search icon
என் மலர்tooltip icon

    கனடா

    • குர்பத்வர்த் சிங் பன்னூன் மீண்டும் ஒரு மிரட்டல் விடுத்துள்ளார்.
    • கைது செய்பவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

    காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான சீக்கியவர்களுக்கான நீதி அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் பன்னூன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், ஏர்-இந்தியா விமானங்களுக்கு மிரட்டல் விடுத்தார்.

    இந்த நிலையில் குர்பத்வர்த் சிங் பன்னூன் மீண்டும் ஒரு மிரட்டல் விடுத்துள்ளார். அதில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணையில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக, ஏர்-இந்தியாவை புறக்கணிப்பதை பயங்கரவாத அச்சுறுத்தலுடன் தொடர்புப் படுத்தி கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா பொய் பிரசாரம் செய்கிறார். எனவே அவரை கைது செய்பவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

    • தீபாவளி சிறப்பு மெனுவாக ஜிலேபி சீஸ்கேக் டோனட், கேரமல் பிஸ்தா டோனட், சோகோ சிக்கி டோனட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
    • இனிப்பு வகைகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்தியா முழுவதும் ஸ்வீட் கடைகளில் பல்வேறு புதிய ரகங்களில் இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை களை கட்டி உள்ளது.

    இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், கனடாவில் உள்ள பிரபல காபி ஹவுசான டிம் ஹார்டன்சில் தீபாவளியையொட்டி புதிய வகை டோனட்களை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

    இதில் தீபாவளி சிறப்பு மெனுவாக ஜிலேபி சீஸ்கேக் டோனட், கேரமல் பிஸ்தா டோனட், சோகோ சிக்கி டோனட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை ஒவ்வொன்றும் தலா ரூ.185 என்ற விலையில் விற்கப்படுகின்றன. இந்த புதிய மெனுவின் ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட நிலையில், பயனர்கள் பலரும் அதன் சுவை குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இதனால் இந்த இனிப்பு வகைகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    • கப்பலில் பயணித்த வரலாற்று ஆசிரியரான கனடாவை சேர்ந்த லென் ஸ்டீபன்சன் என்பவர் டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவு பட்டியலை வைத்திருந்தார்.
    • ‘மெனு கார்டு’ 60 ஆயிரம் யூரோவுக்கு (இந்திய மதிப்பில் ரூ.61 லட்சம்) ஏலம் விடப்படுகிறது.

    உலக அளவில் பிரபலமானதாக கருதப்படும் டைட்டானிக் கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. இதில் கப்பலில் பயணித்த 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ஆய்வுகள் தற்போதும் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாவதற்கு முன்பாக அந்த கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட இரவு நேர உணவு பட்டியல் ஏலத்திற்கு வர உள்ளது. இதுதொடர்பாக ஏலதாரரான ஆன்ட்ரூ ஆல்ட்ரிச் கூறுகையில், கப்பலில் பயணித்த வரலாற்று ஆசிரியரான கனடாவை சேர்ந்த லென் ஸ்டீபன்சன் என்பவர் டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவு பட்டியலை வைத்திருந்தார்.

    இது அவரது குடும்பத்தினர் உள்பட யாருக்கும் தெரியாது. 2017-ம் ஆண்டு அவர் இறந்த பிறகு அவரது உடமைகளை அவரின் மகளும், மருமகளும் பார்த்தனர். அப்போது தான் இந்த டைட்டானிக் கப்பலில் வழங்கப்பட்ட மெனுவை பழைய புகைப்பட ஆல்பத்தில் வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர் என்றார்.

    விரைவில் ஏலத்திற்கு வர உள்ள அந்த மெனு கார்டில் மாட்டிறைச்சி உள்ளிட்ட பல உயர்தர உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. இந்த 'மெனு கார்டு' 60 ஆயிரம் யூரோவுக்கு (இந்திய மதிப்பில் ரூ.61 லட்சம்) ஏலம் விடப்படுகிறது.

    • இந்தியாவை சேர்ந்த 700 மாணவர்களை வெளியேறுமாறு கனடா தெரிவித்தது.
    • புதிய கொள்கை வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

    ஒட்டாவா:

    அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கல்வி கற்க இந்திய மாணவர்கள் பலர் விண்ணப்பிக்கிறார்கள். இதற்கிடையே சமீபத்தில் ஏஜென்சிகள் மூலம் கனடாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்த இந்திய மாணவர்களிடம் போலி ஆவணங்களை அவர்களுக்கு தெரியாமல் கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.

