search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wagner"

    • பிரிகோஜின் பயணம் செய்த தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியது.
    • கடந்த மாதம் அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பிரிகோஜின் கிளர்ச்சியில் ஈடுபட்டார்.

    ஷியாவின் வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜின் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு விசாரணைக் குழு உறுதிப்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டார்.

    இது குறித்து ரஷியாவின் விசாரணைக் குழு செய்தித் தொடர்பாளர் வெட்லனா பெட்ரென்கோ அறிக்கை வெளியிட்டார். அதில், கடந்த புதன் கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் மீட்கப்பட்ட பத்து உடல்களும் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவை அனைத்தும் விமானத்தில் பயணம் செய்த பத்து பேருடையது தான் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     

    ரஷியாவின் வான் போக்குவரத்து ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட தகவல்களில் பிரிகோஜினின் தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியதாகவும், இந்த தனியார் விமானத்தில் பயணம் செய்தவர்கள் பட்டியலில் பிரிகோஜின் பெயர் இடம்பெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    விபத்தில் சித்திய விமானத்தில் பிரிகோஜின் தவிர விமானி மற்றும் ஏழு பயணிகள் பயணம் செய்தனர். அந்த வகையில், விமானம் மாஸ்கோவில் இருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி சென்று கொண்டிருந்த போது நடுவழியில் வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது.

    • வாக்னர் கூலிப்படை ரஷியாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது.
    • புதினின் அரசை கவிழ்க்க திடீர் புரட்சியில் ஈடுபட்டது.

    மாஸ்கோ :

    உக்ரைன் மீதான போரில் ரஷிய படைகளுடன் இணைந்து அந்த நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு செயல்பட்டு வந்தது. போரில் உக்ரைன் நகரங்களை கைப்பற்றுவதில் இந்த கூலிப்படை முக்கிய பங்காற்றியது.

    இந்த சூழலில் திடீர் திருப்பமாக வாக்னர் கூலிப்படை ரஷியாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது. புதினின் அரசை கவிழ்க்க திடீர் புரட்சியில் ஈடுபட்டது.

    எனினும் கூலிப்படையுடன் புதின் அரசு சமரசம் செய்து கொண்டதால் இந்த புரட்சி ஓரிரு நாட்களிலேயே முடிவுக்கு வந்தது. புரட்சியில் ஈடுபட்ட வாக்னர் குழு உறுப்பினர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ரஷியாவின் வாக்னர் குழு இல்லை என்று அதிபர் புதின் பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாஸ்கோவில் பத்திரிகையாளர்களை சந்தித்த புதினிடம் வாக்னர் குழு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "ரஷியாவில் தனியார் ராணுவ அமைப்புகளுக்கு எந்த சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லை. எனவே வாக்னர் குழு என்ற அமைப்பு இல்லை" என கூறினார்.

    • வாக்னர் படை திடீரென கலகத்தை ஏற்படுத்தி மாஸ்கோ நகர் நோக்கி செல்ல இருப்பதாக அறிவித்தது
    • பெலாரஸ் அதிபர் மத்தியஸ்தராக செயல்பட்டு கலக முயற்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்

    உக்ரைன் மீது ரஷியப்படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. 500 நாட்களை தாண்டியும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை. உக்ரைனை எப்படி வீழ்த்துவது என்று ரஷியா யோசித்து வரும் நிலையில், வாக்னர் கூலிப்படை திடீரென ரஷியாவுக்கு எதிராக திரும்பியது. மாஸ்கோவை நோக்கி செல்ல இருப்பதாக அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் அறிவித்தார்.

    வாக்னர் படை தலைவர் பிரிகோசினால் உண்டாக்கப்பட்ட இந்த கலகம், மிகப்பெரிய அளவில் ஆயுத கிளர்ச்சியாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 22-23-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களுக்குள் கலகம் முடிவுக்குள் கொண்டு வரப்பட்டது.

