search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமங்கலம் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
    X

    ஆட்டுச்சந்தையில் கூடிய வியாபாரிகள் கூட்டம்

    திருமங்கலம் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    • தீபாவளி பண்டிகையையொட்டி திருமங்கலம் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது.
    • திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் இன்று ரூ. 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் வெள்ளி கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த சந்தையில் ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கோவில்பட்டி, திருநெ ல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வியாபாரிகள் ஆடுகள், கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். 4 மணிக்கு தொடங்கியது. வழக்கத்தைவிட இன்று அதிகளவு கூட்டம் காணப்பட்டது. ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ஆடுகள் விற்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வார வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தையில் ஆட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரை விற்கப்படும். ஆனால் தற்போது ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரத்திற்கு மேல்தான் விற்கப்படுவதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் இன்று ரூ. 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×