search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர் பட்டியல்"

    • நீலகிரி கலெக்டர் அருணா நேரில் ஆய்வு
    • ரூ.22 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் கான்கிரீட் சாலைப்பணிகளையும் பார்வையிட்டா

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் புனித ஜோசப் நடுநிலை ப்பள்ளி மற்றும் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை ப்பள்ளி ஆகியவற்றில் வாக்காளர் பட்டியல் சிற ப்பு முகாம் நடை பெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் அருணா நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கலெக்டர் அருணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி யதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் அடுத்தாண்டு ஜனவரி 1-ந்தேதியை தகுதிநாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இது அடுத்த மாதம் 9-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.

    மேலும் நேற்றும், இன்றும் (26-ந்தேதி) வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. எனவே பொது மக்கள் மேற்கண்ட முகாம்க ளில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    அப்போது குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், தாசில்தார் கனிசுந்தரம், வட்டார வளர்ச்சி அதிகாரி ஆறுமு கம் மற்றும் அரசு உயர்அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    முன்னதாக குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள சுடுகாட்டு தகன கொட்டகையை கலெக்டர் அருணா நேரில் பார்வை யிட்டார்.

    தொடர்ந்து பேரட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையம் முதல் மேல் பாரத்நகர் சந்திப்பு வரை ரூ.22 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் வடிநீர் கால்வாயுடன் கூடிய கான்கிரீட் சாலைப்பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மேற்கண்ட பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தி னார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட உதவி பொறியாளர் குமார், குன்னூர் நகராட்சி பொறி யாளர் வேலுசாமி, குன்னூர் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆறுமுகம் மற்றும் அரசு உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் தொடர்பான சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.
    • புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவுப்படி 27.10.2023 முதல் 09.12.2023 வரை வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் தொடர்பான சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு 25.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 26.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    மேலும் அந்நாட்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.

    • சிவகங்கையில் நாளை, நாளை மறுநாள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தும் பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைத்தின் அறிவுரையின்படி வருகிற ஜனவரி 1-ந் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்க ளுக்கான சிறப்பு முகாம்கள் நாளை 25-ந் தேதி (சனிக்கிழமை), 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேற்படி இந்த சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும் மற்றும் இணையதள வழியாகவும் (Voters Helpline செயலி / https://voters.eci.gov.in மற்றும் https://elections.tn.கோட்டாட்சியர் சிவகங்கை, தேவ கோட்டை அலுவலகத்தில் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விண்ணப்பிக் கலாம்.

    எனவே, இந்த வாய்ப்பினைப் பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • 16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 38 லட்சத்து 68 ஆயிரத்து 178 வாக்காளர்கள் உள்ளனர்.
    • ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் அதற்கான படிவங்கள் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த மாதம் 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

    16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 38 லட்சத்து 68 ஆயிரத்து 178 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் படிவம் 6ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7ஐ பூர்த்தி செய்தும் வழங்க வேண்டும். சட்டமன்ற தொகுதிக்குள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடி பெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்கள் வேறு தொகுதிக்கு குடி பெயர்ந்தவர்கள் படிவம் 8ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

    இதற்கான சிறப்பு முகாம் கடந்த 4 நாட்கள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் உள்ள 3 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்பட்டது.

    முதல் கட்டம் 4 மற்றும் 5-ந்தேதி நடந்தது. 18, 19-ந் தேதி நடைபெறுவதாக இருந்த முகாம்கள் தள்ளி வைக்கப்பட்டன.

    அந்த முகாம்கள் நாளை (25-ந்தேதி) மறுநாள் (26-ந்தேதி) நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் படிவங்கள் 6, 6ஏ, 7, மற்றும் 8ஐ ஆகியவற்றை பயன்படுத்தி பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் அதற்கான படிவங்கள் வழங்கப்படும். உரிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    • புதிய வாக்காளர்களை சேர்க்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
    • தேர்தல் தொடர்பான குற்றங்களில் நிலுவை நிலையினை குறைக்க போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சுருக்கத்திருத்தம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த மாவட்ட தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வாக்குப்பதிவிற்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்குப்பதிவை சரிபார்க்கும் கருவிகள் தயார் நிலையில் உள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய உள்ள வாய்ப்புகள் குறித்து வாக்காளர்களுக்கும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6 ஐ பயன்படுத்த வேண்டும். பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்கு படிவம் 8 ஐ பயன்படுத்த வேண்டும். இதுகுறித்த சிறப்பு சுருக்கத்த முகாம்கள் வருகிற 25, 26-ந் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடத்தப்படும். இந்த வாய்ப்பை வாக்காளர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    தமிழ்நாடு எப்போதும் அமைதியான மாநிலம். ஒரே கட்டமாக எப்போதும் தேர்தல் நடத்தப்படுகின்றது. வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயர் 2 இடங்களில் இருத்தல், இறந்தவர்களின் பெயர்கள் ஆகியவற்றை நீக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

    ஒரே வாக்காளரின் பெயர் 2 இடங்களில் இடம்பெற்றிருந்தால் வாக்காளரின் ஒப்புதல் பெற்று அவர்கள் எங்கு வாக்களிக்க விரும்புகின்றார்கள் என்பதை எழுத்தப்பபூர்வமாக பெற்ற பிறகு மற்றொரு இடத்தில் பெயர் நீக்கம் செய்யப்படும்.