    ரஷிய படைக்கும், வாக்னர் படைக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த மக்கள், தங்களது தேவைக்கான பணத்தை கையிருப்பாக வைத்துக்கொள்ள விரும்பினர். இதன்காரணமாக வங்கிகளில் உள்ள பணத்தை அவசர அவசரமாக எடுக்க தொடங்கினர்.

    ஒருவேளை ஆயுத புரட்சி பெரிய அளவில் ஏற்பட்டால் உணவு மற்றும் அன்றாட செலவிற்கு பணம் தேவைப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை காரணமாக பணத்தை எடுத்தனர். ஜூன் 23-25-ந்தேதிகளில் சுமார் 1.1 பில்லியன் (இந்திய பண மதிப்பில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்) வங்கியில் இருந்து எடுக்கப்பட்டதாக ரஷியாவின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

    ஜூன் மாதத்தில் மட்டும் 5 பில்லியன் அளவிற்கு மக்கள் பணத்தை எடுத்துள்ளனர். இதில் அந்த குறிப்பிட்ட நாட்களில் மட்டும் 1 பில்லியன் அளவிற்கு பணம் எடுக்கப்பட்டுள்ளது. இது ஐந்தில் ஒரு பகுதியாகும்.

    ஜூன் மாதத்தில் அதிக அளவில் பணம் எடுக்கப்பட்டாலும், ரஷியாவின் பணவியல் கொள்கையை இது பாதிக்காது என்று அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இருந்தாலும் வாகனர் படையின் கலக முயற்சியால் ரஷியாவின் ருபெல் பணமதிப்பு 15 மாதத்தில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. ஏற்றுமதி வருவாயிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து பணத்தின் மதிப்பு குறைந்து வருவதால், இது பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் என பணவீக்கதையும் அதிகரிக்கும் என ரஷியாவின் மத்திய வங்கி கவர்னர் கவலை தெரிவித்துள்ளார்.

    • ஆயுத கிளர்ச்சியை தொடங்கிய வாக்னர் குழு தலைவர் பெலாரஸ் சென்று விட்டார்
    • ராணுவ உயர் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே எப்படி தெரியாமல் போனது என புதின் தீவிர விசாரணை

    ரஷியாவில் வாக்னர் குழு எனும் கூலிப்படை அமைப்பு ரஷிய ராணுவம் மற்றும் அதிபர் புதினுக்கு எதிராக ஒரு கலகத்தை தொடங்கியது. இதுபெரும் கிளர்ச்சியாக மாறும் என உலகம் எதிர்பார்த்திருந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் இதனை அடக்கி விட்டார். இந்த குழுவின் தலைவர் எவ்செனி பிரிகோசின், பெலாரஸ் நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கிறார்.

    தனக்கும், தன் நாட்டிற்கும் எதிரான இக்கலக முயற்சிக்கு காரணம் யார்? என்பதை கண்டறிய புதின், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர், இக்கிளர்ச்சிக்கு மேற்கத்திய நாடுகள் மறைமுக காரணம் என குற்றஞ்சாட்டி வந்தார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்பான சி.ஐ.ஏ. நிறுவனத்தின் இயக்குனர் வில்லியம் பேர்ன்ஸ், ரஷிய நாட்டின் உளவுத்துறை அமைப்பின் தலைவரான செர்ஜி நரிஷ்கினை அழைத்து அந்நாட்டில் நடந்த அந்த குறுகிய கால கலகத்தில், அமெரிக்காவின் பங்களிப்பு எதுவும் இல்லை என பேசியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

    ரஷ்யாவில் உள்ள எஸ்.வி.ஆர்., வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு (SVR Foreign Intelligence Services) தலைவரான நரிஷ்கினுக்கும், சி.ஐ.ஏ.வின் பேர்ன்ஸிற்கும் இடையேயான தொலைபேசி உரையாடல், இந்த வாரம் நடந்தது. ரஷியாவின் வாக்னர் கலக முயற்சிக்கு பின்னர், இரு அரசாங்கங்களுக்கிடையே நடைபெறும் உயர்மட்ட தொடர்பு இது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை குழுவின் தலைவரான எவ்செனி பிரிகோசின், கடந்த வார ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு தலைமை தாங்கி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அவருடைய போராளிகள் மாஸ்கோவை நெருங்கியபோது திடீரென அதை நிறுத்தினார்.

