search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருகை"

    • 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபயணமாக யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
    • 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கும் வகையில் கட்சியினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்

    தாராபுரம்:

    திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க., சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரைக்கு வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தாராபுரம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் வடுகநாதன், பொருளாளர் சுப்பு என்கிற சிவசுப்பிரமணியம் , மாவட்ட துணை தலைவர்கள் ராஜா என்கிற கோவிந்தசாமி, எஸ்.ஆர். விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட தலைவர் மங்களம் என்.ரவி கூறியதாவது:- தமிழகத்தை குறிப்பாக உலக அளவில் உற்று நோக்கும் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரையை தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபயணமாக யாத்திரை மேற்கொண்டு வருகிறார். வருகிற 21-ந் தேதி தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு வரும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.மாநில தலைவர் வருகையின் போது தாராபுரம் தொகுதியில் இருந்து யாத்திரையில் கலந்து கொள்ள சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கும் வகையில் கட்சியினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நகர தலைவர் விநாயகம் சதீஷ், தாராபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன், மேற்கு ஒன்றிய தலைவர் ராஜ்குமார், குண்டடம் கிழக்கு ஒன்றிய தலைவர் வெங்கடாசலம், குண்டடம் மேற்கு ஒன்றிய தலைவர் விஜயகுமார், மூலனூர் வடக்கு ஒன்றிய தலைவர் குழந்தைவேல், காங்கயம் தெற்கு ஒன்றிய தலைவர் பிரகாஷ், வெள்ளகோவில் நகர தலைவர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட விவசாய அணி தலைவர் விவேகானந்தன் நன்றி கூறினார்.

    • பரமக்குடிக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பரமக்குடி

    பரமக்குடியில் 11-ந்தேதி தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அன்று தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இமானு வேல்சேகரன் நினை விடத்தில் அஞ்சலி செலுத்து கின்றனர்.

    அஞ்சலி செலுத்த வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான செயற்குழு ஆலோசனை கூட்டம் பரமக்குடியில் நடந்தது.

    முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் வரவேற்று பேசினார். இதில் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னுக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் மரிச்சிகட்டியில் இருந்து பரமக்குடி வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். இதில் பொதுமக்களும், தி.மு.க. தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் செய்ய வேண்டும். அதே போல் இளைஞரணி மாநில மாநாட்டில் மாவட்டத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கருப்பையா, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இன்பா ரகு, பரமக்குடி நகர் மன்றத் தலைவர் சேது கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர்கள் அருளாந்து, வக்கீல் பூமிநாதன், போகலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சத்யா குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் வாசு தேவன், ஜெயக்குமார், கிருஷ்ணமூர்த்தி, சக்தி, அண்ணா மலை, மாவட்ட வக்கீல் பிரிவு அமைப்பாளர் வக்கீல் கருணாநிதி, வக்கீல் கள் கதிரவன், குணசேகரன், இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா, துணை அமைப்பாளர்கள் குமரகுரு, சண்.சம்பத்குமார், சத்தி யேந்திரன், பொறியாளர் அணி அமைப்பாளர் பாஸ்கர பாண்டியன், பகுத்தறிவு பாசறை பிரிவு அமைப்பாளர் செந்தில் செல்வானந்த், விவசாய அணி அமைப்பாளர் அய்ய னார், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகி துரைமுருகன், கவுன்சிலர் நதியா மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ஹெலிபேட் தளத்தில் துப்புரவு பணிகள் நடந்து வருகிறது.
    • இந்த பணிகளை பேரூர் செயலாளர் பார்வையிட்டார்.

    மண்டபம்

    ராமநாதபுரத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய 10 மாவட்டங் களை சேர்ந்த தி.மு.க. முக வர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதேபோன்று மண்டபத்தில் ஆக.18-ந்தேதி மீனவர் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறு கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தரும் அவருக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மண்டபம் அருகே ஹெலிபேட் தளம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் துப்புரவு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை மண்டபம் பேரூர் செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர் பார்வையிட்டார்.

    அப்போது கவுன்சிலர்கள் சாதிக்பாட்ஷா, வாசிம் அக்ரம், நிர்வாகி வேல்முரு கன், அவைத்தலைவர் முரு கானந்தம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    இதுகுறித்து அப்துல் ரகுமான் மரைக்காயர் "மாலைமலர்" நிருபரிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை யொட்டி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. உத்தரவின் பேரில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    மண்டபத்தில் அவர் மீன வர்களை சந்திக்க உள்ளதால் அதற்கான சிறப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் மண்டபம் ஹெலிபேட் தளத்தில் துப்புரவு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் சில நாட்களில் முடிந்து பந்தல் அமைக்கும் பணி தொடங்க உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏற்காட்டுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்வார்கள்.
    • கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும். தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் ஏற்காட்டுக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும், சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்வார்கள்.

    குறிப்பாக கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும். தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் ஏற்காட்டுக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

    எனினும் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணியை வருகை அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று ஏற்காட்டில் வழக்கத்தை விடவும் குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    இதனால் அண்ணா பூங்கா, படகு துறை மற்றும் காட்சி முனை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பணிகள் குறைவாக இருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டன.

    இது குறித்து சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் ஏற்காட்டுக்கு சுற்றுலா வருபவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்ததால் கோடை விடுமுறை பள்ளிகள் திறப்பு தள்ளி போனது. எனவே சனிக்கிழமை அன்று பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஞாயிறு ஒருநாள் விடுமுறைக்காக ஏற்காடு வருபவர்கள் குறைந்துவிட்டனர்.

    ஏற்கனவே மழைக்காலம் தொடங்கி விட்டதால் தமிழகம் முழுவதும் குளிர்ச்சியாகவே காணப்படுகிறது. எனவே ஏற்காடு வருவதை மக்கள் குறைத்துக் கொண்டனர் என்றனர்.

    மேட்டூர்

    மேட்டூர் அணை பூங்கா 33 ஏக்கர் பரப்பரளவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். மேலும் இந்த பூங்காவில் பொதுப் பணி துறை சார்பில் நுழைவு கட்டணமாக ரூ.5 வசூல் செய்யப்படுகிறது.

    பண்டிகை, விடுமுறை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சேலம், ஈரோடு, தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மேட்டூர் அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    நீண்ட நேரம் காவிரியில் நீராடி விட்டு பூங்காவிற்கு சென்றனர். பூங்காவில் இருந்த பாம்பு, முயல் பண்ணைகளை கண்டு ரசித்தனர். பூங்காவில் இருந்த ஊஞ்சல், சர்க்கிள் , ராட்டினம் விளையாடி சிறுவர், சிறுமிகள் மகிழ்ந்தனர். மேலும் பூங்கா நுழைவு கட்டணமாக வசூல் செய்ததில் ரூ.29880 கிடைத்தது.

    • மேச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலுக்கு பண்டிகை மற்றும் விசேஷம் அமாவாசை நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
    • மேச்சேரி பத்திரகாளியம்மன் கோவிலுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி பத்திரகாளியம்மன் கோவிலுக்கு ஆடி அமாவா சையை முன்னிட்டு ஏராள மான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மேட்டூர் அருகே மேச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலுக்கு பண்டிகை மற்றும் விசேஷம் அமாவாசை நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    குறிப்பாக அமாவாசை நாட்களில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வந்து செல்வார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் ஆடி அமாவாசை என்பதால் பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பத்திரகாளி அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

    • வறுமையின் காரணமாக அங்கு வாழ வழியின்றி தமிழகத்திற்கு வந்தோம்.
    • காலையில் படகு ஓட்டிகள் வந்து தனுஷ்கோடி கடலோர கரைப்பகுதியில் இறக்கி விட்டு சென்றதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    அன்னிய செலாவணி இருப்பு குறைந்ததால் வெளிநாடுகளில் இருந்த அத்தியவாச பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் அந்த நாட்டு அரசு திணறியது.

    இதன் காரணமாக அரிசி முதல் காய்கறி வரை அனைத்து உணவுப்பொருட்களின் விலையும் விண்ணை தொட்டன. இதனால் அங்கு வாழ்வாதாரம் இழந்தும், வாழ வழியின்றியும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருவது அதிகரித்துள்ளது.

