search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலிஸ்தான் பயங்கரவாதிகள்"

    • கனடாவின் உள்விவகாரங்களில் ஏற்கனவே சீனா, ரஷியாவின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
    • நிஜ்ஜார் கடந்த 2015-ம் ஆண்டு பாகிஸ்தானில் இயங்கி வரும் ஐ.எஸ். இயக்கத்திடம் ஆயுத பயிற்சி மேற்கொண்டார்.

    ஒட்டாவா:

    கனடாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாத தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் இந்தியாவில் தேடப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்று இருந்தவர்.

    இவரது கொலை பின்னணியில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா கனடாவின் குற்றச்சாட்டை மறுத்தது. இதன் காரணமாக இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு தொடர்பு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. கனடாவின் உள்விவகாரங்களில் ஏற்கனவே சீனா, ரஷியாவின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. நிஜார் கொலையில் இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் இதன் மூலம் சீனா பலன் அடைய திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு சம்பந்தம் இருக்கலாமா? என்ற சந்தேகமும் தற்போது கிளம்பி இருக்கிறது.

    நிஜ்ஜார் கடந்த 2015-ம் ஆண்டு பாகிஸ்தானில் இயங்கி வரும் ஐ.எஸ். இயக்கத்திடம் ஆயுத பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு சர்வ தேச அளவில் உள்ள பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு இருந்தது. மேலும் கனடாவிலும் காலிஸ்தான் ஆதரவு குழுக்களுக்கு அவர் பலமுறை ஆயுத பயிற்சி முகாம்கள் நடத்தி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையாள்வது குறித்து பயிற்சிகளும் அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்போது வரை இந்த கொலை யில் பல்வேறு சந்தே கங்கள் நிலவி வரு கிறது.

    இந்த சூழ்நிலையில் கனடாவில் நடக்க இருந்த இசை நிகழ்சியை ரத்து செய்து விட்டதாக இந்திய பாடகர் குருதாஸ்மான் அறிவித்துள்ளார். பஞ்சாபை சேர்ந்த புகழ்பெற்ற பாடகரான குருதாஸ்மான் இந்த மாதம் 22- ந் தேதி முதல் 31-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருந்தார். இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது.

    தற்போது கனடா-இந்தியா இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அவர் தனது இசை நிகழ்சியை ரத்து செய்து உள்ளார்.

    இதையடுத்து இசை நிகழ்ச்சியை காண டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கப்பட இருப்பதாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    • ஐக்கிய நாடுகள் அவையின் பொது சபை கூட்டத்தில் இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக சாடும் வகையில் கனடா தூதர் பேசி உள்ளார்.
    • ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஐ.நா. அவையில் உரையாற்றி இருந்தார்.

    புதுடெல்லி:

    கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இந்த கொலையில் இந்திய ஏஜெண்டுகள் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தினார். ஆனால் அவரது குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது.

    கனடாவின் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை இந்தியாவிடம் வழங்கவில்லை. நிஜ்ஜார் கொலையால் இந்தியா-கனடா இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தை மேலும் தீவிரமாக்கும் வகையில் கனடாவின் போக்கு உள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் பொது சபை கூட்டத்தில் இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக சாடும் வகையில் கனடா தூதர் பேசி உள்ளார்.

    அதே நேரம் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஐ.நா. அவையில் உரையாற்றி இருந்தார்.

    இந்நிலையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான இன்டர் சர்வீசஸ் இன்டலி ஜெஸ்ன்ஸ் (ஐ.எஸ்.ஐ.) கனடாவில் ஹர்தீப்சிங் நிஜ்ஜாரை கொலை செய்ததற்கு மூளையாக செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான ஆதாரங்களும் வெளியாகி உள்ளன.

    நிஜ்ஜாரை கொல்ல ஐ.எஸ்.ஐ. சில கிரிமினல்களை வேலைக்கு அமர்த்தியதற்கான ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. இதைத் தொடர்ந்து, நிஜ்ஜார் கொலை மூலம் இந்தியா-கனடா இடையிலேயான உறவை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் செயல்பட்டு இருப்பது அம்பலமாகி உள்ளது.