    ரஷியாவிற்கு எதிரான வாக்னர் கூலிப்படையினரின் கலகம், அங்கு நடைபெற்ற உள்நாட்டு போராட்டத்தின் ஒரு பகுதி என்றும், அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் அதில் ஈடுபடவில்லை என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் பெலாரஸில் தஞ்சம்
    • ஆயுத கிளர்ச்சி குறித்து ஏன் முன்கூட்டிய அறியவில்லை என்பது குறித்து புதின் விசாரணை

    சென்ற வாரம் ரஷியாவில் வாக்னர் எனும் தனியார் ராணுவ அமைப்பு ரஷிய அதிபருக்கெதிரான கலகத்தை தொடங்கியது. இது பெரும் புரட்சியாக வெடிக்கலாம் என உலகமே எதிர்பார்த்திருந்த நிலையில், ரஷிய அதிபர் புதின் இந்த கிளர்ச்சியை சாமர்த்தியமாக அடக்கிவிட்டார். அந்த அமைப்பின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ரஷியாவை விட்டு பெலாரஸ் நாட்டில் தஞ்சமடைந்திருக்கிறார்.

    தற்போது புதின், வாக்னர் கலகத்திற்கான பின்னணியில் இருந்தவர்களையும், அதனை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க முயற்சி செய்யாதவர்களையும் மற்றும் ஒரு தீர்மானம் இல்லாத மனநிலையில் செயல்பட்ட ராணுவ அதிகாரிகளையும் இனம் கண்டு களையெடுக்க தேவையான உயர்மட்ட நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருப்பதாக தெரிகிறது.

    இதனை உறுதி செய்யும் வகையில் ரஷியாவின் மூத்த ராணுவ ஜெனரல்கள் பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகிவிட்டனர்.

    ரஷியாவின் உயர்மட்ட ஜெனரல் வாலெரி செராசிமோவ் (67), பொது இடங்களிலோ அல்லது அரசு தொலைக்காட்சியிலோ காணப்படவில்லை. ஜூன் 9 முதல் அவர் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திக்குறிப்பிலும் குறிப்பிடப்படவில்லை.

    செராசிமோவ் ரஷியா உக்ரைனுடன் நடத்தும் போரில் ரஷிய துருப்புகளுக்கான தளபதியாக செயல்படுபவர். அவரிடம் ரஷியாவின் அணு ஆயுதங்கள் தொடர்பான 3 முக்கிய பெட்டிகளில் ஒன்று எப்போதும் இருக்கும் என்றும் தெரிகிறது.

    அதேபோன்று துணைத்தளபதியும், ஜெனரல் ஆர்மகெடோன் என்ற அடைமொழி உடையவருமான ஜெனரல் செர்ஜி சுரோவிகின் மக்கள் பார்வையில் காணப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகின்றன.

    ஆனால், இவற்றை உறுதி செய்யும் வகையில் ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ செய்திகள் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • யெவ்ஜெனி பிரிகோசின் பெலாரசுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது.
    • கிளர்ச்சியில் ஈடுபட்ட தனது செயலை நியாயப்படுத்தினார்.

    மாஸ்கோ :

    உக்ரைன் போரில் ரஷியாவுடன் இணைந்து செயல்பட்டது, வாக்னர் குழு என்ற கூலிப்படை. இதன் தலைவரான யெவ்ஜெனி பிரிகோசின், தங்கள் வீரர்களை ரஷிய ராணுவம் கொன்றதாக குற்றம்சாட்டி அந்நாட்டு அரசுக்கு எதிராக கிளர்ச்சியை அறிவித்தார். அதேவேகத்தில் பின்வாங்கி, கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார்.

