search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Urea fertilizer"

    • ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    • குஜராத்தில் இருந்து யூரியா உரம் ரெயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, மக்காச்சோளம், எள், காய்கறிகள், வாழை, மரவள்ளி ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குஜராத்தில் இருந்து கிரிப்கோ நிறுவனத்தின் மூலம் 2,200 மெட்ரிக் டன் பாரத் யூரியா உரம் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்ததை வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி, வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுபாடு) கு.ஜெயசந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி தெரிவித்ததாவது:

    ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக தற்போது யூரியா உரம் 5,347 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 2,585 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1,400 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 10,169 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 896 மெ.டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு தட்டுப்பாடு இல்லாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படு த்துவதோடு, திண்டலில் உள்ள வேளாண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரைக்கப்படுவதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்தி உரச்செலவை குறைத்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒரு மூட்டை 266 ரூபாய்க்கு விற்கிறது. மூட்டைக்கு 2,000 ரூபாய் மானியமாக மத்திய அரசு தருகிறது.
    • ஒருவர் பெயரில் சட்டவிரோதமாக யூரியா வாங்கப்படுவது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் நிலை உள்ளது.

    திருப்பூர்:

    விலை மலிவாக கிடைக்கும் உரங்களில் யூரியா முதன்மையானது. இதற்கு மத்திய அரசு அதிகளவில் மானியம் வழங்குகிறது. ஒரு மூட்டை 266 ரூபாய்க்கு விற்கிறது. மூட்டைக்கு 2,000 ரூபாய் மானியமாக மத்திய அரசு தருகிறது.

    விலை மலிவாக கிடைப்பதால் பல ஆண்டுகளாக சாய ஆலைகள், பிரின்டிங் நிறுவனங்கள், தோல் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது. கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது.

    சில ஆண்டுகள் முன் இதற்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. தற்பொழுது ஒரு மாவட்டத்தில் உள்ள வினியோகஸ்தர் அந்த மாவட்டத்திற்குள் மட்டுமே விற்பனை செய்ய முடியும். வேறு மாவட்டத்திற்கு விற்க முடியாது. உரம் வாங்கும் விவசாயிகளின் ஆதார் எண் வாங்கப்படுகிறது.

    அவர்களது ஓடிபி எண் கொடுத்து உரம் பெற்றுக் கொள்ளும் நடைமுறை உள்ளது. யூரியா அதிகம் வாங்கினால் அவர்கள் வயல்கள் ஆய்வு செய்ய ப்படுகிறது. ஒருவர் பெயரில் சட்டவிரோதமாக யூரியா வாங்கப்படுவது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் நிலை உள்ளது.

    இதனால் கள்ளச் சந்தையில் விற்பனை பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. இதனால் உர மானியத்திற்காக அரசு செலவிடும் தொகை குறைந்துள்ளது. இருந்த போதிலும் விலை மலிவாக கிடைப்பதால் யூரியாவை விவசாயிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். யூரியா அதிகம் இடுவதால் நன்மைகளை விட கெடுதலே அதிகம். யூரியாவை அளவோடு தான் பயன்படுத்த வேண்டும் என வேளாண்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

    இது குறித்து பொங்கலுார் வேளாண் துறை உதவி இயக்குனர் பொம்முராஜ் கூறியதாவது:-

    விவசாயிகள் பெயரில் மட்டுமே ரசீது போட முடியும். முறைகேடு கண்டறியப்பட்டால் லைசென்ஸ் ரத்தாகிவிடும். விற்பனை சென்னையில் இருந்தே கண்காணிக்கப்படுகிறது. பயிருக்கு பயிர் யூரியா போடும் அளவு மாறுபடும்.சோளத்துக்கு 10 கிலோ போடலாம். 20 நாட்களுக்கு ஒரு முறை சிறிது சிறிதாக போட்டால் வீணாகாது. மேலும், ஆவியாகாது. யூரியா அதிகம் இடுவதால் எதிர்ப்பு சக்தி குறையும். நோய் அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லை மாவட்டத்தில் நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • இன்று ரெயில் மூலமாக யூரியா உரம் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தடைந்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பயிர் நல்லமுறையில் துளிர்த்து வளருவதற்கு யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட ரசாயன உரங்கள் தேவைப்படுகிறது. இதனால் போதிய உரம் இருப்பு வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி சென்னையில் இருந்து இன்று ரெயில் மூலமாக யூரியா உரம் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தடைந்தது.

    மொத்தம் 1,900 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தடைந்தது.

    இந்த உர மூடைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு தேவைக்கேற்ப ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    • தொழில் நுட்பத்தின் மூலம் யூரியா வீணாவதை தடுக்க முடியும். வேப்பம் புண்ணாக்கு உள்ள எண்ணெய் சத்து யூரியா கசிந்து நீராக வெளியேறுவதை தடுக்கிறது.
    • விவசாயிகள் இதனை வயலில் மாலை நேரங்களில் மட்டும் இட வேண்டும். வயலில் நீர் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

    எந்த ஒரு பயிரையும் பச்சைப் பசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சியாக வைப்பதில் யூரியா உரமே முதலிடம் வகிக்கிறது.

    அதனால் விவசாயிகள் தேவைக்கு வைப்பதை விட்டுவிட்டு அதிக பச்சை கொடுப்பதற்காகவும், அதிக வளர்ச்சிக்காகவும் பரிந்துரை செய்யப்பட்ட அளவிற்கு மீறி யூரியா உரங்களை இடுகின்றனர்.

    இது உர செலவையும் அதிகரிக்கும். தேவையற்ற தீமை செய்யும் பூச்சிகளையும் பயிரை நோக்கி ஈர்க்கும். பூச்சிகளை கட்டுப்படுத்த மீண்டும் பூச்சிக்கொல்லி மருந்துகளை நோக்கி நாம் செல்ல வேண்டும்.

    எனவே விவசாயிகள் ஒவ்வொரு பயிருக்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவிலான யூரியா உரத்தை மட்டும் பயன்படுத்துவதன் மூலம் உரச்செலவை குறைக்கலாம்.

    நெல்லுக்கு ஏக்கருக்கு 25 கிலோ யூரியா மேலுரமாக இடப் பரிந்துரை செய்யப்படுகிறது.இந்த யூரியா வினை நேரடியாக வயலில் இடாமல் ஒரு எளிய தொழில் நுட்பத்தின் மூலம் அடுத்த 15 நாட்களுக்கு தேவையான போது சிறிது சிறிதாக உரமானது பயிருக்கு கிடைக்கும் வகையில் செய்ய இயலும். இதற்கு 5 பங்கு யூரியா எனில் 4 பங்கு ஜிப்சம், ஒரு பங்கு வேப்பம் புண்ணாக்கு எடுத்துக்கொண்டு முதலில் யூரியாவையும், வேப்பம் புண்ணாக்கையும் கலந்து யூரியாவின் நிறம் மாறிய பின் ஜிப்சத்தினை கலந்து முதல் நாள் வைத்திருந்து மறுநாள் இடலாம்.

    நேரடியாக யூரியா உரத்தை தெளிக்கும் பொழுது நீரில் கரைதல் ஆவியாதல் போன்றவற்றின் மூலம் வீணாகிறது தெளிக்கும் யூரியாவில் 40 சதம் மட்டுமே பயிர் எடுத்துக் கொள்ளும் எனவே விவசாயிகள்.

    தொழில் நுட்பத்தின் மூலம் யூரியா வீணாவதை தடுக்க முடியும். வேப்பம் புண்ணாக்கு உள்ள எண்ணெய் சத்து யூரியா கசிந்து நீராக வெளியேறுவதை தடுக்கிறது. ஜிப்சம் மேலுரை போல் செயல்பட்டு அடுத்த 15 நாட்களுக்கு சிறிது சிறிதாக பயிருக்கு எடுத்துக் கொடுக்கும்.

    விவசாயிகள் இதனை வயலில் மாலை நேரங்களில் மட்டும் இட வேண்டும். வயலில் நீர் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் லேசாக நீர் கட்டினால் போதுமானது.

    அதேபோல் காற்று மற்றும் மண்ணின் வெப்பநிலை அதிகமாக இருக்கும் பொழுது யூரியா உரம் இடுவதை தவிர்ப்பதே நல்லது.

    ஏனெனில் அதிக வெப்ப நிலையில் யூரியா மிக எளிதாக ஆவி ஆகி சென்றுவிடும். பயிருக்கு கிடைக்காது. சொட்டுநீர் பாசனத்தின் மூலம் யூரியா உரங்களை கொடுக்கும் போது யூரியா வீணாவது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு பயிரின் வேருக்கு அருகிலேயே உரமானது கிடைக்கும்.

    எல்லாவற்றையும் விட அடிஉரமாக முக்கிய தொழுவரங்களை தேவையான அளவுக்கு இடுவதன் மூலம் மண்ணின் ஊட்டச்சத்து வங்கியாக இவை செயல்பட்டு.

    பயிர் உர சத்துக்கள் எடுத்துக் கொள்ளும். எடுக்கும் தன்மையும் அதிகரிக்கும். எனவே விவசாயிகள் யூரியாவை தனித்து விடாமல் வேப்பம் புண்ணாக்கு.

    ஜிப்சத்துடன் கலந்து விட்டு உரம் வீணாவதை தவிர்க்கவும் தேவையற்ற உரம் இடுவதை கைவிடவும். இவ்வாறு அவர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

    • நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
    • நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 255 உரிமம் பெற்ற விதைவிற்பனை நிலையங்கள் உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இதில் வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பையா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார் தலைமையில் விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடி தொடங்கி உள்ளது. ஆனால் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    எனவே கார்பருவ சாகுபடிக்கு தேவையான யூரியா தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாமிரபரணியுடன் இணைக்க வேண்டும்

    கொடுமுடியாறு, வடக்கு பச்சையாறு ஆகிய அணைகள் களக்காடு யூனியனில் உள்ளது. ஆனால் நிர்வாக கட்டுப்பாடுகள் தென்காசி மாவட்டத்தில் சிற்றாறு உட்கோட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளது.

    அணை பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்கு களக்காட்டில் இருந்து தென்காசிக்கு செல்ல வேண்டியது உள்ளது. இதனால் சிரமம் உள்ளது. எனவே அதனை தாமிரபரணி கோட்டத்துடன் இணைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில், மணிமுத்தாறு பெருங்கால் பாசனம் மூலம் முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் ஜமீன்சிங்கம்பட்டி, தெற்கு பாப்பான்குளம், மணிமுத்தாறு, தெற்கு கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் முன்கூட்டியே விளைச்சல் உள்ளது.

    எனவே அக்டோபர் முதல் வாரத்தில் முதலில் இந்தப் பகுதியில் வாணிபக்கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    பின்னர் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் இயல்பான மழை அளவு 814.80 மில்லிமீட்டர் ஆகும். நேற்று முன்தினம் வரை 250.89 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது இயல்பான மழை அளவை விட 9 சதவீதம் குறைவு ஆகும்.

    கடந்த ஆண்டு இதே நாளில் நெல்லை மாவட்ட அணைகளின் நீர் இருப்பு 48.21 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது 29.30 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. கார்பருவ சாகுபடிக்கு தேவையான யூரியா உரங்கள் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 255 உரிமம் பெற்ற விதைவிற்பனை நிலையங்கள் உள்ளது. இங்கு விதை ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர். அப்போது 407 விதைகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில் 391 ஆய்வு முடிகள் வந்துள்ளது.

    அதில் 4 மாதிரிகள் தரமற்றது என தெரியவந்துள்ளது. அதனை விற்பனை செய்த விதை விற்பனை நிலைய உரிமையாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆய்வின் போது 10.6 மெட்ரிக் டன் எடையுள்ள தரமற்ற விதைகள் கண்டறியப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ. 29.87 லட்சம் ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×