    • கனடாவில்‌ இருந்து இயங்கி வரும்‌ பயங்கரவாத அமைப்புகள், அதன்‌ தலைவர்கள்‌ குறித்த தகவல்களையும்‌ அளித்துள்ளோம்‌.
    • இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு கனடா புகலிடம் அளித்து வருகிறது.

    நியூயார்க் நகரில், வெளியுறவுக்கான கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இதில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்பட பல நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் இந்தியா - கனடா பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து ஜெய்சங்கர் கூறியதாவது:-

    கனடா பிரதமர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே நாங்கள் பதிலளித்து விட்டோம். இது போன்று கொலை செய்வது இந்தியாவின் கொள்கை அல்ல. இதில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக ஏதாவது குறிப்பிட்ட சிறிய ஆதாரம் இருந்தாலும் அதை கொடுக்கலாம். அதை, இந்தியா உரிய முறையில் கவனிக்கும் என தெரிவித்துள்ளோம்.

    எந்த ஒரு முகாந்திரமும், ஆதாரமும் இல்லாமல் இது போன்ற புகார் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சில முக்கியமான அம்சங்களை பார்க்க வேண்டும்.

    கடந்த சில ஆண்டுகளாக கனடாவில், பிரிவினைவாத அமைப்புகளால் திட்டமிட்டு குற்றங்கள், வன்முறைகள், பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக குறிப்பிட்ட தகவல்கள், ஆதாரங்கள், முன்னெச்சரிக்கைகளை கனடாவுக்கு நாங்கள் வழங்கி உள்ளோம்.

    கனடாவில் இருந்து இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகள், அதன் தலைவர்கள் குறித்த தகவல்களையும் அளித்துள்ளோம். அவர்களை நாடு கடத்துவதற்கான கோரிக்கைகளையும் அளித்துள்ளோம். கனடாவில் உள்ள நிலவரங்களை முழுமையாக பார்க்க வேண்டும். அங்கு சில அரசியல் நிர்ப்பந்தங்கள் உள்ளன. பயங்கரவாத அமைப்புகள் குறித்து நாம் குறிப்பிட்டால் தங்கள் தரப்பை நியாயப்படுத்தி கனடா பேசுகிறது.

    இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு கனடா புகலிடம் அளித்து வருகிறது. அவர்கள் இது தொடர்பான எந்த நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியது.
    • காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கும் தொடர்பு இருப்பது குறித்த ஆதாரங்களை என்.ஐ.ஏ. சேகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    கனடாவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் புலிகள் படையின் தலைவரும், காலிஸ்தான் பயங்கரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி கனடாவில் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்துக்கு, இந்தியா மீது கனடா குற்றம் சுமத்தியதால் இரு நாடுகள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் கனடா தூதரக உயர் அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற்றியது. மேலும் கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி உள்ளது.

    இந்த நிலையில் ஹர்தீப் சிங் நிஜாருக்கு சொந்தமான பஞ்சாப் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள சொத்துகள், சீக்ஸ் பார் ஜஸ்ட்டிஸ் அமைப்பின் தலைவர் குருபத்வந்த் சிங்குக்கு சொந்தமான சண்டிகர் வீடு ஆகியவற்றை என்.ஐ.ஏ. முடக்கியது. மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் 19 பேரின் சொத்துகளை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்க மத்திய அரசு முடிவு செய்தது.