    அவர் அண்டை நாடான பெலாரசுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் அங்கு சென்றதை பிரிகோசினோ, பெலாரஸ் அதிகாரிகளோ உறுதிப்படுத்தவில்லை.

    இந்நிலையில், ஒரு சுயேச்சையான பெலாரஸ் ராணுவ கண்காணிப்பு அமைப்பான பெலாரஸ்கி ஹாஜுன், பிரிகோசினின் ஜெட் விமானம், பெலாரஸ் தலைநகரான மின்ஸ்க் அருகே நேற்று காலை வந்திறங்கியதாக தெரிவித்துள்ளது.

    பிரிகோசின் நேற்று முன்தினம் வெளியிட்ட ஓர் ஆடியோவில், கிளர்ச்சியில் ஈடுபட்ட தனது செயலை நியாயப்படுத்தினார். ரஷிய ராணுவத்தை அவர் மீண்டும் விமர்சித்தபோதும், புதினுக்கு எதிராக தான் புரட்சி செய்ய முயலவில்லை என்று கூறினார்.

    அன்று இரவு தொலைக்காட்சியில் பேசிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பிரிகோசினின் பெயரை குறிப்பிடாமல், கிளர்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் உக்ரைனின் கைப்பாவையாக செயல்பட்டதாக விமர்சித்தார். அதேநேரத்தில், பெரிய ரத்தக்களறியை தவிர்த்ததாக தனியார் படை வீரர்களை பாராட்டவும் செய்தார்.

    இதற்கிடையில், தனியார் படையின் கிளர்ச்சி குறித்த குற்றவியல் விசாரணையை ரத்து செய்வதாக ரஷிய அதிகாரிகள் நேற்று அறிவித்தனர்.

    • வாக்னர் கூலிப்படையால் ரஷியாவில் ஆயுத கிளர்ச்சி ஏற்படும் அபாய சூழ்நிலை உருவானது
    • பெலாரஸ் அதிபர் மத்தியஸ்தராக செயல்பட்டு ஆயுத கிளர்ச்சிக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தார்

    ரஷியாவில் அந்நாட்டு தனியார் ராணுவமாகவும் கூலிப்படையாகவும் வாக்னர் அமைப்பு எனும் படை செயல்பட்டு வந்தது. சென்ற வார இறுதியில், அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில், அவரது படை ரஷிய அரசாங்கத்திற்கும், ராணுவத்திற்கும் எதிராக ஒரு கலகத்தை தொடங்கியது.

    இக்கலகம் பெரும் ராணுவ கிளர்ச்சியாக மாறலாம் என உலகம் எதிர்பார்த்திருந்த நிலையில் எந்த ரத்தக்களறியும், வன்முறையும் இல்லாமல் அது அடங்கி விட்டது.

    இக்கலகத்தின் பின்னணியில் மேற்கத்திய நாடுகளின் தூண்டுதலும், ஆதரவும் இருந்ததாக புதின் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் அமெரிக்கா இதனை மறுத்துள்ளது.

    இதுகுறித்து பேசியிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருப்பதாவது:-

    அமெரிக்காவிற்கோ அல்லது நேட்டோ அமைப்பிற்கோ, ரஷியாவின் வாக்னர் கூலிப்படை அமைப்பின் கடந்த வார குறுகிய கால கிளர்ச்சியுடன் எந்த சம்பந்தமும் இல்லை. அங்கு நடந்த எழுச்சி, ரஷிய அரசாங்கத்திற்கெதிராகவும், அதிபருக்கு எதிராகவும் நீண்ட காலமாக நிலவி வரும் உள்நாட்டு அமைப்புமுறை சார்ந்த பிரச்சினை.

