search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்கூட்டர்"

    • ஹீரோ நிறுவனம் தனது ஜூம் ஸ்கூட்டரின் பெரிய வெர்ஷனை உருவாக்கி வருவதாக தெரிகிறது.
    • புதிய ஹீரோ ஸ்கூட்டர் முழு டிஜிட்டல் கன்சோல், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது.

    ஹீரோ நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் ஜெய்பூர் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அருகில் புதிய ஸ்கூட்டர் டெஸ்டிங் செய்யப்படுகிறது. ஸ்பை படங்களில் ஸ்கூட்டரின் பக்கவாட்டு மற்றும் முன்புற தோற்றம் எப்படி இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    அதன்படி ஸ்கூட்டரில் கூர்மையான முன்புறம், பக்கவாட்டில் பட்ச் பாடிவொர்க் செய்யப்பட்டு உள்ளது. பக்கவாட்டு பேனலில் உள்ள கிரீஸ்கள் ஹீரோ ஜூம் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. முன்புற டிசைனும் ஜூம் மாடலில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது.

     

    ஹீரோ நிறுவனம் தனது ஜூம் ஸ்கூட்டரின் பெரிய வெர்ஷனை உருவாக்கி வருவதாக தெரிகிறது. முன்னதாக இதுபற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த வகையில் டெஸ்டிங் செய்யப்படும் ஸ்கூட்டரும் 125சிசி மாடலாக இருக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில், இந்த மாடலில் 125சிசி சிங்கில் சிலின்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இத்துடன் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், பிரேக்கிங்கிற்கு முன்புறம் டிஸ்க் யூனிட், முழுமையான டிஜிட்டல் கன்சோல் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    Photo Courtesy: Rushlane

    • வீடியோ ஜம்மு-காஷ்மீரில் எடுக்கப்பட்டதாகவும், அங்கு வீசிய சூறைகாற்றில் ஸ்கூட்டர் மின் கம்பிகளுக்குள் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
    • பயனர்கள் பலரும் வீடியோ தொடர்பான சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் பரவும் ஒரு வீடியோவில், கடையை ஒட்டிய உயர்அழுத்த மின் கம்பிகளுக்குள் ஸ்கூட்டர் ஒன்று சிக்கியிருப்பதை காண முடிகிறது. அந்த ஸ்கூட்டர் எப்படி அவ்வளவு உயர மின் கம்பிகளுக்குள் புகுந்தது என்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதனை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த வீடியோ ஜம்மு-காஷ்மீரில் எடுக்கப்பட்டதாகவும், அங்கு வீசிய சூறைகாற்றில் ஸ்கூட்டர் மின் கம்பிகளுக்குள் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் பயனர்கள் பலரும் இது தொடர்பான சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். அதில் ஒருவர், இது எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கலாம், நேரடியாக சார்ஜ் செய்வதற்காக நிறுத்தப்பட்டிருக்கலாம் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

    • 45 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது.
    • சுயதொழில் தொடங்குவதற்கும் தேவையான தொழிற் பயிற்சி, வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கம் விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு ரூ38.24 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பிரத்யேக ஸ்கூட்டர்களை 45 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாற்றுத் திறனாளிகள் உயர்கல்வி வரை படிப்பதற்கும், சுயதொழில் தொடங்குவதற்கும் தேவை யான தொழிற் பயிற்சி, வங்கிக் கடனுதவி வழங்கப் பட்டு வருகிறது.

    கடுமையாக பாதிக்கப் பட்ட மாற்றுத்திறனாளி களுக்கான மருத்துவச் சிகிச்சை திட்டம், பராமரிப்பு நிதியுதவி திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களால் மாற்றுத்திற னாளிகளை பயன்பெற செய்யும் வகையில் தமிழ கத்தில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் மாற்றுத் திறனா ளிகளுக்கெனவே செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    2022-23-ம் நிதி யாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் 5,553 மாற்றுத்்திறானளிகளுக்கு ரூ13.58கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பு வனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் மஞ்சுளா பாலசந்தர் (சிவகங்கை), லதா அண்ணாத் துரை (மானாமதுரை), சிவ கங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எதிர்பாராத விதமாக திடீரென்று ஸ்கூட்டர் தீ பற்றி எரிய தொடங்கியது.
    • மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    பு.புளியம்பட்டி,

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி செங்குந்தபு ரத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 36). இவர் நேற்று மாலை தனக்கு சொந்தமான ஸ்கூட்டரில் புளியம்பட்டி அடுத்த காரப்பாடியில் இருந்து பு.புளியம்பட்டி ரோட்டில் வந்தார்.

    இதை தொடர்ந்து அவர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே சென்று கொண்டி ருந்தார். அப்போது திடீ ரென அவரது ஸ்கூட்டர் பழுதடைந்து நின்று விட்டது. இதையடுத்து ஸ்கூட்டரை மீண்டும் இயக்க முயன்றார். ஆனால் இயக்க முடியவில்லை.

    அப்போது ஸ்கூட்டரில் இருந்து பெட்ரோல் வாடை வீசியது. இதையடுத்து பெட்ரோல் டேங்கில் இருந்து புகை வந்தது. இதை தொடர்ந்து எதிர்பாராத விதமாக திடீரென்று ஸ்கூட்டர் தீ பற்றி எரிய தொடங்கியது.

    இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மோகன் ஸ்கூட்ட ரை விட்டு விட்டு ஓடி உயிர் தப்பினார். ஸ்கூட்டர் முழு வதும் எரிந்து சேதமடைந்தது. இதைக் கண்டு அந்த வழியே வந்த மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    இது குறித்து போலீ சாருக்கு தகவல் கொடுக்க ப்பட்டது. இதையடுத்து பு.புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து ஸ்கூட்டர் எப்படி தீப்பிடித்து எரிந்தது. பெட்ரோல் கசிவு காரணமா அல்லது மின் கசிவு காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஹோண்டா டியோ மாடல்- ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • டியோ புது வெர்ஷனில் கீலெஸ் இக்னிஷன் மற்றும் அலாய் வீல்கள் உள்ளன.

    ஹோண்டா நிறுவனத்தின் பிரபல டியோ ஸ்கூட்டரின் முற்றிலும் புதிய வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வெர்ஷன் ஹோண்டா டியோ H ஸ்மார்ட் என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 77 ஆயிரத்து 712, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய டியோ வெர்ஷனில் H ஸ்மார்ட் அப்கிரேடுகள் செய்யப்பட்டு இருப்பதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. அதன்படி டியோ ஸ்கூட்டரின் புது வெர்ஷனில் கீலெஸ் இக்னிஷன் மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. முன்னதாக இதே ஆப்ஷன்கள் ஹோண்டா ஆக்டிவா மற்றும் ஆக்டிவா 125 மாடல்களில் வழங்கப்பட்டு இருந்தது.

    ஹோண்டா டியோ H ஸ்மார்ட் வெர்ஷனின் விலை அதன் OBD 2 அப்டேட் செய்யப்பட்ட மாடலை விட ரூ. 3 ஆயிரத்து 500 வரை அதிகம் ஆகும். இந்திய சந்தையில் ஹோண்டா டியோ OBD 2 வெர்ஷனும் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய ஹோண்டா டியோ மாடல்- ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் ஸ்டாண்டர்டு மாடல் சற்றே குறைந்த விலை கொண்டிருக்கிறது. இதில் ஹாலோஜன் பல்பு கொண்ட ஹெட்லைட், அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் பிளாக்டு-அவுட் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டீலக்ஸ் வேரியண்டில் எல்.இ.டி. ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வெளிப்புறம் ஃபியூவல் ஃபில்லர் கேப், தங்க நிறம் கொண்ட அலாய் வீல்கள், 3-ஸ்டெப் இகோ இன்டிகேட்டர் போன்ற அம்சங்கள் உள்ளன. புதிய மாற்றங்கள் காரணமாக ஹோண்டா டியோ விற்பனை மெட்ரோ மற்றும் கிராம புறங்களில் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

    • இந்தியாவில் தற்போது ஹோண்டா டியோ மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய டியோ H ஸ்மார்ட் வேரியண்டில் அதிக அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது டியோ ஸ்கூட்டரின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய வேரியண்ட் டியோ H-ஸ்மார்ட் எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

    புதிய மாடல் அறிமுகமாகும் பட்சத்தில்- ஆக்டிவா, ஆக்டிவா 125 H ஸ்மார்ட் ஸ்கூட்டர்கள் வரிசையில், ஹோண்டா அறிமுகம் செய்யும் மூன்றாவது மாடலாக இது இருக்கும். டியோ H ஸ்மார்ட் வேரியண்டில் அதிக அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இதில் கீலெஸ் வசதி மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

    இத்துடன் புதிய வேரியண்டில் ஸ்மார்ட்ஃபைண்ட் அம்சம் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் பட்டனை க்ளிக் செய்ததும் ஸ்கூட்டரின் இண்டிகேட்டர்களை ஃபிலாஷ் செய்யும். இத்துடன் ஸ்மார்ட்ஸ்டார்ட் அம்சம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்அன்லாக் அம்சம் மூலம் பயனர்கள் ஹேண்டில்பார், ஃபியூவல் ஃபில்லர் கேப் மற்றும் அண்டர்சீட் ஸ்டோரேஜ் உள்ளிட்டவைகளை அன்லாக் செய்யும்.

    ஹோண்டா டியோ H ஸ்மார்ட் மாடலில் ஸ்மார்ட்சேஃப் (Smartsafe) எனும் அம்சமும் வழங்கப்படுகிறது. இது ஸ்கூட்டரை லாக் செய்து, அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. இவைதவிர டியோ ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி இந்த மாடலில் 109சிசி, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது 7.8 ஹெச்பி பவர், 9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    விலையை பொருத்தவரை இந்த ஸ்கூட்டர் அதன் ஸ்டாண்டர்டு மற்றும் DLX வேரியண்ட்களை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும். இந்திய சந்தையில் ஹோண்டா டியோ ஸ்டாடண்டர்டு மாடல் விலை ரூ. 68 ஆயிரத்து 625 என்றும் டியோ DLX வேரியண்ட் விலை ரூ. 72 ஆயிரத்து 626 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ஸ்கூட்டரில் இருந்து தவறிவிழுந்து பெண் பலியானார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலூகா மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சோலைராஜ். இவரது மனைவி ராமலெட்சுமி (40). இவர் தனது மகன் இளைய பாரதியுடன் இருசக்கர வாகனத்தில் கமுதி சென்றார். வாகனத்தை இளையபாரதி வேகமாக ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிங்கபுளியபட்டி அருகே சென்ற போது இரு சக்கர வாகனத்திலிருந்து ராமலெட்சுமி தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ராமலெட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து ராமலெட்சுமியின் மூத்த மகன் ஆனந்த்பிரபு கமுதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அப்துல் வஹா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பியாஜியோ நிறுவனத்தின் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்திய சந்தையில் வெஸ்பா டூயல் VXL 125 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் என்று துவங்குகிறது.

    பியாஜியோ நிறுவனத்தின் புதிய வெஸ்பா டூயல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வெஸ்பா டூயல் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் என்று துவங்குகிறது. புதிய டூயல் வேரியண்ட் 125சிசி மற்றும் 150சிசி என்று இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களும் OBD 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.

    இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வெஸ்பா டூயல் ஸ்கூட்டர் விசேஷமாக டூயல் டோன் லிவெரி மற்றும் அழகிய ஃபூட்போர்டு கொண்டிருக்கிறது. புதிய டூயல் டோன் நிறங்கள் வழக்கமான மோனோக்ரோம் ஸ்கூட்டர்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

     

    இதன் VXL ரேஞ்ச் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், ரியர் வியூ மிரர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் SXL வேரியண்ட் செவ்வக வடிவம் கொண்ட ஹெட்லைட் மற்றும் ரியர் வியூ மிரர்கள் உள்ளன. புதிய வெஸ்பா டூயல் மாடல் நாடு முழுக்க 250-க்கும் அதிக பிரத்யேக விற்பனை மையங்களில் விற்பனைக்கு வருகிறது.

    விலையை பொருத்தவரை வெஸ்பா டூயல் VXL 125 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் என்று துவங்கி டாப் எண்ட் வெஸ்பா டூயல் SXL 150 மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் முன் பக்கம் வாளியில் தண்ணீர் வைத்து, குளித்துக் கொண்டே ஓட்டினார்.
    • பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் செயல்படக் கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் கடந்த ஒரு வாரமாகவே வெயிலின் உக்ரம் அதிக அளவில் காணப்படுகிறது.

    இந்நிலையில் தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் , பெரியகோவில் பகுதியில் கடும் வெயிலின் தாக்கத்தை உணர்த்தும் விதமாக வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் முன் பக்கம் வாளியில் தண்ணீர் வைத்து, குளித்துக் கொண்டே ஓட்டினார். இதை மற்றொரு வாலிபர் செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தார்.

    இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. இந்நிலையில், ஆபத்தை விளைவிக்கும் விதமாக வாகனத்தை ஓட்டியதாக, இருவர் குறித்து மேற்கு தஞ்சை போலீஸ் நிலையத்தினர், போக்குவரத்து ஒழுங்கு பிரிவினர் விசாரணை நடத்தினர்.

    இதில், வாகனத்தை ஓட்டியவர் தஞ்சை கீழவாசல் குறிச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த அருணாசலம் (வயது 23), இதை வீடியோ எடுத்தவர் குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த பிரசன்னா (24) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து, அருணாசலம், பிரசன்னாவுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இருவரையும் இதுபோன்று பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் செயல்படக் கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். 

    • டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2018 ஆண்டு என்டார்க் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
    • அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பிரபலமாக இருந்துவரும் என்டார்க் மாடல் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது.

    டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர் இந்திய சந்தை விற்பனையில் 1.45 மில்லியன் யூனிட்களை கடந்துள்ளது. கடந்த 2018 பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் என்டார்க் விற்பனையில் 1 மில்லியன் யூனிட்களை 2022 ஏப்ரல் மாதம் எட்டியது. மார்ச் 2023 இறுதி வரை என்டார்க் மொத்த விற்பனை 12 லட்சத்து 89 ஆயிரத்து 171 யூனிட்களாக இருந்தது. 2019 நிதியாண்டில் மட்டும் 1 லட்சத்து 65 ஆயிரத்து 947 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது.

    2023 நிதியாண்டில் டிவிஎஸ் என்டார்க் ஒட்டுமொத்த விற்பனை 2 லட்சத்து 90 ஆயிரத்து 539 யூனிட்கள் ஆகும். இதன் மூலம் வருடாந்திர விற்பனையில் 16.55 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஒரே ஆண்டில் டிவிஎஸ் நிறுவனம் இத்தனை யூனிட்கள் விற்பனை செய்தது இதுவே முதல் முறை ஆகும். இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியலில் என்டார்க் மாடல் நான்காவது இடத்தில் உள்ளது.

     

    முதல் மூன்று இடங்களில் ஆக்டிவா, டிவிஎஸ் ஜூப்பிட்டர் மற்றும் சுசுகி அக்சஸ் போன்ற மாடல்கள் உள்ளன. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே டிவிஎஸ் என்டார்க் மாடல் பிரபலமாக இருந்து வருகிறது. அறிமுகம் செய்யப்பட்ட இரண்டே மாதங்களில் என்டார்க் மாடல் 19 ஆயிரத்து 809 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இதே ஆண்டின் இறுதியில் டிவிஎஸ் நிறுவனம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 039 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

    பின் 2020 ஆண்டு 2 லட்சத்து 65 ஆயிரத்து 016 யூனிட்கள் விற்பனையானது. இது வருடாந்திர அடிப்படையில் 24 சதவீதம் அதிகம் ஆகும். 2021 நிதியாண்டில் கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையிலும் என்டார்க் மாடல் 2 லட்சத்து 51 ஆயிரத்து 491 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. 2022 நிதியாண்டில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 277 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இந்த வரிசையில் 2023 நிதியாண்டில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 539 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    • 2015 ஆண்டு ஹோண்டா அறிமுகம் செய்த ஆக்டிவா மாடல் ஆக்டிவா 3ஜி எனும் பெயரில் அழைக்கப்பட்டது.
    • ஸ்கூட்டர் மாடலின் பெயர் மாற்றப்பட்டு இருப்பதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.

    இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் மிகவும் பிரபல ஸ்கூட்டர் - ஹோண்டா ஆக்டிவா மாடலின் பெயர் மாற்றப்பட்டு இருக்கிறது. ஆக்டிவா 6ஜி பெயரில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், பிரபல ஸ்கூட்டர் பெயரில் இருந்து 6ஜி மட்டும் தற்போது நீக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா பெயரிலேயே விற்பனை செய்யப்படவுள்ளது.

    பெயர் மட்டுமின்றி 6ஜி பிராண்டிங் கொண்டிருந்த புகைப்படங்களும் மாற்றப்பட்டு இருக்கிறது. 2015 ஆண்டு ஹோண்டா அறிமுகம் செய்த ஆக்டிவா மாடல் ஆக்டிவா 3ஜி எனும் பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. பின் இதைத் தொடர்ந்து அறிமுகமான ஸ்கூட்டர்கள் ஆக்டிவா பெயருடன் 4ஜி, 5ஜி மற்றும் 6ஜி பெயர்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது பெயரில் இருந்து 6ஜி நீக்கப்பட்டு இருக்கிறது.

    பிரபல ஸ்கூட்டர் மாடலின் பெயர் மாற்றப்பட்டு இருப்பதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான் என்று கூறப்படுகிறது. ஹோண்டா நிறுவனம் அடுத்த ஆண்டு தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா இ எனும் பெயரில் விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது.

    • 29 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லாபெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
    • வளர்ச்சிதிட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிதிட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாவது:- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலர்களும்ஒருங்கிணைந்து பொது மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி,சாலைவசதி, தெரு விளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படைதேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும். மேலும், தமிழகஅரசின் அனைத்து வளர்ச்சித் திட்ட பணிகளும் அனைத்து தரப்பு மக்களும்பயன்பெறும் வகையில் தங்களது பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டுநமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ அனைவரும் ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்றார்.

    முன்னதாக மாற்றுத்திறனாளிநலத்துறையின் சார்பில் 29 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.83,500 வீதம்ரூ.24.21 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட விலையில்லாபெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன் மற்றும்நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரட்சி ஒன்றியங்களை சார்ந்த அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

    ×