search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "russia president putin"

    • வாக்னர் கூலிப்படை ரஷியாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது.
    • புதினின் அரசை கவிழ்க்க திடீர் புரட்சியில் ஈடுபட்டது.

    மாஸ்கோ :

    உக்ரைன் மீதான போரில் ரஷிய படைகளுடன் இணைந்து அந்த நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு செயல்பட்டு வந்தது. போரில் உக்ரைன் நகரங்களை கைப்பற்றுவதில் இந்த கூலிப்படை முக்கிய பங்காற்றியது.

    இந்த சூழலில் திடீர் திருப்பமாக வாக்னர் கூலிப்படை ரஷியாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது. புதினின் அரசை கவிழ்க்க திடீர் புரட்சியில் ஈடுபட்டது.

    எனினும் கூலிப்படையுடன் புதின் அரசு சமரசம் செய்து கொண்டதால் இந்த புரட்சி ஓரிரு நாட்களிலேயே முடிவுக்கு வந்தது. புரட்சியில் ஈடுபட்ட வாக்னர் குழு உறுப்பினர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ரஷியாவின் வாக்னர் குழு இல்லை என்று அதிபர் புதின் பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாஸ்கோவில் பத்திரிகையாளர்களை சந்தித்த புதினிடம் வாக்னர் குழு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "ரஷியாவில் தனியார் ராணுவ அமைப்புகளுக்கு எந்த சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லை. எனவே வாக்னர் குழு என்ற அமைப்பு இல்லை" என கூறினார்.

    • உக்ரைன் ரஷியா போர் சுமார் 6 மாதங்களாக நடந்து வருகிறது.
    • உக்ரைன் போருக்கு பிறகு ரஷிய மக்களிடம் புதினின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்று கருத்து கணிப்பு நடந்தது.

    மாஸ்கோ :

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா சுமார் 6 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் ரஷிய அதிபர் புதினுக்கு சொந்த நாட்டிலேயே எதிர்ப்புகள் கிளம்பின. போர் தொடங்கிய சமயத்தில் ரஷியா முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. எனினும் அந்த போராட்டம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் உக்ரைன் போருக்கு பிறகு ரஷிய மக்களிடம் புதினின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது குறித்து தனியார் அறக்கட்டளை நிறுவனம் ஒன்று கருத்து கணிப்பு நடத்தியது.

    இதில் 77 சதவீதம் பேர் அதிபர் புதினை நம்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர். 13 சதவீதம் பேர் மட்டுமே புதினை நம்பவில்லை என்று கூறியுள்ளனர்.

    மேலும் 81 சதவீம் பேர் நாட்டின் தலைவராக புதினின் செயல்பாடுகளை அங்கீகரித்ததாகவும், 10 சதவீம் பேர் அவரது பணியைப் பற்றி எதிர்மறையான பார்வையை கொண்டிருப்பதாகவும், 9 சதவீம் பேர் உறுதியாக தெரியவில்லை என்று கூறியதாகவும் கருத்துகணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    • இந்த உத்தரவு புதிதல்ல.
    • ரஷியாவின் மக்கள் தொகை தொடர்ந்து பல 10 ஆண்டுகளாக சரிந்து வருகிறது.

    மாஸ்கோ :

    ரஷிய நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இது அந்த நாட்டின் அதிபர் புதினை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.

    இதன் காரணமாக அங்கு 10 குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளையோ பெற்றெடுத்து வளர்க்கிற தாய்மார்களுக்கு அன்னை நாயகி என்ற சோவியத் கால பட்டம் வழங்கப்படும், அத்துடன் 10-வது பிறந்த குழந்தைக்கு 1 வயது ஆனவுடன் 1 மில்லியன் ரூபிள் (சுமார் ரூ.13 லட்சம்) ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

    இதற்கான உத்தரவில் புதின் கையெழுத்து போட்டிருக்கிறார்.

    இந்த உத்தரவு புதிதல்ல.

