search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "necessary"

    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்யும் வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • துல்லியமான வாக்காளர் பட்டியல் அவசியம் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வாக்காளர் பட்டியலில் துல்லியத்தன்மை கொண்டு வரும் முயற்சியாக புதிய வாக்காளர்களுக்கு, ஓட்டளிக்கும் உரிமையை வழங்க தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது. அதற்கேற்ப வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்யும் வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    பூத் ஏஜென்ட்கள் வாயிலாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மேற்கொள்ள கட்சித்தலைமை அறிவுறுத்தியுள்ளது. வார்டு வாரியாக கட்சியை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் துல்லியமான வாக்காளர் பட்டியல் அவசியம் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து பா.ஜ.க.வினர் கூறுகையில், வரைவு வாக்காளர் பட்டியலில், இறந்தவர்கள் பெயர், இரட்டைப்பதிவு அதிக அளவில் உள்ளது. வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். முந்தைய காலங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபடுவர். தற்போது அத்தகைய பணிகள் நடப்பதில்லை என்றனர்.

    தி.மு.க.வினர் கூறுகையில், பூத் ஏஜென்டுகள் வாயிலாக, புதிய வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, கட்சித்தலைமை அறிவுறுத்தியுள்ளது. இறந்தவர், இரட்டை பதிவு உள்ளோர் விவரங்களை சேகரித்து அவற்றை நீக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினாலும், அவர்கள் அந்த பணியை செய்வதில்லை. இறந்தவர் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களது குடும்பத்தினரிடமும் இல்லை என்றனர்.

    அ.தி.மு.க.வினர் கூறுகையில், வார்டு வாரியாக உள்ள பூத் ஏஜென்ட்களிடம் வரைவு வாக்காளர் பட்டியல் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அவற்றை சரிபார்க்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இறப்பு மற்றும் இரட்டை பதிவுகள் அதிகம் உள்ளன. அவை சரிசெய்யப்பட வேண்டும் என்றனர்.

    இன்றைய சூழலில் உயர் கல்வி என்பது மாணவர்கள் மிகவும் அவசியமானது என்று சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் கூறினார்.
    காரைக்குடி:

    காரைக்குடியில் உள்ள அழகப்பச் செட்டியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. முருகப்பா அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு வந்தவர்களை கல்லூரி முதல்வர் இளங்கோ வரவேற்று பேசினார். விழாவில் சென்னை ஐ.ஐ.டி. மெக்கானிக்கல் துறை பேராசிரியர் ரமேஷ் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி விழா பேரூரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைய சூழலில் மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது மிகவும் அவசியமானது. தற்போதைய வாழ்க்கை முறையில் சாதிக்க வேண்டும் என்றால் உயர்கல்வி தேவை. மாணவர்கள் நீண்ட தொலைநோக்கு சிந்தனையோடு செயல்பட வேண்டும். எனவே அதற்கான இலக்கை நோக்கியே முன்னேற வேண்டும். முடியும் என்ற முனைப்போடு செயல்பட்டு வெற்றியை காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பட்டமளிப்பு விழாவில் 328 பி.இ. மாணவ-மாணவிகளுக்கும், 121 எம்.இ. மாணவ-மாணவிகளுக்கும் பட்டம் வழங்கப்பட்டது. முடிவில் துணை முதல்வர் கணேசன் நன்றி கூறினார். முன்னதாக விழாவில் மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்துகொண்டு பட்டங்களை பெற்றனர். 
    விற்பனை முனையக் கருவி மூலம் உரங்கள் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் ஆதார் அட்டையினை அவசியம் கொண்டு வந்து உரங்களை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில், தற்போது சம்பா பருவ பணிகள் தொடங்க உள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை மண்வள அட்டை பரிந்துரையின் அடிப்படையில் உரமிடுவதால் மண்வளத்தினை பாதுகாப்பதுடன், உர செலவும் குறைகிறது.

    எனவே விவசாயிகள் மண்வள அட்டையின் பரிந்துரைப்படி பயிருக்கு உரமிட வேண்டும். தற்போது விற்பனை முனையக் கருவி மூலம் உரங்கள் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டையினை அவசியம் கொண்டு செல்வதுடன் தங்களின் கைரேகையினை பதிவு செய்து உரங்களை பெற வேண்டும். உரங்களை விற்பனை நிலையங்களில் வாங்கும்போது தவறாது ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். விவசாயிகளை தவிர மற்றவர்களின் ஆதார் எண் மற்றும் கைரேகை பெற்றுக் விற்பனை முனைய கருவி மூலம் உரங்கள் விற்பனை செய்யப்பட்டால் உர விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மொத்த உர விற்பனையாளர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உரங்களை பிற மாவட்டங்களுக்கு மாற்றம் செய்திடக் கூடாது. விவசாயிகளுக்கு உரங்களை விற்பனை செய்யும்போது அதிகபட்ச விற்பனை விலைக்கு உட்பட்டு விற்பனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 
    ×