search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dropped"

    • கரும்புகள் விளைந்தவுடன் வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.
    • ஏலத்திற்கு 4 ஆயிரத்து 100 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும் ஏலம் போனது.

     பரமத்திவேலூர்

    பரமத்திவேலூர் வட்டாரத்தில் அண்ணா நகர், சேளூர், சாணார்பாளையம், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், குறும்பல மகாதேவி, கொத்தமங்கலம், ஜமீன் இளம்பள்ளி, சோழ சிராமணி ஜேடர்பா ளையம், கோப்பணம்பா ளையம், கபிலர்மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. கரும்புகள் விளைந்தவுடன் வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

    பதிவு செய்யாத விவசாயிகள் இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து கொப்பரையில் ஊற்றி பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.

    பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கும் கொண்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 100 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,340 வரையிலும், அச்சு வெல்லம் சிலம்பம் ஒன்று ரூ.1,340 வரையிலும் ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 100 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட நேற்றைய ஏலத்தில் வெல்லம் விலை சற்று வீழ்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #INDvNZ #NewZealandTour
    புதுடெல்லி:

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஜனவரி மாதம் முதல் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டித் தொடர் ஜனவரி 24-ம் தேதி தொடங்குகிறது. ஆண்களுக்கான டி20 போட்டி தொடங்கும்போது பெண்களுக்கான டி20 போட்டியும் தொடங்க உள்ளது.

    புதிதாக நியமிக்கப்பட்ட பயிற்சியாளர் டபிள்யூ.வி.ராமன் தலைமையின் கீழ் முதல் சர்வதேச தொடரில் விளையாட உள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.



    உலகப் போட்டியில் சொதப்பியதால் மிடில் ஆர்டர் பேட்டிங் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்திக்கு நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு தொடர்களிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்குப் பதில் மோனா மேஷ்ராம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதிவிரைவாக பந்துவீசக்கூடிய ஆல்ரவுண்டர் ஷிகா பாண்டே டி20 அணிக்கு திரும்பி உள்ளார்.

    22 வயது நிரம்பிய டெல்லி வீராங்கனை பிரியா பூனியா, தற்போது நடைபெற்று வரும் சீனியர் பெண்கள் ஒருநாள் லீக் தொடரில் இரண்டு சதம் விளாசியதையடுத்து, அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகிறார்.

    ஒருநாள் போட்டித் தொடருக்கான அணி விவரம்:

    மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கவுர் (துணை கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிகஸ், பூனம் ராவத், தீப்தி ஷர்மா, ஹேமலதா, தானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), மோனா மேஷ்ராம், ஏக்தா பிஷ்த், பூனம் யாதவ், ராஜேஷ்வரி கயாக்வாட், ஜுலன் கோஸ்வாமி, மன்சி ஜோஷி, ஷிகா பாண்டே.

    டி20 போட்டித் தொடருக்கான அணி விவரம்:

    ஹர்மன்பிரீத் கிவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணை கேப்டன்), மிதாலி ராஜ், தீப்தி ஷர்மா, ஜெமியா ரோட்ரிகஸ், அனுஜா பாட்டில், ஹேமலதா, மன்சி ஜோஷி, ஷிகா பாண்டே, தானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூனம் யாதவ், ஏக்தா பிஷ்த், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, பிரியா பூனியா. #INDvNZ #NewZealandTour

    ×