search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகவர் குழு"

    • தி.மு.க.மாவட்ட செயலாளர் மகேஷ் அறிக்கை
    • 27-ந்தேதி சுசீந்திரம் பேரூர், தென்தாமரைகுளம் 28-ந்தேதி கணபதிபுரம் வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினருக்கான கூட்டம்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி கிழக்கு மாவட்டத்தில் 100 வாக்காளர்களுக்கு ஒரு முகவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குளச்சல் நகராட்சி மற்றும் 28 பேரூராட்சி வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினர்களுக்கான ஆய்வு கூட்டம் வருகிற 10-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடக்கிறது.

    10-ந்தேதி மாலை 5 மணிக்கு குளச்சல் நகரத்திற்கான கூட்டம் குளச்சல் எஸ்.பி.எம். மஹாலில் நடைபெறுகிறது.

    11-ந்தேதி மாலை 5 மணிக்கு புத்தளம் பேரூர் உட்பட்ட வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினர் கூட்டம் புத்தளம் சமுதாய நலக்கூடத்திலும், 12-ந்தேதி பூதப்பாண்டி பேரூருக்கான கூட்டம் மாலை 4 மணிக்கு திட்டவிளை சாலோம் திருமண மண்டபத்திலும், மாலை 6 மணிக்கு அழகியபாண்டியபுரம் பேரூருக்கான கூட்டம் அழகியபாண்டியபுரம் வி.ஆர்.மினி மஹாலிலும் நடக்கிறது.

    13-ந்தேதி மாலை 4 மணிக்கு அகஸ்தீஸ்வரம் பேரூர் கூட்டம் அகஸ்தீஸ்வரம் சமுதாய கூடத்திலும், மாலை 6 மணிக்கு கொட்டாரம் பேரூருக்கான கூட்டம் கொட்டாரம் என்.என்.சி.ஆர்.திருமண மண்டபத்திலும் நடக்கிறது.

    14-ந்தேதி மாலை 4 மணிக்கு ரீத்தாபுரம் பேரூர் கூட்டம் சாஜன் மஹாலிலும், மாலை 6 மணிக்கு கல்லுக்கூட்டம் பேரூருக்கான கூட்டம் ஜேக்கப்பத் பள்ளி வளாகத்திலும் நடக்கிறது.

    இதேபோல் 15-ந்தேதி நெய்யூர், திங்கள்நகர் பேரூர் முகவர் குழு உறுப்பினர் கூட்டமும், 19-ந்தேதி வில்லுக்குறி, வெள்ளிமலை பேரூர் முகவருக்கான கூட்டமும், 20-ந்தேதி மணவாளக்குறிச்சி மண்டைக்காடு வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினருக்கான கூட்டமும், 21-ந்தேதி கப்பியறை, இரணியல் வாக்குச்சாவடி முகவர் குழு கூட்டமும் நடக்கிறது.

    22-ந்தேதி வாழ்வச்சகோஷ்டம், முளகுமூடு பேரூர், 23-ந்தேதி அஞ்சுகிராமம் அழகப்பபுரம், 24-ந்தேதி தேரூர், மருங்கூர் மயிலாடி 25-ந்தேதி தாழக்குடி, ஆரல்வாய்மொழி வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினருக்கான கூட்டமும் நடக்கிறது.

    26-ந்தேதி கன்னியாகுமரி பேரூர், 27-ந்தேதி சுசீந்திரம் பேரூர், தென்தாமரைகுளம் 28-ந்தேதி கணபதிபுரம் வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினருக்கான கூட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×