search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளாடிமிர் புதின்"

    • ஆக்ரமிப்புக்கு எதிராக உக்ரைன் போரிட்டு வருகிறது
    • போர் 667 நாட்களை கடந்து தொடர்கிறது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல உலக நாடுகள் எடுத்த முயற்சிகள் தற்போது வரை பலனளிக்கவில்லை.


    இரு தரப்பிலும் பெரும் கட்டிட சேதங்களும், உயிரிழப்புகளும் நடந்தாலும், போர் 667-வது நாட்களை கடந்து இன்று வரை தொடர்கிறது.

    • ரஷியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 17-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
    • அரசியல் சாசனத் திருத்தத்தின்படி புதினால் 2036-ம் ஆண்டு வரை அதிபராகத் தொடர முடியும்.

    மாஸ்கோ:

    ரஷியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 17-ம் தேதி அதிபர் தேர்தல் நடத்த அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கான அரசாணையை பாராளுமன்ற மேலவையான தேசிய கவுன்சில் ஒருமனதாக அங்கீகரித்தது.

    இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் விருப்பம் தெரிவித்துள்ளார். கிரெம்ளின் மாளிகையில் ரஷிய ராணுவ அதிகாரிகளுக்கு நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அதிபர் புதின், அவரது முடிவை ராணுவ அதிகாரியிடம் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    அரசியல் சாசனத் திருத்தத்தின்படி புதினால் வரும் 2036-ம் ஆண்டு வரை ரஷிய அதிபராகத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் விதிமுறைகளை 2020ல் அதிபர் புதின் மாற்றினார்
    • இத்தேர்தல், ஏமாற்றுவதில் வல்லுனருடன் விளையாடுவதை போன்றது என கிர்கின் கூறினார்

    ரஷியாவில், 2024 மார்ச் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    பதவியில் இருந்த ஒருவரே மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது ரஷிய அரசியலமைப்பு சட்டத்தின்படி தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த விதிமுறையில் 2020ல் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் மாற்றம் கொண்டு வந்தார்.

    தற்போதைய திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி அதிபர் புதின் மீண்டும் போட்டியிட 2036 வரை தடையேதும் இல்லை.

    இந்நிலையில் ரஷிய உளவு பிரிவை சேர்ந்த முன்னாள் அதிகாரியும், புதினை தீவிரமாக விமர்சித்து வருபவருமான ஐகோர் கிர்கின் (52) அதிபர் தேர்தலில் நிற்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். கிர்கின் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி புதின் அரசு அவரை சிறையில் அடைத்துள்ளது.

    டெலிகிராம் சமூக வலைதளத்தில் ஸ்ட்ரெல்கோவ் எனும் பெயரில் உள்ள தனது அதிகாரபூர்வ கணக்கில் கிர்கின் அவ்வப்போது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

    இந்நிலையில் அதிபர் தேர்தல் குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

    தற்போதைய சூழ்நிலையில் ரஷிய அதிபர் தேர்தலில் போட்டியிடுவது சீட்டாட்டத்தில் ஏமாற்றுவதில் கைதேர்ந்த ஒருவருடன் சீட்டு விளையாடுவதை போன்றது. ஆனால், நம் நாட்டின் மீது பற்றுள்ள சக்திகளை ஒருங்கிணைப்பதன் மூலம், வரும் தேர்தலில் ஒரே மனிதரே மீண்டும் மீண்டும் தேர்தலில் எதிர்ப்பின்றி வெல்வதற்கான திட்டங்களை தகர்க்க முடியும் என நான் நம்புகிறேன். நாட்டின் முன் நிற்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களிலிருந்து தேசத்தை இதன் மூலம் காக்கவும் முடியும். என் ஆதரவாளர்கள் என்னை முன்னிறுத்த பிரசாரத்தை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு கிர்கின் பதிவிட்டுள்ளார்.

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்ததன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் ரஷியாவின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்து வந்தவர் கிர்கின் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வேராவை 3.5 மணி நேரம் கான்யுஸ் சித்திரவதை செய்துள்ளார்
    • ரஷிய ராணுவத்திற்கு இளைஞர்கள் அதிகளவு தேவைப்படுகிறார்கள்

    ரஷியாவில் வசித்து வந்தவர் வேரா பெக்டெலேவா (Vera Pekhteleva). இவர் விளாடிஸ்லாவ் கான்யுஸ் (Vladislav Kanyus) என்பவரை காதலித்து வந்தார். இருவரின் உறவில் திடீரென கருத்து வேற்றுமை ஏற்பட்டதால், வேரா, கான்யுஸை விட்டு பிரிந்தார்.

    இது குறித்து கான்யுஸ் அடிக்கடி வேராவுடன் வாக்குவாதம் செய்து வந்தார். ஒரு முறை இவர்கள் இருவரின் வாக்குவாதம் மோதலாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த கான்யுஸ், வேராவை பாலியல் ரீதியாக தாக்கினார்.

    அதன் பிறகு அவரை சுமார் 111 முறை கத்தியால் குத்தினார். அதிலும் ஆத்திரம் அடங்காத கான்யுஸ், வேராவை சுமார் 3.5 மணி நேரம் சித்திரவதை செய்தார். பின் இரும்பு வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

    வேராவின் பரிதாப அலறலை கேட்ட அக்கம்பத்தினர், காவல்துறைக்கு 7 முறை தகவல் அளித்தனர். ஆனால், காவல்துறையினர் உடனடியாக வரவில்லை.

    இறுதியில் கான்யுஸின் இரக்கமற்ற தாக்குதலில் வேரா உயிரிழந்தார்.

    காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி கான்யுஸிற்கு, நீதிமன்றம் 17 வருட சிறைதண்டனை வழங்கியது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், வேராவின் தாயார் ஒக்ஸானா (Oksana), கான்யுஸ் துப்பாக்கி ஒன்றை ஏந்தியபடி ராணுவ உடையில் நிற்கும் புகைப்படம் ஒன்றை கண்டு அதிர்ச்சியடைந்தார். சிறையில் இருந்தவர், ராணுவ உடையில் காட்சியளிப்பது குறித்து ஒக்ஸானா விசாரணை நடத்தி தகவல்களை திரட்டினார்.

    ரஷியா, கடந்த 2022 பிப்ரவரி மாதம், அண்டை நாடான உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு நடத்தியது. இதனை எதிர்த்து உக்ரைன் ரஷியாவுடன் போர் புரிந்து வருகிறது.

    போர் 1.5 வருடங்களாக நீள்வதால், ரஷியாவிற்கு ராணுவத்தில் பணியாற்ற பல இளைஞர்கள் தேவைப்படுகின்றனர். எனவே சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பல இள வயதினரை ராணுவத்தில் சேர்க்க ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி கான்யுஸ் செய்த குற்றங்கள், அதிபரின் "சிறப்பு அதிகாரம்" மூலம், புதினால் மன்னிக்கப்பட்டு, ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து மிகுந்த ஆத்திரத்துடனும், சோகத்துடனும் ஒக்ஸானா கருத்து தெரிவித்தார்.

    "நான் மிகுந்த மன உறுதி உள்ள பெண். ஆனால், இந்த செய்தி என்னை நிலைதடுமாற செய்து விட்டது. என் மகள் கல்லறையில் இனி நிம்மதியாக உறங்க முடியுமா? எல்லாமே என்னை விட்டு போய் விட்டது. ஒரு கொடூர கொலைகாரனை எப்படி வெளியே விட்டார்கள்? கொலகாரன் எதற்கு ரஷியாவை பாதுகாக்க வேண்டும்? அவன் மனிதனே அல்ல. பழி வாங்க எங்களை எப்போது வேண்டுமானாலும் அவன் மீண்டும் கொல்லலாம்" என ஒக்சானா கூறினார்.

    "ரஷிய சிறையில் உள்ள கைதிகள் தங்கள் குற்ற நடத்தைக்காக வருந்தும் விதமாகத்தான் போர்க்களத்திற்கு அனுப்பப்படுகின்றனர்" என அரசின் செயலை நியாயப்படுத்தும் விதமாக ரஷிய பாராளுமன்ற செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) தெரிவித்தார்.

    • ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று சீனா சென்றடைந்தார்.
    • சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்தார்.

    பீஜிங்:

    சீனா தனது பெல்ட் ரோடு திட்டத்திற்கு 130 நாடுகளின் பிரதிநிதிகளை வரவேற்று அழைப்பு விடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக,

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று சீனா சென்றடைந்தார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சீனா சென்றுள்ளார்.

    இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.

    ரஷியா, சீனா இடையிலான உறவை வலுப்படுத்தும் விதமாக, அங்கு நடைபெறும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டிலும் அதிபர் புதின் பங்கேற்றார்.

    அப்போது பேசிய அதிபர் புதின், பெல்ட் ரோடு திட்டத்தை சீனா வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. ரஷியா அதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது என தெரிவித்தார்.

    உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பின் ரஷியாவை பல்வேறு நாடுகள் தனிமைப்படுத்தி இருக்கும் நிலையில், புதின்-ஜின்பிங் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

    • ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று தலைநகர் பீஜிங் சென்றடைந்தார்.
    • அங்கு நடைபெறும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டிலும் அதிபர் புதின் பங்கேற்கிறார்.

    பீஜிங்:

    சீனா தனது பெல்ட் ரோடு திட்டத்திற்கு 130 நாடுகளின் பிரதிநிதிகளை வரவேற்று அழைப்பு விடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று சீனா சென்றடைந்தார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் சீனா சென்றுள்ளார்.

    ரஷியா, சீனா இடையிலான உறவை வலுப்படுத்தும் விதமாக, அங்கு நடைபெறும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டிலும் அதிபர் புதின் பங்கேற்கிறார்.

    உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பின் ரஷியாவை பல்வேறு நாடுகள் தனிமைப்படுத்தி இருக்கும் நிலையில், புதின்-ஜின்பிங் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

    அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆன்டனி பிளிங்கன் கடந்த வாரம் சீன வெளியுறவுத் துறை மந்திரி வாங் யீவுடன் பேசினார். அப்போது சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • 2014-ல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது
    • 90-களில் அயல்நாடுகளிலிருந்து கார்களை வாங்கி குவித்தோம்

    இந்திய தொழில் துறையில் முதலீடுகளை அதிகரிக்கவும், புதுமைகளை வளர்க்கவும், திறனை மேம்படுத்தவும், அறிவுசார் உடைமைகளை பாதுகாக்கவும் மற்றும் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், அதனை கொண்டு இந்தியாவிலேயே அனைத்து பொருட்களும் தயாரிக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், வெளிநாட்டு இறக்குமதியை குறைக்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 2014-ல் கொண்டு வரப்பட்டது "மேக் இன் இந்தியா" திட்டம்.

    இந்நிலையில் கிழக்கு பொருளாதார மன்றத்தின் 8-வது அமர்வில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    ஒரு காலத்தில் நாங்கள் வெளிநாடுகளிலிருந்து மட்டுமே கார்களை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். ஆனால், பிறகு நாங்கள் உள்நாட்டில் கார்களை உற்பத்தி செய்ய தொடங்கினோம். நாங்கள் 90-களில் இறக்குமதி செய்து குவித்து வந்த அயல்நாட்டு மெர்சிடிஸ் மற்றும் ஆடி கார்களை போல் இவை மிக பிரமாண்டமானவை அல்ல என்றாலும் அது ஒரு குறை அல்ல.

    எங்கள் கூட்டாளிகளின் வழிமுறைகளை நாங்களும் கடைபிடிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இந்தியாவின் "மேக் இன் இந்தியா" (இந்தியாவிலேயே தயாரியுங்கள்) திட்டம் போன்றவற்றை நாங்களும் கையாள விரும்புகிறேன். உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவதன் மூலமும் அந்தந்த நகரங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும்.

    இத்தகைய பொருளாதார வளர்ச்சிக்கான வெற்றி பெறும் வழிமுறைகளை ரஷியா இந்தியாவை போல கையாள வேண்டும். இந்தியர்கள் இந்தியாவிலேயே அதிகளவில் வாகனங்களை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது மிக சரியான வழிமுறை. மோடி மிக சரியானதைத்தான் செய்கிறார்.

    இவ்வாறு புதின் தெரிவித்தார்.

    கடந்த 9, 10 தேதிகளில் இந்தியா ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் மோடியை உலக நாடுகள் பாராட்டி வரும் பின்னணியில் ரஷிய அதிபரின் இந்த கருத்து பார்க்கப்படுகிறது.

    • பிரிகோஜின் பயணம் செய்த தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியது.
    • கடந்த மாதம் அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பிரிகோஜின் கிளர்ச்சியில் ஈடுபட்டார்.

    ஷியாவின் வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜின் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு விசாரணைக் குழு உறுதிப்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டார்.

    இது குறித்து ரஷியாவின் விசாரணைக் குழு செய்தித் தொடர்பாளர் வெட்லனா பெட்ரென்கோ அறிக்கை வெளியிட்டார். அதில், கடந்த புதன் கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் மீட்கப்பட்ட பத்து உடல்களும் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவை அனைத்தும் விமானத்தில் பயணம் செய்த பத்து பேருடையது தான் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     

    ரஷியாவின் வான் போக்குவரத்து ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட தகவல்களில் பிரிகோஜினின் தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியதாகவும், இந்த தனியார் விமானத்தில் பயணம் செய்தவர்கள் பட்டியலில் பிரிகோஜின் பெயர் இடம்பெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    விபத்தில் சித்திய விமானத்தில் பிரிகோஜின் தவிர விமானி மற்றும் ஏழு பயணிகள் பயணம் செய்தனர். அந்த வகையில், விமானம் மாஸ்கோவில் இருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி சென்று கொண்டிருந்த போது நடுவழியில் வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது.

    • வாக்னர் கூலிப்படை ரஷியாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது.
    • புதினின் அரசை கவிழ்க்க திடீர் புரட்சியில் ஈடுபட்டது.

    மாஸ்கோ :

    உக்ரைன் மீதான போரில் ரஷிய படைகளுடன் இணைந்து அந்த நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு செயல்பட்டு வந்தது. போரில் உக்ரைன் நகரங்களை கைப்பற்றுவதில் இந்த கூலிப்படை முக்கிய பங்காற்றியது.

    இந்த சூழலில் திடீர் திருப்பமாக வாக்னர் கூலிப்படை ரஷியாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது. புதினின் அரசை கவிழ்க்க திடீர் புரட்சியில் ஈடுபட்டது.

    எனினும் கூலிப்படையுடன் புதின் அரசு சமரசம் செய்து கொண்டதால் இந்த புரட்சி ஓரிரு நாட்களிலேயே முடிவுக்கு வந்தது. புரட்சியில் ஈடுபட்ட வாக்னர் குழு உறுப்பினர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ரஷியாவின் வாக்னர் குழு இல்லை என்று அதிபர் புதின் பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாஸ்கோவில் பத்திரிகையாளர்களை சந்தித்த புதினிடம் வாக்னர் குழு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "ரஷியாவில் தனியார் ராணுவ அமைப்புகளுக்கு எந்த சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லை. எனவே வாக்னர் குழு என்ற அமைப்பு இல்லை" என கூறினார்.

    • உக்ரைன் மீது படையெடுப்பதற்கான புதினின் முடிவிற்கு வட கொரியா துணை நிற்பதாக கிம் உறுதியளித்துள்ளார்.
    • ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கி, முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்தது.

    ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுடன், 'கரம்கோர்ப்பதாகவும்', நாட்டை சக்திவாய்ந்ததாக்கும் இலக்கிற்காக, திட்டமிட்ட செயலாக்கத்திற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகவும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உறுதியளித்துள்ளதாக, அந்நாட்டு அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது.

    ரஷியாவின் தேசிய தினத்தையொட்டி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கிம் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அந்த செய்தியில், உக்ரைன் மீது படையெடுப்பதற்கான புதினின் முடிவிற்கு வட கொரியா துணை நிற்பதாகவும், ரஷியாவிற்கு முழு ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை அளிப்பதாகவும் கிம் உறுதியளித்துள்ளார்.

    "நீதி வெற்றி பெறுவது உறுதி என்றும், வெற்றி வரலாற்றிற்கு ரஷிய மக்கள் தொடர்ந்து பெருமை சேர்ப்பார்கள்", என்றும் கிம் தெரிவித்துள்ளார்.

