search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சானல்"

    • மாரி சிவபாலன் என்பவர் மாயமாகி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • மாரி சிவபாலனின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    திருவட்டார் : 

    குலசேகரம் அருகே சுருளோடு பகுதியில் உள்ள தோவாளை செல்லும் சானலில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் மிதந்து வந்தது. அதனை போலீசார் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிணமாக மிதந்து வந்தவரின் முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    குமரி மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் தகவல்களையும் சேகரித்து வந்தனர். அப்போது குலசேகரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவருக்கு உதவியாக இருந்த தென்காசி மாவட்டம் கடையம் வெய்க்காலிபட்டி பகுதியை சேர்ந்த மாரி சிவபாலன் என்பவர் மாயமாகி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இது தொடர்பாக குலசேகரம் போலீசில் புகார் இருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாரி சிவபாலனின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அதன்பேரில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை வந்த அவர்கள், அங்கிருந்த உடலை பார்த்து அது மாரிசிவபாலன் தான் என உறுதி செய்தனர். அவர் அணிந்து இருந்த சட்டை, கை கடிகாரம் ஆகியவற்றை போலீசார் காண்பித்தனர். அதனை பார்த்த மாரிசிவபாலனின் தங்கை, அது தனது அண்ணனுடையது என தெரிவித்தார்.

    குலசேகரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற உறவினருக்கு துணையாக இருந்த மாரி சிவபாலன், சானலில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இறந்த மாரி சிவபாலனின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. 

    • பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
    • குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி டெம்போ டிரைவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே மங்கலம் சந்திப்பு பகுதியில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகில் அரசு பள்ளிகூடம், கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

    எப்போதும் பரப்பரப் பாக காணப்படும் இந்த பகுதியில் பட்டணம் பேச்சிப்பாறை பட்டணம் கால்வாய் பாய்கிறது. இங்கு அடிக்கடி இரவு நேரங்களில் கோழி கழிவுகளை மர்ம நபர்கள் சானல் கரை யோரம் கொட்டிவிட்டு செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது.

    இதனால் சுகாதாரகேடு ஏற்பட்டு வந்தது.

    இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குலசேகரம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்த னர். போலீசார் வந்து பார்வை யிட்டு அந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வந்தார்கள். நேற்று வழக்கம்போல் இரவில் அந்த பகுதியில் மினி டெம்போவில் ஒரு பேரல் நிறைய கோழி கழிவு களை கொண்டுவந்து சாலை யோரம் கொட்டிவிட்டு பேரல்நிறைய சானலில் இருந்து தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தார்கள்.

    இதுபற்றிய தகவல் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு தெரிய வந்தது. உடனே பொன்மனை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ராதா கிருஷ்ணன் தலைமையில் ஊர் பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து மினி டெம்போவை சுற்றி வளைத்து பிடித்தார்கள்.

    இது பற்றி குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி டெம்போ டிரைவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    ×