    இதையடுத்து இந்தியாவை சேர்ந்த 700 மாணவர்களை வெளியேறுமாறு கனடா தெரிவித்தது. இந்த மோசடியில் பாதிகப்பட்ட மாணவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்நிலையில் மாணவர் விசாவில் வருபவர்களிடம் ஏஜெண்டுகள் செய்யும் மோசடிகளை தடுக்க கனடா அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி கனடாவில் முதுகலை கல்வி கற்பிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் ஏற்பு கடிதத்தையும் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்துடன் சரி பார்க்க வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் அமைச்சகத்திடம் இருந்து சரி பார்க்கப்பட்ட ஏற்றுக் கொள்ளும் கடிதத்தை பெற வேண்டும். இந்த புதிய கொள்கை வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

    இதுகுறித்து அமைச்சர் மார்க் மில்லர் கூறும்போது, கனடாவுக்கு வரும் பிற நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏமாற்றப்படாமல் பாதுகாப்பதே தனது நோக்கம் என்றார்.

    இந்த நடவடிக்கை இதற்கு முன்பு மாணவர்கள் ஏமாற்றப்பட்டதைப் போன்ற சூழல் ஏற்படாமல் தடுக்கும் என்பதோடு உண்மையான ஏற்பு கடிதங்களின் அடிப்படையில் மட்டுமே படிப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதையும் உறுதி செய்யும் என்று கனடா அரசு தெரிவித்தது.

    • 45 வயது மதிக்கத்தக்க நபர், 6 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் உயிரிழந்து கிடந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கனடாவின் வடக்கே உள்ள ஒன்டாரியோ நகரில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது சாலையில் ஒருவர் இறந்து கிடந்தார். அதே போல் வீடுகளில் 45 வயது மதிக்கத்தக்க நபர், 6 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் உயிரிழந்து கிடந்தனர். மேலும் 44 வயது நபர் ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். 5 பேர் இறந்த இந்த உயிரிழப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்பப்பெற்ற நிலையில் இந்த முடிவு
    • டெல்லி, பெங்களூருவில் எச்சரிக்கையுடன் செயல்பட வலியுறுத்தல்

    காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் கனடா, இந்திய புலனாய்வு அமைப்பு மீது குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் இருந்து இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    தற்போது இந்தியாவில் இருந்து 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் வாழும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது.

    தங்கள் நாட்டினருக்காக வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், "இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், "இருநாட்டு உறவு மோதல் முற்றியுள்ள நிலையில் இந்தியாவில் கனடாவுக்கு எதிராக போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கனடாவுக்கு எதிராக எதிர்மறை உணர்வுப்பூர்வ கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. கனடா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம். ஒருவேளை கனடா நாட்டினர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம்.

    டெல்லியில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து ஒதுங்கியிருக்கவும். தனிப்பட்ட தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

    மும்பை, சண்டிகர், பெங்களூரு ஆகிய நகரங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏதாவது உதவி தேவைப்பட்டால் கனடா நாட்டினர் டெல்லியில் உள்ள தூதர அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    பிக்பாக்கெட், சிறிய காயம் போன்ற சம்பவங்கள் பொதுவானது. குற்றவாளிகள் வெளிநாட்டினரை இலக்காக வைத்து தாக்கலாம். குறிப்பாக முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் இதுபோன்று நடக்கலாம் என எச்சரித்துள்ளது.

    • கனடாவின் உள்விவகாரங்களில் ஏற்கனவே சீனா, ரஷியாவின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
    • நிஜ்ஜார் கடந்த 2015-ம் ஆண்டு பாகிஸ்தானில் இயங்கி வரும் ஐ.எஸ். இயக்கத்திடம் ஆயுத பயிற்சி மேற்கொண்டார்.

    ஒட்டாவா:

    கனடாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாத தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் இந்தியாவில் தேடப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்று இருந்தவர்.

    இவரது கொலை பின்னணியில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா கனடாவின் குற்றச்சாட்டை மறுத்தது. இதன் காரணமாக இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு தொடர்பு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. கனடாவின் உள்விவகாரங்களில் ஏற்கனவே சீனா, ரஷியாவின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. நிஜார் கொலையில் இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் இதன் மூலம் சீனா பலன் அடைய திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு சம்பந்தம் இருக்கலாமா? என்ற சந்தேகமும் தற்போது கிளம்பி இருக்கிறது.

