search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "denial of permission"

    • நாளை பிற்பகல் 1.30 மணிக்குள் புதிய உத்தரவை பிறப்பிக்க உத்தரவு.
    • சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்தால் காவல் துறை எதற்கு, அரசு எதற்கு

    அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து அவசர வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டது.

    குறிப்பிட்ட உள்ளரங்கில் கடந்த முறை நிகழ்ச்சி நடைபெற்றபோது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் அனுமதி மறுக்கப்பட்டது என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

    கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை கலந்து கொள்ளும் புத்தக வௌியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், நாளை பிற்பகல் 1.30 மணிக்குள் புதிய உத்தரவை பிறப்பிக்க கோவை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    உள்ளரங்கில் நடக்கும் நிகழ்ச்சிக்கு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்தால் காவல் துறை எதற்கு, அரசு எதற்கு ? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    • சதயவிழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்தனர்.
    • மாற்று திறனாளி மாணவனை ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்க செய்து ஆசையை நிறைவேற்றி வைத்தார்

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் நேற்று சதயவிழாவை முன்னிட்டு மாமன்னர் ராஜராஜசோழன் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி, இயக்கம், அமைப்பு, தன்னார்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அப்போது தஞ்சை அழகிக்குளம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான கல்லூரி மாணவர் ஆரவ் அமுதன் (19) மாலை அணிவிப்பதற்காக வந்தார்.

    ஆனால் அவரை சில போலீசார் தடுத்து நிறுத்தி அனுமதிக்கவில்லை.

    அனைத்து அமைப்பினரும் மாலை அணிவித்த பிறகு மாலை அணிவிக்க வேண்டும் என கூறி திருப்பி அனுப்பினர்.

    இதனால் மாணவர் ஆரவ் அமுதன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

    இந்த சம்பவம் பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதனை அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா அந்த மாற்றுத்திறனாளி வாலிபரை அழைத்து வர நடவடிக்கை எடுத்தார்.

    மேலும் இந்த தகவல் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    உடனே அவர் மாணவர் ஆரவ்அமுதனை அழைத்து வந்து உதவிக்கரங்களோடு ஏற்றி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்க செய்து ஆசையை நிறைவேற்றி வைத்தார்.

    தொடர்ந்து அவரிடம் நன்றாக படிக்க வேண்டும் என அறிவுறுத்தி ஊக்கப்படுத்தினார்.

    பதிலுக்கு மாணவரும் மேயருக்கு மனமார்ந்த நன்றி கூறினார்.

    போலீசாரும் மாணவரை பாராட்டி ஊக்கப்படுத்தி காவல்துறை உங்கள் நண்பன் என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்றப்படி செயல்பட்டனர்.

    மேயர் மற்றும் போலீசாரின் இந்த செயலை அனைவரும் பாராட்டினர்.

    • பா.ம.க. செயலாளர் ஜெயராமன் தலைமையிலான நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்ததில் ஈடுபட்டனர்.
    • திண்டிவனம் - மரக்காணம் சாலையில் மோட்டார் சைக்கிளுடன் ஒன்று திரண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பா.ம.க.வின் சாதனைகளை விளக்கி மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் நடத்த இன்று திட்டமிடப்பட்டது. இதற்கு விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் திண்டிவனம் - மரக்காணம் சாலையில் மோட்டார் சைக்கிளுடன் ஒன்று திரண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மற்றும் போலீசார், மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் நடத்த அனுமதி கிடையாது. அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். இதையடுத்து விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயராமன் தலைமையிலான நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்ததில் ஈடுபட்டனர். இருந்தபோதும் போலீசார் அனுமதி மறுத்து அனைவரையும் கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

    இதேபோல வானூர் மேற்கு ஒன்றிய பா.ம.க. சார்பில் மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் நடத்த அக்கட்சியினர் கரசானூரில் ஒன்று திரண்டனர். அங்கு வந்த வானூர் போலீசார் அனுமதி மறுத்து அனைவரையும் கலைந்து செல்ல வலியுறுத்தினர். பா.ம.க. வானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையிலான நிர்வாகிகள், எங்கள் கட்சியின் சாதனைகளை விளக்கி மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் செய்ய உள்ளோம். இதற்கு திடீரென அனுமதி மறுப்பது சரியான நடைமுறையல்ல என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பா.ம.க.வினரின் மோட்டார் சைக்கிள் பிரச்சாரத்திற்கு திண்டிவனம் மற்றும் வானூரில் போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும், 2 இடங்களிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி வழங்க கோரி போலீசாரிடம் பா.ம.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் திண்டிவனம், வானூர் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    • அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த போலீசார் அனுமதி மறுக்கப்பட்டது.
    • திருச்சுழி அருகே பதட்டம்-போலீசார் குவிக்கப்பட்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தொப்பலாக்கரை கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இறங்கி முத்தம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் நடக்கும் திருவிழாவில் பச்சை இலந்தை முள் மீது நடந்து பக்தர்கள் அருள் வாக்கு கூறுவது சிறப்பு.

    கடந்த சில ஆண்டுகளாக கோவிலில் சாமி கும்பி டுவது தொடர்பாக 2 தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. கோவில் வழிபாடு விவகாரம் தொடர்பாக இருதரப்பி னரும் அடிக்கடி மோதி கொண்டனர். இந்த நிலையில் ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு சமூகத்தினருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனை யடுத்து ஒரு தரப்பினர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர்க ளுக்கு சொந்தமான இடத்தில் முகூர்த்தகால் நடப்பட்டு காப்பு கட்டி ஏராளமானோர் விரதம் தொடங்கினர்.

    இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து கோவிலலை சுற்றி போலீசார் பாது காப்பு பணியில் நிறுத்தப் பட்டனர். நேற்று (7-ந்தேதி) கும்பாபி ஷேகம் நடத்த முடிவு செய்யப் பட்டிருந்தது. ஆனால் கடைசி ே நரத்தில் சட்டம்-ஒழுங்கு பாது காப்பை காரணம் காட்டி போலீசார் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதனால் குறிப்பிட்ட சமூகத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

    போலீசார் நடவ டிக்கைக்கு எதிர்ப்பு தெரி வித்த அவர்கள் அருகில் உள்ள விநாயகர் கோவி லுக்கு சென்று தாங்கள் கட்டியிருந்த விரத கயிறை கழட்டினர். கும்பாபி ஷேகம் நடத்த முடியாத தால் ஒரு தரப்பினர் கவலையுடன் வீட்டிற்கு சென்றனர். கடைசி நேரத்தில் போலீசார் அனுமதி மறுத்த தால் தொப்பா லக்கரை கிராமத்தில் பதட்டமான சூழல் நிலவி யது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தர வின்பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    கரூரில் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு தெரிவித்தது குறித்து போலீசாருடன் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #senthilbalaji
    கரூர்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், டி.டி. வி.தினகரன் தலைமையிலும் கட்சி இரண்டாக பிரிந்தது.

    அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றக்கோரி செந்தில்பாலாஜி உள்ளிட்ட 18 டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து சபாநாயகர் தனபால் அந்த 18 எம்.எல்.ஏ.க் களையும் தகுதி நீக்கம் செய்தார். இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் தீர்ப்பும் வழங்கப்பட உள்ளது.

    இதற்கிடையே எம்.எல்.ஏ. ஆன உடன் (பதவி பறிப்புக்கு முன்பு) அரவக்குறிச்சி தொகுதி மக்களின் கோரிக்கைகளை செந்தில்பாலாஜி சட்டமன்றத்தில் முன் வைத்தார். ஆனால் இதுநாள்வரை அந்த கோரிக்கைகள் எதையும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நிறை வேற்றவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றாத மாநில அரசை கண்டித்தும், கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்று (செவ்வாய்க்கிழமை) அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட க. பரமத்தி ஊராட்சி ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் க.பரமத்தி கடை வீதியில் செந்தில் பாலாஜி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருந்தது.

    உண்ணாவிரதத்திற்கு அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ததையடுத்து, க.பரமத்தி, அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் ஆகிய 3 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது. ஆனால் காவல் துறையினர் அனுமதி வழங்கவில்லை.

    இந்தநிலையில் கோர்ட்டு அனுமதியுடன் க.பரமத்தியில் இன்று போராட்டம் நடத்துவதற்கான பந்தல் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. அப்போது அங்கு வந்த போலீசார் பணிகள் செய்யக்கூடாது என்று ஆட்சேபம் தெரிவித்து தடுத்தனர்.

    இதையறிந்த செந்தில் பாலாஜி, தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசாரிடம் விபரத்தை கேட்டார். இதில் கரூர் ஏ.டி.எஸ்.பி. பாஸ்கரன், க.பரமத்தி இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோருக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    போலீசார் கூறும்போது, கோர்ட்டு உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கு முடிவுக்கு வந்த பிறகு அனுமதி அளிக்கப்படும் என்றனர். அப்போது எந்தவித உத்தரவாக இருந்தாலும் எழுத்துபூர்வமாக கொடுங்கள் என்று செந்தில் பாலாஜி கூறினார். அதனை ஏற்று ரூரல் டி.எஸ்.பி. முத்தமிழ்செல்வன் அளித்த கடிதத்தை இன்ஸ்பெக்டர் குணசேகரன், செந்தில் பாலாஜியிடம் அளித்தார்.

    இது தொடர்பாக செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறும் போது, தமிழக அரசும், காவல்துறையும் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி எங்கள் போராட்டத்தை அடக்க நினைக்கின்றனர். கோர்ட்டு உத்தரவினை அவமதித்த அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும். மீண்டும் கோர்ட்டு உத்தரவு பெற்று அதே இடத்தில் போராட்டம் நடத்தப்படும்.

    டி.டி.வி.தினகரன் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதுவதால் ஆளும் அ.தி.மு.க.வினர் எங்கள் கட்சியின் பொதுக்கூட்டம், போராட்டத்திற்கு தடை விதிக்கிறார்கள். மத்திய பா.ஜ.க.வின் எடுபிடியாக இருந்து கொண்டு அவர்களின் உத்தரவினை எடப்பாடி அரசு நிறைவேற்றுகிறது.

    விரைவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க் களின் தீர்ப்பு வரும் போது தமிழகத்தில் பழனிசாமி அரசு இருக்காது என்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #senthilbalaji
    ×