search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sale of goats"

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று கன்னிவாடி சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது.
    • கன்னிவாடி சந்தை வாரம்ேதாறும் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.

    குண்டடம்:

    தமிழகத்தில் நடைபெறும் ஆடுகள் விற்பனை சந்தையில் திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள கன்னிவாடி சந்தையும் ஒன்றாகும். கன்னிவாடி சந்தை வாரம்ேதாறும் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று கன்னிவாடி சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது. அதே நேரம் ஆடுகள் வரத்து அதிகரிப்பால் விலையில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது.

    இது குறித்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரி மகேந்திரன் கூறியதாவது:-

    இந்த வார சந்தைக்கு மூலனூர், அரவக்குறிச்சி, தாராபுரம், பகவான் கோவில், உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆடுகளை வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்குவதற்காக மேச்சேரி, கேரளா, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, ஆந்திரா, சென்னை, உடுமலை, பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். இவர்கள் இங்கு ஆடுகளை வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காகவும், இறைச்சிக்காகவும் கொண்டு செல்கின்றனர்.

    ஆடுகளின் வரத்து அதிகரித்திருந்ததாலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதாலும் புத்தாடைகள் போன்ற பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் வியாபாரிகள், விவசாயிகள் அதிக அளவில் ஆடுகளை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்

    இதனால் கடந்த வாரங்களில் இறைச்சிக்காக வாங்கப்படும் 10 கிலோ எடையுள்ள ஒரு ஆடு ரூ.6 ஆயிரத்து 200க்கு விலை போனது. ஆனால் இந்த வாரம் ரூ.5 ஆயிரத்து 500க்கு விலைபோனது. ரூ.12 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த குட்டியுடன் கூடிய பெரிய ஆடுகள் இந்த வாரம் ரூ.9 ஆயிரத்து 500ஆக குறைந்துவிட்டது. இதனால் விலை வீழ்ச்சி ஏற்பட்டது. மேலும் நேற்று நடைபெற்ற சந்தையில் சுமார் ரூ.10 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரத்தில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
    • தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ஆடு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் வாரச்சந்தை புதன்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம். தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ஆடு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.

    தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் இன்று அதிகாலை முதல் ஆட்டு வியாபாரிகள், கசாப்பு கடைகாரர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தையில் அதிகமாக கூடினர். இதே போல் வீடுகளில் வளர்க்கப்பட்ட நாட்டு கோழி விற்பனை சூடு பிடித்து காணப்பட்டது. இதனால் சந்தை களை கட்டியது.

    வழக்கத்தை விட ஆடுகளின் விலை அதிக மாக உள்ளதாக கசாப்பு கடை வியாபாரிகள் தெரி வித்தனர். ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்கப்பட்டது. இன்று மட்டும் ஆடுகள், நாட்டுக் கோழிகள் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தீபாவளியொட்டி களைகட்டியது
    • பொய்கை சந்தையில் மாடுகள் விற்பனை படுஜோர்

    அணைக்கட்டு:

    வேலூர் அருகே உள்ள பொய்கை கிராமத்தில் செயல்படும் வாரச்சந்தை யில் மாடுகள் விற்பனைக்கு மிகவும் பிரபலமானது.

    ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் இந்த சந்தையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சித்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணா மலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் மாடுகளை விற்கவும், வாங்கவும் விவசாயிகளும் வியாபா ரிகளும் வருகின்றனர்.

    இங்கு மாடுகள் மட்டுமின்றி கோழி, புறா, சேவல் விற்பனையும் காய்கறி, மாடுகளுக்கான கயிறுகள் உள்ளிட்டவை விற்பனையும் அதிகமாக நடக்கும்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொய்கை மாட்டு சந்தையில், மாடுகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. வரத்து அதிகரிப்பால் சந்தை வளாகம் நிரம்பி வழிந்தது. வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது.

    காலை முதலே வியாபாரம் களைகட்டியது. வழக்கத்தை விட இன்று மாடுகள் விலை மற்றும் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. அதன்படி கடேரி பசுக்கள் அதிகபட்சமாக ரூ.30 ஆயிரத்துக்கும், சினை பசுக்கள் ரூ.1 லட்சத்திற்கும், உழவு மாடுகள் ஒரு ஜோடி ரூ.1 லட்சத்திற்கும், காளை கன்றுகள் ரூ.30 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் கோழிகள் மற்றும் புறாக்கள் விற்பனையும் படுஜோராக நடந்தது. விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை அதிகளவில் வாங்கிச்சென்றனர்.

    கே.வி. குப்பம் சந்தையில் இன்று காலை ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.தீபாவளி பண்டிகையை யொட்டி வெள்ளாடுகள் அதிக அளவில் கொண்டு வரப்ப ட்டிருந்தன. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.இன்று ஒரே நாளில் ரூ.75 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.