    இதுவரை 257 பேர் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி கடலோரப் பகுதியான அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் இலங்கை அகதிகள் வந்திருப்பதாக அப்பகுதி மீனவர்கள் ராமேசுவரம் கடலோர காவல் படை குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் அரிச்சல் முனை பகுதியில் இருந்த 8 பேரை மீட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த ரூபன் மனைவி மரியா (வயது 35), மகன்கள் அபிலாஷ் (16) அபினாஷ் (14),சோதனை (8), அதுபோலே யாழ்பாணம் பகுதி அனைகோட்டை குலவாடி பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி மகன் விஜய் குமார் (50), இவரது மனைவி தர்சிகா (34), மகன்கள் அஸ்நாத் (15), யோவகாஷ் (11) இப்பகுதியை என தெரியவந்தது

    வறுமையின் காரணமாக அங்கு வாழ வழியின்றி தமிழகத்திற்கு வந்ததாகவும், இங்கே வந்தால் ஏதாவது பிழைப்பு தேடி குடும்பத்தை வழிநடத்தலாம் என்று முடிவு செய்து யாழ்ப்பாணம் கடலோரப் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் படகில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், இலங்கை யாழ்ப்பாணம் கடலோரப் பகுதியில் இருந்து நேற்று மாலை புறப்பட்டதாகவும் இன்று காலையில் படகு ஓட்டிகள் வந்து தனுஷ்கோடி கடலோர கரைப்பகுதியில் இறக்கி விட்டு சென்றதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    தொடர்ந்து இலங்கை அகதிகள் 8 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட வருகிறார்கள். கடந்த 2022 ஆண்டு முதல் இன்றைய தேதி வரை இலங்கையில் இருந்து 265 பேர் அகதிகளாக இந்தியா வந்துள்ளனர். 

    • முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றப்படும்.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    மதுரை

    மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூல கத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். இதை யொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி நாளை விழா நடைபெறும் நத்தம் சாலை யில் ஐ.ஓ.சி. ரவுண்டானா சந்திப்பு முதல் ஆத்திகுளம் சந்திப்பு வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகின்றது. இப்பகுதிக்கு ஐ.ஓ.சி. ரவுண்டானா, பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு, தாமைரைத்தொட்டி, புதூர், மூன்றுமாவடி வழியாக ஐயர்பங்களா சந்திப்பு சென்று தங்கள் பகுதிக்கு செல்லலாம். அதுபோல நத்தம் ரோட்டிலிருந்து நகர் நோக்கி வரும் வாகனங்கள் மூன்று மாவடி, புதூர் வழியாக நகரின் உட்பகுதிக்கு செல்லலாம். காலை 9 மணி முதல் கப்பலூர் சந்திப்பி லிருந்து ரிங் ரோடு வழியாக நகர் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் கப்பலூர், தோப்பூர் வழியாக திண்டுக்கல் சாலைக்கு செல்லவேண்டும். காலை 9 மணி முதல் கப்பலூர் சந்திப்பிலிருந்து ரிங் ரோடு வழியாக நகர் நோக்கி வரும் அனைத்து பேருந்துகளும் தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம் வழியாக மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களுக்கு செல்ல வேண்டும்.

    அருப்புக்கோட்டை, தூத்துக்குடி பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் வளையங்குளம், சாம நத்தம், பொட்ட பாளையம் மற்றும் கீழடி வழியாக ராமேசுவரம் சாலையினை மாட்டுத் தாவணி செல்லவேண்டும்.

    தூத்துக்குடி, அருப்புக் கோட்டை சாலையிலிருந்து வரும் அனைத்து சரக்கு கனரக வாகனங்களும் கப்பலூர் செல்லவேண்டும். சென்று திண்டுக்கல் சாலை வழியாக செல்லவேண்டும்.

    எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் வாகன கொள்ளப் படுகிறது.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • சுவாமி சன்னதிகள் சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்தனர்.
    • கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமி பிரசாதங்களை வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநா தசுவாமி கோயில் உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தனி சன்னதியில் அருள்பாலி க்கிறார்.

    பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ப. சிதம்பரம் வருகை புரிந்தார்.

    தொடர்ந்து அவர் தையல்நாயகி அம்மன், வைத்தியநாதசுவாமி, செல்வமுத்துக்குமா ரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமி சன்னதிகள் சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்தார்.

    அவருக்கு கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமி பிரசாதங்களை வழங்கினார்.

    அப்போது காங்கிரஸ் கட்சி பிரமுகர் சரச்சந்திரன் உடன் இருந்தனர். 

    • மாணவ-மாணவிகளுக்கு சிலேட், ரப்பர்,பென்சில் இலவசமாக வழங்கப்பட்டது,
    • பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தினர்.

    சீர்காழி:

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

    அதன்படி சீர்காழி ஊழியக்காரன் தோப்பில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2023-24-ம் கல்வி ஆண்டின் முதல்நாள் தொடக்கவிழா விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஷகிலாரெத்தி னகுமாரி தலைமை வகித்தார்.

    நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன், நகர்மன்ற உறுப்பினர் கஸ்தூரிபாய், கல்வியாளரும், பெற்றோர் ஆசிரியசங்கத்தலைவர் பாபுநேசன்,துணை தலைவர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தனர்.

    நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் கலந்துக்கொண்டு அரசின் பாடநூல்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி சிறப்புறையாற்றினார்.

    தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர் கஸ்தூரிபாய் தனது சொந்த செலவில் 170 மாணவ-மாணவிகளுக்கு சிலேட், ரப்பர், பென்சில், நோட் ஆகிய கல்விஎழுதுப்பொருட்களை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

    முன்னதாக பள்ளிக்கு வருகைபுரிந்த மாணவ, மாணவிகளை கார்டூன் வேடமணிந்து சாக்லெட் கொடுத்து உற்சாக ப்படுத்தி வரவேற்றனர்.

    நிகழ்வில்முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கருணாமூர்த்தி உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

    • விவேகானந்தர் மண்டபத்தை 5 லட்சம் பேர் பார்வையிட்டனர்
    • கோடை விடுமுறை சீசனையொட்டி 2½ மாதங்களில் வருகை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தல மாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றா லும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலா பயணிகள் வரு வார்கள். இந்த 3 மாத கால மும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது.

    இதேபோல ஏப்ரல், மே மாதமான கோடை விடு முறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணி கள் கன்னியாகும ரிக்கு படையெடுப்பார்கள். இந்த ஆண்டு கோடை விடுமுறை சீசனையொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச்சென்ற வண்ணமாக இருந்தனர்.

    கன்னியாகுமரிக்கும் கோடை விடுமுறை சீசனில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடந்த 2½ மாதங்களில் மட்டும் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் கன்னியாகும ரிக்கு வருகை தந்து உள்ள னர். இதில் 5 லட்சம் சுற்று லா பயணிகள் மட்டுமே கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை யை படகில் சென்று பார் வையிட்டு வந்துள்ளனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 98 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், மே மாதம் 2 லட்சத்து 40 ஆயிரம் பயணிகளும் ஜூன் மாதம் நேற்று வரை 75 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் படகில் சென்று விவேகா னந்தர் மண்டபத்தை பார் வையிட்டு வந்துள்ளனர்.

    கோடை விடுமுறை சீசனின் கடைசி நாளான நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 8 ஆயிரத்து 600 பேர் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை தருகிறார்.
    • நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

    புதுக்கோட்டை:

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) புதுக்கோட்டை வருகை தருகிறார். காரைக்குடி மார்க்கத்தில் இருந்து காரில் வரும் அவருக்கு புதுக்கோட்டை மாவட்ட எல்லையான திருமயம் அருகே சவேரியார்புரத்தில் இருந்து வரவேற்பு அளிக்கப்படுகிறது. புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். தொடர்ந்து அவரது தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கலெக்டர் மெர்சி ரம்யா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர். ஆய்வுக்கூட்டத்திற்கு பின் ஆலங்குடியில் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு விழா, கீரனூரில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் வீடு ஆகியவற்றிற்கு சென்று விட்டு திருச்சி செல்கிறார்.

    • ஜனாதிபதி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக
    • பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

    கன்னியாகுமரி:

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை (சனிக்கிழமை) காலை கன்னியாகுமரி வருகிறார்.

    அவரை வரவேற்பதற்காக வும் அவரது சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர்மாளிகைக்குவரும்அவருக்குமாவட்ட நிர்வாகம்சார்பில்சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் அவரை வரவேற்கிறார்கள். வரவேற்புநிகழ்ச்சிமுடிந்த தும் அவர் மாலை 6.20 மணிக்குகன்னியாகுமரி கடலில் சூரியன்மறையும் காட்சியை கண்டு ரசிக்கிறார். அதன் பின்னர் அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குசெல்கிறார். அங்குஅவர் பயபக்தியுடன் சாமிகும்பிடுகிறார். இரவு கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    மறுநாள் காலையில் கன்னியாகுமரி வரும் ஜனாதிபதி திரவுபதி முர்முவை வரவேற்கிறார். அதன் பிறகு அவருடன் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்கிறார். ஜனாதி பதி சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு கேரளா புறப்பட்டு சென்றதும் கவர்னர் ஆர்.என். ரவி சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    கவர்னர் வருகையையொட்டியும் கன்னியாகுமரியில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ×