search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிமுறைகள்"

    • உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
    • கால்நடைகளை நிழல் தரும்கூரை அடியில் கட்டவும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கோடைவெயில் தொடக்கத்திலேயே அதிக வெப்பம்நிலவி வருவதால் பொதுமக்கள் கவனமாக இருந்திடவும், கீழ்கண்ட தற்காப்புவழிமுறைகளை பின்பற்றிடவும் கலெக்டர் வினீத் அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- உடலின் நீர்ச்சத்து குறையாமல்பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின் போதுகுடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும் . ஒ.ஆர்.எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், நீர்,மோர் மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பைத் தவிர்க்க வேண்டும். வெளிர் நிறமுள்ள,காற்றோட்டமான ஆடைகளை அணிய வேண்டும்.

    பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணவேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டமான வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்ல வேண்டும். நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளை விட்டு செல்ல கூடாது. பருக இளநீர்போன்ற திரவங்களை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான வெப்பம் தொடர்பானநோய்களை கண்டறிய வேண்டும்.குழந்தைகளின் சிறுநீரை சோதித்துப்பார்க்கவும். மஞ்சள் நிறமுள்ள சிறுநீர்நீரிழப்பை குறிக்கலாம். மழலைப்பள்ளிகளை கோடைகாலம் முடியும் வரை செயல்படுத்தவேண்டாம். முதியவர்களுக்கான வழிமுறைகள் தனியேவசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறைசரிபார்த்து கொள்ளவேண்டும்.

    முதியவர்களின்அருகாமையில் தொலைபேசி உள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும். வெப்பஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால் அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் வைக்கவும் மற்றும் குளிர்ந்த நீரில்குளிக்கவைக்க வேண்டும்.போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.100 நாட்கள் பணியின் போது நற்பகல் 12.00 மணிக்குமேல் பணி செய்யாமல் இருப்பதுபோன்றவையும் ஆகும்.

    கால்நடைகளை நிழல் தரும்கூரை அடியில் கட்டவும், போதிய வசதி செய்து கொடுக்கவும். அவசியமாக போதுமானஅளவு தண்ணீர் கொடுக்கவேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்டவெளியில்போட வேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம்.பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீர்கொடுக்க வேண்டும். செல்லப்பிராணிகள் வெயில் காலங்களில் வாகனங்களில் தனியேவிட்டு செல்லக் கூடாது.

    மேலும் பருவநிலை மாற்றங்களினால் இந்தாண்டு கோடை வெயில்துவக்கத்திலேயே வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடிவீடுகளிலும், கூரை வீடுகளிலும்உள்ள மின் ஒயர்கள் உருகி சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு அதில் ஏற்படும் தீப்பொறியினால்கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும் மாடி வீடுகளில் மேல்கூரையில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே மேல்புறம் உள்ள இரும்புகள்சூடாகி மின் விசிறி, டியூப் லைட் கழன்று கீழே விழும் தன்மையை பெறுகின்றன.

    எனவே கோடை முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன் கூரை வீடுகளில்வசிப்பவர்கள் தண்ணீரை வைத்து கொள்ளலாம். விலை உயர்ந்த பொருட்கள், நிலஆவணங்கள் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். கேஸ்சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்தியபிறகு தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • மனித உடலின் தோலில் உள்ள சுரப்பிகள் வாயிலாக வேர்வையாக வெளியே தள்ளுகிறது.
    • ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு உடலின் இயக்கம் பாதிக்கப்படும்.

    குடிமங்கலம் :

    கோடை காலத்தில் வேகமாக பரவும் வைரஸ்களாலும், அதிகமாக தோன்றும் தூசுகளாலும், மரங்கள் பற்றாக்குறையால் ஏற்படும் அதீத வெப்பத்தினாலும், உடல்நிலை பாதிக்கும் என்கிறார்கள் டாக்டர்கள். இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், இயற்கையாகவே கோடைகாலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது உடல் சூடு, மனித உடலின் தோலில் உள்ள சுரப்பிகள் வாயிலாக வேர்வையாக வெளியே தள்ளுகிறது. இதனால் உடல் சூடு சமநிலை அடைகிறது.கோடைகாலத்தில் வெறும் காலில் நடப்பது காலை 11மணியிலிருந்து, மாலை 4மணி வரை வெயிலில் இருப்பது, அதிகப்படியான சட்டைகளை அணிந்து நீண்ட நேரம் வெயிலில் சுற்றுவது, கட்டட பணியாளர்கள், கைவண்டியை இழுத்து கொண்டு நடந்து செல்லுதல் உள்ளிட்டவர்களின் உடலில் வெப்ப சமநிலை அடையாததால், அவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு உடலின் இயக்கம் பாதிக்கப்படும்.

    இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க தினசரி குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். தர்பூசணி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை அருந்தலாம். இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படுவது குறையும். தண்ணீர் வசதி இருந்தால், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிக்கலாம். மசாலா பொருட்களால் தயாரிக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லதல்ல. குறிப்பாக, கோடைகாலத்தில் அதிக கலோரி கொண்ட உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது.

    ஊறுகாய், உப்பு, சிவப்பு நிற இறைச்சி தவிர்க்க வேண்டும். மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும் யோகாசன முறை செய்வதால், உடலில் உள்ள வெப்பத்தை கணிசமாக வெளியேற்ற முடியும்.

    கோடைகாலத்தில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் உடலில் நீர் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இவர்கள் வெயிலில் அதிகமாக நடமாடுவதை தவிர்த்தல் வேண்டும்.இது போன்ற அறிவுரைகள் ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களுக்கு மட்டுமே. சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்கள் உரிய மருத்துவரின் ஆலோசனை பெற்று கோடைகால நோய் தடுப்பு முறைகளை பின்பற்றுவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

    • சக்கந்தி கிராமத்தில் நாளை மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
    • அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பாதாவது:-

    சிவகங்கை வட்டம் சக்கந்தி கிராமத்தில் நாளை (8-ந்தேதி) காலை 10மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதி வாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும். சக்கந்தி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடைபெற உள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேர்தல் விதிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் அறிவுரை வழங்கியுள்ளார்.
    • கிரிமினல் வழக்குகளில் தொடர்பு உள்ள வர்கள் வாக்குச்சாவடி முகவர்களாக செல்ல அனுமதிக்க கூடாது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சி கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறி யிருப்பதாவது:

    ஈரோடு இடைத்தேர்தலை யொட்டி நாளை (திங்க ட்கிழமை) வாக்குப் பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொது கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ, யாரும் ஒருங்கிணைக்கவோ? நடத்தவோ? அல்லது அவற்றில் பங்கேற்கவோ? கூடாது.

    பொதுமக்களை ஈர்க்கும் வகையில், இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு, பொழுது போக்கு நிகழ்ச்சிகள் வாயிலாக தேர்தல் சம்பந்தமான பரப்புரை செய்யக்கூடாது.

    வாக்கு ப்பதிவு நாளன்று, வேட்பாளர் சொந்த பயன்பாட்டுக்காக ஒரு வாகனமும், தேர்தல் முகவரின் பயன்பா ட்டுக்காக ஒரு வாகனமும் மட்டுமே அனுமதிக்கப்படும்.

    வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவது, அழைத்து செல்வது போன்ற செயல்பாடுகளுக்காக வாடகை வாகனம் உள்ளிட்ட எந்தவொரு வாகனத்தையும் கையாள வேட்பாளர்கள் அனுமதிக்க கூடாது.

    2 நபர்களை மட்டும் கொண்ட வேட்பாளர்களின் அரசியல் கட்சிக ளின் தற்காலிக பிரசார அலுவலகம் வாக்குச்சாவடிகளில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்கப்படலாம்.

    தேவையில்லாத கூட்டத்தை கூட்டக்கூடாது. வாக்காளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்க கூடாது.

    வாக்குச்சாவடிக்கு வரும் முகவர்கள், அதே வாக்கு ச்சாவடியை சேர்ந்த வாக்கா ளர்களாக இருக்க வேண்டும். அவர்கள் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

    மேலும் கிரிமினல் வழக்குகளில் தொடர்பு உள்ள வர்கள் வாக்குச்சாவடி முகவர்களாக செல்ல அனுமதிக்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறி னார். 

    • உதாரணமாக மழை காலங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்கலாம்.
    • கொட்டகையை சுற்றி மழை நீர் தேங்காமல் வடிகால் வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

     பல்லடம்:

    பல்லடம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. பல்லடம் பகுதி விவசாயிகள் இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்கியுள்ளது.

    எனவே கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் கால்நடைகளை பராமரித்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு கால்நடைதுறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து அரசு கால்நடை மருத்துவர் கூறியதாவது:-

    கால்நடைகளை வளர்ப்போர் மழை காலங்களில் பராமரிப்பு முறைகளில் சில மாற்றங்களை செய்து சிறப்பு பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக மழை காலங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்கலாம். அவைகளை ஆட்டு பட்டியிலேயே வைத்து உணவாக இலை, தழைகள், காய்ந்த சோளதட்டு உள்ளிட்டவற்றை கொடுக்கலாம். அனைத்து ஆடுகளுக்கும் பட்டியிலேயே வைத்து தீவனம் வழங்க முடியாத சூழ்நிலையில் குறைந்த பட்சம் சினை ஏற்பட்டுள்ள ஆடுகளுக்கும், பாலூட்டும் தாய் ஆடுகளுக்கும் மட்டும் தீவனம் தருவது அவசியம். மழைக்காலம் என்பதால் ஆடுகளின் குளம்புகளில் சேற்றுப்புண் ஏற்படலாம். இதனை தவிர்க்க ஆடுகள் பட்டிக்குள் நுழையும் பகுதியில் ஆடுகளின் குளம்புகள் நனையும்படி பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலை நிரப்பி வைத்திட வேண்டும்.

    ஆடுகள் தங்கும் ஆட்டுபட்டியை சுற்றி மழை நீர் தேங்கினால் ஈக்கள் மற்றும் கொசுக்கள்உருவாக வாய்ப்புகள் ஏற்படும். இவையே ஆடுகளில் நீல நாக்கு நோய் ஏறபடுத்தும் கிருமிகளை பரப்பும் இடைநிலை காரணிகளாகும். மாடுகளை போலவே ஆடுகளுக்கும் இப்பருவத்தில் குடற்புழு நீக்க சிகிச்சை மருத்துவரின் ஆலோசனையின்பேரில் செய்ய வேண்டும்.மாடுகளை பண்ணை அளவில் வைத்து வளர்ப்போர் மாட்டு கொட்டகைக்குள் மழை நீர் புகாதபடி பார்த்து கொள்ள வேண்டும். கொட்டகையை சுற்றி மழை நீர் தேங்காமல் வடிகால் வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

    சேறும் சகதியுமாக கொட்டகைக்குள் இருந்தால் மாடுகளின் உடல் நலத்தை பாதிப்பதோடு மாட்டின் பாலின் தரமும் குறைய வாய்ப்புகள் உள்ளது. மேலும் கறவை மாடுகளுக்கு மழைக் காலங்களில் மடி வீக்க நோய் தாக்கும் சூழ்நிலைகள் இருப்பதால் மாடுகளிலிருந்து பால் கறப்பதற்கு முன்னர் மாட்டின் மடியையும், காம்புகளையும் பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல் கொண்டு கழுவி பின்னர் பால் கறக்க வேண்டும். பொட்டாசியம் பர்மாங்கனேட் மருந்து குறைந்த விலையில் கிடைக்கிறது. மாட்டின் கன்றுகளுக்கு கழிச்சல், ரத்தக் கழிச்சல் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகள் தர வேண்டும். மாடுகளின் தீவனப் பொருட்களான வைக்கோல், கலப்பு தீவனங்கள் போன்றவைகளை மழை நீரிலிருந்து நனையாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். மழைநீரில் இவை நனைவதால் பூஞ்சக்காளான் நச்சு ஏற்படலாம். எனவே பருவகாலங்களில் இதுபோன்ற சிறப்பு பராமரிப்பு முறைகளை மேற்கொண்டு கால்நடைகளை பராமரித்து அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து அவைகளை பாதுகாத்து கொள்ளலாம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒரு மூட்டை 266 ரூபாய்க்கு விற்கிறது. மூட்டைக்கு 2,000 ரூபாய் மானியமாக மத்திய அரசு தருகிறது.
    • ஒருவர் பெயரில் சட்டவிரோதமாக யூரியா வாங்கப்படுவது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் நிலை உள்ளது.

    திருப்பூர்:

    விலை மலிவாக கிடைக்கும் உரங்களில் யூரியா முதன்மையானது. இதற்கு மத்திய அரசு அதிகளவில் மானியம் வழங்குகிறது. ஒரு மூட்டை 266 ரூபாய்க்கு விற்கிறது. மூட்டைக்கு 2,000 ரூபாய் மானியமாக மத்திய அரசு தருகிறது.

    விலை மலிவாக கிடைப்பதால் பல ஆண்டுகளாக சாய ஆலைகள், பிரின்டிங் நிறுவனங்கள், தோல் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது. கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது.

    சில ஆண்டுகள் முன் இதற்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. தற்பொழுது ஒரு மாவட்டத்தில் உள்ள வினியோகஸ்தர் அந்த மாவட்டத்திற்குள் மட்டுமே விற்பனை செய்ய முடியும். வேறு மாவட்டத்திற்கு விற்க முடியாது. உரம் வாங்கும் விவசாயிகளின் ஆதார் எண் வாங்கப்படுகிறது.

    அவர்களது ஓடிபி எண் கொடுத்து உரம் பெற்றுக் கொள்ளும் நடைமுறை உள்ளது. யூரியா அதிகம் வாங்கினால் அவர்கள் வயல்கள் ஆய்வு செய்ய ப்படுகிறது. ஒருவர் பெயரில் சட்டவிரோதமாக யூரியா வாங்கப்படுவது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் நிலை உள்ளது.

    இதனால் கள்ளச் சந்தையில் விற்பனை பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. இதனால் உர மானியத்திற்காக அரசு செலவிடும் தொகை குறைந்துள்ளது. இருந்த போதிலும் விலை மலிவாக கிடைப்பதால் யூரியாவை விவசாயிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். யூரியா அதிகம் இடுவதால் நன்மைகளை விட கெடுதலே அதிகம். யூரியாவை அளவோடு தான் பயன்படுத்த வேண்டும் என வேளாண்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

    இது குறித்து பொங்கலுார் வேளாண் துறை உதவி இயக்குனர் பொம்முராஜ் கூறியதாவது:-

    விவசாயிகள் பெயரில் மட்டுமே ரசீது போட முடியும். முறைகேடு கண்டறியப்பட்டால் லைசென்ஸ் ரத்தாகிவிடும். விற்பனை சென்னையில் இருந்தே கண்காணிக்கப்படுகிறது. பயிருக்கு பயிர் யூரியா போடும் அளவு மாறுபடும்.சோளத்துக்கு 10 கிலோ போடலாம். 20 நாட்களுக்கு ஒரு முறை சிறிது சிறிதாக போட்டால் வீணாகாது. மேலும், ஆவியாகாது. யூரியா அதிகம் இடுவதால் எதிர்ப்பு சக்தி குறையும். நோய் அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மற்ற வாகனங்களுடன் போதுமான இடைவெளி விட்டு, மெதுவாக இயக்க வேண்டும்.
    • கனமழை நேரங்களில் சாலையில் போதிய 'விசிபிளிட்டி' இருக்காது.

    திருப்பூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மழைக்காலத்தில் விபத்துகளில் இருந்து பாதுகாக்க சிலவற்றை பின்பற்ற வேண்டுமென திருப்பூர் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். அதன்படி ஈரமான சாலைகளில், போதுமான பிடிமானம் இருக்காது. வாகனங்கள் வழுக்குவதற்கு வாய்ப்புள்ளதால் மணிக்கு 30 - 40 கி.மீ., வேகத்தில் பயணிப்பது பாதுகாப்பானது. ஈரமான சாலையில் வண்டியை நிறுத்துவதற்கு தடுமாற்றம் ஏற்படும். மற்ற வாகனங்களுடன் போதுமான இடைவெளி விட்டு, மெதுவாக இயக்க வேண்டும்.

    ஈரமான சாலைகளில் வண்டி ஓட்ட, டயர்கள் நல்ல நிலையில் இருப்பது முக்கியம். டயர்களில் நல்ல கிரப், போதுமான ட்ரெட் பட்டன்கள் இருப்பதை உறுதி செய்யவும். தேய்ந்த டயர்களால் வாகனங்கள் சறுக்கி, விபத்துகள் நிகழும். தினமும் இரண்டு டயர்களின் அழுத்தத்தையும் தவறாமல் சோதித்துக் கொள்ள வேண்டும்.

    மழையில், சாலையின் மேற்பரப்பில் சிந்தியிருக்கும் வாகனங்களின் ஆயில் மற்றும் ஈரத்தால், வழுக்கும். 'சடன் பிரேக்' அடிக்கும்போது வண்டி உங்கள் கட்டுப்பாட்டை இழக்கலாம். இதேபோல் ஆக்சிலேட்டரை முறுக்கும்போதும், வளைவுகளில் திருப்பும்போதும் வண்டியை மெதுவாகவே இயக்க வேண்டும்.

    கனமழை நேரங்களில் சாலையில் போதிய 'விசிபிளிட்டி' இருக்காது. மழைநேரத்தில் உங்கள் முகப்பு விளைக்கை எரியவிட்டபடி பயணிக்கவும். மழையால் விளக்குகளில் சேறு படியும் என்பதால், அவ்வப்போது ஹெட்லைட் மற்றும் டெயில் லேம்புகளை சுத்தம் செய்ய வேண்டும்.

    தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் பைக்கை இயக்குவதை தவிர்க்கவும். பள்ளம் எந்தளவுக்கு ஆழம் என்பது நமக்கு தெரியாது. ஆழமாக இருப்பின் வண்டி கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படும். மழைநீர் உங்கள் பைக்கின் ஸ்பார்க் பிளக்கில் பட்டு, வண்டி பழுதடைவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென போலீசார் வேண்டுகோள் தெரிவித்துள்ளனர்.

    • பின்னோக்கி பஸ்களை இயக்கும் போது சிக்னல் தர கட்டாயம் ஒருவரை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
    • பணிமனைக்குள் பஸ்கள் 5 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும்.

    திருப்பூர்:

    அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் சில விதிமீறல்கள் நடப்பதாக தொடர் புகார்கள் வந்ததை தொடர்ந்து டிரைவர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்த சில வழிகாட்டுதல்களை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    அதன்படி தொழில்நுட்ப பணிகளுக்காக பணிமனைக்குள் பஸ் இயக்கப்படும் போது லைெசன்ஸ் பெற்ற ஒரு பணியாளர் மட்டுமே பஸ்களை நகர்த்த வேண்டும். வேறு ஒருவர் இயக்க கூடாது. பின்னோக்கி பஸ்களை இயக்கும் போது சிக்னல் தர கட்டாயம் ஒருவரை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஓய்வறைகளில் புகை பிடிப்பது, மது அருந்துவது கூடாது. மீறினால், ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும். மதுஅருந்திய நிலையில் பணிக்கு வருபவர் குறித்து பாதுகாவலர் கண்காணிக்க வேண்டும். பஸ்சில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள், வெடி பொருட்களை ஏற்ற எந்த நேரத்திலும் அனுமதிக்க கூடாது. பணிமனைக்குள் பஸ்கள் 5 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தரப்பில் இருந்து திருப்பூர் உள்பட அனைத்து கிளை மண்டல மேலாளர்களுக்கு விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    • வேளாண் அதிகாரி விளக்கம்
    • விதை ஆய்வு முடிவின் அடிப்படையில் விதைக ளுக்கு சான்றட்டை பொருத்தப்படும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ஷீபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விதை உற்பத்தி செய்ய விரும்பும் விவசாயிகள் விதைப் பண்ணைக்கு பயன் படுத்தும் விதைக்குரிய ஆதாரம் மற்றும் விதை வாங்கியதற்கான ரசீதுடன் உரிய படிவத்தில் விதைப்பு அறிக்கைகள் தயார் செய்து, உரிய கட்டணம் செலுத்தி ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

    விதை உற்பத்தி செய்து சான்று பெற விரும்பும் விவ சாயிகள் நாகர்கோவிலில் உள்ள விதைச்சான்று மற் றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். விதைப்பண்ணை வயல்களில் அனைத்து தொழில் நுட்பங்களும் தவறாது கடைபிடிக்கப்பட வேண் டும். பதிவு செய்யப்பட்ட விதைப் பண்ணைகள் விதைச்சான்று அலுவலர்களால் வயல் ஆய்வு மேற் கொள்ளப்படும்.

