search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர் பட்டியல்"

    • வருகிற 18-ந் தேதி, 19-ந் தேதிகளில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • திருப்பூர் தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி ஆணையாளரும், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு உடுமலை ஆர்.டி.ஓ.வும் வாக்காளர் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 27-ந் தேதி வெளியிடப்பட்டது. இன்று (சனிக்கிழமை) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம் தொடங்கியது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 18-ந் தேதி, 19-ந் தேதிகளில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி ஜூலை மாதம் 1-ந் தேதி, அக்டோபர் மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6-ஐ பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம். மேற்படி முன்னதாக வரப்பெற்ற படிவங்கள் சேர்க்கப்பட்டு அவை அந்தந்த காலாண்டின் தொடக்கத்தில் அதாவது ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாத வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

    சிறப்பு முகாம் நடக்கும் நாளன்று வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பாக படிவம் 8-ஐ விண்ணப்பிக்கலாம். பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் படிவம் 7-ஐ விண்ணப்பிக்க வேண்டும்.

    இதுதவிர https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline App என்ற செயல்போன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0421 2971110, கட்டணமில்லா தொலைபேசி 1950 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

    தாராபுரம், காங்கயம், அவினாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அந்தந்த தாசில்தார்கள் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களாகவும், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி உதவி ஆணையாளர், உதவி வாக்காளர் பதிவு அலுவலராகவும் உள்ளனர். இதுதவிர தாராபுரம், காங்கயம் தொகுதிக்கு தாராபுரம் ஆர்.டி.ஓ., அவினாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம் தொகுதிக்கு திருப்பூர் சப்-கலெக்டர், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி ஆணையாளரும், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு உடுமலை ஆர்.டி.ஓ.வும் வாக்காளர் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அக்டோபர் 2-ந்தேதி நிலவரப்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி 15 ஆயிரத்து 187 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
    • பட்டியலில் பெயர் இல்லாத பட்சத்தில், பெயரை சேர்ப்பதற்காக படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அளிக்கலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக வரைவுப் பட்டியல் கடந்த 27-ந் தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினத்திலிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றன.

    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், வாக்குச்சாவடி அலுவலர்களிடமும், தேர்தல் துறையின் இணைய தளத்தின் வாயிலாகவும் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அக்டோபர் 2-ந்தேதி நிலவரப்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி 15 ஆயிரத்து 187 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

    வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கம் செய்வதற்காக 1,914 படிவங்களும், ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்ளேயே முகவரியை மாற்றுவதற்காக 19 ஆயிரத்து 36 படிவங்களும் அளிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 36 ஆயிரத்து 142 விண்ணப்பங்கள் பொதுமக்களால் வழங்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங்களை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களிடமும், தேர்தல் துறையின் இணைய தளம் மூலமும் விண்ணப்பங்களை அளித்தாலும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    அந்த வகையில், தமிழ்நாட்டில் 31 அமைவிடங்களில் உள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடிகளுக்குச்சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை சரிபார்த்து வருகிறார்கள்.

    பெயர்கள் விடுபட்ட வாக்காளர்கள் உரிய விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.

    பட்டியலில் பெயர் இல்லாத பட்சத்தில், பெயரை சேர்ப்பதற்காக படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அளிக்கலாம். இதற்கான படிவங்கள் சிறப்பு முகாம்களிலேயே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    • தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் நாளை முதல் 2 நடக்கிறது.
    • 1.1.2024 தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தமிழ் நாடு தேர்தல் ஆணையம் சமீபத்தில் வரைவு வாக்களார் பட்டியலை வெளியிட்டது. அதில் விடுபட்ட மற்றும் 17 வயது முடிந்து 18 வயதில் உள்ளவர்கள் தங்கள் பெயரை சேர்த்து கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டருமான சாந்தி தெரிவித்துள்ளதாவது;- 1.1.2024 தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள்மற்றும் 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், மற்றும் 17 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் வாக்காளர்ப ட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளும் வகையில் நாளை 4ந்தேதி மற்றும் நாளை மறுதினம் 5ந்தேதி மற்றும் 18.11.2023 மற்றும் 19.11.2023 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) தேதிகளில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங் களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

     இந்த முகாம்களில், தகுதி யான நபர்கள் அனை வரும் அருகில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு சென்று, தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6வழங்கபட உள்ளது. ஏற்கனவே வாக்காளராக பதிவு செய்துள்ளவர்கள் முகவரி மாற்றம், பெயர்திருத்தம் அல்லது வேறு தொகுதிக்கு மாற்றச்செய்ய விரும்பினால், அதற்கு படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்திட படிவம் 6B-யை பூர்த்தி செய்தும், வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் அந்தந்த வாக்குச் சாவடிகளில் வழங்கலாம். 

    மேலும், பொதுமக்கள் மேற்கண்ட வசதிகளை தங்கள் வீடுகளிலிருந்தே பெற www.nvsp.in என்ற இணையதள முகவரியில் Apply Online/Correction of entries என்ற Link மூலமும் விண்ணப்பிக்கலாம்.  மேலும், செல்போனில் Voters Helpline App என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.  இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு,கூடுதல் விவரங்கள் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் செய்து கொள்ளலாம்.
    • முகாம் நாளை நடைபெறுவது போல் 5, 18, 19 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

    சென்னை:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியை தகுதி பெறும் தேதியாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.

    இதற்கான வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி கடந்த அக்டோபர் 27-ந் தேதி துவங்கப்பட்டது. இந்த பணி டிசம்பர் 9-ந் தேதி வரை நடக்க உள்ளது.

    வரும் 2024-ம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் முதல் தேதியில் 18 வயது பூர்த்தியாக உள்ளவர்களும், இதற்கு விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் பெயர் நீக்கமும் செய்து கொள்ளலாம்.

    இதற்கான சிறப்பு முகாம் தமிழ்நாடு முழுவதும் நாளை (4-ந் தேதி) அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.

    வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, திருத்தங்களை மேற்கொள்ள voter helpline app nvsp.in மற்றும் voters.eci.gov.in ஆகிய இணைய சேவைகளின் மூலம் தகுந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    இந்த முகாம் நாளை நடைபெறுவது போல் 5, 18, 19 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்கும் விண்ணப்பங்களை பரிசீலனைக்கு பிறகு பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் பணிகள் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் டிச.9 வரை நடைபெறும். இதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் 2024 ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்படும்.

    • திருப்பூா் தெற்கு தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குணசேகரன், மாநகா் மாவட்ட அவைத்தலைவா் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
    • திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை தொகுதி பூத் முகவா்கள் மற்றும் வாக்காளா் பட்டியல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் குமாா் நகரில் நடைபெற்றது.

     திருப்பூா்:

    திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை தொகுதி பூத் முகவா்கள் மற்றும் வாக்காளா் பட்டியல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் குமாா் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். திருப்பூா் தெற்கு தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குணசேகரன், மாநகா் மாவட்ட அவைத்தலைவா் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கிணத்துக்கடவு சட்டப் பேரவை உறுப்பினரும், திருப்பூா் மாநகா் மாவட்ட பூத் கமிட்டிபொறுப்பாளருமான செ.தாமோதரன் பேசியதாவது:-

    பாஜக., கூட்டணியில் இருந்து விலகியுள்ளதால் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில் திமுக., வேண்டும் என்றே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறது. தோ்தலில் நாம் சரியான முடிவைத்தான் எடுத்துள்ளோம்.

    தற்போது வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதால், கட்சி நிா்வாகிகள் வீடுவீடாகச் சென்று வாக்காளா் பட்டியலை சரிபாா்க்க வேண்டும். மேலும், புதிய வாக்காளா்களை சோ்க்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.

    இதைத் தொடா்ந்து, சட்டப் பேரவை முன்னாள் துணைத் தலைவரும், மாநகா் மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசுகையில், வாக்காளா் சோ்ப்பு முகாம் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக., நிா்வாகிகள் இந்த முகாமில் பங்கேற்க வேண்டும். லஞ்சம், ஊழலில் தலைசிறந்த மாநகராட்சியாக திருப்பூா் உள்ளது என்றாா்.

    • அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை
    • நவம்பர் மாதம் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது

    வேங்கிக்கால்:

    பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அக்டோபர் 27-ந் தேதி தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. வருகிற 27-ந் தேதி முதல் டிசம்பர் 9-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும், நீக்கவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இதற்காக நவம்பர் மாதம் 4,5,18,19 ஆகிய 4 நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    இந்த முகாம்களை பயன்படுத்தி விடுபட்ட வாக்காளர் பெயர்களை சேர்த்தல், 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி 18 வயது நிரம்பக் கூடிய புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க உரிய படிவங்களை பெற்று பூர்த்தி செய்து சிறப்பு முகாம்களில் கொடுக்க வேண்டும்.

    17 வயது நிரம்பியவர்களும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 18 வயது நிரம்பும் போது வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்தி புதிய வாக்காளர்களை சேர்த்தல், இறந்த வாக்காளர்களை நீக்குதல், இடம் பெயர்ந்து தொகுதிக்குள் வந்துள்ள வாக்காளர்களை சேர்த்தல், இடம் பெயர்ந்து வெளியில் சென்றுள்ளவர்களை பட்டியலில் இருந்து நீக்குதல் உள்ளிட்ட பணிகளில் தி.மு.க. நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு ஜவுளிகள் ஆணையர் வள்ளலார்.
    • தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் சரவணவேல்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 27-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தற்போது 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் தொடங்கின. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளை கண்காணிப்பதற்காக மாவட்ட அளவில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி கமிஷனர் மைதிலி ராஜேந்திரன்; காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு சிறு தொழில்கள் கழக மேலாண்மை இயக்குனர் மதுமதி; விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு ஜவுளிகள் ஆணையர் வள்ளலார்;

    கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களுக்கு தமிழ்நாடு மீன்வளத்துறை ஆணையர் பழனிசாமி; அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களுக்கு நில சீர்திருத்த ஆணையர் வெங்கடாசலம்; தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு வேளாண்மை ஆணையர் சுப்பிரணியன்;

    கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலேண்மை இயக்குனர் சங்கர்; திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகவ ராவ்;

    மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையர் சுந்தரவல்லி; தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் சரவணவேல்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 10 பேரையும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் 1½ மணி நேரம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை அழைத்து ஆய்வு செய்வது, அதற்கு தேவையான அறிவுரைகளை வழங்குவது, இதற்காக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு 3 முறை பயணிப்பது ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை சத்யபிரதா சாகு வழங்கினார்.

    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்யும் வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • துல்லியமான வாக்காளர் பட்டியல் அவசியம் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வாக்காளர் பட்டியலில் துல்லியத்தன்மை கொண்டு வரும் முயற்சியாக புதிய வாக்காளர்களுக்கு, ஓட்டளிக்கும் உரிமையை வழங்க தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது. அதற்கேற்ப வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்யும் வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    பூத் ஏஜென்ட்கள் வாயிலாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மேற்கொள்ள கட்சித்தலைமை அறிவுறுத்தியுள்ளது. வார்டு வாரியாக கட்சியை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் துல்லியமான வாக்காளர் பட்டியல் அவசியம் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து பா.ஜ.க.வினர் கூறுகையில், வரைவு வாக்காளர் பட்டியலில், இறந்தவர்கள் பெயர், இரட்டைப்பதிவு அதிக அளவில் உள்ளது. வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். முந்தைய காலங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபடுவர். தற்போது அத்தகைய பணிகள் நடப்பதில்லை என்றனர்.

    தி.மு.க.வினர் கூறுகையில், பூத் ஏஜென்டுகள் வாயிலாக, புதிய வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, கட்சித்தலைமை அறிவுறுத்தியுள்ளது. இறந்தவர், இரட்டை பதிவு உள்ளோர் விவரங்களை சேகரித்து அவற்றை நீக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினாலும், அவர்கள் அந்த பணியை செய்வதில்லை. இறந்தவர் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களது குடும்பத்தினரிடமும் இல்லை என்றனர்.

    அ.தி.மு.க.வினர் கூறுகையில், வார்டு வாரியாக உள்ள பூத் ஏஜென்ட்களிடம் வரைவு வாக்காளர் பட்டியல் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அவற்றை சரிபார்க்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இறப்பு மற்றும் இரட்டை பதிவுகள் அதிகம் உள்ளன. அவை சரிசெய்யப்பட வேண்டும் என்றனர்.

    • பூம்புகார் தொகுதியில் ஆண் வாக்காளர்130679, பெண் வாக்காளர் 133727 உள்ளனர்.
    • இந்த வாக்காளர் பட்டியல் அங்கிகரிக்கப்பட்ட அனைத்துக்கட்டி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் அர்ச்சனா வெளியிட்டார்.

    சீர்காழி சட்டமன்ற தொகுதியில் (தனி) ஆண் வாக்காளர்கள் 120559, பெண் வாக்காளர்கள் 122424, திருநங்கைகள் 8 என மொத்தம் 242991, பூம்புகார் தொகுதியில் ஆண் வாக்காளர்130679, பெண் வாக்காளர் 133727, திருநங்கை 3 என மொத்தம் 264409 பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த வாக்காளர் பட்டியலை அங்கிகரிக்கப்பட்ட அனை த்துக்கட்டி பிரதிநிதிகள் முன்னிலையில் கோட்டாட்சியர் அர்ச்சனா வெளியிட்டார்.

    அப்போது தேர்தல் துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன்,ம ண்டல துணை வட்டாட்சியர் பாபு, அ.தி.மு.க சார்பில் சுரேஷ்குமார், வக்கீல் தியாகராஜன், தி.மு.க சார்பில் ஒன்றிய செயலாளர் பஞ்சு.குமார், நெடுஞ்செ ழியன், சரவணன், காங்கிரஸ் கட்சி சார்பில் மோராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விஜயரெங்கன் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

    • 21 வயது நிரம்பிய இளைஞர்களுக்கு உதவும் வகையில் அனைத்து கல்லூரிகளிலும் விழிப்புணர்வு மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
    • வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க மாநகராட்சி பகுதி முழுவதும் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 38.68 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    இந்த வாக்காளர் பட்டியலில் 41,067 இளம் வாக்காளர்கள் புதிதாக தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். 21 வயது நிரம்பிய முதல் முறையாக வாக்களிக்கும் தகுதியை பெற்று உள்ள 18 முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 1.13 லட்சம் பேர் இருப்பதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவித்து இருக்கிறது.

    ஆனால் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களோ குறைவாக உள்ளனர். முதல்முறையாக வாக்களிக்கக்கூடிய இளைஞர்கள் பலர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவில்லை என தெரிய வருகிறது. முதல் முறை வாக்காளர்கள் பெயரை பதிவு செய்ய ஆர்வம் காட்டாமல் இருப்பதால் அவர்களை அடையாளம் கண்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

    21 வயது நிரம்பிய இளைஞர்களுக்கு உதவும் வகையில் அனைத்து கல்லூரிகளிலும் விழிப்புணர்வு மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 16 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள தகுதி உள்ளவர்கள் கட்டாயம் பெயர்களை வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

    வாக்களிப்பது ஜனநாயக கடமை. கடமையை செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும் என ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

    2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால் முதன்முறை வாக்காளர்களின் எண்ணிக்கையில் சரிவுக்கான காரணங்களை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த விடுபட்ட வாக்காளர்களை கண்டுபிடிப்பது சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சவாலாக உள்ளது.

    வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க மாநகராட்சி பகுதி முழுவதும் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளது.

    நவம்பர் 4, 5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க படிவம் 6, படிவம் 6ஏ, படிவம் 7 அல்லது படிவம் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

    இன்று முதல் டிசம்பர் 9-ந் தேதி வரை எந்த நேரத்திலும் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் படிவங்கள் கிடைக்கும் என்று மாநகராட்சி கூடுதல் ஆணையர் லலிதா தெரிவித்தார்.

    • கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்மேகம் தலைமையில் அரசியல் கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் முன்னிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • விண்ணப்பிக்க ஏதுவாக 4.11.2023, 5.11.2023 மற்றும் 18.11.2023, 19.11.2023 ஆகிய சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று க்கிழமை களில் அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும்.

    சேலம்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்மேகம் தலைமையில் அரசியல் கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் முன்னிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இந்த பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    1.01.2024- ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி 27.10.2023 முதல் 9.12.2023 வரை நடைபெறவுள்ளது.

    இது குறித்து கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

    தற்போது சேலம் மாவட்டத்தில் வெளியி டப்பட்டுள்ள 11 தொகுதி களுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண்கள் 14,41,717 பேர் , பெண்கள் 14,50,621 பேர், இதரர் 271 பேர் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 28,92,609 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

    வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப்பணி களுக்கான படிவங்கள் 27.10.2023 முதல் 9.12.2023 வரை பெறப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் இணையதளம் மூலம் www.nvsp.in மற்றும் www.elections.tn.gov.in என்ற முகவரியிலும், Voter helpline app என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    1.01.2024 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6 - ம், பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7- ம், குடியிருப்பை மாற்றியதற்கும், நடப்பு வாக்காளர் பட்டியலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிப்பதற்கும் படிவம் 8 -யை பயன்படுத்த வேண்டும்.

    மேலும் இந்த சிறப்பு சுருக்க முறைத்திருத்ததில் 17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் அதாவது 1.04.2024, 1.07.2024 மற்றும் 1.10.2024 ஆகிய காலாண்டு தேதிகளில் தகுதி நாளாகக் கொண்டு 18 வயதை பூர்த்தி அடையும் நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம். இவர்களின் மனுக்கள் அந்தந்த காலாண்டில் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர், 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் 17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் விண்ணப்பிக்க ஏதுவாக 4.11.2023, 5.11.2023 மற்றும் 18.11.2023, 19.11.2023 ஆகிய சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று க்கிழமை களில் அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும். 9.12.2023 வரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்ப ட்டு 5.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் நாளை (27-ந் தேதி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
    • நவம்பர் மாதம் 4, 5, 18 மற்றும் 19-ந் தேதி ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் நாளை (27-ந் தேதி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதன் தொடர்ச்சியாக நாளை முதல் டிசம்பர் மாதம் 9-ந் தேதி வரை புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் குறித்த சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.

    தவிர நவம்பர் மாதம் 4, 5, 18 மற்றும் 19-ந் தேதி ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அந்நாட்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.

    நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுடைய இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது. எனவே 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர்களாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள், வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் அல்லது தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களுக்கு சென்று படிவம் 6-ல் விண்ணப்பம் செய்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    ×