search icon
என் மலர்tooltip icon

    கனடா

    • வீட்டு நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேச மாணவர்களுக்கு வரம்புகளை அமைக்க கனடா திட்டமிட்டுள்ளது.
    • சர்வதேச மாணவர் வரம்பு பற்றிய அரசாங்கத்தின் திட்டம் வீட்டுப் பிரச்சனையை எளிதாக்க முயற்சிக்கிறது.

    ஒட்டாவா:

    கனடாவின் அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் வீட்டு நெருக்கடிகளுக்கு மத்தியில் அமைச்சர் மார்க் மில்லர், அடுத்த மாதங்களில் கனடாவில் வசிக்கக்கூடிய வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்வதாக அறிவித்தார். ஆனால் நிர்வாகம் எவ்வளவு குறைக்க திட்டமிட்டுள்ளது என்பதை அமைச்சர் தெரிவிக்கவில்லை.

    இந்த ஆண்டு 4,85,000 புதிதாக குடியேறியவர்களும், 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டிலும் 5,00,000 பேர் புதிதாக வருபவர்கள் உள்ளடங்கும். அந்த நாட்டின் இலக்குகளுக்காக மத்திய அரசு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

    இதற்கு முன்பு அரசாங்க ஊழியர்கள் இந்தக் கொள்கைகளால் வீடு வாங்கும் விலையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அரசாங்கத்தை எச்சரித்துள்ளனர். மேலும், சர்வதேச மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போன்ற தற்காலிக குடியிருப்பாளர்களால் வீட்டுப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டின் பாதியில் மட்டுமே 3 லட்சத்துக்கும் அதிகமான தற்காலிக குடியிருப்பாளர்கள் கனடாவிற்கு வந்துள்ளனர். எனவே சர்வதேச மாணவர் வரம்பு பற்றிய அரசாங்கத்தின் திட்டம் வீட்டுப் பிரச்சனையை எளிதாக்க முயற்சிக்கிறது.

    • வாலிபர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து குதித்ததில் காயமடைந்தார்.
    • மீட்புக்குழுவினர் விரைந்து வந்து வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கனடா:

    கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் துபாய்க்கு புறப்பட ஏர் கனடா விமானம் தயாராக இருந்தது.

    பயணிகள் அனைவரும் தங்களது இருக்கையில் அமர்ந்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது இருக்கையில் அமராமல் நின்று கொண்டிருந்தார்.

    திடீரென்று அவர் விமானத்தின் கேபின் கதவை திறந்து கீழே குதித்தார். இந்த வாலிபர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து குதித்ததில் காயமடைந்தார்.

    போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் விமானத்தில் இருந்து எதற்காக கீழே குதித்தார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    அந்த வாலிபரின் பெயர், மற்ற விவரங்களை வெளியிடாத போலீசார், அவர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்தும் தெரிவிக்கவில்லை. இதனால் துபாய்க்குச் செல்லும் விமானம் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

    • விடுமுறைக்காக ஜமைக்கா சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானத்தில் பழுது ஏற்பட்டது.
    • கடந்த 3 மாதத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானம் இரண்டு முறை பழுதாகியுள்ளது.

    ஒட்டாவா:

    கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக ஜமைக்கா நாட்டிற்குச் சென்றிருந்தார். பயணம் முடிந்து ஜனவரி 4-ம் தேதி அவர் கனடா திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

    இதையடுத்து, ஜனவரி 3-ம் தேதி அவரது விமானத்தை தயார் செய்வதற்காக அதை பரிசோதித்த பராமரிப்புக் குழுவினர், விமானத்தில் பழுது இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

    தொடர்ந்து பழுதை சரிசெய்வதற்கான குழுவுடன் மற்றொரு விமானம் ஜமைக்கா சென்றது. பழுது பார்க்கப்பட்டதும் இரு விமானமும் கனடா திரும்பின. கடந்த ௩ மாதத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானம் இரண்டு முறை பழுதாகியுள்ளது.

    ஏற்கனவே, ஜி20 மாநாட்டுக்காக இந்தியா வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மாநாடு முடிந்து திரும்புகையில் செல்லவேண்டிய விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சூழலுக்கு ஏற்ப மாறுபட்டு சமைக்கும் கலையை மறந்து விட்டோம் என்கிறார் மேசோ
    • முன்னர் 8-ஆம் வகுப்பில் சமையல் கட்டாய பாடம் என்றார் மர்லின்

    கனடாவில் மளிகை பொருட்களின் விலை, வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதால், அங்கு உணவுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

    சூழ்நிலையை சமாளிக்க பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் ஆலோசனைகளை கூறி வருகின்றனர்.