    அறுவடை நிலையிலும் விதைச்சான்று அலுவலரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, வயல்மட்ட விதைகள் சுத்திக ரிப்பு நிலையம் கொண்டு சென்று சுத்திகரிப்பு செய்திட அனுமதி வழங்கப்படும். பின் சுத்திகரிப்பு நிலையத்தில் விதை சுத்திகரிக்கப்பட்டு விதைத்தரம் அறிவதற்கு விதை மாதிரிகள் எடுத்து விதை பரிசோதனை நிலை யத்திற்கு அனுப்பப்படும்.

    விதை ஆய்வு முடிவின் அடிப்படையில் விதைக ளுக்கு சான்றட்டை பொருத் தப்படும். இந்த சான்றட்டை பொருத்திய விதைகளை விவசாயிகள் தாங்களே பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறுவதோடு, இதர விவசாயிகளுக்கும் இந்த தரமான விதைகளை விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • படைப்புழுக்களானது முட்டைப் பருவம் முதல் அந்துப்பூச்சி வரை 6 நிலைகளை உடையது.
    • கடைகளில் வாங்கப்பட்ட விதைகளில் பூஞ்சாணக்கொல்லி விதைநேர்த்தி மட்டுமே செய்யப்பட்டிருக்கும்.

    உடுமலை:

    உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலங்களில் அதிக அளவில் மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நடப்பு ஆண்டிலும் படைப்புழுக்களின் தாக்குதலை ஆரம்ப கட்டம் முதலே திட்டமிட்டு கட்டுப்படுத்துவது குறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-

    படைப்புழுக்களானது முட்டைப் பருவம் முதல் அந்துப்பூச்சி வரை 6 நிலைகளை உடையது. தாய் அந்துப்பூச்சி இலைகளின் அடியில் 100 முதல் 200 முட்டைகள் வரை இடும். இவ்வாறு ஒவ்வொரு அந்துப்பூச்சியும் தன் வாழ்நாளில் 2 ஆயிரம் முட்டைகள் வரை இடும். இந்த முட்டைகளிலிருந்து வெளி வரும் இளம்புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியை சுரண்டி சேதம் உண்டாக்கும். அடுத்தடுத்த நிலைகளில் குருத்து முதல் கதிர் வரை சேதம் உண்டாக்கி மகசூல் இழப்பை உண்டாக்குகிறது.

    படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். அதன்படி விதைப்புக்கு 20 நாட்களுக்கு முன், ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு இட்டு உழவு செய்ய வேண்டும். இது மண்ணில் இருக்கும் கூட்டுப்புழுக்களின் மீது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும். தப்பிப் பிழைத்த கூட்டுப் புழுக்களிலிருந்து வெளிவரும் அந்துப்பூச்சிகள் முட்டையிட முடியாத அளவுக்கு செயலற்றதாகவே இருக்கும். மேலும் ஒரு பகுதியிலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து ஒரே நேரத்தில் விதைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கடைகளில் வாங்கப்பட்ட விதைகளில் பூஞ்சாணக்கொல்லி விதைநேர்த்தி மட்டுமே செய்யப்பட்டிருக்கும். இந்த விதைகளில் சையாண்டிரினில்புரோல் 19.8 எப்.எஸ். மற்றும் தயோமீதாக்சோம் 9.8 எப்.எஸ். என்ற கூட்டு மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 மி.லி. என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும். ஊடுபயிராக வேலிமசால் படைப்புழுக்களால் விரும்பப்படாத திரவத்தை வெளியிடக்கூடிய வேலிமசாலை ஊடுபயிராகப் பயிரிடலாம்.

    விதை முளைத்த 2-ம் நாளிலிருந்தே அந்துப்பூச்சிகள் பயிர் சேதம் விளைவிக்கத் தொடங்கி விடுகிறது. எனவே விதைப்பு சமயத்திலேயே ஏக்கருக்கு 5 என்ற அளவில் இனக்கவர்ச்சிப்பொறிகளை வைக்க வேண்டும். இதன்மூலம் ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழித்து அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். பயிர் உயரத்துக்கு ஏற்றாற்போல இனக்கவர்ச்சிப்பொறிகளின் உயரத்தையும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிப்பதால் 30 முதல் 40 நாட்களில் பயிர் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம். அதன்பிறகும் பாதிப்பு அதிகமாக இருந்தால் (100 செடிகளுக்கு 10 செடிகளுக்கு மேல்) வேளாண்மைத்துறையினரின் ஆலோசனை பெற்று உரிய மருந்துகளைத் தெளிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×