search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகவர்கள் கூட்டம்"

    • வருகிற 24-ந் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே படியூர் தொட்டிப்பாளையத்தில் நடக்கிறது.
    • 40 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    காங்கயம்:

    தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம் வருகிற 24-ந் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே படியூர் தொட்டிப்பாளையத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் 50 சட்டமன்றத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பங்கேற்கிறார்கள். திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் உள்பட 7 வருவாய் மாவட்டத்தில் உள்ள கட்சியின் 14 மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இதற்காக 40 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் மேடை அமைப்பு, இருக்கை வசதி, பந்தல் அமைப்பது, கூட்டத்துக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சர் முத்துசாமி தொட்டிப்பாளையத்தில் உள்ள கூட்டம் நடக்கும் மைதானத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது திருப்பூர் வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சியின் 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன், அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், நிர்வாகி திலகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • மாவட்ட செயலாளர் மகேஷ் பங்கேற்பு
    • ஆய்வு கூட்டத்திற்கு வராதவர்களை மாற்றி கழகத்திற்கு பாடுபடுபவர்களை போட வேண்டும்

    குளச்சல் :

    குளச்சல் நகர தி.மு.க.வாக்குச்சாவடி பாகமுகவர் குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை குளச்சலில் நடந்தது. நகர செயலாளர் நாகூர் கான் தலைமை வகித்தார். குளச்சல் நகர் மன்ற தலைவர் நசீர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தி.மு.க. மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    குளச்சலில் முதலில் பாக முகவர் ஆய்வை தொடங்கி இருக்கிறோம். ஆய்வு கூட்டத்திற்கு வராதவர்களை மாற்றி கழகத்திற்கு பாடுபடுபவர்களை போட வேண்டும். இந்தியா கூட்டணியை பார்த்து ஒன்றிய அரசு பயப்படுகிறது. எதையும் செய்ய பாரதிய ஜனதா அரசு தயாராக உள்ளது. இந்தியா கூட்டணிக்கு வலு சேர்ந்து கொண்டு இருப்பதை பார்த்து நாட்டின் பெயரை மாற்ற துடிக்கிறார்கள். இந்தியாவை எல்லா விதத்திலேயும் வளர்ச்சியில் மாற்றி காட்டுவேன் என கூறிய பிரதமர் பெயரை மாற்றிவிட்டார். 39 எம்.பி.க்களைக் கொண்டு இந்தியாவில் 3-வது கட்சியாக தி.மு.க உள்ளது. அந்தக் கட்சிக்கு கவர்னர் பல இன்னல்களை தந்து கொண்டு இருக்கிறார். நீங்கள் புரிந்து கொண்டு கழக பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆய்வுக் கூட்டத்தில் குளச்சல் நகர் மன்ற துணைத் தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், கவுன்சிலர்கள், மாவட்ட மீனவரணி தலைவர் ஆன்றனிராஜ், ராஜாக்கமங்கலம் ஒன்றிய துணைத் தலைவர் சரவணன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கடத்தூரில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் தி.மு.க வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் தலைமை தாங்கினார்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே கடத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் தலைமை தாங்கினார். தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் கலந்து கொண்டு வாக்கு சாவடி முகவர்களின் பணிகள் குறித்து பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் மனோகரன், மாவட்ட வக்கில்கள் பிரிவு தலைவர் முனிராஜ், நகர செயலாளர் மோகன், பேரூராட்சி தலைவர் கேஸ்.மணி, அவை தலைவர் ராஜா, முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் செந்தில்குமார், மாரிமுத்து. நடராஜன், தங்கராஜ், கவுன்சிலர்கள் கார்த்தி, சரவணன், ராமகிருஷ்ணன், மாரியப்பன், கண்ணன், மதன் பாலாஜி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 40 தொகுதியிலும் வெற்றி பெற்று வெற்றிக்கனியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைப்போம்.
    • தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.

    மண்டபம்

    ராமநாதபுரம் அருகே பேராவூரில் நடைபெற்ற தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வரவேற்று பேசியதாவது:-

    நடைபெறவுள்ள நாடா–ளுமன்ற தேர்தலில் நாற்ப–தும் நமதே, நாடும் நமதே என்ற அளவுக்கு அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி பயிற்சி பாசறை கூட்டத்தை ராமநாதபுரத்தில் நடத்த அனுமதி அளித்த முதல்-அமைச்சரும்,தி.மு.க. தலை வருமானமு.க.ஸ்டாலி னுக்கு நன்றி.

    மன்னர்கள் காலத்தில் போர் பயிற்சி நடைபெற்ற இந்த இடத்தில் முகவர்க–ளுக்கு தேர்தல் என்னும் போரிலர் வெல்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. நடைபெற உள்ள தேர்தல் போரில் தி.மு.க. வெல்வது உறுதி.

    இவ்வாறு பேசினார்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-

    தென்மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதி கள் உள்பட தமிழகம், புதுச் சேரி உள்பட 40 தொகுதி களிலும் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. அந்த வெற்றிக்கனியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினி டம் ஒப்படைப்போம் என்று உறுதியளிக்கிறேன்.

    தமிழக எம்.பி.க்களின் கொள்கை ரீதியான கருத் துக்களை எதிர்கொள்ள முடியாமல் பிரதமரும், பா.ஜனதாவினரும் தடுமாறி வருகின்றனர். இந்த தேர்தலுக்குப்பின் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதில் தி.மு.க. முக்கிய பங்கு வகிக்கும்.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் கருணாநிதி பேனா நினைவு சின்னம் வடிவிலான வெண்கல சிலையை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நினைவு பரிசாக வழங்கினர். இதில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

    • தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.
    • அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்றார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் சோழ வந்தான் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தொகுதி மேலிட பார்வையாளர் சம்பத், வடக்கு மாவட்ட அவை தலைவர் பாலசுப்பி ரமணியன், ஒன்றிய செயலா ளர்கள் தன்ராஜ், பரந்தா மன், பாலராஜேந்திரன், பசும்பொன்மாறன், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்தையன், சோமசுந்தர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் மூர்த்தி, கலந்து கொண்டு முகவர்கள் முன்னிலையில் பேசியதா வது:-

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேனி பாராளு மன்ற தொகுதியில் தி.மு.க. அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும். வருகின்ற 17-ந் தேதி ராமநாதபுரம் வருகை தரும் முதல்-அமைச்சரை வரவேற்க தொண்டர்கள் அனைவரும் அணி திரண்டு பங்கேற்க வேண்டும். பூத் கமிட்டியில் உள்ளவர்கள் கடமை உணர்வோடு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில் நகர் செய லாளர்கள் மனோகரவேல் பாண்டியன், ரகுபதி, பேரூ ராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி, பால்பாண்டியன், ஜெ யராமன், துணை தலை வர்கள் சுவாமிநாதன், கார்த்திக், மாவட்ட தொண்ட ரணி துணை அமைப்பாளர் வாவிடமருதூர் கார்த்தி கேயன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரதாப், இளைஞரணி அமைப்பாளர்கள் சந்தன கருப்பு, தனிச்சியம் மருது, மாணவரணி அமைப்பாளர் யோகேஷ், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் தவசதீஸ், பொறியாளர் அணி ராகுல் மற்றும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • பணியாற்றுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மேற்கு மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க.வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்களிடம் தங்களது வாக்காளர் பட்டியலில் இறப்பு சேர்த்தல், நீக்கல் குறித்து பல்வேறு விவரங்களை தெளிவாக எடுத்துக் கூறினார்.

    மேலும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தலில் எப்படி பணியாற்றுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் மனோகரன், மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார், மணி மாநில செயற்குழு உறுப்பினர் பி.சி.ஆர்.மனோகரன், ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால், முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு சூடுபட்டி சுப்பிரமணியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் குமரவேல், ஒன்றிய அவைத் தலைவர் மாணிக்கம், துணை செயலாளர் சண்முகம், சித்ரா வடிவேல், மாவட்ட பிரதிநிதி சங்கர் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி முகவர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
    • தி.மு.க. பாக நிலை முகவர்கள் காணொளி கூட்டம் ஊட்டி ஒய்.டபிள்யு.சி.ஏ., ஆனந்தகிரி கூட்ட அரங்கில் நடந்தது.

    ஊட்டி,

    தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு இணங்க ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. பாக நிலை முகவர்கள் காணொளி கூட்டம் ஊட்டி ஒய்.டபிள்யு.சி.ஏ., ஆனந்தகிரி கூட்ட அரங்கில் நடந்தது.

    கூட்டத்தில் நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் கலந்துகொண்டார். இதில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், ஊட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காமராஜ், ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், பொதுக்குழு உறுப்பினர்கள் பில்லன், சதகத்துல்லா, மோகன்குமார், பேரூர் செயலாளர்கள் பிரகாஷ், நடராஜ், சதீஷ்குமார், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.*

    குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க பாக நிலை முகவர்கள் காணொளி கூட்டம் குன்னூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். இதில் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர்கான், மாவட்ட அவைத் தலைவர் போஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், லட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் பிரேம்குமார், நெல்லைக்க ண்ணன், பீமன், லாரன்ஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எம். ராஜு, பொதுக்குழு உறுப்பினர் காளிதாஸ், குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×