search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைந்தது"

    • கரும்புகள் விளைந்தவுடன் வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.
    • ஏலத்திற்கு 4 ஆயிரத்து 100 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும் ஏலம் போனது.

     பரமத்திவேலூர்

    பரமத்திவேலூர் வட்டாரத்தில் அண்ணா நகர், சேளூர், சாணார்பாளையம், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், குறும்பல மகாதேவி, கொத்தமங்கலம், ஜமீன் இளம்பள்ளி, சோழ சிராமணி ஜேடர்பா ளையம், கோப்பணம்பா ளையம், கபிலர்மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. கரும்புகள் விளைந்தவுடன் வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

    பதிவு செய்யாத விவசாயிகள் இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து கொப்பரையில் ஊற்றி பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.

    பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கும் கொண்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 100 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,340 வரையிலும், அச்சு வெல்லம் சிலம்பம் ஒன்று ரூ.1,340 வரையிலும் ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 100 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட நேற்றைய ஏலத்தில் வெல்லம் விலை சற்று வீழ்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கத்தரிக்காய் ரூ.50-க்கு விற்பனை
    • தக்காளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து காணபபட்டது.

    கன்னியாகுமரி:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை கணிசமான அளவு உயர்ந்திருந்தது. காய்கறி விலைகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக தக்காளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து காணபபட்டது. குமரி மாவட்டத்திலும் காய்கறிகளின் விலை அதிகமாகவே இருந்தது. மார்க்கெட் டுக்கு உள்ளூர் பகுதியில் இருந்து வரக்கூடிய காய்கறிகள் குறைவான அளவில் இருந்தது.

    இதேபோல் ஓசூர், மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம், பெங்களூர் பகுதியிலிருந்தும் காய்கறிகள் குறைவாக வந்ததால் காய்கறிகளின் விலை ஏறுமூகமாக இருந்தது. குறிப்பாக தக்காளி, இஞ்சி, மிளகாய், பூண்டு விலை அதிகமாக உயர்ந்தது. தற்போது காய்கறிகளின் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் விலை குறைய தொடங்கியுள்ளது. தக்காளி கிலோ ரூ.135-ல் இருந்து ரூ. 120 ஆக குறைந்துள்ளது. மிளகாய் ரூ.120-ல் இருந்து ரூ.100 ஆக குறைந்துள்ளது.

    இதேபோல் கேரட், பீன்ஸ், புடலங்காய், கத்தரிக்காய், வழு தலங்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் குறைந்து வருகிறது. நாகர்கோவில் மார்க்கெட்டில் விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:- தக்காளி ரூ.120, இஞ்சி ரூ.280, மிளகாய் ரூ.100, பூண்டு ரூ.180, கேரட் ரூ.70, பீன்ஸ் ரூ.90, புடலங்காய் ரூ.30, கத்தரிக்காய் ரூ.50, வழுதலங்காய் ரூ.50, வெள்ளரிக்காய் ரூ.35, வெண்க்காய் ரூ.60, முட்டைக்கோஸ் ரூ.30, பீட்ரூட் ரூ.50, காலிபிளவர் ரூ.50, சேனைக் கிழங்கு ரூ.70, தடியங்காய் ரூ.30, உருளைக் கிழங்கு ரூ.25, பல்லாரி ரூ.25-க்கு விற்பனையானது.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், தற்பொழுது காய்கறிகள் வரத்து சற்று அதிகரித்துள்ளது. மேலும் ஆடி மாதம் என்பதால் காய்கறிகள் குறைவான அளவில் விற்பனை ஆகி வருகின்றன. இதனால் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது என்றார்.

    • ஏற்காட்டுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்வார்கள்.
    • கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும். தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் ஏற்காட்டுக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும், சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்வார்கள்.

    குறிப்பாக கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும். தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் ஏற்காட்டுக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

    எனினும் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணியை வருகை அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று ஏற்காட்டில் வழக்கத்தை விடவும் குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    இதனால் அண்ணா பூங்கா, படகு துறை மற்றும் காட்சி முனை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பணிகள் குறைவாக இருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டன.

    இது குறித்து சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் ஏற்காட்டுக்கு சுற்றுலா வருபவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்ததால் கோடை விடுமுறை பள்ளிகள் திறப்பு தள்ளி போனது. எனவே சனிக்கிழமை அன்று பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஞாயிறு ஒருநாள் விடுமுறைக்காக ஏற்காடு வருபவர்கள் குறைந்துவிட்டனர்.

    ஏற்கனவே மழைக்காலம் தொடங்கி விட்டதால் தமிழகம் முழுவதும் குளிர்ச்சியாகவே காணப்படுகிறது. எனவே ஏற்காடு வருவதை மக்கள் குறைத்துக் கொண்டனர் என்றனர்.

    மேட்டூர்

    மேட்டூர் அணை பூங்கா 33 ஏக்கர் பரப்பரளவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். மேலும் இந்த பூங்காவில் பொதுப் பணி துறை சார்பில் நுழைவு கட்டணமாக ரூ.5 வசூல் செய்யப்படுகிறது.

    பண்டிகை, விடுமுறை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சேலம், ஈரோடு, தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மேட்டூர் அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    நீண்ட நேரம் காவிரியில் நீராடி விட்டு பூங்காவிற்கு சென்றனர். பூங்காவில் இருந்த பாம்பு, முயல் பண்ணைகளை கண்டு ரசித்தனர். பூங்காவில் இருந்த ஊஞ்சல், சர்க்கிள் , ராட்டினம் விளையாடி சிறுவர், சிறுமிகள் மகிழ்ந்தனர். மேலும் பூங்கா நுழைவு கட்டணமாக வசூல் செய்ததில் ரூ.29880 கிடைத்தது.

