கடத்தூரில் தி.மு.க வாக்குசாவடி முகவர்கள் கூட்டம்

கடத்தூரில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் தி.மு.க வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் தலைமை தாங்கினார்.
கடத்தூரில் தி.மு.க வாக்குசாவடி முகவர்கள் கூட்டம்
Published on

கடத்தூர்,

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே கடத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடை பெற்றது.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் தலைமை தாங்கினார். தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் கலந்து கொண்டு வாக்கு சாவடி முகவர்களின் பணிகள் குறித்து பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் மனோகரன், மாவட்ட வக்கில்கள் பிரிவு தலைவர் முனிராஜ், நகர செயலாளர் மோகன், பேரூராட்சி தலைவர் கேஸ்.மணி, அவை தலைவர் ராஜா, முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் செந்தில்குமார், மாரிமுத்து. நடராஜன், தங்கராஜ், கவுன்சிலர்கள் கார்த்தி, சரவணன், ராமகிருஷ்ணன், மாரியப்பன், கண்ணன், மதன் பாலாஜி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com