search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குவாதம்"

    • 5-ந் தேதி அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு சொந்தமான இடங்களை அளவீடு செய்து கல் பதித்தனர்.
    • ஆலோசனை கூட்டம் தொடர்பாக தன்னிடம் தகவல் தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

    ஆரல்வாய்மொழி :

    தோவாளையில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கிருஷ்ண சாமி கோவில் உள்ளது. இதன் அருகில் உள்ள சுப்பிரமணியபுரம் எனும் குடியிருப்பு பகுதியும் அறநிலையத் துறைக்கு சொந்தமான இடம் ஆகும். இங்கு 60 வீடுகளும் 2 காலிமனைகளும் உள்ளன. இந்த குடியிருப்பில் சுமார் 48 ஆண்டுகளாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநி லையில் கடந்த 5-ந் தேதி அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு சொந்தமான இடங்களை அளவீடு செய்து கல் பதித்தனர்.

    இதையடுத்து கோவில் நிலம் எடுப்பு தாசில்தார் சஜித், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ் ணன், உறுப்பினர்கள் சுந்தரி, ராஜேஷ், ஜோதீஸ்குமார், ஸ்ரீகா ரியம் சேர்மராஜா ஆகியோர் கோவில் இடத்தில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு தரை வாடகை விதிப்பது சம்பந்தமாக குடியிருப்பு வாசிகளுடன் ஆலோசனை நடத்த வந்தனர். இந்த ஆலோசனை கூட்டம் தோவாளை கிருஷ்ணசாமி கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் பொதுமக்கள் தாசில்தார் மற்றும் அதிகாரிக ளிடம் சரமாரி கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, 'கோவிலுக்கு சொந்த மான இடம் இதே ஊரில் பல உள்ளது. அந்த பகுதிகளில் நடவடிக்கை எடுத்துவிட்டு இங்கு வாருங்கள்' என்று வாதிட்ட னர். இதனால் அங்கு கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே அங்கு வந்த தோவாளை ஊராட்சி தலைவர் நெடுஞ்செழியன், ஆலோசனை கூட்டம் தொடர்பாக தன்னிடம் தகவல் தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டினார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • பா.ம.க. செயலாளர் ஜெயராமன் தலைமையிலான நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்ததில் ஈடுபட்டனர்.
    • திண்டிவனம் - மரக்காணம் சாலையில் மோட்டார் சைக்கிளுடன் ஒன்று திரண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பா.ம.க.வின் சாதனைகளை விளக்கி மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் நடத்த இன்று திட்டமிடப்பட்டது. இதற்கு விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் திண்டிவனம் - மரக்காணம் சாலையில் மோட்டார் சைக்கிளுடன் ஒன்று திரண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மற்றும் போலீசார், மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் நடத்த அனுமதி கிடையாது. அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். இதையடுத்து விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயராமன் தலைமையிலான நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்ததில் ஈடுபட்டனர். இருந்தபோதும் போலீசார் அனுமதி மறுத்து அனைவரையும் கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

    இதேபோல வானூர் மேற்கு ஒன்றிய பா.ம.க. சார்பில் மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் நடத்த அக்கட்சியினர் கரசானூரில் ஒன்று திரண்டனர். அங்கு வந்த வானூர் போலீசார் அனுமதி மறுத்து அனைவரையும் கலைந்து செல்ல வலியுறுத்தினர். பா.ம.க. வானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையிலான நிர்வாகிகள், எங்கள் கட்சியின் சாதனைகளை விளக்கி மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் செய்ய உள்ளோம். இதற்கு திடீரென அனுமதி மறுப்பது சரியான நடைமுறையல்ல என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பா.ம.க.வினரின் மோட்டார் சைக்கிள் பிரச்சாரத்திற்கு திண்டிவனம் மற்றும் வானூரில் போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும், 2 இடங்களிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி வழங்க கோரி போலீசாரிடம் பா.ம.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் திண்டிவனம், வானூர் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    • 3 இடங்களில் மட்டுமே எரிவாயு பங்குகள் அமைக்கப்பட்டன.
    • ஆட்டோ டிரைவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தரங்கம்பாடி:

    பெட்ரோல், டீசல் எரிபொருளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க அதற்கு மாற்றாக இயற்கை எரிவாயுவை உபயோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி, தனியார் ஆட்டோ நிறுவனங்கள் சி.என்.ஜி. எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயங்கும் ஆட்டோக்களை விற்பனை செய்து வருகிறது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 400 ஆட்டோக்கள் சி.என்.ஜி எரிவாயு(அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) மூலம் இயங்கி வருகிறது.

    மயிலாடுதுறை லட்சுமிபுரம், சேத்திரபாலபுரம் மற்றும் சீர்காழி ஆகிய 3 இடங்களில் மட்டுமே எரிவாயு பங்குகள் அமைக்கப்பட்டன.

    இங்கும் கடந்த 6 மாதங்களாக சரிவர எரிவாயு விநியோகம் செய்யப்படாததால், நகரில் கூடுதல் சி.என்.ஜி எரிவாயு பெட்ரோல் பங்குகளை அமைக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட சி.என்.ஜி. எரிவாயு ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், மயிலாடுதுறை அருகில் ஒரு பங்கில் சி.என்.ஜி. இயற்கை எரிவாயு இல்லாததைக் கண்டித்து, ஆட்டோ டிரைவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க சிறப்புத் தலைவர் தங்க.அய்யாசாமி தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெரம்பூர் ராம்மோகன், மயிலாடுதுறை சின்னகடைவீதி ராஜகோபால், மணிக்கூண்டு முருகன், மார்கெட் பகுதி சாமிநாதன் உள்ளிட்ட ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், ஆட்டோ டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இதைத்தொடா்ந்து ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • கோவில் பூஜைகள், சாமி ஊர்வலம் பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வந்தது.
    • இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் செய்ததாக கூறப்படுகிறது.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள அரங்காபுரம் கிராமத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தில் சுமார் 100 ஆண்டு கால பழைமை வாய்ந்த ஸ்ரீ சென்றாய வரதாரஜா பெருமாள் கோவில் அரசு நடுநிலை பள்ளி அருகே அமைந்துள்ளது.

    இந்நிலையில் இந்த கோவில் பூஜைகள், சாமி ஊர்வலம் பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வந்தது. மேலும் பழமை வாய்ந்த கோவில் என்பதாலும், போதிய பராமரிப்பின்றியும் பாழடைந்து போனது.மேலும் இக்கோவில் பள்ளி கூட வளாகத்தில் உள்ளதாலும் இடவசதி உள்ளிட்ட காரணங்களால் ஒரு சில சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து பணம் வசூல் செய்து அதே கிராமத்தில் பள்ளிகூடம் அருகில் உள்ள நிலத்தில் புதியதாக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ சென்றாய வரதாரஜா பெருமாள் கோவிலை கட்டி முடித்தனர்.

    இந்நிலையில் வருடாந்திர புரட்டாசி மாத பூஜைக்காக காலகாலமாக பின்பற்றும் நடைமுறைப்படி ஊர்வலம் எடுத்து செல்ல திட்டமிட்டனர். ஆனால் இதுசம்மந்தமாக மற்றொரு தரப்பினர் கூடுதல் இடங்களுக்கு சாமி ஊர்வலம் வரவேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவலறிந்து வந்த பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகாலட்சுமி, இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வம் உள்ளிட்ட போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அக்கிராமத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    • பலமுறை அந்த வடிகால் வாய்க்காலை சரிசெய்யுமாறு விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர்.
    • அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வடலூர் அருகே மேல கொளக்குடி பகுதியில் ஈஷா ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் அந்த பகுதியில் உள்ள விவ சாய நிலங்களுக்கு தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரிக்கு நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் உபரி நீர் வருகிறது. இதனையடுத்து இந்த ஏரியில் உள்ள வடிகால் வாய்க்காலை என்.எல்.சி நிறுவனம் அடைத்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த ஏரியின் வடிகால் வாய்க் காலை அடைத்ததால் ஏரியில் தண்ணீர் நிரம்பி வடிவதற்கு வழி இல்லை. இதனால் ஊருக்குள் ஏரியின் தண்ணீர் புகும் அபாயம் ஏற்படும் என பலமுறை அந்த வடிகால் வாய்க்காலை சரிசெய்யுமாறு விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு எந்த வித நடவடிக்கையும் என்.எல்.சி. அதிகாரிகள் மூலம் எடுக்கவில்லை.

    இதனால் இன்று காலை ஏரியின் அருகே கோட்டகம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் அந்த வடிகால் வாய்காலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த தகவல் குறித்து அறிந்த என்.எல்.சி. நிர்வாகத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் நீங்கள் இதுபோன்று செய்யக்கூடாது. இத னால் எங்களுக்கு தண்ணீர் வருவதில் பிரச்சனை ஏற்படும் என்று அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயிகளிடமும், என்.எல்.சி அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக உள்ளது.

    • இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்து 3 வயது மகன் உள்ளான்.
    • படுகாயம் அடைந்த சுப்ரமணியனை மீட்டு சிகிச்சைக்காக ராமநத்தம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வி.சித்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி மகன் சுப்ரமணியன் (வயது 32) விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்து 3 வயது மகன் உள்ளான். இந்நிலையில் நேற்று இரவு சுப்ரமணியன் தனது மோட்டார் சைக்கிளில் வி.சித்தூர் பகுதியில் இருந்து ராமநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் ஜே.சி.பி வாகனம் ஒன்று வந்தது. ராமநத்தம் போலீஸ் நிலையம் முன்பு வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஜே.சி.பி வாகனம் முன்னால் சென்ற மோட்டார் சைக்கி ளில் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி சுப்ரமணியன் கீழே விழுந்தார். இதில் எதிர்பாராத விதமாக ஜே.சி.பி வாகனத்தின் சக்கரங்களில் சிக்கி பலத்த படுகாயம் அடைந்தார்.

    விபத்து போலீஸ் நிலையம் முன்பு நடந்ததால் உடனே விரைந்த ராமநத்தம் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த சுப்ரமணியனை மீட்டு சிகிச்சைக்காக ராமநத்தம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சை க்காக 108 ஆம்புலன் மூலம் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலே சுப்ரமணியன் உயிரி ழந்தார். இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய ஜேசிபி வாகன டிரை வரான தச்சூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (22)என்பவரை கைது செய்தனர். அப்போது கார்த்திக் மதுபோதையில் இருந்ததால் போலீசாரு டன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ஜே.சி.பி எந்திர டிரைவர் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாக்கியது போ லீசாரின் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் ஜே.சி.பி எந்திரத்தை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் கார்த்திகிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது என தெரிவித்தனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்தனர்.

    கடலூர்:

    இந்து முன்னணி சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜன் வரவேற்றார். வெங்கடேசன், பெருமாள், மணிகண்டன், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் சனில் குமார் கலந்து கொண்டு கண்ட உரை ஆற்றினார். அப்போது கடலூர் புதுநகர் போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை. தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது என தெரிவித்தனர். அப்போது இந்து முன்னணியிருக்கும், போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீசார் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்தனர்.

    • 8 நிமிடம் மட்டுமே இடைவெளி இருப்பதால் தினந்தோறும் போட்டி
    • கைது செய்யவும் அவர்கள் பஸ்சை பறிமுதல் செய்யவும் அதிரடியாக உத்தரவிட்டார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி பஸ் நிறுத்தத்தில் விருத்தாச லத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி தனியார் பஸ் புறப்பட்டு வந்துள்ளது. அதன் பின்னால் சிதம்பரத்தி லிருந்து-பெரம்பலூர் நோக்கி மற்றொரு தனியார் பஸ்சும் வந்துள்ளது. 2 பஸ்களுக்கும் 8 நிமிடம் மட்டுமே இடைவெளி இருப்பதால் தினந்தோறும் இவர்கள் போட்டி போட்டுக் கொண்டு பயணிகளை ஏற்றி வருவதாகவும், இதில் அடிக்கடி இந்த 2 தனியார் பஸ் டிரைவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருந்துள்ளது.

    இந்நிலையில் ஆவி னங்குடி பஸ் நிறுத்தத்தில் 2 பஸ்களையும் டிரைவர்கள் சாலையின் நடுவே நிறுத்திக் கொண்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தால் அரை மணி நேரம் விருத்தா சலம்-திட்டக்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவினங்குடி போலீசார் 2 தனியார் பஸ் டிரைவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர். 

    ஆனால் 2 பேரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் 2 பஸ் டிரைவர்கள், கண்டக்டரை கைது செய்யவும் அவர்கள் பஸ்சை பறிமுதல் செய்யவும் அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி ஆவினங்குடி போலீசார் தனியார் பஸ் டிரைவரான சோழராஜன், கல்யாண சுந்தரம், கண்டெக்டர்கள் கோபி, தேவராஜ், சக்திவேல் ஆகிய 5 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீசார் 2 தனியார் பஸ்களையும் பறிமுதல் செய்தனர்.

    • மிச்சர் சாப்பிடுவதற்காக மன்றத்திற்கு வருகிறீர்களா என கேட்டதால் ஆத்திரம்
    • கவுன்சிலர்கள் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைக்க மேயர் வேண்டுகோள்

    கோவை,

    கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் விக்டோரியா அரங்கில் மேயர் கல்பனா தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் திருக்குறள் வாசிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட மறந்தனர். இதனையடுத்து கவுன்சிலர்கள் சுட்டி காட்டிய நிலையில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. கூட்டம் தொடங்கிய உடன் மாநகர பகுதிகளில் நடைபெறும் பணிகள் மந்த கதியில் நடப்பதாக அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் குற்றம் சாட்டினர். அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரனுக்கும், மேயர் கல்பனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    மிச்சர் சாப்பிடுவதற்காக மன்றத்திற்கு வருகிறீர்களா என காட்டமாக அ.தி.மு.க கவுன்சிலர் பிரபாகரன் கேள்வி எழுப்பினார். 10 ஆண்டுகளாக நீங்கள் மிச்சர் சாப்பிட்டீர்களா என மேயர் கல்பனா பதிலுக்கு பேசினார். இருவரும் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

    தொடர்ந்து கூட்டத்தில்பொறியியல் பிரிவு மேம்பாட்டு பணி, பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணி, ஆழ்குழாய் கிணறுகளை இயக்கி பராமரிக்கும் பணி, வீடுகளுக்கு புதிய பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணி, வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதிகளில் புதிதாக பாதாள சாக்கடை மேற்கொள்ளும் பணி, தார்ச்சாலை, தெருவிளக்கு பராமரிப்பு பணி உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மொத்தம் 47 தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப், பேசியதாவது:-

    மாநகராட்சி சார்பில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத்தொ கை படிப்படியாக செலுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில்கூட ரூ.100 கோடி செலுத்தப்பட்டது. இன்னும் ரூ.240 கோடி பாக்கி உள்ளது. அதுவும், விரைவில் செலுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    மேயர் கல்பனா பேசுகையில், மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட்சிட்டி பணி உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகளை விரைவாக செய்து முடிக்க அனைத்து பிரிவு அலுவலர்கள் மற்றும் அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த புத்தேரி கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.
    • கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தன்னிச்சை யாக செயல்பட்டு வருவதா கவும் கூறினார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள தொளார் ஊராட்சிக்கு உட்பட்ட புத்தேரி கிராமத்தில் செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்உள்ளது. இதில் செல்வ விநாயகர் கோவிலுக்கு கும்பாபி ஷேகம் நடைபெற்று சுமார் 12 ஆண்டுகள் ஆகிவிட்டதால் தற்பொழுது மீண்டும் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த புத்தேரி கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலை யில் அதே கிராமத்தை சேர்ந்த ராதா கிருஷ்ணன் மனைவி தமிழ்மணி தான் பரம்பரை அறங்காவலராக உள்ளதாகவும். சிலர் தன்னிச்சையாக இந்து அறநிலையத்துறையிடம் அனுமதி ஏதும் பெறாமல், பொதுமக்களிடம் வரி வசூல் செய்து கோவிலை இடித்து விட்டு புதியதாக திருப்பணி மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தன்னிச்சை யாக செயல்பட்டு வருவதா கவும் கூறினார்.

    இது குறித்து ஒரு தர ப்பினர் ஆவினங்கு டிபோலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் ஆவினங்குடி போலீ சார் திட்டக்குடி இன்ஸ்பெக்டர் சீனிபாபு, அறநிலை துறை ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை செய்தனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்று திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முன்னிலையில் இருதரப்பி னரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தனர். அதுவரை எந்த பிரச்சனை யும் ஈடுபடக்கூடாது என இரு தரப்பினரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு உருவானது.

    • ஆல்பேட்டை பகுதியில் அனைத்து கட்சி சார்பில் 60 முதல் 80 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பங்கள் வைத்திருந்தனர்.
    • எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கொடிக்கம்பங்களை எப்படி அகற்றினீர்கள்? இதற்கு யார் அனுமதி அளித்தார்கள்?

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. ஆல்பேட்டை பகுதியில் அனைத்து கட்சி சார்பில் 60 முதல் 80 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பங்கள் வைத்திருந்தனர். இன்று காலை அனைத்து கொடிக்கம்பங்களையும் நெடுஞ்சாலை துறையினர் அகற்றும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததோடு, சிமெண்ட் கட்டைகளும் இடிக்கப்பட்டது. இத்தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், பா.ம.க. மாநில நிர்வாகி கோபிநாத், த.வா.க. கவுன்சிலர் அருள்பாபு மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் திரண்டனர்.

    எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கொடிக்கம்பங்களை எப்படி அகற்றினீர்கள்? இதற்கு யார் அனுமதி அளித்தார்கள்? என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி விரைந்து வந்து அரசியல் கட்சியினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது
    • அனுமதி இல்லை என்ற போலீசார் கூறியதால் வாக்குவாதம்

    கரூர்,

    கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய போது காவல்துறை அனுமதி மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதுகரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட பொருளாளர் சதீஷ் என்கிற நிலவன் தலைமையில் நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி கரூர் மண்டல துணைச்செயலாளர் வழக்கறிஞர் ராஜா என்கிற மன்னன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.ஆர்ப்பாட்டத்தில் விசிக மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பொறியாளர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயராமன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுடர்வளவன், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் சுரேந்தர், கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்க மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் ரவிநாத், வடக்கு நகர செயலாளர் அடங்காத்தமிழன் அருள், கரூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் செல்வப்பெருந்தகை, கண்மணி ராமச்சந்திரன், மாவட்ட ஊடக அணி அமைப்பாளர் புலி ஈழம் உதயா, பசுவை மணிமாறன் தரைக்கடை சங்க செயலாளர் சுப்பிரமணி, தமிழ்ச்செல்வன், ஆகாஷ், உப்பிடமங்கலம் மணிமாறன், அரவக்குறிச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அரசியல் கட்சிகளுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் ஓம் பிரகாஷ் கூறியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரசு ஊழியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தும் பொழுது மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ×