search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குச்சாவடி"

    • தி.மு.க.மாவட்ட செயலாளர் மகேஷ் அறிக்கை
    • 27-ந்தேதி சுசீந்திரம் பேரூர், தென்தாமரைகுளம் 28-ந்தேதி கணபதிபுரம் வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினருக்கான கூட்டம்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி கிழக்கு மாவட்டத்தில் 100 வாக்காளர்களுக்கு ஒரு முகவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குளச்சல் நகராட்சி மற்றும் 28 பேரூராட்சி வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினர்களுக்கான ஆய்வு கூட்டம் வருகிற 10-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடக்கிறது.

    10-ந்தேதி மாலை 5 மணிக்கு குளச்சல் நகரத்திற்கான கூட்டம் குளச்சல் எஸ்.பி.எம். மஹாலில் நடைபெறுகிறது.

    11-ந்தேதி மாலை 5 மணிக்கு புத்தளம் பேரூர் உட்பட்ட வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினர் கூட்டம் புத்தளம் சமுதாய நலக்கூடத்திலும், 12-ந்தேதி பூதப்பாண்டி பேரூருக்கான கூட்டம் மாலை 4 மணிக்கு திட்டவிளை சாலோம் திருமண மண்டபத்திலும், மாலை 6 மணிக்கு அழகியபாண்டியபுரம் பேரூருக்கான கூட்டம் அழகியபாண்டியபுரம் வி.ஆர்.மினி மஹாலிலும் நடக்கிறது.

    13-ந்தேதி மாலை 4 மணிக்கு அகஸ்தீஸ்வரம் பேரூர் கூட்டம் அகஸ்தீஸ்வரம் சமுதாய கூடத்திலும், மாலை 6 மணிக்கு கொட்டாரம் பேரூருக்கான கூட்டம் கொட்டாரம் என்.என்.சி.ஆர்.திருமண மண்டபத்திலும் நடக்கிறது.

    14-ந்தேதி மாலை 4 மணிக்கு ரீத்தாபுரம் பேரூர் கூட்டம் சாஜன் மஹாலிலும், மாலை 6 மணிக்கு கல்லுக்கூட்டம் பேரூருக்கான கூட்டம் ஜேக்கப்பத் பள்ளி வளாகத்திலும் நடக்கிறது.

    இதேபோல் 15-ந்தேதி நெய்யூர், திங்கள்நகர் பேரூர் முகவர் குழு உறுப்பினர் கூட்டமும், 19-ந்தேதி வில்லுக்குறி, வெள்ளிமலை பேரூர் முகவருக்கான கூட்டமும், 20-ந்தேதி மணவாளக்குறிச்சி மண்டைக்காடு வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினருக்கான கூட்டமும், 21-ந்தேதி கப்பியறை, இரணியல் வாக்குச்சாவடி முகவர் குழு கூட்டமும் நடக்கிறது.

    22-ந்தேதி வாழ்வச்சகோஷ்டம், முளகுமூடு பேரூர், 23-ந்தேதி அஞ்சுகிராமம் அழகப்பபுரம், 24-ந்தேதி தேரூர், மருங்கூர் மயிலாடி 25-ந்தேதி தாழக்குடி, ஆரல்வாய்மொழி வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினருக்கான கூட்டமும் நடக்கிறது.

    26-ந்தேதி கன்னியாகுமரி பேரூர், 27-ந்தேதி சுசீந்திரம் பேரூர், தென்தாமரைகுளம் 28-ந்தேதி கணபதிபுரம் வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினருக்கான கூட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.
    • மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் 1354 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் 346 வாக்குச்சாவடிகள், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 334 வாக்குச் சாவடிகள், சிவகங்கை தொகுதியில் 351 வாக்குச் சாவடிகள், மானாமதுரை (தனி) சட்டமன்றத் தொகுதி யில் 323 வாக்குச்சாவடிகள் ஆக மொத்தம் 1354 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    இதற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்து அங்கீக ரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டார்.

    இதைத்தொடர்ந்து, வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சிவகங்கை மற்றும் தேவகோட்டை, சிவகங்கை மாவட்ட அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வட்டாட்சியர்கள் வாக்குச்சாவடி சீரமைப்பு தொடர்பாக பரிந்து ரைகளை தெரிவித்தனர்.

    மேலும் வாக்குச்சாவடி திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் ஆட்சே பனைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்குப்பதிவு அலுவலருக்கு எழுத்துப் பூர்வமாக மனு அளிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    மறுசீரமைப்பு செய்யும் முன் வாக்குச்சாவடி மையங்களை தணிக்கை செய்து வருகிற 29-ந் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்குமாறு அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வட்டாட்சி யர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச் சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பாதேவி, வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), சோ.பால்துரை (தேவகோட்டை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 40 தொகுதியிலும் வெற்றி பெற்று வெற்றிக்கனியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைப்போம்.
    • தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.

    மண்டபம்

    ராமநாதபுரம் அருகே பேராவூரில் நடைபெற்ற தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வரவேற்று பேசியதாவது:-

    நடைபெறவுள்ள நாடா–ளுமன்ற தேர்தலில் நாற்ப–தும் நமதே, நாடும் நமதே என்ற அளவுக்கு அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி பயிற்சி பாசறை கூட்டத்தை ராமநாதபுரத்தில் நடத்த அனுமதி அளித்த முதல்-அமைச்சரும்,தி.மு.க. தலை வருமானமு.க.ஸ்டாலி னுக்கு நன்றி.

    மன்னர்கள் காலத்தில் போர் பயிற்சி நடைபெற்ற இந்த இடத்தில் முகவர்க–ளுக்கு தேர்தல் என்னும் போரிலர் வெல்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. நடைபெற உள்ள தேர்தல் போரில் தி.மு.க. வெல்வது உறுதி.

    இவ்வாறு பேசினார்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-

    தென்மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதி கள் உள்பட தமிழகம், புதுச் சேரி உள்பட 40 தொகுதி களிலும் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. அந்த வெற்றிக்கனியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினி டம் ஒப்படைப்போம் என்று உறுதியளிக்கிறேன்.

    தமிழக எம்.பி.க்களின் கொள்கை ரீதியான கருத் துக்களை எதிர்கொள்ள முடியாமல் பிரதமரும், பா.ஜனதாவினரும் தடுமாறி வருகின்றனர். இந்த தேர்தலுக்குப்பின் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதில் தி.மு.க. முக்கிய பங்கு வகிக்கும்.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் கருணாநிதி பேனா நினைவு சின்னம் வடிவிலான வெண்கல சிலையை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நினைவு பரிசாக வழங்கினர். இதில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

    • ராமநாதபுரத்தில் நாளை நடக்கும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் குறித்து காதர்பாட்சா முத்துராமலி்ங்கம் எம்.எல்.ஏ. அறிக்கை விடுத்துள்ளார்.
    • தேர்தல் பணிக்குழு தலைவர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசுகிறார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரத்திற்கு வருகிற 17-தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து தென் மண்டல அளவிலான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    இது தொடர்பாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டங்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சட்டமன்ற தொகுதி வாரியாக கீழ்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது.

    முதுகுளத்தூர் தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் காலை 10 மணிக்கு முதுகுளத்தூரில் உள்ள சர்வ விநாயக சாய் மகாலில் நடக்கிறது. பரமக்குடி தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் காலை 11 மணிக்கு பரமக்குடி ஏபிஷா மகாலில் நடக்கிறது.

    திருவாடனை தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம், மதியம் 2 மணியளவில் ஆர்.எஸ்.மங்கலம் குட்லு மகாலில் நடக்கிறது. ராமநாதபுரம் தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம், மாலை 4 மணியளவில், ராமநாதபுரம் பாரதிநகர் வைஸ்ராய் மகாலில் நடக்கிறது.

    இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் வாரியத் துறை அமைச்சர், தேர்தல் பணிக்குழு தலைவர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசுகிறார்.

    எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள். அவரவர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
    • நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்களின் தேர்தல் பணி குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் மாநகர செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், பாபு, பிராங்க்ளின், செல்வம், லிவிங்ஸ்டன், பி.எஸ்.பி.சந்திரா, சுரேந்திரகுமார், ரமேஷ் பாபு மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    01.01.2024 நாளை தகுதி ஏற்பு நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் 01.01.2024-ல் 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும், புதியதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்பொழுதுள்ள பட்டியலில் நீக்கவும் தீவிர நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

    வருகிற 17-ந்தேதி ராமநாதபுரத்தில் நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்களின் தேர்தல் பணி குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார்.

    எனவே குமரி கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய 3 சட்டமன்றத்திற்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி முகவர்களும் தவறாமல் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • சிறப்பு முகாம்கள் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
    • வாக்காளர் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி விவரங்கள் அவர்களது மொபைல் எண்ணிற்கே கிடைக்கப்பெறும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களாலும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் படிவம் 6B-இல் வாக்காளர்களின் ஆதார் எண், மொபைல் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் பெறப்பட்டு வாக்கா–ளர்களின் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது.

    இதுவரை 20,29,246 வாக்காளர்களில் 13,46,249 (66.34 சதவீதம்) வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.

    பொது மக்களின் வசதிக்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 2305 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் நாளை (ஞாயிற்று கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்திடாத பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியானது வருகிற மார்ச் 31-க்குள் நிறைவடைய உள்ளதால் பொது மக்கள் அனைவரும் இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறப்பு முகாம் நடைபெறாத நாட்களில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தேர்தல் துணை வட்டாட்சியர்களிடமோ அல்லது தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்களிடமோ தங்களது ஆதார் எண், மொபைல் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்களை படிவம் 6B-இல் பூர்த்தி செய்து வழங்கிடலாம்.

    வாக்காளர்கள் தங்களது ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதன் மூலம் வாக்காளர் தங்களது வாக்காளர் அடையாள அட்டையினை e- EPIC ஆக தங்களது மொபைலிலேயே டவுன்லோடு செய்திடலாம் . தேர்தல் நடைபெறும் சமயம் வாக்காளர் வாக்கு அளிக்க வேண்டிய வாக்குச்சாவடி விவரங்களும் அவர்களது மொபைல் எண்ணிற்கே கிடைக்கப்பெறும்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாமல் உள்ளவர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் எண் 6-ஐ பூர்த்தி செய்தும், இறப்பு, நிரந்தரமான குடிபெயர்வு, இரட்டை பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும் மற்றும் அனைத்து வகையான பிழை திருத்தங்கள் மேற்கொள்ள, தொகுதி மாற்றம் செய்ய, பெயர், உறவு முறை, புகைப்படம் மாற்றம் செய்ய படிவம் 8-ஐ பூர்த்தி செய்து வழங்கலாம். மேற்கூறியவாறு அனைத்து வகையான விண்ணப்பங்களையும் Voters Helpline மொபைல் ஆப் மூலமாகவும் NVSP Portal மூலமாகவும் வருடம் முழுவதும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
    • வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு இடைத்தேர்தல் நாளை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்குவதையொட்டி முழு வீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் உள்ளிட்ட உபகரணங்களை அனுப்பும் பணியை மும்முரமாக ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறனர். இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பதற்றமான 32 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    • தஞ்சை மாவட்டத்தில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
    • தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடி விவரங்களும் செல்போன் எண்ணிற்கே கிடைக்கும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் படி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர் களாலும் தாசில்தார் அலுவலகங்களிலும் படிவம் 6பி-ல் வாக்காளர்களின் ஆதார் எண், செல்போன் நம்பர், வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் பெறப்பட்டு வாக்காளர்களின் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது.

    இதுவரை 20 லட்சத்து 37 ஆயிரத்து 651 வாக்காளர்களில் 13 லட்சத்து 5 ஆயிரத்து 947 வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.

    பொதுமக்கள் வசதிக்காக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 2305 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதே போல் அடுத்த மாதம் 5-ந் தேதியும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.

    மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது அடுத்த மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைய உள்ளதால் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    சிறப்பு முகாம்கள் நடைபெறாத நாட்களில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் உள்ள தேர்தல் துணை தாசில்தார்களிடமோ அல்லது தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்களிடமோ வாக்காளர்கள் தங்களது ஆதார் எண், செல்போன் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்களை படிவம் 6பி-ல் பூர்த்தி செய்து வழங்கலாம்.

    இவற்றின் மூலம் தங்களை செல்போன் வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியும். தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடி விவரங்களும் செல்போன் எண்ணிற்கே கிடைக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாட வேண்டும்.
    • வாக்குச்சாவடி முகவர் பட்டியல் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. மாநகர ஒன்றிய, பேரூர், பகுதி செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் இறைவன் தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகர் எம்.எல்.ஏ, எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் டிசம்பர் 19 பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடுவது, வாக்குச் சாவடி முகவர் பட்டியல் வழங்க வேண்டியது மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், து.செல்வம், மாவட்ட பொருளாளர் எல். ஜி. அண்ணா, மாவட்ட துணைச் செயலாளர்கள் மணிமாறன், புண்ணிய மூர்த்தி, கனகவள்ளி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மதுைர தெற்கு மாவட்ட தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடல் கூட்டம், மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட அவைத்தலை வர் நாகராஜன், துணை செயலாளர் லதாஅதியமான், ஒன்றிய செயலாளர்கள் திருமங்கலம் தனபாண்டி, கள்ளிக்குடி ராமமூர்த்தி, டி.கல்லுப்பட்டி நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்து ராமலிங்கம், நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், பேரூர் செயலாளர்கள் பாஸ்கர், முத்துகணேஷ் பொதுக்குழு உறுப்பினர்கள் சிவமுருகன், ஆதிமூலம், மாவட்ட கவுன்சிலர் ஜெயராஜ், ஒன்றிய அவைத்தலைவர் கப்பலூர் சந்திரன், நகர அவைத்தலைவர் அப்துல்கலாம் ஆசாத், துணை செயலாளர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை மாவட்டத்தில் உள்ள 3723 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகின்றன.
    • வாக்காளர் அட்டையில் உள்ள திருத்தங்கள், முகவரி மாற்றம் போன்றவற்றையும் இம்முகாம்கள் மூலம் செய்து சரி செய்து கொள்ளலாம்.

    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

    மொத்த வாக்காளர்கள் 38 லட்சத்து 92 ஆயிரத்து 457 பேர் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து அனைத்து மண்டல அலுவலகங்கள், வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்கள் பெயரினை சேர்க்க சிறப்பு முகாம் இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) நடைபெறுகிறது.

    புதிதாக பெயரை சேர்க்க படிவம் எண்.6, பெயரை நீக்கம் செய்ய படிவம் 7, சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே இடமாற்றம் செய்யவும் வேறு தொகுதிக்கு மாறியவர்கள் திருத்தம் செய்யவும் படிவம் எண்.8-ஐ பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும்.

    அதற்கான ஆவண நகலை இணைத்து வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அலுவலர்களிடம் வழங்க வேண்டும்.

    சென்னை மாவட்டத்தில் உள்ள 3723 வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகின்றன. வாக்காளர் அட்டையில் உள்ள திருத்தங்கள், முகவரி மாற்றம் போன்றவற்றையும் இம்முகாம்கள் மூலம் செய்து சரி செய்து கொள்ளலாம்.

    இதனையடுத்து 26 மற்றும் 27ந்தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. மேலும் பொதுமக்கள் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்களை சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    • ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து வார்டு வாக்குச்சாவடிகளிலும் பி.எல்.ஏ நியமிப்பது.
    • ஒன்றிய பகுதிகளில் உயிர் நீத்த முன்னோடிகளுக்கு இரங்கல் தீர்மானம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மத்திய மாவட்டம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் மேலவெளியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய அவைத் தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார்.

    தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் புண்ணியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா, மாவட்ட ஒன்றிய குழு தலைவர் வைஜெயந்திமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில், தி.மு.க. தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பது, தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பது, தஞ்சை வடக்கு ஒன்றிய தி.மு.க புதிய நிர்வாகிகளை தேர்வு செய்த கழக செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் முன்னோடிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    நவம்பர் மாதம் 27-ம் தேதி தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒன்றியம் மற்றும் கிளை கழகங்களால் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள் மற்றும் கிளை கழகங்களில் உள்ள வாக்கு சாவடிகளில் வாக்குசாவடி முகவர்களை நியமிப்பது, ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து வார்டு வாக்கு சாவடிகளிலும் பி.எல்.ஏ நியமிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முன்னதாக ஒன்றிய பகுதிகளில் உயிர் நீர்த்த முன்னோடிகளுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது .

    இதில் ஒன்றிய குழு நிர்வாகிகள் ரவிச்சந்திரன், மல்லிகா உத்திராபதி, ராமநாதன், பால துரையரசன், கோவி. ராஜேந்திரன், சதீஷ்குமார், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் மோகன், ஸ்டாலின் ராஜன், செல்வ கலைமணி, ஒன்றிய பிரதிநிதி ஆற்காடு புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஒன்றிய துணை செயலாளர் ஒன்றிய குழு உறுப்பினர் கர்ணன் நன்றி கூறினார்.

    ×