    நிஜ்ஜார் கடந்த 2015-ம் ஆண்டு பாகிஸ்தானில் இயங்கி வரும் ஐ.எஸ். இயக்கத்திடம் ஆயுத பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு சர்வ தேச அளவில் உள்ள பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு இருந்தது. மேலும் கனடாவிலும் காலிஸ்தான் ஆதரவு குழுக்களுக்கு அவர் பலமுறை ஆயுத பயிற்சி முகாம்கள் நடத்தி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையாள்வது குறித்து பயிற்சிகளும் அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்போது வரை இந்த கொலை யில் பல்வேறு சந்தே கங்கள் நிலவி வரு கிறது.

    இந்த சூழ்நிலையில் கனடாவில் நடக்க இருந்த இசை நிகழ்சியை ரத்து செய்து விட்டதாக இந்திய பாடகர் குருதாஸ்மான் அறிவித்துள்ளார். பஞ்சாபை சேர்ந்த புகழ்பெற்ற பாடகரான குருதாஸ்மான் இந்த மாதம் 22- ந் தேதி முதல் 31-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருந்தார். இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது.

    தற்போது கனடா-இந்தியா இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அவர் தனது இசை நிகழ்சியை ரத்து செய்து உள்ளார்.

    இதையடுத்து இசை நிகழ்ச்சியை காண டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கப்பட இருப்பதாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    • நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜென்சிகளுக்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்தார்.
    • இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்ப அழைத்து கொள்ளுமாறு கனடாவிடம் இந்தியா வலியுறுத்தியது.

    ஒட்டாவா:

    கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரான ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ பகிரங்கமாக குற்றச்சாட்டு தெரிவித்தார். நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜென்சிகளுக்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்தார்.

    இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. இவ்விவகாரத்தால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. கனடாவில் இருந்து இந்திய தூதரை வெளியேற கனடா அரசு உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் கனடா நாட்டு தூதரை வெளியேற உத்தரவிட்டது. இதற்கிடையே இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்ப அழைத்து கொள்ளுமாறு கனடாவிடம் இந்தியா வலியுறுத்தியது. இதற்கு வருகிற 10-ந் வரை காலக்கெடு விதித்தது.

    இந்நிலையில் இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகள் மலேசியா அல்லது சிங்கப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    வருகிற 10-ந் தேதி கனடா தூதரக அதிகாரிகளை திரும்ப பெறுமாறு இந்தியா கேட்டுக் கொண்டதையடுத்து அவர்கள் இந்தியாவுக்கு வெளியே பணியாற்ற கனடா அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவில் உள்ள பெரும்பாலான தூதர்களை மலேசியாவின் கோலாலம்பூர் அல்லது சிங்கப்பூருக்கு இடமாற்றம் செய்துள்ளதாக கனடா நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    அதே வேளையில் இது தொடர்பாக இந்திய அதிகாரிகளோ அல்லது கனடா அதிகாரிகளோ அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

    • விமானம் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கியது
    • விமான விபத்து குறித்து கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சில்லிவாக் நகரில் பைபர் பி.ஏ.-34 செனிகா என்ற இரட்டை என்ஜின் கொண்ட விமானம் பயிற்சியில் ஈடுபட்டது.

    இதில் இந்தியாவின் மும்பையை சேர்ந்த அபய் காட்ரூ, யாஷ் விஜய் ராமுகடே உள்பட 2 பயிற்சி விமானிகள் சென்றனர். அந்த விமானம் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கியது.

    இதில் பயிற்சி விமானிகள் 2 பேரும் உயிரிந்தனர். விமான விபத்து குறித்து கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.

    • கனடாவுக்கு இந்தியாவில் தூதரக அதிகாரிகள் இருப்பது முக்கியம்.
    • கடினமான நேரத்தில் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான உறவை தொடர்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

    கனடாவின் ஒட்டாவா நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் இந்தியாவில் இருக்கும் கனடா தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற இந்தியா வலியுறுத்தியதாக வெளியான தகவல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் பதிலளித்து பேசுகையில், "கனடாவுக்கு இந்தியாவில் தூதரக அதிகாரிகள் இருப்பது முக்கியம். வெளிப்படையாக, நாங்கள் இப்போது இந்தியாவுடன் மிகவும் சவாலான நேரத்தைக் கடந்து வருகிறோம். ஆனால் நிலைமையை மோசமடைய செய்ய நாங்கள் விரும்பவில்லை. இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுடன் ஆக்கபூர்வமான உறவை தொடர்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அந்த முக்கியமான பணியை நாங்கள் தொடர்ந்து செய்யப்போகிறோம்" என்றார்.

