search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coonor"

    • நீலகிரி கலெக்டர் அருணா நேரில் ஆய்வு
    • ரூ.22 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் கான்கிரீட் சாலைப்பணிகளையும் பார்வையிட்டா

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் புனித ஜோசப் நடுநிலை ப்பள்ளி மற்றும் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை ப்பள்ளி ஆகியவற்றில் வாக்காளர் பட்டியல் சிற ப்பு முகாம் நடை பெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் அருணா நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கலெக்டர் அருணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி யதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் அடுத்தாண்டு ஜனவரி 1-ந்தேதியை தகுதிநாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இது அடுத்த மாதம் 9-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.

    மேலும் நேற்றும், இன்றும் (26-ந்தேதி) வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. எனவே பொது மக்கள் மேற்கண்ட முகாம்க ளில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    அப்போது குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், தாசில்தார் கனிசுந்தரம், வட்டார வளர்ச்சி அதிகாரி ஆறுமு கம் மற்றும் அரசு உயர்அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    முன்னதாக குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள சுடுகாட்டு தகன கொட்டகையை கலெக்டர் அருணா நேரில் பார்வை யிட்டார்.

    தொடர்ந்து பேரட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையம் முதல் மேல் பாரத்நகர் சந்திப்பு வரை ரூ.22 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் வடிநீர் கால்வாயுடன் கூடிய கான்கிரீட் சாலைப்பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மேற்கண்ட பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தி னார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட உதவி பொறியாளர் குமார், குன்னூர் நகராட்சி பொறி யாளர் வேலுசாமி, குன்னூர் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆறுமுகம் மற்றும் அரசு உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • 2 பெண்கள் உள்பட 22 பேர் ஊட்டிக்கு தனியார் பஸ் மூலம் சுற்றுலா வந்தனர்
    • குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னூர்,

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த முத்தப்பாளையம் பகுதியில் உள்ள டைல்ஸ் கம்பெனியில் இருந்து 2 பெண்கள் உள்பட 22 பேர் ஊட்டிக்கு தனியார் மினி பஸ் மூலம் சுற்றுலா வந்தனர். அங்கு உள்ள சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் ஈரோடு நோக்கி புறப்பட்டனர்.

    குன்னூர் அடுத்து காட்டேரி பகுதியில் வேன் சென்றது. அப்போது ஓடும் பஸ்சில் டிரைவர் குழந்தைசாமிக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனம் நிலைதடுமாறி, சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது.

    இந்த பஸ் ஒருவேளை மாற்று திசையில் திருப்பி இருந்தால், சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இருக்கும். அதிர்ஷ்ட வசமாக தடுப்பு சுவரில் வாகனம் மோதியது. இதனால் வண்டியில் இருந்த 22 பேர் உயிர்தப்பினர்.சுற்றுலா பஸ் டிரைவருக்கு விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க சார்பில் கலைஞர் திடலில் தி.மு.க முப்பெரும் விழா நடந்தது.
    • நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிார்.

    ஊட்டி

    குன்னூர் நகர தி.மு.க சார்பில் குன்னூர் வி.பி.தெரு கலைஞர் திடலில் தி.மு.க முப்பெரும் விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு குன்னூர் நகர செயலாளர் எம்.ராமசாமி தலைமை தாங்கினார்.விழாவில் நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிார்.

    இதில் மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வன், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், குன்னூர் ஒன்றிய கழக செயலாளர் பிரேம்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, வெங்கடேஷ், செல்வம், குன்னூர் நகர மன்ற தலைவர் ஷீலா கேத்தரின், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், தலைமை கழக பேச்சாளர்கள் ஜாகீர் உசேன், ராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா, நகர அவை தலைவர் தாஸ் துணை செயலாளர்கள் முருகேசன், சாந்தா சந்திரன் வினோத் நகர பொருளாளர் ஜெகநாத் ராவ் இளைஞர் அணி அமைப்பாளர் பத்மநாபன் துணை அமைப்பாளர்கள் சாதிக் பாட்ஷா சையத் மன்சூர் செல்லின் நகர மன்ற உறுப்பினர்கள் நாகராஜ் ஜெகநாதன் ராபர்ட் குமரேசன் சுசிலா பாக்கியவதி செல்வி உமா வண்டிச்சோலை செல்வி சமீனா காவேரி சித்ரா சுப்பிரமணி மற்றும் அனைத்து சார்பு அணிகள் நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×