    அங்கு நிலவி வரும் சூழலை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆனால் இது எவ்வாறு முடிவடையும் என்பதை தற்போதே அறுதியிட்டு கூற முடியாது. இவ்வாறு அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

    ரஷியாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் மைக்கேல் ஃபவுல், "ரஷிய எதேச்சதிகார அமைப்பிற்கெதிரான சவால்களும், ஜனநாயக எழுச்சிகளும் தோன்றும் போதெல்லாம், உடனே அதன் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக பழி கூறி அத்தகைய எழுச்சிகளுக்கு மக்களின் ஆதரவு கிடைக்காமல் பார்த்துக் கொள்வது ரஷிய அதிபரின் வழக்கம்.

    மேலும், ரஷியாவின் சீர்குலைவின் பின்னணியில் தாங்கள் இருப்பதாக தவறாக சித்தரிக்கப்படுவதை அமெரிக்காவும், நேட்டோவும் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது" என கூறியுள்ளார்.

    ரஷியாவின் உக்ரைன் ஆக்ரமிப்பால், இரு நாடுகளுக்குமிடையே நடந்து வரும் போர் முடிவுக்கு வராமல் தொடரும் நிலையில், இந்த கிளர்ச்சியும், இதை புதின் கையாண்ட விதமும், மேற்கத்திய நாடுகளின் அடுத்த நகர்வையும் உலகம் கூர்ந்து கவனித்து வருகிறது.

    • கிளர்ச்சியில் இருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.
    • வாக்னர் படையை சேர்ந்த வீரர்கள் விரும்பினால் ரஷிய ராணுவத்தில் இணைந்து கொள்ளலாம் அல்லது பெலாரஸ் நாட்டுக்கு செல்லலாம்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீதான போரில் ரஷிய ராணுவத்துக்கு அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு உதவியது.

    ரஷியாவின் கூலிப்படை என்று அழைக்கப்படும் வாக்னர் குழு, உக்ரைன் படையினருக்கு எதிராக சண்டையிட்டு சில நகரங்களை கைப்பற்றியது.

    இதற்கிடையே ரஷிய ராணுவ தலைமைக்கும், அரசுக்கும் எதிராக வாக்னர் குழு திரும்பியது. தங்களது படை மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் ரஷியாவில் கிளர்ச்சியை ஏற்படுத்த போவதாகவும் வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின் அறிவித்தார்.

    இதையடுத்து அப்படையின் 25 ஆயிரம் வீரர்கள் தலைநகர் மாஸ்கோவை நோக்கி சென்றனர்.

    இதையடுத்து வாக்னர் குழுவுக்குரிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அதன்பின் பெலாரஸ் நாட்டு அதிபரின் சமரசத்தை ஏற்றுக்கொண்ட வாக்னர் குழு தலைவர், கிளர்ச்சியை கைவிட்டதாக அறிவித்தார். இதனால் வாக்னர் படை வீரர்கள் பின்வாங்கி திரும்பி சென்றனர்.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கிளர்ச்சியில் இருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. ரஷியாவில் உள்நாட்டு கிளர்ச்சி உருவானால் தோல்வியில்தான் முடியும். ரஷியர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாக வேண்டும் என்று உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன.

    கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்ற சிலர், உக்ரைன் அரசாங்கம் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கைகளில் விளையாடி இருக்கிறார்கள். துரோகிகளான அவர்கள் நீதி முன்பு கொண்டு வரப்படுவார்கள்.

    வாக்னர் படையை வீழ்த்த உறுதுணையாக இருந்த ரஷிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரஷியரில் ரத்தம் சிந்துவதை தவிர்க்க முடிவு செய்த வாக்னர் போராளிகள் மற்றும் தளபதிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

    நாட்டு மக்கள் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர். ரஷியாவின் எதிரிகள் தவறாக கணக்கிட்டுள்ளனர். வாக்னர் படையை சேர்ந்த வீரர்கள் விரும்பினால் ரஷிய ராணுவத்தில் இணைந்து கொள்ளலாம் அல்லது பெலாரஸ் நாட்டுக்கு செல்லலாம்.