    கனடாவின் குயெல்ஃப் பல்கலைக்கழக (Guelph University) உணவு மற்றும் விவசாய துறை பேராசிரியர், மைக் வான் மேசோ (Mike von Massow).

    அவர் இது குறித்து தெரிவித்திருப்பதாவது:

    30 அல்லது 40 வருடங்களுக்கு முன் நாம் சமையல் கலையில் பெற்றிருந்த தேர்ச்சி, எந்த சூழலையும் சமாளிக்கும் விதமாக இருந்தது. ஆனால், அந்த பழக்கம் நம்மை விட்டு போய் விட்டது. அதனால் வாழ்க்கை கடினமாகி வருகிறது. உணவு பொருட்களை வாங்க பணம் இருந்தாலும், குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு சமைக்கும் கலையை நாம் பழகி கொள்ளவில்லை. இதனால் பொருட்களின் விலை அதிகரிக்கும் போது பாதிப்பிலிருந்து தப்ப முடியாது. எங்கள் பள்ளி பருவ காலத்தில் ஒவ்வொரு மாணவ மாணவியரும் அடிப்படை சமையலில் பயிற்சி வகுப்புகளை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். அதனால் எந்த சூழலையும் நாங்கள் சமாளித்தோம்.

    இவ்வாறு மேசோ கூறியுள்ளார்.

    இதே கருத்தை வலியுறுத்தும் வகையில், "முன்னர் பள்ளிக்கூடங்களில் 8-ஆம் வகுப்பில் சமையல் பாடம் கட்டாயமாக இருந்தது. அந்த முறை நீக்கப்பட்டவுடன் மக்கள் சமையலையே மறந்து விட்டனர்" என டொரன்டோ பகுதியை சேர்ந்த உணவு துறை வல்லுனரான மர்லின் ஸ்மித் கூறுகிறார்.

    சர்ரே (Surrey) பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான ராஜ் தந்தி எனும் பெண்மணி, "சுலபமாக கிடைப்பதால் வெளியே கிடைக்கும் உணவு வகைகளையே உண்டு வந்தோம். 2011 வருடம் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடிக்கு பிறகு வீட்டில் சமைப்பதை பழக்கமாக்கி கொள்ள வேண்டி வந்தது. பருப்பு மற்றும் பீன்ஸ் போன்றவற்றை கொண்டு பஞ்சாபி உணவு வகைகளை சமைக்க கற்று கொண்டேன். வெளியிலிருந்து உணவு வாங்கும் பழக்கத்தை படிப்படியாக குறைத்து கொண்டோம். இதனால் எங்கள் நிதி நிலைமை சீரடைந்தது. என் தாயார் மற்றும் பாட்டி நன்றாக சமைத்தனர். ஆனால், நான் அவர்களிடம் சமையல் செய்வதை கற்று கொள்ளவில்லை. அது தவறு என உணர்ந்து கொண்டேன்" என தெரிவித்தார்.

    இந்தியாவிலும் உணவகங்களிலிருந்து ஆர்டர் செய்து வரவழைத்து உண்ணும் பழக்கம் அதிகமாகி வருவதால், கனடாவில் நடப்பது நமக்கு ஒரு படிப்பினை என சமூக வலைதளங்களில் பயனர்கள் தெரிவிக்கின்றனர்.

    • கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள், இந்து கோவில்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
    • இதனால் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சர்ரே பகுதியில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சதீஷ் குமார். இவர் சர்ரே பகுதியில் உள்ள லட்சுமி நாராயண் கோவில் தலைவராக உள்ளார்.

    இந்தநிலையில் சதீஷ் குமாரின் மூத்த மகன் வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள்.

    அவர்கள் 14 ரவுண்டுகள் சுட்டனர். இதில் இந்த கோவில் நிர்வாகியின் மகன் வீடு சேதடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து தீவிரவாத விசாரணை நடந்து வருகிறது.

    கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள், இந்து கோவில்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    சர்ரேரில் உள்ள லட்சுமி நாராயண் கோவில் மீது மூன்று முறை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில்தான் கோவில் நிர்வாகியின் மகன் வீடு மீது துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதனால் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக சதீஷ் குமார் கூறும்போது, "எனது மகன் வீடு மீது தாக்குதல் நடந்துள்ளது. இதை காலிஸ்தான் ஆதரவாளர்கள் செய்தார்களா? அல்லது மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் செய்ததா? என்பதை என்னால் கூற முடியாது. போலீஸ் விசாரணையில் தாக்குதல் நடத்தியது யார் என்பது தெரிய வரும் என்றார்.

