search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருடர்கள்"

    • கோவிலில் பொய் சத்தியம் செய்ய பொதுமக்கள் முன் வருவதில்லை.
    • கிராம பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் கிடைத்த நகைகளை சாமி முன்பு வைத்து வழிபாடு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புங்கனூர் அடுத்த ராஜா நாலா பண்ட கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஊருக்கே காவல் தெய்வமாக ஆஞ்சநேயர் விளங்குகிறார்.

    இந்த கோவிலில் யாராவது பொய் சத்தியம் செய்தால் அவர்கள் வீடு திரும்பியவுடன் கடவுள் உரிய தண்டனை கொடுப்பார் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இதே போல் ஏராளமானோர் பொய் சத்தியம் செய்து வீட்டிற்கு சென்றவுடன் இறந்தும், விபத்தில் படுகாயமடைந்து கை கால்களை இழந்தும் பல வழிகளில் இன்னல்களுக்கு ஆளாகியதாக கூறப்படுகிறது.

    இதனால், கோவிலில் பொய் சத்தியம் செய்ய பொதுமக்கள் முன் வருவதில்லை.

    இந்நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி புங்கனூர் அடுத்த மேலு பைலு கிராமத்தை சேர்ந்த நாகய்யா என்பவரின் மகனான வெங்கடர மணா வீட்டில் இருந்த தங்க செயின், மோதிரம் மற்றும் நெக்லஸ் ஆகிய நகைகளை மர்ம கும்பல் திருடிச் சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடரமணா கிராமத்தில் உள்ள பெரியவர்களுக்கு தகவல் தெரிவித்து பஞ்சாயத்தை கூட்டினர்.

    அதில், வீட்டில் ஒருவர் வீர ஆஞ்சநேயர் சாமி கோவிலில் சத்தியம் செய்ய வர வேண்டும் என ஆலோசனை நடத்தப்பட்டது.

    பின்னர், கிராமத்தில் உள்ள அனைவரும் வரும் 9-ந்தேதி சத்தியம் செய்ய வர வேண்டும் என உத்தரவு போடப்பட்டது.

    இந்த நிலையில், தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம கும்பல் வீர ஆஞ்ச நேயர் கோவிலில் பொய் சத்தியம் செய்தால் ஆபத்து ஏற்பட்டுவிடும் என கருதியுள்ளனர்.

    நேற்று முன்தினம் வெங்கட ரமணா வீட்டின் மேல்மாடியில் திருட்டு நகைகளை வீசி விட்டு சென்றனர்.

    நகைகள் அனைத்தும் மாடியில் இருப்பதை கண்ட வெங்கடரமணாவின் குடும்பத்தினர் ஊர் பெரியோர்களிடம் நடந்ததை கூறினர்.

    கிராம பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் கிடைத்த நகைகளை சாமி முன்பு வைத்து வழிபாடு செய்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சின்னையா கார்டன் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
    • குடியிருப்பு வாசிகள் டார்ச் லைட்டை வீடுகளில் அடித்து உஷாராகினர்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சிகுட்பட்ட கொசவம்பாளையம் ரோடு பகுதியில் உள்ளது சின்னையா கார்டன் இந்த பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திருடர்கள் 3 பேர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தனர்.

    காலியாக இருந்த வீட்டுக்குள் நுழைந்தவர்கள், அங்கிருந்து எதுவும் கிடைக்காமல், அடுத்த வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது அந்தப் பகுதி வாசி ஒருவர் அவர்களை பார்த்து விட்டார். இதையடுத்து குடியிருப்பு வாசிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார். இதனால் உஷாரான குடியிருப்பு வாசிகள் வீடுகளில் விளக்கை எரியவிட்டும், டார்ச் லைட்டை வீடுகளில் அடித்தும் உஷாராகினர். மேலும் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் மாட்டப்பட்டு இருப்பதை கண்டு திருடர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பொதுமக்களிடம் மாட்டினால் தர்ம அடி கிடைக்கும் என பயந்த திருடர்கள் அங்குள்ள வீட்டில் காய போட்டு இருந்த துணிகளை எடுத்து முகத்தை மறைத்துக் கொண்டு, இருட்டுப் பகுதியில் குதித்து தப்பி ஓடினர். அதன் அருகே உள்ள டி.எம்.எஸ். கார்டன் பகுதியில் திருடலாம் என்று சென்றபோது, திருடர்கள் குறித்த தகவல் பல்லடம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் ரோந்து பணிக்கு வந்து விட்டனர். போலீசார் வருவதைத் தெரிந்து கொண்ட திருடர்கள் அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் சென்று மறைந்தனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    திருடர்கள் வீட்டினுள் புகுவது, துணிகளை முகத்தில் கட்டி கொள்வது போன்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் பல்லடம் பகுதியில் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 கோழிகள் காணாமல் போயின.
    • விவசாயி திருடன், திருடன் என கூச்சலிட்டு உள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியில், விவசாயி ஒருவர் கால்நடை மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 கோழிகள் காணாமல் போயின. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 மர்மநபர்கள், அவரது தோட்டத்தில் கோழிகளை திருட முயன்றுள்ளனர். கோழிகள் மற்றும் கால்நடைகளின் சத்தம் கேட்டு அங்கு வந்த விவசாயி, இவர்களைப் பார்த்து திருடன், திருடன் என கூச்சலிட்டு உள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடி அந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்ற போது, அரிவாளை காட்டி அவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து லாவகமாக அவர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், தர்ம அடி கொடுத்து, பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது அவர்கள் தென்காசியை சேர்ந்த காளிதாஸ், பல்லடம் லட்சுமி மில்ஸ் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பது தெரிய வந்தது. 2பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மடக்கி பிடித்ததால் மோட்டார் சைக்கிளை விட்டு சென்றனர்.
    • வேலையை முடித்து காந்திபுரம் 7-வது வீதியில் நடந்து வந்தார்.

    கோவை,

    கோவை உக்கடம் புல்லுகாடு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் கபீர் (வயது36). வீடியோ–கிராபர். இவர் சம்பவத்தன்று வேலையை முடித்து காந்திபுரம் 7-வது வீதியில் நடந்து வந்தார்.

    அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென கபீர் அருகில் வந்து அவரது கையில் இருந்த செல்போனை பறித்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த கபீர் சத்தம் போட்டார்.

    அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர். சிறிது நேரத்தில் அந்த வாலிபர்கள் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு கபீரின் செல்போனுடன் தப்பி சென்றனர்.

    கபீர் செல்போன் திருடர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை எடுத்து வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர்களது செல்போன் எண்ணுக்கு அழைத்தார். அழைப்பை எடுத்த திருடர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை காந்திபுரம் பஸ் நிலையம் வந்து கொடுத்துவிட்டு செல்போனை பெற்று கொள்ள கூறினர்.

    கபீர் மோட்டார் சைக்கிளை எடுத்து காந்திபுரம் சென்று திருடர்களை தேடி பார்த்தார். ஆனால் அவர்கள் அங்கு வரவில்லை. இதையடுத்து கபீர் மோட்டார் சைக்கிளை காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஓப்படைத்து நடந்தவற்றை கூறி புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற அந்த மர்ம நபர்கள் யார் என அந்த மோட்டார் சைக்கிளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தங்க நகைகள் மற்றும் 25 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
    • கண்காணிப்பு கேமராவையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது.

    மத்தூர்,

    திருப்பத்தூரை சேர்ந்தவர் சேகர் (வயது 52). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அனுமன்தீர்த்தம் மெயின் ரோட்டில் நகை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்த பின்னர் அவர் கடையை பூட்டி விட்டு திருப்பத்தூருக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் கடையின் சுவரில் துளை போட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் சேகருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் விரைந்து வந்து கடையை திறந்து பார்த்தார். நகை, வெள்ளி கொள்ளை அப்போது கடையின் பின்புறமாக துளையிடப்பட்டு மர்மநபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் 25 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து சேகர் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் நகைக்கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீஸ் மோப்ப நாய் ரேஷ்மி சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தவாறு ஆஞ்சநேயர் கோவில் வரை ஓடி விட்டு மீண்டும் திரும்பி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் கடை மற்றும் சுவரில் இருந்த தடயங்களை பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கண்காணிப்பு கேமராக்கள், அலாரம் பொருத்தி இருந்தார்.
    • கொள்ளையர்கள் 3 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பத்தில் கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை சேர்ந்தவர் கிதியோன். இவருக்கு சொந்தமாக மாடி வீடு உள்ளது.

    இவர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது வீடு கடந்த 6 மாதமாக பூட்டி கிடந்தது. இதனால் அவர் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள், அலாரம் பொருத்தி இருந்தார்.

    மேலும் ஓசூரில் இருந்தவாறு கண்காணிப்பு கேமரா பதிவுகளை தனது செல்போன் மூலமாக பார்த்து வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் 3 பேர் நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் அங்கு வந்தனர்.

    அவா்கள் மோட்டார் சைக்கிளை அந்த பகுதியில் மறைவான இடத்தில் நிறுத்தி விட்டு பட்டாக்கத்திகளுடன் ஒருவர், பின் ஒருவராக உள்ளே வந்தனர்.

    அப்போது கொள்ளை யன் ஒருவன் வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே குதிக்க முயன்ற போது அங்கு பொருத்தப்ப ட்டிருந்த அலாரம் ஒலிக்க தொடங்கியது.

    இதனால் செய்வ தறியாமல் கொள்ளையர்கள் 3 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர்.

    இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து அறிந்த கிதியோன் கந்திகுப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    மேலும் இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள உருவத்தை வைத்து கொள்ளை யர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • ஆந்திராவில் இருந்து ஊடுருவி உள்ள கொள்ளையர்கள் டிப்-டாப் தோற்றத்துடன் காணப்படுவார்கள்.
    • கடைகள் மற்றும் வணிக வீதிகளுக்கு செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையோடும் உஷாராகவும் இருக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் தி.நகர் உள்ளிட்ட வணிக பகுதிகளில் மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி 'பிக்பாக்கெட்' மற்றும் 'செயின்' பறிப்பு கொள்ளையர்கள் ஒருசில இடங்களில் கைவரிசை காட்டியுள்ளனர்.

    தி.நகர் ரங்கநாதன் தெருவில் சிறுமி ஒருவரிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    இதேபோன்று வணிக பகுதிகள் பலவற்றிலும் வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகர் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

    தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி செயின் பறிப்பு, பிக்பாக்கெட் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டு 300 கொள்ளையர்கள் சென்னையில் ஊடுருவி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. ஆந்திர மாநிலத்தில் உள்ள கே.வி.குப்பம், திருச்சி ராம்ஜி நகர், வேலூர், பேரணாம்பட்டு, மதுரை மேலூர் ஆகிய வெளியிடங்களில் இருந்து வந்துள்ள கொள்ளையர்கள் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இவர்கள் தவிர சென்னையை சேர்ந்த கொள்ளையர்களும் தீபாவளி திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதற்கு திட்டம் வகுத்து செயல்படுவதும் தெரியவந்துள்ளது.

    தண்டையார் பேட்டை நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த பிக்பாக்கெட் திருடர்களும் தீபாவளி கூட்டத்தில் புகுந்து கைவரிசை காட்டி வருவதும் தெரிய வந்துள்ளது.

    குறிப்பாக ஆந்திராவில் இருந்து ஊடுருவி உள்ள கொள்ளையர்கள் டிப்-டாப் தோற்றத்துடன் காணப்படுவார்கள். இவர்கள் கூட்ட நெரிசல் மிகுந்த கடைகள் மற்றும் வணிக பகுதிகளில் ஊடுருவி கைவரிசை காட்டுவார்கள். இவர்கள் விலை உயர்ந்த நகைகள் மற்றும் பெண்கள் தோள்களில் தொங்க விட்டுள்ள பைகளில் வைத்திருக்கும் 'மணிபர்ஸ்' உள்ளிட்ட பொருட்களை குறிவைத்து கைவரிசை காட்டுவதில் கில்லாடிகள்.

    எனவே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கடைகள் மற்றும் வணிக வீதிகளுக்கு செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையோடும் உஷாராகவும் இருக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இந்த கொள்ளையர்கள் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கூட்ட நெரிசலுக்குள் புகுந்து பொதுமக்கள் போலவே நடித்து கைவரிசை காட்டுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆந்திரா, திருச்சி, மதுரை, வேலூர் உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்து வந்துள்ள கொள்ளையர்கள் எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களின் அருகில் உள்ள லாட்ஜூகள், தங்கும் விடுதிகளில் பதுங்கி இருந்து கைவரிசை காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதையடுத்து போலீசார் அவர்கள் தங்கி இருக்கும் இடங்களை குறிவைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து உஷாரான கொள்ளையர்கள் தங்களது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். பூந்தமல்லியை அடுத்த நசரத் பேட்டை மற்றும் கேளம்பாக்கம், சிறுசேரி, பனையூர், மதுரவாயல் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளுக்கு சென்று பதுங்கி இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இடங்களிலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இப்படி தீபாவளி கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு ஊடுருவி இருக்கும் கொள்ளையர்கள் தங்களுக்குள் தனித்தனி பாணிகளை பின்பற்றி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்களோடு பேச்சு கொடுத்து கொண்டே அவர்களிடம் கைவரிசை காட்டுவது, கூட்ட நெரிசலில் டிப்-டாப் உடையுடன் ஊடுருவி கைவரிசை காட்டுவது என புதுப்புது யுக்திகளை கொள்ளையர்கள் பயன்படுத்தி வருவதாகவும் போலீசார் உஷார்படுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து கொள்ளையர்களின் புகைப்படங்கள் அடங்கிய எச்சரிக்கை போர்டுகளையும் போலீசார் பொது இடங்களில் வைத்துள்ளனர்.

    இதையடுத்து தி.நகர், பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட வணிக பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டத்தை கலக்கிய ஏ.டி.எம். கார்டு கொள்ளையர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • 2 பேர் மீது முதியவர்களிடம் ஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொடுப்பதை போல நடித்து ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வாழப்பாடி:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அய்யூர் பகுதியை சேர்ந்த சிவானந்தன் (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் கதிரவன் (30).

    நண்பர்களான இருவரும் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கு அருகில் நின்று கொண்டு, பணம் எடுக்க வரும் முதியவர்கள் மற்றும் பெண்களிடம், பணம் எடுத்துக் கொடுப்பதை போல நடித்து, அசல் ஏ.டி.எம். கார்டுகளை வாங்கிக்கொண்டு போலி கார்டுகளை மாற்றி கொடுத்து பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளனர்.

    இருவர் மீதும் கடந்த 2017 மற்றும் 2019ம் ஆண்டு எடப்பாடி பகுதியில், முதியவர்களிடம் ஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொடுப்பதை போல நடித்து ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வாழப்பாடி பகுதியில் நேற்று வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த இளைஞர்கள் 5 ஆண்டுகளாக ஏடிஎம் பணக் கொள்கையடித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், இவர்களிடமிருந்து 38 ஏடிஎம் கார்டுகள் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இருவரையும் எடப்பாடி போலீசில் ஒப்படைத்தனர்.

    ×