    புதிய வாக்காளர்களை சேர்க்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக கல்லூரிகளில் புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாணவர்களிடையே எவ்வாறு வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக்கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

    பதற்றமான வாக்குச்சாவடிகளை போலீசார் கள ஆய்வு செய்ய வேண்டும். திருநங்கைகளை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்கள் அங்கீகரிக்கபட்ட அனைத்து கட்சி அரசியல் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்த வேண்டும். தேர்தல் தொடர்பான குற்றங்களில் நிலுவை நிலையினை குறைக்க போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    • 18-29 வயதுடைய இளம் வாக்காளர்களிடமிருந்து நாளது வரை 9086 படிவங்கள் மட்டும் வரப்பெற்றுள்ளது .
    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லுாரிகளிலும் சிறப்பு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலர் அறிவுரைப்படி திருப்பூர் மாவட்டத்தில்27.10.2023 முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடைபெற்று வருகிறது .

    சிறப்பு சுருக்க முறை திருத்தத்தில் அதிகளவில் 18+ இளம் வாக்காளர்களை சேர்க்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியத்தின் படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லுாரிகளிலும் சிறப்பு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18-29 வயதுடைய இளம் வாக்காளர்களிடமிருந்து நாளது வரை 9086 படிவங்கள் மட்டும் வரப்பெற்றுள்ளது .

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் விண்ணப்பங்கள் பெறும் காலம் 9.12.2023 உடன் முடிவடைய உள்ளதால் வாக்காளர்பட்டியலில் பெயர் இடம் பெறாத 18+ நபர்கள் உடனடியாக வாக்காளர் பட்டியலில் ெபயர் சேர்ப்பதற்கான படிவம் 6 யினை நேரிலோ அல்லது இணைய தளம் வாயிலாகவோ அளிக்குமாறு திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.  

    • பொதுமக்கள் திருத்தம் மேற்மேகொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்
    • கோவை கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தல்

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வருகிற 18, 19-ந்தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடப்பதாக இருந்தது.

    அது தற்போது வருகிற 25, 26-ந்தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. எனவே வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது ஆகிய பணிகளை பொதுமக்கள் மேற்கொள்ளலாம். அதன்படி வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்-6, பெயர்நீக்கம் செய்ய படிவம்-7, வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம்-8 ஆகியவற்றை நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

    பிரத்யேக இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மொபைல் செயலியை தரவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்க இயலும்.மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களை செய்வதற்கு அடுத்த மாதம் 9-ந்தேதிவரை விண்ணப்பிக்கலாம். எனவே பொதுமக்கள் மேற்கண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 

    • வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொள்ள வேண்டும்.
    • உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைவரும் இணைந்து இந்த பணியினை செய்து முடித்திட வேண்டும்.

    சென்னை:

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், அமைச்சர் தா.மோ. அன்பரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2024-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

    வருகின்ற 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அன்று, 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும் - வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாதவர்களின் பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும், தொகுதியில் இருந்து இடம் மாறியவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை தற்போது உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொள்ள வேண்டும்.

    இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை), 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்து உள்ளார்.

    எனவே, இந்த 2 நாட்கள் மாவட்டம் முழுவதும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்களில் வாக்காளர்களை சேர்க்கும் பணியிலும், அந்தந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வார்டு கிளை கழக செயலாளர்கள், வாக்குச்சவாடி நிலை முகவர்கள், வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைவரும் இணைந்து இந்த பணியினை செய்து முடித்திட வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி மிகவும் முக்கியமானது என்பதை கவனத்தில் கொண்டு அனைவரும் இணைந்து இப்பணியை செய்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்ட சபை தொகுதிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம், வார விடுமுறை நாட்களில் நடத்தப்படுகிறது
    • வருகிற 18, 19 ஆகிய தேதிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும்