    அவர்கள் பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ, பெலாரஸ் நாட்டுக்கு இடம் பெயரவோ அல்லது குடும்பத்துடன் திரும்ப செல்லவோ அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதின் தனது உரையில் வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷினின் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

    • வாக்னர் போராளிகள் விரும்பினால் பெலாரஸுக்கு இடம்பெயர அனுமதி.
    • கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் பற்றி அவர் குறிப்பிடவில்லை.

    ரஷிய- உக்ரைன் போரில் ஒரு திருப்பமாக ரஷியாவில் உள்ள தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில் நடைபெற்ற ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சி, அதன் தலைவருக்கும் ரஷிய அரசாங்கத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது.

    இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

    அந்த அறிக்கையில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:-

    ரஷியாவில் ரத்தம் சிந்துவதை தவிர்க்க இறங்கிய வாக்னர் கூலிப்படை போராளிகள் மற்றும் தளபதிகளுக்கு நன்றி.

    வாக்னர் போராளிகள் விரும்பினால் பெலாரஸுக்கு இடம்பெயர அனுமதிப்பதாகவோ அல்லது பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ அல்லது அவர்களது குடும்பங்களுக்குத் திரும்பவோ அனுமதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் பற்றி அவர் குறிப்பிடவில்லை.

    • வாக்னர் படை மாஸ்கோவை நோக்கி திரும்பியதால் பதட்டமான நிலை ஏற்பட்டது
    • பெலாரஸ் அதிபர் மத்தியஸ்தராக செயல்பட்டு ஆயுத கிளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்

    ரஷிய- உக்ரைன் போரில் ஒரு திருப்பமாக ரஷியாவில் உள்ள தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில் நடைபெற்ற ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சி, அதன் தலைவருக்கும் ரஷிய அரசாங்கத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் ரஷியாவிற்கு எதிரான வாகனர் படை எழுச்சி பற்றிய தனது முதல் அதிகாரப்பூர்வ கருத்துகளில் சீனா, தேசிய ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதில் ரஷியாவை ஆதரிப்பதாக கூறியிருக்கிறது.

    அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ள செய்திக்குறிப்பில், "தங்களது நட்பு அண்டை நாடாகவும், ஒரு புதிய சகாப்தத்தின் விரிவான மூலோபாய கூட்டுறவு பங்காளியாகவும், தனது நாட்டின் தேசிய ஸ்திரத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பை காப்பதிலும் ரஷியாவை சீனா ஆதரிக்கிறது" என்று தெரிவித்துள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதி வரை ரஷியாவில் நடைபெற்ற கிளர்ச்சி குறித்து சீனா எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் ரஷியாவின் "உள் விவகாரம்" என தெரிவித்து நிறுத்தி கொண்டது.

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஒரு பொது மன்னிப்பு ஒப்பந்தத்தை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்ததும், வேறு புகலிடம் தேடி செல்வதற்கு அக்கிளர்ச்சியின் தலைவர் எவ்ஜெனி பிர்கோசினும் ஒப்புக்கொண்டதையும் குறித்து சீனா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    நேற்று சீனாவின் வெளியுறவு மந்திரி கின் கேங்க், பீஜிங்கில் ரஷியாவின் துணை வெளியுறவு மந்திரி ஆண்ட்ரே ருடென்கோவை சந்தித்தார். இருவரும் சீன-ரஷிய உறவுகள் மற்றும் பொதுநலன் சார்ந்த சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர்.

    "தனது நாட்டின் நிலைமையை உறுதிப்படுத்த ரஷிய கூட்டமைப்பின் முயற்சிகளுக்கு சீனா ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறது" என்று ரஷியா கூறியது.