    இந்நிலையில், காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஸ்பான்சர் விசாக்கள் மூலம் இந்திய இளைஞர்களை மூளைச்சலவை செய்து கனடாவுக்கு அழைத்துச் சென்று காலிஸ்தான் படையை உருவாக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பஞ்சாப், அரியானா, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் வேலை இல்லாமல் பரிதவித்து வரும் இளைஞர்களைக் குறிவைத்து அவர்களுக்கு மூளைச்சலவை செய்யும் பணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு எந்தவித செலவும் வைக்காமல் ஸ்பான்சர் விசாக்களை தயார் செய்து, கனடாவுக்கு அழைத்துச் சென்று குருத்வாராக்களில் பணி, நடுத்தர திறன் படைத்த வேலை போன்றவற்றில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் சேர்த்து விட்டுள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் நடவடிக்கை இந்தியாவில் தொடர்வதை தடுக்கும் வகையில் இன்று அதிகாலை முதல் 6 மாநிலங்களில் 50 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பஞ்சாபில் 30 இடங்கள், ராஜஸ்தானில் 13 இடங்கள், அரியானாவில் 4 இடங்கள், உத்தரகாண்டில் 2 இடங்கள், டெல்லி-என்சிஆர் மற்றும் உ.பி.யில் தலா 1 இடங்களில் சோதனைகள் நடந்து வருகின்றன.

    பயங்கரவாதிகளுக்கும் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கும் இடையிலான உறவை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் என்.ஐ.ஏ. இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்பினர், ஹவாலா மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் பயங்கரவாதிகள் மற்றும் கும்பல்களுக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை சப்ளை செய்கின்றனர்.

    காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கும் தொடர்பு இருப்பது குறித்த ஆதாரங்களை என்.ஐ.ஏ. சேகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாகவே சோதனை நடைபெற்று வருகிறது.

    காலிஸ்தான் ஆதரவு இயக்கங்கள் மீதான கனடா அரசின் மென்மையான போக்கின் காரணமாக அவர்கள் அங்கு அதிக வளர்ச்சி பெற்று வருகின்றனர். மேலும் கனடாவில் வசிக்கும் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தோரை மிரட்டுவதற்கும், அங்குள்ள குருத்வாராக்களை சேதப்படுத்தி அச்சுறுத்துவதற்கும் இளைஞர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

    கடந்த 50 ஆண்டுகளாகவே கனடா மண்ணில் பயங்கரவாத, பிரிவினைவாத நடவடிக்கைளில் காலிஸ்தான் ஆதரவு சக்திகள் ஈடுபட்டு வருகின்றன என்கின்றனர் இந்திய அதிகாரிகள்.

    • கனடாவில் இந்தியாவை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • இரு நாட்டுக்கும் இடையே பகை உருவாகி இருப்பதால் இந்தியாவில் உள்ள அவர்களது பெற்றோர்கள் கவலை அடைந்து இருக்கிறார்கள்.

    கனடா நாட்டில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா- கனடா நாடுகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது.

    ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்தியாவின் ஏஜெண்டுகள் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தினார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது.

    இந்த சம்பவத்தையொட்டி கனடாவில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை அந்நாடு வெளியேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரியை வெளியேறுமாறு உத்தரவிட்டது. இரு நாடுகள் இடையே இந்த நடவடிக்கை மேலும் மோதலை அதிகரித்து வருகிறது.

    கனடாவில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இங்குள்ள சிறுபான்மை இந்துக்களை கனடாவை விட்டு வெளியேறும் படி காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் வெளிப்படையாக மிரட்டல் விடுத்தனர்.

    மேலும் கனடா டொராண்டோ மற்றும் வான்கூவர் நகரில் உள்ள இந்திய தூதரகம் முன்பும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலிஸ்தான் கொடியுடன் போராட்டம் நடத்திய அவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். அங்குள்ள இந்து கோவில்களும் சேதப்படுத்தப்பட்டன. இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

    கனடாவில் இந்தியாவை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இரு நாட்டுக்கும் இடையே பகை உருவாகி இருப்பதால் இந்தியாவில் உள்ள அவர்களது பெற்றோர்கள் கவலை அடைந்து இருக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இங்கு பாதுகாப்பாக இருந்து வந்தாலும் கனடா அரசு அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் கனடா நாட்டினர் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கனடா அரசு சமூகவலைதளம் மூலம் அறிவுறுத்தி இருக்கிறது.

    • கொலையில் இந்திய ஏஜெண்டுகள் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி உள்ளார்.
    • கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஏராளமான இந்திய மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    ஒட்டாவா:

    கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா-கனடா இடையே மோதல் போக்கை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலையில் இந்திய ஏஜெண்டுகள் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி உள்ளார். இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்து உள்ளது.

    இந்த பிரச்சினையில் இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளதால் அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

    கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஏராளமான இந்திய மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இரு நாடுகளுக்கு இடையே பகை அதிகரித்து வருவதால் சில மாணவர்கள் இனியும் கனடாவில் படிப்பை தொடரலாமா? என யோசித்து வருகின்றனர். இது இந்தியாவில் வசித்து வரும் அவர்களது பெற்றோர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இது தொடர்பாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பல்விந்தர் சிங் கூறும்போது என்னுடைய மகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் கனடாவுக்கு படிக்க சென்றார்.

    தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை அவளுக்கு கவலை அளித்து இருக்கிறது. படிப்பில் அவளால் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறினார்.

    மற்றொரு மாணவியின் தந்தை குல்தீப்கவுர் கூறும்போது என்னுடைய 2 மகள்கள் கனடாவில் படித்து வருகிறார்கள்.அவர்களுக்கு ஏதாவது ஆகி விடுமோ? என்ற பதற்றத்தில் உள்ளேன். இந்த பிரச்சினைக்கு இருநாட்டு அரசும் உடனடியாக தீர்வு காண வேண்டும். அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

    பஞ்சாப் மாநில பா.ஜனதா தலைவர் சுனில் ஜக்காரி மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள மனுவில் கனடாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தை எளிதில் தொடர்பு கொள்ள உதவி மையம் அமைத்து அதற்கான தொலைபேசி எண்ணையும், வெளிநாடு செல்ல திட்டமிடும் மாணவர்கள் தேவைப்படும் பட்சத்தில் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண்ணையும் வெளியிட வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

    காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங் பிட்டு இந்த பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட்டு மாணவர்களின் நலனை பாதுகாப்பதில் உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    • இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகளை கனடா ஒப்படைக்காத வேளையில், தேடப்படும் பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர்.
    • படிப்புக்காகவும், வேலைவாய்ப்புகளுக்காகவும் கனடா சென்ற பல லட்சம் இந்தியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

    டொரன்டோ:

    இந்தியாவின் பஞ்சாப், அரியானாவில் சீக்கியர்கள் பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு அமைக்க வேண்டும் என சீக்கியர்கள் ஆயுதப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் முறியடிக்கப்பட்டது.

    இதனால் இந்தியாவை விட்டு தப்பி ஓடிய சீக்கியர்கள் லட்சக்கணக்கானோர் கனடாவில் அகதிகளாக அடைக்கலம் புகுந்தனர். கனடாவின் மொத்த மக்கள்தொகையில் சீக்கியர்கள் தற்போது 2.1 சதவீதம் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கனடா அரசியலிலும் சீக்கியர்கள் பங்களிப்பு வலிமையாகி விட்டது.

    இந்நிலையில் இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகளை கனடா ஒப்படைக்காத வேளையில், தேடப்படும் பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர். கனடாவில் நிகழ்ந்த இந்த கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என்று கனடா குற்றம் சாட்டியதோடு இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியது.

    இதை கண்டித்த இந்தியா கனடாவின் தூதரக அதிகாரியை வெளியேற்றியது. இதனால் இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு என்ற காலிஸ்தான் பயங்கரவாத இயக்கம், கனடாவில் வாழும் இந்துக்களை மிரட்டி இருக்கிறது.

    இதுதொடர்பாக காலிஸ்தான் பயங்கரவாதிகள் வெளியிட்ட அறிவிப்பில், கனடாவில் இருந்து இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் வெளியேறி இந்தியாவுக்கு செல்ல வேண்டும். நீங்கள் இந்தியாவை மட்டும் ஆதரிக்கவில்லை.

    காலிஸ்தான் தனிநாடு கோருகிறவர்கள் மீதான அடக்குமுறையையும் ஆதரிக்கிறீர்கள். ஆகையால் கனடாவை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு செல்லுங்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் படிப்புக்காகவும், வேலைவாய்ப்புகளுக்காகவும் கனடா சென்ற பல லட்சம் இந்தியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

    ×