search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை அகதிகள்"

    • பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தற்போது மீண்டு வருகிறது.
    • பெண்கள் தலைமையிலான சிறு, குறு, நிலையான நிதியை மேம்படுத்தவும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தற்போது மீண்டு வருகிறது. அந்நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கியது. இதில் முதல் தவணை வழங்கப்பட்ட நிலையில் 2-வது தவணைக்காக இலங்கை காத்திருக்கிறது.

    இந்த நிலையில் இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த உதவ அந்நாட்டுக்கு ரூ.1668 கோடி கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்தது.

    நாட்டின் வங்கி துறையில் ஸ்திரத்தன்மை, மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், பெண்கள் தலைமையிலான சிறு, குறு, நிலையான நிதியை மேம்படுத்தவும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    • பால் பாக்கெட் கூட அதிக விலைக்கு வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கண்ணீருடன் கூறினர்.
    • தமிழகத்துக்கு அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள். மேலும் உணவுப் பொருட்களின் பற்றாக்குறையால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

    இவ்வாறான நிலையில் வாழ்வாதாரம் தேடி ஏராளமானோர் இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

    குறிப்பாக யாழ்ப்பாணம், தலைமன்னார் பகுதியில் இருந்து குடும்பம், குடும்பமாக லட்சக்கணக்கில் பணம் கொடுத்து படகுகளில் தனுஷ்கோடி, அரிச்சல் முனை கடற்கரை பகுதிக்கு வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை 90-க்கும் மேற்பட்டோர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் இலங்கை தலைமன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இன்று அதிகாலை அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். முன்னதாக ராமேசுவரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இலங்கை அகதிகள் வந்துள்ளதாக தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைதொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் 7 அகதிகளையும் மீட்டு மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட னர். இதில் அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் தொல்புறத்தை சேர்ந்த நாகராஜ் (43), இவரது மனைவி வந்தினி (38) மற்றும் அனோ ஜன்ண (13), கஜிவன் (9), தனுஷ்கா (4), அஜந்தன் (18), கிசாலினி (17) ஆகியோர் படகுக்கு ரூ.1.50 லட்சம் கொடுத்து தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வந்தாக தெரிவித்தனர்.

    மேலும் அங்கு வாழ்வதற்கான உகந்த சூழல் இல்லை என்றும், பால் பாக்கெட் கூட அதிக விலைக்கு வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கண்ணீருடன் கூறினர்.

    விசாரணைக்கு பின்னர் 7 அகதிகளையும் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்க உள்ளதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தெரிவித்தனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி தற்போது வரை குறையாததால் அகதிகள் வருகை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கையில் இருந்து படகு மூலம் 2 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.
    • கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரம் தேடி தமிழகம் வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெடுக்கடி காரணமாக உணவுப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சேர்ந்த தமிழர்கள் அகதிகளாக தொடர்ந்து தனுஷ்கோடி வந்துள்ளனர்.

    தற்போது வரை 250-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக படகு மூலம் தனுஷ்கோடி வந்தனர். அனைவரையும் பாதுகாப்புடன் அழைத்து சென்று உரிய விசாரணைக்கு பின் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் தனித்தனி வீடுகள் வழங்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், இலங்கையில் இருந்து படகு மூலம் 2 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அவர்கள் இலங்கை வவுனியா பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது58), தலைமன்னார் பகுதியை சேர்ந்த நேச பெருமாள் (60) என்பதும் தெரியவந்தது.

    கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரம் தேடி தமிழகம் வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மண்டபம் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைக்கு பின் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • கடற்கரை அருகே இலங்கை அகதிகள் வந்திருப்பதாக அப்பகுதி மீனவர்கள் தனுஷ்கோடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • இலங்கை அகதிகள் 4 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட வருகிறார்கள்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக் கடி காரணமாக பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. அன்னிய செலாவணி இருப்பு குறைந்ததால் வெளிநாடுகளில் இருந்த அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் அந்த நாட்டு அரசு திணறியது.