    இரண்டாம் உலகப்போரின்போது பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டதால், 1944-ம் ஆண்டு சோவியத் தலைவர் ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டம் தான் இது.

    பனிப்போரைத் தொடர்ந்து 1991-ம் ஆண்டு, சோவியத் யூனியன் உடைந்தபின்னர் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

    இப்போது அதை எடுத்து தூசி தட்டி மீண்டும் புதின் அமல்படுத்தி உள்ளார்.

    ரஷியாவின் மக்கள் தொகை தொடர்ந்து பல 10 ஆண்டுகளாக சரிந்து வருகிறது. 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 4 லட்சம் சரிவுக்கு பின்னர் 14.5 கோடிகளாக குறைந்தது.

    சோவியத் யூனியன் உடைந்த பிறகு, கடுமையான பொருளாதாரம், சமூகச்சூழலால் 1990-களில் இருந்து மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது. 2000-ம் ஆண்டு ரஷிய அதிபராக புதின் பதவி ஏற்ற பின்னர் மக்கள் தொகை சார்ந்த பிரச்சினைகளை நாடு எதிர்கொண்டது. மக்கள் தொகையை பெருக்குவதற்கு மேற்கொண்ட முந்தைய முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

    2018-ம் ஆண்டு மக்கள் தொகை 14.7 கோடியாக இருந்தது. இது உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியாவை சேர்த்த பிறகுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த இணைப்பு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்படாத நிலையில், 85 ஆயிரம் குறைந்தது.

    2021-ம் ஆண்டில் கொரோனா தொற்று, உக்ரைன் மீதான தற்போதைய போர் ஆகியவை அந்த நாட்டின் மக்கள் தொகை வீழ்ச்சிக்கு வழிவகுத்தபோது, அந்த நாட்டின் மக்கள் தொகை வீழ்ச்சியின் விகிதம் கிட்டத்தட்ட 2 மடங்காக அதிகரித்துள்ளதாம்.

    இந்த நிலையில்தான் ரஷிய அதிபர் புதின் 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுத்து வளர்க்கிற தாய்மார்களை கவுரவித்து ரொக்கப்பரிசு வழங்கும் சோவியத் கால திட்டத்தை மறுபடியும் அமல்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரஷிய அதிபர் புதினை கொலை செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்பு முயற்சி நடந்ததாக உக்ரைன் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
    கிவ், மே. 25-

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 3 மாதங்களாக நீடித்து வருகிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.

    போர் தாக்குதலுக்கு உத்தரவிட்ட ரஷிய அதிபர் புதின் மீது உக்ரைன் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. உக்ரைனை அழிக்க புதின் நினைக்கிறார் என்று தெரிவிக்கிறது.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினை கொலை செய்யும் திட்டம் நிறைவேறவில்லை என்று உக்ரைன் உளவுத்துறை தலைவர் கைரிலோ புடோனே பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரஷிய அதிபர் புதினை கொலை செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்பு முயற்சி நடந்தது.

    கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடலுக்கும் இடையேயான காகசஸ் பகுதியில் புதினை கொலை செய்ய முயற்சி நடந்தது. காகசஸ் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த கொலை முயற்சியில் இருந்து புதின் தப்பிவிட்டார் இது உண்மையில் நடந்தது. புதினை கொல்ல நடந்த முயற்சி பற்றி தகவல் வெளியாகவில்லை என்று தெரிவித்தார்.

    இதுபற்றி ரஷியா விளக்கம் எதுவும் தரவில்லை.

    வல்லரசு நாடான ரஷயாவின் அதிபர் புதினுக்கு எப்போதும் பலத்த பாதுகாப்பு இருக்கும். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றி நின்றப்படி இருப்பார்கள். இதனை மீறி அவரை கொல்ல சதி நடந்ததா என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது.

