search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வ.உ.சி. மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்தது
    X

    வ.உ.சி. மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்தது

    • ஈரோடு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை தாறு மாறாக உயர்ந்து விட்டது.
    • திடீர் விலை ஏற்றத்தால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. தாளவாடி, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் வரத்தாகி வருகிறது.

    இங்கு காய்கறிகள் சில்லரை மற்றும் மொத்த வியாபாரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்துவிட்டது. இதன் காரணமாக ஒரு சில காய்கறிகளின் விலை தாறு மாறாக உயர்ந்து விட்டது.

    தினமும் 40 டன் காய்கறிகள் வரத்தாகி வந்த நிலையில் இன்று வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு 30 டன் மட்டுமே காய்கறிகள் வர த்தாகி இருந்தது.

    கடந்த வாரம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்ற காலி பிளவர் இன்று ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் பச்சை மிளகாய் கடந்த வாரம் ரூ.30 விற்ற நிலையில் இன்று ரூ.60 ஆக உயர்ந்து உள்ளது.

    கருப்பு அவரை கடந்த வாரம் ரூ.40-க்கு விற்ற நிலையில் இன்று ரூ. 70-ம், கத்தரிக்காய் கடந்த வாரம் ரூ.40-க்கு விற்ற நிலையில் இன்று ரூ.௭௦-க்கும், கொத்தவரங்காய் ரூ.40-க்கு விற்ற நிலையில் இன்று ரூ.70-க்கும் விற்பனையானது.

    வெண்டைக்காய் கடந்த வாரம் ரூ. 40 -க்கு கிலோ விற்ற நிலையில் இன்று ரூ.80-க்கு விற்பனை யானது.வெண்டைக்காயை பொறுத்தவரை எப்போதும் வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு ஆயிரம் கிலோ வரத்தாகி வந்த நிலையில் இன்று வெறும் 400 கிலோ மட்டுமே வரத்தாகி உள்ளது.

    காய்கறிகளின் திடீர் விலை ஏற்றத்தால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதேப்போல் மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:

    உருளைக்கிழங்கு-ரூ.25, முட்டைகோஸ்-ரூ.10, தக்காளி-ரூ.30, பெரிய வெங்காயம்-ரூ.25, சின்ன வெங்காயம்-ரூ.35, கேரட்- ரூ.40, முள்ளங்கி-ரூ.20, சுரக்காய் - ரூ.5, பாவ க்காய்-ரூ.40, புடல ங்காய்-ரூ.30, பீட்ரூட்- ரூ.50, பீன்ஸ் -ரூ.50, பட்டவரை -ரூ.40, பீர்க்கங்காய்-ரூ.60.

    Next Story
    ×