    இதன் காரணமாக அரிசி முதல் காய்கறி வரை அனைத்து உணவுப்பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்தது. இதனால் அங்கு வாழ்வாதாரம் இழந்தும், வாழ வழியின்றியும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருவது தொடர்ந்து அதிகரித்துள்ளது.

    இதுவரை 265 பேர் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை ராமேசுவரம் கோதண்டராமர் கோவில் பகுதி கடற்கரை அருகே இலங்கை அகதிகள் வந்திருப்பதாக அப்பகுதி மீனவர்கள் தனுஷ்கோடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார் (வயது 36), அவரது மனைவி மேரி (34), மகள்கள் கிருத்திகா (7), கிருஷ்மா (4) என்பது தெரிய வந்தது. அவர்கள் 4 பேரும் மன்னார்வளைகுடா பகுதியில் இருந்து ரூ.1 லட்சம் பணம் கொடுத்து இன்று அதிகாலை 1 மணிக்கு தமிழகம் வந்ததாக தெரிவித்தனர்.

    அகதிகளாக வந்தவர்கள் கூறுகையில், வறுமையின் காரணமாகவும், தொடர்ந்து அங்கு வாழ வழியில்லாமல் போனதாலும் இங்கு வந்து தஞ்சமடைந்து உள்ளோம். தமிழகத்தில் ஏதாவது பிழைப்பு தேடி குடும்பம் நடத்தலாம் என்ற நம்பிக்கையுடன் முடிவு செய்து பிளாஸ்டிக் படகில் ரூ.1 லட்சம் பணம் கொடுத்து வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் எங்களை போன்று ஏராளமானவர்கள் தமிழகம் வரத்துடிக்கிறார்கள். ஆனால் படகுக்கு கொடுக்க பணம் கிடைக்காததால் வாழவும் முடியாமல், தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளவும் முடியாமல் தவித்து வருவதாக கண்ணீருடன் கூறினர்.

    தொடர்ந்து இலங்கை அகதிகள் 4 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட வருகிறார்கள். கடந்த 2022 ஆண்டு முதல் இன்றைய தேதி வரை இலங்கையில் இருந்து 269 பேர் அகதிகளாக இந்தியா வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சக்திவேல், லோகுஐயப்பன், தேவமணி ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
    • ஆஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தல் வழக்கு புதுவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.

    புதுச்சேரி:

    2010-ம் ஆண்டு இலங்கை அகதிகள் 15 பேரை புதுவை தேங்காய்த்திட்டு துறைமுகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மீன்பிடி படகு மூலம் அனுப்ப சிலர் முயன்றனர்.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீராம்பட்டினத்தை சேர்ந்த திராவிடர் விடுதலைக்கழக தலைவர் லோகு.ஐயப்பன், தி.மு.க.வை சேர்ந்த சக்திவேல், காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இதில் 3 பேர் தலைமறைவாகினர். 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர். இதற்கிடையே சக்திவேல், லோகுஐயப்பன், தேவமணி ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இதிலிருந்து விடுவிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அவர்கள் கடிதம் எழுதினர்.

    இதன்பின் 3 பேரும் அந்த சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தல் வழக்கு புதுவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், ஆட்கடத்தல் வழக்கு நிரூபிக்கப்படாததால், அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார்.

    வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தேவமணி 2021-ல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வறுமையின் காரணமாக அங்கு வாழ வழியின்றி தமிழகத்திற்கு வந்தோம்.
    • காலையில் படகு ஓட்டிகள் வந்து தனுஷ்கோடி கடலோர கரைப்பகுதியில் இறக்கி விட்டு சென்றதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    அன்னிய செலாவணி இருப்பு குறைந்ததால் வெளிநாடுகளில் இருந்த அத்தியவாச பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் அந்த நாட்டு அரசு திணறியது.

    இதன் காரணமாக அரிசி முதல் காய்கறி வரை அனைத்து உணவுப்பொருட்களின் விலையும் விண்ணை தொட்டன. இதனால் அங்கு வாழ்வாதாரம் இழந்தும், வாழ வழியின்றியும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருவது அதிகரித்துள்ளது.

    இதுவரை 257 பேர் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி கடலோரப் பகுதியான அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் இலங்கை அகதிகள் வந்திருப்பதாக அப்பகுதி மீனவர்கள் ராமேசுவரம் கடலோர காவல் படை குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் அரிச்சல் முனை பகுதியில் இருந்த 8 பேரை மீட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த ரூபன் மனைவி மரியா (வயது 35), மகன்கள் அபிலாஷ் (16) அபினாஷ் (14),சோதனை (8), அதுபோலே யாழ்பாணம் பகுதி அனைகோட்டை குலவாடி பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி மகன் விஜய் குமார் (50), இவரது மனைவி தர்சிகா (34), மகன்கள் அஸ்நாத் (15), யோவகாஷ் (11) இப்பகுதியை என தெரியவந்தது

    வறுமையின் காரணமாக அங்கு வாழ வழியின்றி தமிழகத்திற்கு வந்ததாகவும், இங்கே வந்தால் ஏதாவது பிழைப்பு தேடி குடும்பத்தை வழிநடத்தலாம் என்று முடிவு செய்து யாழ்ப்பாணம் கடலோரப் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் படகில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், இலங்கை யாழ்ப்பாணம் கடலோரப் பகுதியில் இருந்து நேற்று மாலை புறப்பட்டதாகவும் இன்று காலையில் படகு ஓட்டிகள் வந்து தனுஷ்கோடி கடலோர கரைப்பகுதியில் இறக்கி விட்டு சென்றதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    தொடர்ந்து இலங்கை அகதிகள் 8 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட வருகிறார்கள். கடந்த 2022 ஆண்டு முதல் இன்றைய தேதி வரை இலங்கையில் இருந்து 265 பேர் அகதிகளாக இந்தியா வந்துள்ளனர். 

    • பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்ததாக தெரிவித்தனர்.
    • அனைவரும் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அங்கு உணவு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

    இதன் காரணமாக அங்கு நடுத்தர மற்றும் ஏழை-எளிய மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டது. இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்கள் பலர், அங்கிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறி தமிழகத்திற்கு அகதிகளாக வந்தனர்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை 250-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடிக்கு வந்தார்கள்.பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்ததாக தெரிவித்தனர்.

    அவர்கள் அனைவரும் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தனுஷ்கோடி கடல் அருகே கோதண்டராம கோவில் பகுதியில் 3 அகதிகள் வந்திருப்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு மீனவர்கள் இன்று தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு இலங்கையை சேர்ந்த 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் இலங்கை யாழ்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த ஜிம்ஸ்ரிவ் என்கிற விஜயன் (வயது46), அவரது மனைவி ராஜினி (45), மகள் திபேந்தினி (18) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்களிடம் விசாரித்ததில் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி இலங்கையில் இருந்து வந்ததாகவும், அங்கிருந்து கள்ளப்படகு மூலம் நேற்று இரவு புறப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தனர். அவர்கள் 3 பேரையும் படகில் அழைத்து வந்தவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு தனுஷ்கோடி கோதண்டராம கோவில் கடலோர பகுதியில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

    நள்ளிரவில் இருந்து இன்று காலை வரை அங்கு அவர்கள் தவித்தப்படி நின்றிருக்கிறார்கள். மீனவர்கள் கொடுத்த தகவலையடுத்து, அவர்கள் 3 பேரையும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • இலங்கையில் இருந்து கடந்த வாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தனுஷ்கோடி வந்தனர்.
    • தனுஷ்கோடி அருகே உள்ள 5-வது மணல் திட்டையில் இன்று காலை 7 பேர் தவித்தபடி நின்றதை கடலுக்கு சென்ற மீனவர்கள் பார்த்தனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அங்கு காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