    • பக்ரீத் பண்டிகையொட்டி அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தது.
    • 5000 முதல் 15 ஆயிரம் வரை உள்ள ஆடுகள் விற்பனைக்கு வந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் திரு.வி.க நகர் அருகே உள்ள வியாழக்கிழமை தோறும் நடைபெறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம். வருகின்ற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகையொட்டி அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தது. இதில் 4 மணி நேரத்தில் ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை வரவுள்ள நிலையில் ஆடுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் வியாபாரிகள் சந்தைகளில் ஆடுகளை விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில் சின்னசேலம் வார சந்தையில் காலை 5 மணி முதல் வியாபாரிகள் ஆடுகளை விற்க தொடங்கினர். சுமார் 5000 முதல் 15 ஆயிரம் வரை உள்ள ஆடுகள் விற்பனைக்கு வந்தது.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • சந்தையில் வழக்கத்தை விட ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.
    • ஆடுகள் அதிக அளவில் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேலை சாலையில் ஆட்டு சந்தையில் நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இங்கு வழக்கத்தை விட ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.

    குறிப்பாக ஆயக்கரம்பலம், வேதாரண்யம், கட்டிமேடு ஆலத்தம்பாடி, துளசிப்பட்டணம் வடபாதி ஆதிரங்கம் கச்சனம் மணலி வேலூர் முத்துப்பேட்டை ஆலங்காடு மருதவனம் கலப்பால் பல்லாங் கோயில் மேட்டுப்பாளையம் விளக்குடி கோட்டூர் போன்ற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் சுமார் ரூ. 25 லட்சத்துக்கு மேல் ஆடுகள் வியாபாரம் ஆனது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வியாபாரிகள் வேதனை
    • மொத்தம் ரூ.4.60 லட்சத்திற்கு மட்டுமே விற்பனை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் சந்தைக்கு தங்களின் ஆடுகளை விற்கவோ, வாங்கவோ இங்கு கூடுகின்றனர்.

    அதுமட்டுமின்றி, வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்கவும், விற்கவும் வருவார்கள்.

    இதனாலேயே ஒடுகத்தூர் ஆட்டு சந்தையில் விற்பனை களைகட்டும். இங்கு வாரம் தோறும் சுமார் ரூ.10 முதல் 15 லட்சம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்படும்.

    இந்நிலையில், வழக்கம்போல் இன்று ஆட்டு சந்தை கூடியது. ஆனால், காலை முதலே லேசான சாரல் மழை பெய்ததால் குறைவான ஆடுகளே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

    இதனால், குறைந்த அளவிற்கே ஆடுகள் விற்பனையானது. இதனால், வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஆடுகள் மொத்தமாக ரூ.4.60 லட்சத்திற்கு மட்டுமே விற்பனையானது என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    • தலை வாசல் அருகே வீரகனூரில் நேற்று ஆட்டுச்சந்தை கூடியது.
    • ரூ.87 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலை வாசல் அருகே வீரகனூரில் நேற்று ஆட்டுச்சந்தை கூடியது. ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, பெரம்பலூர், சின்னசேலம் பகுதிகளில் இருந்து 1000 ஆடுகள், 400 மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    சேலம், நாமக்கல், திருச்சி மட்டுமின்றி கேரளா வியாபாரிகளும் பங்கேற்றனர். இதன் மூலம் ரூ. 60 லட்சத்துக்கு ஆடுகள், ரூ.27 லட்சத்துக்கு மாடுகள் என ரூ.87 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

    • தீபாவளி பண்டிகையையொட்டி திருமங்கலம் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது.
    • திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் இன்று ரூ. 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் வெள்ளி கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த சந்தையில் ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கோவில்பட்டி, திருநெ ல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வியாபாரிகள் ஆடுகள், கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். 4 மணிக்கு தொடங்கியது. வழக்கத்தைவிட இன்று அதிகளவு கூட்டம் காணப்பட்டது. ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ஆடுகள் விற்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வார வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தையில் ஆட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரை விற்கப்படும். ஆனால் தற்போது ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரத்திற்கு மேல்தான் விற்கப்படுவதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் இன்று ரூ. 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தீபாவளி பண்டிகை வருவதால் நேற்று விற்பனைக்கு ஏராளமான ஆடு, கோழிகள், மாடுகள் கொண்டு வரப்பட்டது.
    • இந்த வார சந்தையில் தீபாவளி யை யொட்டி ஆடு, கோழி, மாடுகள் ரூ.2 கோடி அளவுக்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டியில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று ஆடு, கோழி, மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தை தமிழகத்தில் 2-வது பெரிய சந்தையாகும்.

    தற்போது புரட்டாசி மாதம் முடிந்து தீபாவளி பண்டிகை வருவதால் நேற்று விற்பனைக்கு ஏராளமான ஆடு, கோழிகள், மாடுகள் கொண்டு வரப்பட்டது.

    இதை வாங்க ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழி, மாடுகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதில் 1000-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் ரூ.1 கோடிக்கு விற்பனையானது. இதேபோல் மாடுகளும் ரூ.1 கோடிக்கு விற்பனையானது. இன்று காலையும் ஆட்டுசந்தை நடந்தது.

    இதிலும் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர். இந்த வார சந்தையில் தீபாவளி யை யொட்டி ஆடு, கோழி, மாடுகள் ரூ.2 கோடி அளவுக்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • புரட்டாசி மாதம் என்ப தால் கடந்த 4 வாரங்களாக ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்தது.
    • ஆடுகள் வாங்குவதற்காக அதிகாலை முதலே வியாபா ரிகள் அங்கு குவிந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    சின்ன சேலத்தில் வாரந்தோறும் வியாழக்கி ழமை வாரச்சந்தை நடை பெறுவது வழக்கம். இதில் காலை நேரத்தில் நடை பெறும் ஆடுகள் விற்பனை சந்தையில் சின்னசேலம் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளான பாண்டியன் குப்பம், மூங்கில் பாடி, நயினார்பாளையம், குரால், கூகையூர், அம்மயா கரம், காள சமுத்திரம், வாசுதேவனூர் உள்ளிட்ட சேர்ந்த பொதுமக்கள் ஆடுகளை வியாபாரிகளிடமிருந்து வாங்கி சென்றனர். புரட்டாசி மாதம் என்ப தால் கடந்த 4 வாரங்களாக ஆடுகள் விற்பனை மந்த மாக இருந்தது.

    இந்த நிலை யில், தற்போது புரட்டாசி மாதம் நிறைவு பெற்றதுடன், வருகிற 24-ந்தேதி தீபாவளி பண்டிகை என்பதால், இன்று வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை நடந்தது. ஆடுகள் வாங்குவதற்காக அதிகாலை முதலே வியாபாரிகள் அங்கு குவிந்தனர். அவர்கள் போட்டி போட்டு க்கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர். வழக்கம்போல் வார சந்தையில் ஆடுகள் ஒன்று முதல் ரூ. 1.50 லட்சம் வரை ஆடு விற்பனை ஆவது வழக்கம். இப்பொழுது தீபாவளி பண்டிகை வருவதால் இன்று ஒரே நாளில் 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாகி இருக்கும் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    • பக்ரீத் பண்டிகையையொட்டி தியாகதுருகம் வாரச் சந்தையில் ரூ.40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
    • இஸ்லாமியர்கள் பலரும் போட்டி போட்டு க்கொண்டு வாங்கி சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகத்தில் ஒவ்வொருவாரமும் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 500 க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனையொட்டி ஆடுகளை வாங்குவதற்கு உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் பலரும் போட்டி போட்டு க்கொண்டு வாங்கி சென்றனர்.இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில் பக்ரீத் பண்டிகையையொட்டி கூடுதல் விலைக்கு விற்கலாம் என விவசாயிகள் பலரும் தங்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால் வியாபாரிகளும் ஆடுகளை போட்டிபோட்டு ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். சந்தையில் ஆடு குறைந்த விலையாக ரூ.6000 ரூபாயும் அதிகபட்சமாக ரூ.23,000 வரை விற்பனை ஆனது. ஆட்டுக்குட்டி ரூ. 2000 முதல் ரூ.6000 வரை விற்பனை செய்யப்பட்டது. பக்ரீத் பண்டிகையை யொட்டிவழக்கமாக சந்தைக்கு வரும் ஆடுகளை விட கூடுதலான ஆடுகள் சந்தைக்கு வந்தன. இதனால் சுமார் 40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்று இருக்கலாம் என கூறினார்.

    • பக்ரீத் பண்டிகை எதிரொலியாக செஞ்சி வாரசந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
    • செம்மறி ஆடுகள் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையிலும் கருப்பு ஆடுகள் ரூ. 8000 முதல் ரூ.15,000 விற்கபட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். செஞ்சியில் சந்தையில் கருவாடுஆடுகள் அதிகளவில் விற்பனையாகும். எனவே இந்த சந்தைக்கு சேலம், தர்மபுரி, வேலூர்,ஆம்பூர் மற்றும் புதுவை பெங்களுர் போன்ற பகுதியில் இருந்தும் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள். வருகிற 10-ந் தேதி பக்ரீத் பண்டிகை வருகிறது. இதையொட்டி இன்று கூடிய சந்தையில்கூடுதலாக ஆடுகள்விற்பனைக்கு வந்தது. ஆடுகளைவாங்குவத ற்காக பெங்களுர் மற்றும் சேலம், திருவ ண்ணாமலை, வேலுர், தருமபுரி,சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் செஞ்சி வார சந்தைக்கு வந்து குவிந்தனர்.

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் வியாபாரிகள் அதிகமாக வருவார்கள் என கருதி சுற்றுவட்டார கிராம பகுதி யில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர் அதன்படி அதிக மான ஆடுகள் விற்பனைக்கு வந்த தால்தான் விலையும் சிறிதுகுறைவாகவே இருந்தது. பக்ரீத்பண்டிகை குர்பானிக்காக செம்மறி ஆடுகள் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையிலும் கருப்பு ஆடுகள் ரூ. 8000 முதல் ரூ.15,000 விற்கபட்டது. இந்த வார சந்தையில் மட்டும் சுமார் 50,000 க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யபட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 5 கோடி ஆகும்.

    ×