    உக்ரைன் படையெடுப்பிற்குப் பின்னர் ரஷிய-சீன மூலோபாய கூட்டாண்மை நெருக்கமாக வளர்ந்து வருவதால், இரு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ராஜதந்திர தொடர்புகளை அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    ரஷிய-உக்ரைன் போரில் சீனா தன்னை ஒரு நடுநிலைக் கட்சி என்று கூறிக்கொள்கிறது. ஆனால், ரஷியாவை கண்டிக்க மறுத்ததற்காகவும், ரஷியாவுடனான அதன் உறவுகளுக்காகவும் மேற்கத்திய நாடுகளால் சீனா விமர்சிக்கப்பட்டது.

    • ரஷியாவில் தற்போது நடைபெற்ற வரும் சூழ்நிலை குறித்து ஆலோசனை
    • நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குமாறு ஜெலன்ஸ்கி கேட்டுள்ளார்

    உக்ரைன்- ரஷியா இடையே கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. தற்போது உக்ரைன் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இதன்மூலம் சில கிராமங்களை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

    இதற்கிடையே வாக்னர் கூலிப்படை திடீரென ரஷியாவிற்கு எதிராக திரும்பியது. எவ்ஜெனி புரிகோசின் தலைமையிலான வாக்னர் கூலிப்படை ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், மாஸ்கோ நோக்கி முன்னோக்கி செல்ல இருப்பதாகவும் அறிவித்தது.

    இதனால் ரஷியாவுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது. ஒரு பக்கம் உக்ரைனுக்கு எதிராக போரிட வேண்டும். மறுபுறம் துரோகியை ஒடுக்க வேண்டும். இதனால் புதின் வாக்னர் படை வீரர்களை கண்டதும் சுட உத்தரவிட்டார். இந்த நிலையில்தான் ரஷியாவின் மிகவும் நெருங்கிய நாடான பெலாரஸ் மத்தியஸ்தராக செயல்பட்டு, புரிகோசினிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

    அப்போது புரிகோசின் பெலாரஸ் செல்ல வேண்டும். வாக்னர் படை மீதான கிரிமினல் வழக்குகளை ரஷியா திரும்ப பெற வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனால் வாக்னர் படை மாஸ்கோ நோக்கி செல்வதில் இருந்து பின்வாங்கியது.

    இந்த பரபரப்பான சூழ்நிலை நடந்து கொண்டிருந்த வேலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

    இதுகுறித்து ஜெலன்ஸ்கி கூறுகையில் ''நான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பேசினேன். நேர்மறை மற்றும் உத்வேகம் அளிக்கும் உரையாடல் நடைபெற்றது. உக்ரைன்- ரஷியா இடையிலான போர் மற்றும் தற்போது ரஷியாவில் நடைபெற்று வரும் சூழ்நிலை குறித்து விவாதித்தோம். சர்வதேச உத்தரவு நடைமுறைக்கு வரும்வரை, சர்வதேச நாடுகள் ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்'' என்றார்.

    மேலும், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குவது குறித்து ஜெலன்ஸ்கி பைடன் உடன் ஆலோசனை நடத்தியதை உறுதிப்படுத்திய வெள்ளை மாளிகை, இது தனி விசயம் என்று தெரிவித்துள்ளது.

    • உக்ரைனுக்கு எதிராக போரிட்டு வரும் நிலையில் வாக்னர் படை செயலால் ரஷியாவுக்கு பின்னடைவு
    • உயிரிழப்புகள் வேண்டாம் என கருதி பின்வாங்குகிறோம் என வாக்னர் படை அறிவிப்பு

    எவ்ஜெனி புரிகோசின் தலைமையிலான வாக்னர் கூலிப்படை ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், மாஸ்கோ நோக்கி முன்னோக்கி செல்ல இருப்பதாகவும் அறிவித்தார். இதனால் ரஷியாவில் ஆயுத புறட்சி ஏற்படும் சூழ்நிலை உருவானது.

    பின்னர், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடன் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக கூறியதைத் தொடர்ந்து, உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக தனது படைகள் வெளியேறுவதாக எவ்ஜெனி புரிகோசின் தெரிவித்தார். இதனால் ஆயுத கிளர்ச்சி முடிவுக்கு வரவிருக்கிறது.

    இதற்குமுன் இரண்டு முறை ரஷியா ஆட்சி கவிழ்ப்பு சதியை எதிர்கொண்டுள்ளது. அப்போது சோவியத் ரஷியாவாக இருந்தது.

    1991-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோவியத் ரஷியா உடைவதற்கு முன், கம்யூனிஸ்ட் கட்சியின் கடுமைவாதிகள், சோவியத் ரஷியா உருவாவதற்கு முக்கிய பங்கு வகித்த 15 குடியரசுகளுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கும் அதிகார ஒப்பந்தத்தை தடுத்து அதிகாரத்தை கைப்பற்ற நினைத்த சதி முறியடிக்கப்பட்டது.

    அப்போது அதிபராக இருந்த மிக்கைல் கோர்பசேவ் ஆகஸ்ட் 19-ந்தேதி கிரிமியாவில் உள்ள டச்சாவில் விடுமுறையை கழிப்பதற்காக சென்றார். சோவியத் ரஷியாவின் ரகசிய போலீசார் அவரை வீட்டுச்சிறையில் அடைத்தனர். மாஸ்கோ நகரில் ராணுவ வீரர்கள், ராணுவ டாங்கிகள் குவிக்கப்பட்டனர்.

    அடுத்த இரண்டு மூன்று நாட்களில் ரஷிய மக்கள் ஜனநாயகத்தை வலியுறுத்தி வீதியில் இறங்கி போராட தொடங்கினர். மாஸ்கோவின் பாராளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டு போராடத் தொடங்கினர்.

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் போரிஸ் யெல்ட்சின் மக்கள் மத்தியில் உரையாற்றினார். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து சதி முறியடிக்கப்பட்டது. கோர்பசேவ் நாடு திரும்பிய போதிலும் அவரது செல்வாக்கு குறைந்தும், யெல்ட்சின் சக்தி வாய்ந்த தலைவராகவும் கருதப்பட்டார்.

    இந்த சம்பவம் நடைபெற்ற சில மாதங்களில் சோவியத் ரஷியாவில் இருந்த நாடுகள் பிரிந்து சுதந்திரத்தை அறிவிக்க தொடங்கின.

    இரண்டு வருடங்கள் கழித்து 1993-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை பாராளுமன்ற கிளர்ச்சி ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கடுமைவாதிகள் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது பாராளுமன்றம் டாங்கிகள் கொண்டு தாக்கப்பட்டன.

    யெல்ட்சின் சோவித் ரஷியா உடைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபின், அரசியில் நெருக்கடிக்குப்பின் பாராளுமன்ற மன்றத்தில் கம்யூனிஸ்ட் கடுமைவாதிகள் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து யெல்ட்சினை நீக்கி, துணை அதிபர் அலெக்சாண்டர் ருட்ஸ்கோயை அதிபராக்க முயன்றனர். அப்போது ஆளுங்கட்சி எம்.பி.க்கள் அவர்களை தடுத்தனர்.

    அதேவேளையில் பாராளுமன்றத்திற்கு வெளியே மாஸ்கோ மேயர் அலுவலகம் மற்றும் டெலிவிசன் மையத்தை கைப்பற்றியதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    இதனால் யெல்ட்சின் ராணுவ உதவியுடன் கிளர்ச்சியாளர்களை துவம்சம செய்தார். அக்டோபர் 4-ந்தேதி ராணுவ ஒயிட் ஹவுஸை தாக்கியது. 18 மாடி கட்டிடம் தகர்க்கப்பட்டு எதிர்க்கட்சி தலைவர்கள், போராளிகள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இதில் 148 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

    டிசம்பர் மாதம் பொது வாக்கெடுப்பு மூலம் அதிபருக்கு அதிக அதிகாரம் என்ற அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருந்தாலும், யெல்ட்சின் ஆதரவாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தனர்.

    ×