    • அணைக்கு வினாடிக்கு 126 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • 1005 கன அடி தண்ணீ ர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு, 

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8மணி நிலவரப்படி 80.97 அடியாக இருந்தது.

    அணைக்கு வினாடிக்கு 126 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வாய்க்காலுக்கு 5 கன அடியும், தடப்பள்ளி அரக்கன் கோட்டைக்கு 800 கன அடியும், குடிநீருக்காக 200 கன அடியும் என மொத்தம் 1005 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 32.65 அடியா கவும், பெரும்ப ள்ளம் அணையின் நீர்மட்டம் 22.44 அடியாக வும், வரட்டு ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23.39 அடியாகவும் உள்ளது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.86 அடியாக சரிந்தது.
    • அணையில் இருந்து 855 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. அதேநேரம் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.86 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 151 கன அடியாக நீர்வரத்து குறைந்தது.

    கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி நீர்வந்த நிலையில் இன்று 700 கன அடியாக குறைந்துள்ளது.

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 855 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 92.90 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து 2,700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.

    பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2,47,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 92.90 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 756 கன அடியாக குறைந்தது.

    கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2,200 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 300 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 2,700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    • ஈரோடு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை தாறு மாறாக உயர்ந்து விட்டது.
    • திடீர் விலை ஏற்றத்தால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. தாளவாடி, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் வரத்தாகி வருகிறது.

    இங்கு காய்கறிகள் சில்லரை மற்றும் மொத்த வியாபாரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்துவிட்டது. இதன் காரணமாக ஒரு சில காய்கறிகளின் விலை தாறு மாறாக உயர்ந்து விட்டது.

    தினமும் 40 டன் காய்கறிகள் வரத்தாகி வந்த நிலையில் இன்று வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு 30 டன் மட்டுமே காய்கறிகள் வர த்தாகி இருந்தது.

    கடந்த வாரம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்ற காலி பிளவர் இன்று ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் பச்சை மிளகாய் கடந்த வாரம் ரூ.30 விற்ற நிலையில் இன்று ரூ.60 ஆக உயர்ந்து உள்ளது.

    கருப்பு அவரை கடந்த வாரம் ரூ.40-க்கு விற்ற நிலையில் இன்று ரூ. 70-ம், கத்தரிக்காய் கடந்த வாரம் ரூ.40-க்கு விற்ற நிலையில் இன்று ரூ.௭௦-க்கும், கொத்தவரங்காய் ரூ.40-க்கு விற்ற நிலையில் இன்று ரூ.70-க்கும் விற்பனையானது.

    வெண்டைக்காய் கடந்த வாரம் ரூ. 40 -க்கு கிலோ விற்ற நிலையில் இன்று ரூ.80-க்கு விற்பனை யானது.வெண்டைக்காயை பொறுத்தவரை எப்போதும் வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு ஆயிரம் கிலோ வரத்தாகி வந்த நிலையில் இன்று வெறும் 400 கிலோ மட்டுமே வரத்தாகி உள்ளது.

    காய்கறிகளின் திடீர் விலை ஏற்றத்தால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதேப்போல் மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:

    உருளைக்கிழங்கு-ரூ.25, முட்டைகோஸ்-ரூ.10, தக்காளி-ரூ.30, பெரிய வெங்காயம்-ரூ.25, சின்ன வெங்காயம்-ரூ.35, கேரட்- ரூ.40, முள்ளங்கி-ரூ.20, சுரக்காய் - ரூ.5, பாவ க்காய்-ரூ.40, புடல ங்காய்-ரூ.30, பீட்ரூட்- ரூ.50, பீன்ஸ் -ரூ.50, பட்டவரை -ரூ.40, பீர்க்கங்காய்-ரூ.60.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.96 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.

    பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2.47 லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானி சாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு இதுவரை திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல் நேற்று முதல் காலிங்கராயன் பாசனத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.96 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 298 கன அடியாக குறைந்தது.

    காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
    • அணையில் இருந்து 2,950 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.

    பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2,47,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவ தால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலுக்கு 2-ம் சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.53 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 725 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்காலுக்கு நேற்று 1,500 கன அடி தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இன்று 1,800 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதுபோல் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு ஆயிரம் கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 2,950 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது.
    • பொங்கல் பண்டிகை இரு நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதையடுத்து தேவை குறைந்து, பூக்கள் விலை குறைந்து வருகிறது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பொங்கல் பண்டிகை இரு நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதையடுத்து தேவை குறைந்து, சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்து வருகிறது.

    சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய (20. 1.23) பூக்களின் விலை நிலவரம் ( 1 கிலோ கணக்கில் ) : மல்லிகை - ரூ.1600, முல்லை - ரூ.1600, ஜாதி மல்லி - ரூ.1200, காக்கட்டான் - ரூ.600, கலர் காக்கட்டான் - ரூ.600, மலை காக்கட்டான் - ரூ.500, சி.நந்தியா வட்டம் - ரூ.90, சம்பங்கி - ரூ.100, சாதா சம்பங்கி - ரூ.100, அரளி - ரூ.200, வெள்ளை அரளி - ரூ.200, மஞ்சள் அரளி - ரூ.200, செவ்வரளி - ரூ.220, ஐ.செவ்வரளி - ரூ.220, நந்தியா வட்டம் - ரூ.90, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 423 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 -ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக உள்ளது.அணைக்கு வினாடிக்கு 423 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், காலிங்கராயன் பாசனத்தி–ற்கு 300 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    • நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் இன்றும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.65 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்ப குதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    எனினும் அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வந்தது.

    இந்நிலையில் 56 நாட்களுக்கு பிறகு நேற்று பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.92 அடியாக குறைந்தது. தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் இன்றும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 913 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி என மொத்தம் 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ×