என் மலர்
நீங்கள் தேடியது "chicken pox"
- விருதுநகர் மாவட்டத்தில் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்கள் வருகிற 14-ந்தேதி வரை நடக்கிறது.
- இதில் பங்கேற்று கோழிகளுக்கு தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளுமாறு கால்நடை வளர்ப்போர்களை கேட்டுக்கொள்கிறோம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு இலவசமாக காலத்திற்கு ஏற்றவாறு முகாம்கள் நடத்தி தடுப்பூசிப் பணியை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்திற்கு முன்னர் பிப்ரவரி மாதத்தில் வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் தற்போது கோழிகளை தாக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி முகாம்களை கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.
எனவே கோழிப்பண்ணையாளர்கள் 8 வார வயதிற்கு மேல் உள்ள கோழிகள் மற்றும் குஞ்சுகளுக்கு இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். வருடத்திற்கு இருமுறை தடுப்பூசி செலுத்தி வந்தால் நோயை முற்றிலும் அகற்றி விடலாம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் மற்றும் துறை சார்பில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசிப்பணி நடைபெறுகிறது. தகுந்த முன்னறிவிப்போடு ஊராட்சி மன்றங்களின் ஒத்துழைப்போடு இந்த முகாமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு இலவச வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்களில் பங்கேற்று கோழிகளுக்கு தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளுமாறு கால்நடை வளர்ப்போர்களை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கோழிகளுக்கான கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி சிறப்பு முகாம் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களில் நடைபெற உள்ளது.
- முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்த தடுப்பூசி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது.
திருப்பூர்:
கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி இருவார சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முகாம் நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை இருவாரங்கள் கோழிகளுக்கான கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி சிறப்பு முகாம் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களில் நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் உள்ள கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையங்களில் பணிபுரியும் கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மூலமாக மேற்படி முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்த தடுப்பூசி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
வராமல் தடுக்க முடியுமா?
சின்னம்மை எனப்படுகிற சிக்கன்பாக்ஸால் பிரச்சனை மக்கள்தொகை நெருக்கமாக இருக்கிற பகுதிகளில் வரும். ஏனென்றால் அங்கெல்லாம் சுத்தம், சுகாதாரம் குறைச்சலா இருக்கும். அதனால், உங்கள் வீட்டுக்குள் மட்டுமல்லாமல் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். மற்றபடி, குழந்தைகளை அதிக நேரம் வெயிலில் விளையாட விடாதீர்கள். பிள்ளைகள் பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடனே டிவி பார்க்க உட்கார்ந்து விடுகிறார்கள்.
அவர்களை வற்புறுத்தியாவது நிறைய தண்ணீர் குடிக்க வையுங்கள். தர்பூசணி மாதிரி சம்மர் சீசன் பழங்களைத் தினமும் சாப்பிடக் கொடுங்கள். குழந்தைகள் தினமொரு கீரைச் சாப்பிட வேண்டியது இந்த சீசனில்தான். சமையலில் நிறைய நீர் காய்கறிகள் சேர்த்துக்கொள்ளுங்கள். தினமும் இரண்டு வேளைப் பிள்ளைகளை குளிக்க வையுங்கள். இவற்றையெல்லாம் செய்தால், குழந்தைகளுக்குச் சின்னம்மை வராமல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.'
சின்னம்மை வராமல் தடுக்க தடுப்பூசி இருப்பதுபோல, வந்துவிட்டால் சரி செய்ய மாத்திரையும் இருக்கிறது. அம்மை அறிகுறி வந்த 48 மணி நேரத்துக்குள் இந்த மாத்திரையைச் சாப்பிட ஆரம்பித்தால், 5 நாளில் அம்மை வந்த சுவடே தெரியாமல் அப்படியே அமுங்கி விடும். இந்த மாத்திரையைக் குழந்தைகளும் சாப்பிடலாம். அரசு மருத்துவமனைகளில் இது இலவசமாகவும் கிடைக்கிறது.'