search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வினர் வீடு வீடாக சென்று வாக்காளா் பட்டியலை சரிபாா்க்க வேண்டும் - பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., அறிவுறுத்தல்
    X
    பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.

    அ.தி.மு.க.வினர் வீடு வீடாக சென்று வாக்காளா் பட்டியலை சரிபாா்க்க வேண்டும் - பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., அறிவுறுத்தல்

    • திருப்பூா் தெற்கு தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குணசேகரன், மாநகா் மாவட்ட அவைத்தலைவா் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
    • திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை தொகுதி பூத் முகவா்கள் மற்றும் வாக்காளா் பட்டியல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் குமாா் நகரில் நடைபெற்றது.

    திருப்பூா்:

    திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை தொகுதி பூத் முகவா்கள் மற்றும் வாக்காளா் பட்டியல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் குமாா் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். திருப்பூா் தெற்கு தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குணசேகரன், மாநகா் மாவட்ட அவைத்தலைவா் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கிணத்துக்கடவு சட்டப் பேரவை உறுப்பினரும், திருப்பூா் மாநகா் மாவட்ட பூத் கமிட்டிபொறுப்பாளருமான செ.தாமோதரன் பேசியதாவது:-

    பாஜக., கூட்டணியில் இருந்து விலகியுள்ளதால் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில் திமுக., வேண்டும் என்றே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறது. தோ்தலில் நாம் சரியான முடிவைத்தான் எடுத்துள்ளோம்.

    தற்போது வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதால், கட்சி நிா்வாகிகள் வீடுவீடாகச் சென்று வாக்காளா் பட்டியலை சரிபாா்க்க வேண்டும். மேலும், புதிய வாக்காளா்களை சோ்க்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.

    இதைத் தொடா்ந்து, சட்டப் பேரவை முன்னாள் துணைத் தலைவரும், மாநகா் மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசுகையில், வாக்காளா் சோ்ப்பு முகாம் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக., நிா்வாகிகள் இந்த முகாமில் பங்கேற்க வேண்டும். லஞ்சம், ஊழலில் தலைசிறந்த மாநகராட்சியாக திருப்பூா் உள்ளது என்றாா்.

    Next Story
    ×