search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடிகால் வாய்காலை சரி செய்த விவசாயிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட என்.எல்.சி. நிர்வாகம்: வடலூர் அருகே பதட்டம்-போலீஸ் குவிப்பு
    X

    வடிகால் வாய்காலை சரி செய்த விவசாயிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட என்.எல்.சி. நிர்வாகம்: வடலூர் அருகே பதட்டம்-போலீஸ் குவிப்பு

    • பலமுறை அந்த வடிகால் வாய்க்காலை சரிசெய்யுமாறு விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர்.
    • அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் அருகே மேல கொளக்குடி பகுதியில் ஈஷா ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் அந்த பகுதியில் உள்ள விவ சாய நிலங்களுக்கு தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரிக்கு நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் உபரி நீர் வருகிறது. இதனையடுத்து இந்த ஏரியில் உள்ள வடிகால் வாய்க்காலை என்.எல்.சி நிறுவனம் அடைத்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த ஏரியின் வடிகால் வாய்க் காலை அடைத்ததால் ஏரியில் தண்ணீர் நிரம்பி வடிவதற்கு வழி இல்லை. இதனால் ஊருக்குள் ஏரியின் தண்ணீர் புகும் அபாயம் ஏற்படும் என பலமுறை அந்த வடிகால் வாய்க்காலை சரிசெய்யுமாறு விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு எந்த வித நடவடிக்கையும் என்.எல்.சி. அதிகாரிகள் மூலம் எடுக்கவில்லை.

    இதனால் இன்று காலை ஏரியின் அருகே கோட்டகம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் அந்த வடிகால் வாய்காலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த தகவல் குறித்து அறிந்த என்.எல்.சி. நிர்வாகத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் நீங்கள் இதுபோன்று செய்யக்கூடாது. இத னால் எங்களுக்கு தண்ணீர் வருவதில் பிரச்சனை ஏற்படும் என்று அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயிகளிடமும், என்.எல்.சி அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக உள்ளது.

    Next Story
    ×