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு இதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகளும், தேர்தல் கமிஷனும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தற்போது வாக்காளர் சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்ட சபை தொகுதிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம், வார விடுமுறை நாட்களில் நடத்தப்படுகிறது. தாலுகா அலுவலகங்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களாக மாறி வருகிறது. அவ்வகையில், விண்ணப்பித்து இதுவரை வாக்காளர் அடையாள அட்டை பெறாதவர்கள், இ - வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து தொகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த, பிளக்ஸ் பேனர் தயாரிக்கப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இவை, வாக்காளர் பார்வைக்கு படும்படி, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அவ்வகையில், உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், 'வரும் 2024 ஜன., 1 நிலவரப்படி, 18 வயது பூர்த்தியாகும் நபர்கள், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். தவிர, 2024 ஏப்., 1 - ஜூலை 1 மற்றும் அக்., 1 தேதி நிலவரப்படி, 18 வயது பூர்த்தியடையும் நபர்களும், முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம். புதிதாக பெயர் சேர்க்க படிவம் -6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7 ஆகிய விண்ணப்பங்களில், தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். தவிர, Voter Help Line என்ற மொபைல் ஆப் வாயிலாகவும், ஆவணங்களை இணைத்து, பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் கோரியும், ஆதார் விபரம் இணைக்கவும், டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 18, 19 ஆகிய தேதிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என்பதால், வாக்காளர் அடையாள அட்டை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

    • கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
    • திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடந்தது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர்,திருப்பத்தூர்,ஜோலார்பேட்டை 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்கு சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல்,திருத்தம் உள்ளிட்ட முகாம் 2 நாட்கள் நடந்தது.

    வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் நாடு சிறுதொழில் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் மதுமதி மற்றும் திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் அனைத்து வாக்கு சாவடி மையங்களில் நடைபெறும் முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    புதியதாக பெயர்களை சேர்க்க முகாமிற்கு வந்த முதல் இளம் வாக்காளர்களை வரவேற்று அவர்களுக்கு நாற்காலிகள் போடும்படி கூறி அவர்களை அமரவைத்து கவுரவபடுத்தி பெயர் சேர்ப்பதற்கான வழிமுறைகளை எடுத்து கூறி பெயர்களை சேர்த்தார். இது இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் இருந்தது.

    வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மதுமதி கூறியதாவது:-

    முன்பு 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே சேர்க்க முடிந்தது.

    ஆனால் தற்போது இளம் வக்காளர்கள், விடுபட்ட வாக்காளர்கள் ஜனவரி,ஏப்ரல், ஜூலை,அக்டோபர் என வருடத்தில் 4 முறை தங்கள் பெயர்களை சேர்த்து கொள்ளலாம். மாவட்டம் முழுவதும் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்த்தல், நீக்கல்,திருத்தம் உள்ளிட்ட பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் மிகவும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

    மேலும் புதிய இளம் வாக்காளர்களை சேர்க்க கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள இளம் வாக்காளர்களை சேர்க்க பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேர்க்கபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, சப் கலெக்டர் பிரேமலதா, தாசில்தார் மோகன்,நகராட்சி ஆணையாளர் சதீஷ் குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • வாக்குச் சாவடி நிலை முகவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டதையடுத்து நவ.4,5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு வாக்கா ளர் பட்டியல் திருத்த முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று வாக்கா ளர் பட்டியல் சிறப்பு முகாம் நடந்தது. மானா மதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி, திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குசாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடந்தன.

    இந்த முகாம்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுந்தரவள்ளி, கலெக்டர் ஆஷா அஜீத் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களை பொதுமக்கள் மேற்கொள்ள லாம். இந்த சிறப்பு முகாம் களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும், https://voters.eci.gov.in இணைய தளம் வழியாகவும் விண்ணப் பிக்கலாம்.

    இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான பணிகளை மேற்கொள்ள லாம் என கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போதுஇ தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, தனி வட்டாட்சியர் (தேர்தல்) மேசியாதாஸ், வட்டாட் சியர்கள் சிவராமன் (சிவ கங்கை), ஆனந்த் (திருப் பத்தூர்), துணை வட்டாட்சி யர் (தேர்தல்) மற்றும் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் 10,90,021 வாக்காளர்கள் உள்ளனர்.
    • பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சா வடி மையத்தில் வாக்களர் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறு கிறது. அதன்படி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஷ்ரவன் குமார் ஆய்வு மேற்கொண் டார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணை யம் மற்றும் சென்னை தலை மை தேர்தல் அலுவலர் அறி வுரைகளின்படி கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் கடந்த 5.1.2023 முதல் சிறப்பு சுருக்க திருத்த பணியின் கீழ் 18 வயது (1.1.2024 தகுதி நாளாக கொண்டு) நிரம்பி யவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக பணி மேற்கொள்ளப்பட்டு, கடந்த மாதம் 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. இவ்வரைவு வாக்காளர் பட்டியலில் 27.10.2023 ன்படி கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் 10,90,021 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இந்த மாதம் 4,5, 18, 19 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி அமை விடங்களிலும் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் நடைபெறும். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொண்டார். அப்போது வாக்குச்சாவடி மைய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×