    ரஷியாவுடன் நெருக்கமான திறன் வாய்ந்த ஒத்துழைப்பிற்கு அழைப்பு விடுத்திருக்கும் கிம், இரு நாட்டு மக்களின் பொதுவான விருப்பத்திற்கு இணங்க, தத்தம் நாடுகளை சக்தி வாய்ந்த நாடாக கட்டியெழுப்பும் பெரும் இலக்கை நிறைவேற்ற, ரஷிய அதிபருடன் உறுதியாக கரம் கோர்ப்பதாக அவர் தெரிவித்ததாக அச்செய்தி மேலும் கூறுகிறது.

    அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் எதேச்சதிகார மற்றும் மேலாதிக்க கொள்கைகளை குற்றம் சாட்டி உள்ள வட கொரியா, கடந்த ஆண்டு ரஷியா, உக்ரைனை ஆக்கிரமித்த பின்னரும் அந்நாட்டை ஆதரித்து நெருக்கமான நட்புறவை ஏற்படுத்த முயற்சித்தது.

    கடந்த 2021ம் ஆண்டு ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கி, முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்தது. இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனை ஆதரிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்ளன. இந்நிலையில் வட கொரிய அதிபர் கிம் ரஷியாவிற்கு ஆதரவளித்திருப்பது உலக அரங்கில் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.

    • ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள படங்களின் படி அதிபர் புதின் நிலை தடுமாறி கீழே விழுந்திருப்பதை போன்று காட்சியளிக்கிறது.
    • முன்னதாக மார்ச் மாதமும் இதே போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தி மாஸ்கோ டைம்ஸ் வெளியிட்ட செய்தி குறிப்பின் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள படங்களின் படி அதிபர் புதின் நிலை தடுமாறி கீழே விழும் போது தரையில் கைகளை வைப்பதை போன்றும், கீழே படுத்திருக்கும் நிலையிலும் காட்சியளிக்கிறது.

    "புதின் கீழே விழுந்தார். முன்னாள் சோவியத் உறுப்பினர்களை சந்தித்த பின் அதிபர் புதின் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரை உதவியாளர்கள் மீட்டனர்" எனும் தலைப்பில் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டு இருக்கிறது. இந்த தகவலை மாஸ்கோ டைம்ஸ் வெளியிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இணைய தேடல்களில் தி மாஸ்கோ டைம்ஸ் இவ்வாறு எந்த செய்தியையும் பதிவிடவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்கிரீன்ஷாட் மே 16 ஆம் தேதி காலை பதிவிடப்பட்டு இருக்கிறது. ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு மே 12 ஆம் தேதி உருவாக்கப்பட்டுள்ளன.

    முன்னதாக மார்ச் மாதமும் இதே போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதுவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை ஆகும். அந்த வகையில், தற்போது வைரலாகும் தகவலில் உண்மையில்லை என்று உறுதியாகி இருக்கிறது.

    • ரஷியாவின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி கூறினார்.
    • அமெரிக்கா, ரஷியா இடையிலான ஒப்பந்தம், நடைமுறையில் உள்ள கடைசி பெரிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமாகும்.

    அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா தற்காலிகமாக வெளியேறியது. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷியா தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று தெரிவித்தார். அமெரிக்கா அணு ஆயுத சோதனைகளை நடத்தினால், ரஷியா மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்த தயாராக இருக்க வேண்டும் என்றும் புதின் பேசினார்.

    ரஷியாவின் இந்த முடிவு குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் கூறியதாவது:-

    புதிய தொடக்கம் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது தொடர்பான ரஷியாவின் அறிவிப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் பொறுப்பற்ற செயல். ஆனால் ஆயுத கட்டுப்பாடுகள் குறித்து ரஷியாவுடன் பேச அமெரிக்கா தயாராக உள்ளது.

    ரஷியா உண்மையில் என்ன செய்கிறது என்பதை உன்னிப்பாக கவனிப்போம். எங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் நட்பு நாடுகளின் பாதுகாப்பிற்காக நாங்கள் சரியான நிலையில் இருக்கிறோம் என்பதை உறுதி செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமெரிக்கா, ரஷியா இடையே 2010ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், நடைமுறையில் உள்ள கடைசி பெரிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமாகும். ஆனால் அது சமீபத்திய ஆண்டுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி ரஷியா நடந்துகொள்ளவில்லை என்று அமெரிக்கா குற்றம்சாட்டிவருகிறது.

    ×