    இதையும் படியுங்கள்.. அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு- பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு
    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கி நகரை வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். #TrumpPutinmeeting #Helsinkimeeting
    அஸ்டோரியா:

    அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின் இதுவரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இல்லை. ஜெர்மனி மற்றும் வியட்நாமில் நடந்த பொருளாதார மாநாடுகளில் இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்தது மட்டுமின்றி, தொலைபேசி வாயிலாகவும் பேசி இருக்கின்றனர்.

    இதற்கிடையே, இரு வல்லரசுகளின் தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும், ரஷியாவின் கிரம்ளின் மாளிகையும் மேற்கொண்டு வந்தன. இதன் விளைவாக 3-வது நாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான பின்லாந்து நாட்டின் தலைநகரான ஹெல்சின்கி நகரில் ஜூலை 16-ம் தேதி இந்த பேச்சுவார்த்தையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முதலில் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும், பின்னர் தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பின்லாந்து தலைநகரான ஹெல்சின்கி நகரை வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
    உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு எனது வாழ்த்துக்கள். மேலும், உலக கோப்பை கால்பந்து தொடரை சிறப்பாக நடத்திய ரஷியாவுக்கும், அதிபர் புதினுக்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். #TrumpPutinmeeting #Helsinkimeeting 
    அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் சந்திப்பு உலகளவில் நிலவி வரும் பதட்டத்தை தணிக்க உதவும் என ரஷியாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். #TrumpPutinMeet #JonHuntsman
    வாஷிங்டன்:

    உலகின் வல்லரசு நாடுகளாக திகழ்வது அமெரிக்கா மற்றும் ரஷ்யா. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இரு நாட்டு அதிபர்கள் இடையிலான முதல் சந்திப்பு ஜூலை 16-ல் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் நடக்க உள்ளது என வெள்ளை மாளிகை கடந்த மாதம் அறிவித்தது.

    அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜான் பால்டன், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த சந்திப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், இந்த சந்திப்பின்போது தேசிய பாதுகாப்பு, சிரியா, உக்ரைன் உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் சந்திப்பு உலகளவில் நிலவி வரும் பதட்டத்தை தணிக்க உதவும் என ரஷியாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஹெல்சின்கியில் நடக்கவுள்ள டிரம்ப்-புடின் சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையிலான பதட்டத்தை குறைக்கும். அத்துடன், உலகளவிலும் நிலவி வரும் பெரும் பதட்டத்தை தணிக்க உதவும் என தெரிவித்துள்ளார். 
    #TrumpPutinMeet #JonHuntsman
    ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தை, இருநாட்டு உறவை வலுப்படுத்தும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்தார்.#Modi #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி, ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். ரஷியாவின் சோச்சி நகரில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை இன்று அவர் சந்தித்து பேசுகிறார்.

    இந்த சந்திப்பின்போது, இருதரப்பு பிரச்சினைகள், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால், இந்தியா மற்றும் ரஷியாவுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்புகள், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நிலவரம், பயங்கரவாத அச்சுறுத்தல், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு, பிரிக்ஸ் மாநாடு விவகாரங்கள் ஆகியவை பற்றியும் அவர்கள் விவாதிக்கிறார்கள்.

    மேலும், ரஷியா மீது அமெரிக்கா விதிக்கும் பொருளாதார தடையால், இந்தியா-ரஷியா பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்தியா-ரஷியா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பை மூன்றாம் நாடுகளுக்கு விரிவுபடுத்துவது, கொரிய தீபகற்ப நிலவரம் ஆகியவை பற்றியும் பேசுகிறார்கள்.

    இந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடி நேற்று தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    நட்புரீதியான ரஷிய மக்களுக்கு வணக்கம். ரஷியாவின் சோச்சி நகருக்கு செல்வதற்கும், ரஷிய அதிபர் புதினை சந்திப்பதற்கும் ஆவலாக இருக்கிறேன். அவரை சந்திப்பது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதுதான்.

    புதினுடனான பேச்சுவார்த்தை, இந்தியா-ரஷியா இடையிலான விசேஷ, வியூகம் சார்ந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு மோடி கூறியுள்ளார். #Modi #PMModi
    ×