வந்தால் நோயை முற்றிலும் அகற்றி விடலாம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் மற்றும் துறை சார்பில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசிப்பணி நடைபெறுகிறது. தகுந்த முன்னறிவிப்போடு ஊராட்சி மன்றங்களின் ஒத்துழைப்போடு இந்த முகாமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு இலவச வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்களில் பங்கேற்று கோழிகளுக்கு தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளுமாறு கால்நடை வளர்ப்போர்களை கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
    • குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி டெம்போ டிரைவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே மங்கலம் சந்திப்பு பகுதியில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகில் அரசு பள்ளிகூடம், கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

    எப்போதும் பரப்பரப் பாக காணப்படும் இந்த பகுதியில் பட்டணம் பேச்சிப்பாறை பட்டணம் கால்வாய் பாய்கிறது. இங்கு அடிக்கடி இரவு நேரங்களில் கோழி கழிவுகளை மர்ம நபர்கள் சானல் கரை யோரம் கொட்டிவிட்டு செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது.

    இதனால் சுகாதாரகேடு ஏற்பட்டு வந்தது.

    இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குலசேகரம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்த னர். போலீசார் வந்து பார்வை யிட்டு அந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வந்தார்கள். நேற்று வழக்கம்போல் இரவில் அந்த பகுதியில் மினி டெம்போவில் ஒரு பேரல் நிறைய கோழி கழிவு களை கொண்டுவந்து சாலை யோரம் கொட்டிவிட்டு பேரல்நிறைய சானலில் இருந்து தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தார்கள்.

    இதுபற்றிய தகவல் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு தெரிய வந்தது. உடனே பொன்மனை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ராதா கிருஷ்ணன் தலைமையில் ஊர் பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து மினி டெம்போவை சுற்றி வளைத்து பிடித்தார்கள்.

    இது பற்றி குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி டெம்போ டிரைவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    • கோடைக் காலங்களில் ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோய், பெரும் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
    • 2 லட்சத்து 63 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில், கிராம பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாட்டுக்கோழிகள், பிற வகை கோழிகளுக்கு, கோடைக் காலங்களில் ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோய், பெரும் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. மாவட்டத்தில் நாளை 1-ந் தேதி தொடங்கி வரும் 14-ந் தேதி வரை 2 லட்சத்து 63 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொங்கல் பண்டிகையொட்டி பெரும்பாலான வீடுகளில் முதல் நாள் மற்றும் 2-வது நாளான நேற்றும் சைவ உணவுகளை சமைத்து அதனை சாமிக்கு படையலிட்டு கும்பிடுவது வழக்கம். 3-வது நாளான காணும் பொங்கல் அன்று அசைவ பிரியர்கள் இறைச்சி வாங்கி உண்பார்கள்.
    • காணும் பொங்கல் பண்டிகையொட்டி சேலத்தில் இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய கூட்டம் அலைமோதியது.

    சேலம்:

    பொங்கல் பண்டிகை ஓட்டி நேற்று முன்தினம் சேலம் மாநகரில் பெரும்பாலான இறைச்சி மற்றும் மீன்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    தொடர்ந்து நேற்று திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மீன் கடைகள் இறைச்சி கடைகளை அடைக்க மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இதையொட்டி இறைச்சி, மீன் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அசைவ பிரியர்கள் கறி சாப்பிட முடியாமல் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில், இன்று காலை சேலம் மாநகரில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. காலை முதலே இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    இதைத்தொடர்ந்து1 மணி நேரம் வரை காத்து நின்று கடைகளில் இறைச்சியை பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதேபோல மீன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

    1 கிலோ ஆடு இறைச்சி ரூ.800-க்கு விற்பனையானது. அதேபோல சூரமங்கலம் பகுதியில் உள்ள மாநகராட்சி மீன் சந்தை மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளிலும் மீன்கள் விற்பனை அதிக அளவில் நடந்தது.

    • தீயணைப்பு துறையினர் மீட்டனர்
    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே பத்மனாபபுரம் செக்கால தெருவை சேர்ந்தவர் நடராஜபிள்ளை. இவரது வீட்டுக்கு பின்புறம் கோழி கூடு உள்ளது. இன்று காலை கோழி கூட்டை திறக்க சென்ற போது ஒரு கோழி செத்து கிடந்தது. கூண்டு வழியாக பார்த்த போது ஒரு பாம்பு நெளிந்த படி இருந்தது.

    உடனே தக்கலை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு அலுவலர்ஜீவன்ஸ் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்று பார்த்த போது விஷம் கூடிய 6 அடி நல்ல பாம்பு என தெரியவந்தது. உடனே பாம்பு பிடிக்கும் கருவி மூலம் அதனை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    • தீபாவளி பண்டிகை வருவதால் நேற்று விற்பனைக்கு ஏராளமான ஆடு, கோழிகள், மாடுகள் கொண்டு வரப்பட்டது.
    • இந்த வார சந்தையில் தீபாவளி யை யொட்டி ஆடு, கோழி, மாடுகள் ரூ.2 கோடி அளவுக்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டியில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று ஆடு, கோழி, மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தை தமிழகத்தில் 2-வது பெரிய சந்தையாகும்.

    தற்போது புரட்டாசி மாதம் முடிந்து தீபாவளி பண்டிகை வருவதால் நேற்று விற்பனைக்கு ஏராளமான ஆடு, கோழிகள், மாடுகள் கொண்டு வரப்பட்டது.

    இதை வாங்க ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழி, மாடுகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதில் 1000-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் ரூ.1 கோடிக்கு விற்பனையானது. இதேபோல் மாடுகளும் ரூ.1 கோடிக்கு விற்பனையானது. இன்று காலையும் ஆட்டுசந்தை நடந்தது.

    இதிலும் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர். இந்த வார சந்தையில் தீபாவளி யை யொட்டி ஆடு, கோழி, மாடுகள் ரூ.2 கோடி அளவுக்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×