    • டைட்டானிக் கப்பலை காண 5 பேர் கொண்ட குழு பயணித்தது
    • 4 நாட்கள் உலகமே பயணிகளை குறித்து தகவல் எதிர்நோக்கி இருந்தது

    2023 ஜூன் மாதம், ஒஷன்கேட் (OceanGate) நிறுவனத்தை சேர்ந்த டைட்டன் (Titan) எனும் சிறு நீர்மூழ்கி வாகனத்தில் நியூஃபவுண்ட் லேண்ட் (Newfoundland) கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் தரை தட்டி நிற்கும் டைட்டானிக் (Titanic) கப்பலை காண 5 பேர் கொண்ட ஒரு குழு புறப்பட்டது.

    இதில் ஓஷன்கேட் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், இங்கிலாந்தை சேர்ந்த கோடீசுவரர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் பால்-ஹென்றி நார்கியோலெட், பாகிஸ்தான் கோடீசுவரர் ஷஹ்சாதா தாவுத் மற்றும் அவர் மகன் சுலெமான் தாவுத் ஆகிய 5 பேர் பயணித்தனர்.

    ஜூன் 18 அன்று ஆழ்கடலில் இறங்கிய சில மணி நேரங்களில் டைடன் தகவல் தொடர்பை இழந்தது.

    இதையடுத்து பெரிய அளவில் அவர்களை தேடும் பணி தொடங்கியது.

    5 பேர் கதி என்ன என உலகமே அதிர்ச்சியுடன் எதிர்பார்த்த நிலையில் ஜூன் 22 அன்று அந்த நீர்மூழ்கி வாகனத்தில் உள்ளிருந்து ஏற்பட்ட வெடிவிபத்தில் அதன் பாகங்கள் சிதறியிருப்பதாகவும், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

    முன்னேற்பாடுகளுடன் இது போன்ற பயணங்கள் செய்யப்பட வேண்டும் என ஒரு சாரார் ஆதரித்தும், இவை ஆபத்தானவை மட்டுமின்றி தேவையற்றவை என எதிர்த்தும் ஒரு சாரார் கருத்து தெரிவித்தனர்.

    • கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது
    • கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விசா வழங்கலை இந்தியா நிறுத்தியது

    கடந்த ஜூன் மாதம், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரான ஹர்திப் சிங் நிஜ்ஜார், கனடா நாட்டின் வேன்கூவர் (Vancouver) நகரில் சுட்டு கொல்லப்பட்டார்.

    இதையடுத்து, செப்டம்பர் 18 அன்று கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவு அமைப்பினருக்கு தொடர்பு இருப்பதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

    உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்ததுடன், அதற்கான ஆதாரங்களை கனடா இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது.

    இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே உறவு நலிவடைய ஆரம்பித்தது.

    இந்தியாவிற்கான கனடா தூதரை இந்திய அரசு வெளியேற்றியது. கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்புபவர்களுக்கு விசா வழங்கலை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.


    இரு தரப்பிலும் சுமூகமான உறவு ஏற்பட உயர் அதிகாரிகள் தரப்பில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதால் 2024ல் இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு அமையும் என அரசியல் விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    • தொடரந்து சண்டை நடைபெற்று வருவதால் காசா மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி.
    • போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்திய போதிலும், அதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்து வருகின்றன.

    ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசாவைத் தொடர்ந்து தெற்கு காசாவிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசா ஏறக்குறைய முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. தெற்குப் பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரில் பலத்த சண்டை நடைபெற்று வருகிறது.