    • நவம்பர் 28 வரை ஆணையம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது
    • எழுத்தாளர் கிரீன்வால்டின் கருத்தை ஆமோதித்தார் மஸ்க்

    "இணையதள ஸ்ட்ரீமிங் சட்டம்" எனும் புது சட்டத்தின் மூலம் 10 மில்லியன் டாலருக்கு மேல் வருமானம் ஈட்டும் இணையதள சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், தங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை அரசாங்கத்திடம் பதிவு செய்து அரசு விதிக்கும் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என கனடா அரசாங்கத்தின் வானொலி-தொலைக்காட்சி மற்றும் தொலைதொடர்பு ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்ய நவம்பர் 28 வரை காலக்கெடுவும் நிர்ணயித்துள்ளது. இந்த உத்தரவு, ஆடியோ-வீடியோ சேவைகளை வழங்கும் பல வலைதளங்கள் உட்பட சமூக வலைதளங்களுக்கும், இணையவழி சந்தாதாரர் தொலைக்காட்சி சேவைகள் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

    "உலகத்திலேயே கனடா அரசாங்கம்தான் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான பிற்போக்கு வழிமுறைகளை கையாண்டு வருகிறது" என இதனை குறித்து கெல்ன் கிரீன்வால்ட் எனும் அமெரிக்க எழுத்தாளர் தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டிருந்தார்.

    "ட்ரூடோ கருத்து சுதந்திரத்தை நசுக்க முயற்சிக்கிறார். வெட்கக்கேடு" என குறிப்பிட்டு, கிரீன்வால்டின் கருத்தினை ஆமோதிக்கும் வகையில் எக்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிறுவனரும் உலகின் நம்பர் 1. பணக்காரரான அமெரிக்கர் எலான் மஸ்க் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    கனடா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு உலகளவில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    • கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது
    • ஆக்கபூர்வமான உறவை வளர்க்க தீவிரமாக உள்ளதாக ஜஸ்டின் தெரிவித்தார்

    இந்தியாவால் பயங்கரவாதி என பிரகடனப்படுத்தப்பட்ட காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த பிரிவினைவாதி ஹர்திப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் 18 அன்று கனடா நாட்டில் உள்ள வேன்கூவர் நகரில் சுட்டு கொல்லப்பட்டான்.

    இந்த கொலையை தீவிரமாக கனடா விசாரித்து வந்த நிலையில், இம்மாதம் 18 அன்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு பாராளுமன்றத்தில் இக்கொலை சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளது என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதனை திட்டவட்டமாக இந்தியா மறுத்தது. இரு நாடுகளும் பரஸ்பரம் தூதர்களை வெளியேற்றும் அளவிற்கு உறவு சீர்கெட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்தியா கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்புபவர்களுக்கு 'விசா' வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

    இந்நிலையில், கனடாவின் க்யூபெக் பிராந்தியத்தில் உள்ள மான்ட்ரியல் பகுதியில் நேற்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேட்டியளித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் வளர்ந்து வருவதை உணர்கிறோம். கனடாவும் அதன் நட்பு நாடுகளும் இந்தியாவுடன் ஆக்கபூர்வமாகவும் தீவிரமாகவும் நல்லுறவு வளர்க்க வேண்டியது மிக அவசியம். கடந்த வருடம் நாங்கள் வெளியிட்டிருந்த இந்தோ-பசிபிக் திட்டப்படி, இந்தியாவுடன் நெருங்கிய உறவினை வளர்க்க நாங்கள் தீவிரமாக உள்ளோம். அதே சமயம், ஹர்திப் விவகாரத்தில் சட்டப்படி நடக்க விரும்பும் நாடான எங்களுடன் இணைந்து பணியாற்றி உண்மையை வெளிக்கொண்டு வர இந்தியா உதவ வேண்டும்.

    இவ்வாறு ஜஸ்டின் தெரிவித்தார்.

    ஹர்திப் சிங் கொலையில் இந்தியாவிற்கு உள்ள தொடர்புகள் குறித்து கனடாவிடம் இந்தியா ஆதாரங்களை கேட்டிருந்தது. இதுவரை தங்களின் குற்றச்சாட்டுகளுக்கு கனடா அரசாங்கம் ஆதாரங்கள் எதுவும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×