    இதனால் பாலஸ்தீன மக்கள் கடும் சோதனையை சந்தித்து வருகின்றனர். தங்குவதற்கு இடமில்லாமல், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் கனடா நாட்டினரின் உறவினர்கள் காசா பகுதியில் இருந்து, எங்கள் நாட்டில் குடியேற தற்காலிக விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கனடா தெரிவித்துள்ளது. ஆனால், இஸ்ரேல் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காசாவில் இருந்து வெளியேற நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

    இந்த திட்டம் ஜனவரி 9-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் குடிவரவு மந்திரி மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

    தற்போது வரை 660 கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள், நிரந்தமாக வசித்து வருபவர்கள், அவர்களுடைய மனைவிகள் மற்றும் குழந்தைகளை காசாவில் இருந்து அழைத்து வர அரசு கவனம் செலுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

    கனடா நாட்டைச் சேர்ந்தவர்களுடைய பெற்றோர்கள், குழந்தைகள், பேரக்குழந்கைள் போன்றோரின் தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். அவர்களுடைய விண்ணப்பங்கள் ஏற்புடையதாக இருந்தால் மூன்று வருடங்கள் விசா வழங்கப்படும்.

    இதனால் எத்தனை பேர் கனடாவிற்கு வருவார்கள் எனத் தெரியாது. ஆனால் நூற்றுக்கணக்கில் இருக்க வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் கனடா நாட்டைச் சேர்ந்தவர்களை காசாவில் இருந்து வெளியேற்றுவது மிகவும் கடினமானது என்றார்.

    அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் குழந்தைகள் முதல் முதியோர் வரை சுமார் 240 பேர் பிணைக்கைதிகளை விடித்துச் சென்றுள்ளனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டு பிடித்துச் செல்லப்பட்ட பிணைக்கைதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 127 பேர் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர். 

    • கனடா குடிமக்களுக்கு இந்தியா சில மாதங்கள் விசாவை நிறுத்தி வைத்தது
    • தாங்கள் எளிதாக தாக்கப்படலாம் என கனடா மக்கள் அஞ்சியதாக ட்ரூடோ கூறினார்

    இந்தியாவிலிருந்து ஒரு பகுதியை பிரித்து சீக்கியர்களுக்காக காலிஸ்தான் எனும் தனி நாடு கோரி துவக்கப்பட்டது காலிஸ்தான் பிரிவினை அமைப்பு. இதன் முக்கிய தலைவராக இருந்தவர் ஹர்திப் சிங் நிஜ்ஜார் (45).

    கடந்த ஜூன் மாதம், கனடாவின் வேன்கூவர் புறநகர் பகுதியில் ஒரு வழிபாட்டு தலத்திற்கு வெளியே ஹர்திப் துப்பாக்கி ஏந்திய இருவரால் சுட்டு கொல்லப்பட்டார்.

    இப்பின்னணியில் கடந்த செப்டம்பரில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஹர்திப் சிங் கொலையில் இந்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு பங்கு இருப்பதாக அறிவித்தார்.

    பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இந்த விவகாரம் இரு நாடுகளுக்கிடையே நிலவி வந்த நல்லுறவை பின்னுக்கு தள்ளியது. கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் குடிமக்களுக்கு சில மாதங்களுக்கு இந்தியா விசா வழங்குதலை நிறுத்தி வைத்தது.

    இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருப்பதாவது:

    இரு நாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியாகவும், அதிகாரிகள் மட்டத்திலும் அமைதியாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அது போதாது என நாங்கள் கருதினோம். எங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு எதிராக எந்த சம்பவமும் நடைபெற கூடாதென வலியுறுத்தும் விதமாக ஒரு அழுத்தமான நடவடிக்கை எடுக்க விரும்பினோம். இங்கு கனடாவில் பலர் தாங்கள் எளிதாக தாக்கப்படலாம் எனும் அச்சத்தில் வாழ்ந்து வந்ததனால் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக நாங்கள் செயல்பட வேண்டி இருந்தது. அதன் காரணமாகவே எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்திய அரசாங்கத்திற்கு இது போன்ற சம்பவங்களில் பங்குள்ளது என உரக்க கூறினோம். இதன் மூலம், இது போன்ற சம்பவங்களில் இந்தியா ஈடுபட்டாலோ அல்லது ஈடுபட நினைத்தாலோ அது தடுக்கப்படும் என உறுதி செய்து கொள்ள விரும்பினோம்.

    இவ்வாறு ட்ரூடோ தெரிவித்தார்.

    • அங்கு பட்டம் முடித்தவர்களுக்கு லட்சக்கணக்கில் ஊதியம் கிடைத்து வந்தது
    • 14 மணி நேரம் வேலை செய்தாலும் போதிய வருவாய் ஈட்ட வழியின்றி தவிக்கின்றனர்

    அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களை சேர்ந்த கல்லூரிகளில் பட்டம் படித்தவர்களுக்கு உலகின் பல முன்னணி நிறுவனங்களில் லட்சக்கணக்கில் சம்பளம் தரும் வேலைவாய்ப்புகள் கிடைத்து வந்ததனால் அதிக பொருட்செலவையும் பொருட்படுத்தாமல் கல்வி பயில பல இந்திய மாணவ மாணவியர்கள் ஆண்டுதோறும் அங்கு செல்வது வழக்கம்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலிருந்து மட்டும் ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் மாணவ மாணவியர்கள் கனடாவில் படித்து பட்டம் பெற்று, அங்கேயே வேலை வாய்ப்புகளை பெற செல்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் "ஸ்டெம்" (STEM) எனப்படும் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளிலும், வணிக நிர்வாக மேலாண்மை (MBA) துறையிலும் பட்டம் பெற அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேர்பவர்கள்.

    இந்நிலையில், கனடாவின் தேசிய புள்ளிவிவர மையம் (National Statistical Agency) மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி கடந்த ஜனவரி மாதத்திலிருந்தே கனடாவில் வேலை வாய்ப்பு 61.8 சதவீதம் எனும் அளவிற்கு குறைந்துள்ளதாக தெரிகிறது. மேலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு மிக அதிகம் பேர் வேலை இழந்துள்ளனர்.

    இதன் காரணமாக அங்கு படிக்க சென்ற மாணவர்கள், "ஆட் ஜாப்ஸ்" (odd-jobs) எனப்படும் அதிக திறன் தேவைப்படாத, அதிக ஊதியம் வழங்காத சாதாரண வேலைகளை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    தற்போது பட்டம் முடித்த பல இந்திய மாணவர்களுக்கு கனடாவில் உணவகங்கள், மின்னணு சாதன விற்பனை நிலையங்கள், மொபைல் விற்பனை கடைகள், அங்காடிகள் உள்ளிட்ட இடங்களில் குறைந்த வருமானத்தில் வேலை பார்த்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை வேலை செய்தாலும் வாடகை, உணவு மற்றும் இதர செலவுகளுக்கு போதுமான வருவாய் ஈட்ட முடியாமல் தவிக்கின்றனர்.

    கடும் குளிர் பிரதேச நாடான கனடாவில் வேலைவாய்ப்புகள் குறைவதாலும், பட்டம் பெற பெரும் பணம் செலவழித்து வந்து விட்டதாலும், நாடு முழுவதுமே வேலைவாய்ப்புகள் குறைவதாலும் அவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    • வாடகை கட்டணமாக 900 கனடா டாலர்கள் நிர்ணயித்துள்ளார்.
    • இளம்பெண்ணின் விளம்பரம் பயனர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வீடு, கார், மோட்டார் சைக்கிள் போன்றவை வாடகைக்கு விடப்படுவதை பார்த்திருப்போம். ஆனால் படுக்கையை வாடகைக்கு விட்ட இளம்பெண்ணின் செயல் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

    கனடாவின் டொராண்டோ பகுதியில் வீட்டு வாடகை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. அங்கு வீட்டு வாடகை மிகவும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த அன்யா எட்டிங்கர் என்ற பெண் பேஸ்புக்கில் ஒரு விளம்பரம் செய்தார். அதில் அவர் தனது படுக்கையை பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு பெட் மேட் தேவை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    அதே நேரத்தில் தன்னுடைய படுக்கையை பகிர்ந்து கொள்ளும் நபர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் எனவும் அவர் ஒரு வருடம் தன்னுடன் இருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளார். மேலும் வாடகை கட்டணமாக 900 கனடா டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.55 ஆயிரம்) நிர்ணயித்துள்ளார். அவரது இந்த விளம்பரம் பயனர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குர்பத்வர்த் சிங் பன்னூன் மீண்டும் ஒரு மிரட்டல் விடுத்துள்ளார்.
    • கைது செய்பவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

    காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான சீக்கியவர்களுக்கான நீதி அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் பன்னூன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், ஏர்-இந்தியா விமானங்களுக்கு மிரட்டல் விடுத்தார்.

    இந்த நிலையில் குர்பத்வர்த் சிங் பன்னூன் மீண்டும் ஒரு மிரட்டல் விடுத்துள்ளார். அதில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணையில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக, ஏர்-இந்தியாவை புறக்கணிப்பதை பயங்கரவாத அச்சுறுத்தலுடன் தொடர்புப் படுத்தி கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா பொய் பிரசாரம் செய்கிறார். எனவே அவரை கைது செய்பவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

    ×