    இதன் காரணமாக அங்கு நடுத்தர மற்றும் ஏழை-எளிய மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் பலர் உயிர் பிழைத்தால் போதும் என்று குடும்பம் குடும்பமாக தமிழகத்துக்கு அகதிகளாக வரத்தொடங்கினர்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரை 240-க்கும் மேற்பட்டவர்கள் கடல் வழியாக படகுகள் மூலம் அகதிகளாக தனுஷ்கோடி மற்றும் ராமேசுவரத்திற்கு வந்தனர். கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அகதியாக வந்ததாக தெரிவித்த அவர்கள் அனைவரும், மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இலங்கையில் இருந்து கடந்த வாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தனுஷ்கோடி வந்தனர். அவர்களை கடலோர பாதுகாப்பு படை போலீசார் மீட்டு மண்டபம் முகாமில் தங்க வைத்தனர். இதற்கிடையே தனுஷ்கோடி அருகே உள்ள 5-வது மணல் திட்டையில் இன்று காலை 7 பேர் தவித்தபடி நின்றதை கடலுக்கு சென்ற மீனவர்கள் பார்த்தனர்.

    இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 2-வது மணல் திட்டைக்கு விரைந்து சென்று, அங்கு நின்று கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 7 பேரையும் மீட்டனர்.

    விசாரணையில், அவர்கள் இலங்கை முல்லைத்தீவு, தீர்த்தக்கரை பகுதியை சேர்ந்த ஜோப்ரி மகன் நியூட்டன் வில்லியம்(வயது43), அவரது மனைவி வனிதா(38), மகன்கள் விசால்(15), தோணி(10), ஜோன்(8), அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் மகள் ஷாலினி(17), அவரது மகன் ஆதீஸ்(15) என தெரியவந்தது.

    இவர்கள் கடந்த 27ந்தேதி இரவு 7 மணியளவில் இலங்கை முல்லைத்தீவில் இருந்து புறப்பட்டு படகு மூலம் இன்று அதிகாலை ஒரு மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை 2-ம் மணல் திட்டில் இறக்கி விடப்பட்டுள்ளனர். அவர்கள் ரூ.4 லட்சம் இலங்கை பணம் கொடுத்து வந்ததாகவும், தங்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு ராமேசுவரம் கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே வாழ வழியின்றி இங்கு வர நேரிட்டது என்று தெரிவித்தனர். 

    • இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்கள் பலர், அங்கிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறி தமிழகத்திற்கு அகதிகளாக வந்தனர்.
    • இலங்கையை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அங்கு காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

    இதன் காரணமாக அங்கு நடுத்தர மற்றும் ஏழை-எளிய குடும்பத்தினர் வாழ வழியின்றி தவித்தனர். இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்கள் பலர், அங்கிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறி தமிழகத்திற்கு அகதிகளாக வந்தனர்.

    அவர்கள் அனைவரும் ராமேசுவரம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.

    இலங்கை வவுனியா தேக்கன்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சாந்த குமார் (வயது33). இவர் தனது மனைவி ரூப லட்சுமி(26), மகன் ஹேம் சரண்(7), மகள் யோசனா(4), மற்றொரு மகன் தருஷான்(2) ஆகியோருடன் நேற்று இரவு இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு பிளாஸ்டிக் படகு ஒன்றில் புறப்பட்டு வந்துள்ளார்.

    அவர்களை படகில் அழைத்து வந்த நபர், தனுஷ்கோடி அரிச்சல் முனை கடல் பகுதியில் நள்ளிரவில் இறக்கி விட்டு சென்று விட்டார். அவர்கள் அங்கு தவித்தபடி நின்றதை இன்று அதிகாலை 3.30 மணியளவில் அந்த வழியாக சென்ற மீனவர்கள் பார்த்தனர். அவர்கள் அதுகுறித்து ராமேசுவரம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அரிச்சல் முனை பகுதிக்கு சென்று அங்கு தவித்தபடி நின்ற சாந்தகுமார், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டு கடற்கரைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் 5 பேரும் மண்டபம் கடலோர காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டனர்.

    இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்தது குறித்து சாந்தகுமார் மற்றும் அவரது மனைவியிடம் கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தினர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், அங்கு வாழ வழியின்றி தவித்ததன் காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர். மேலும் தங்களை படகில் அழைத்து வந்தவர்கள் ரூ.1லட்சம் வாங்கியதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு, அங்கிருந்து ராமேசுவரம் தனுஷ் கோடிக்கு இதுவரை 237 பேர் அகதிகளாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனுஷ்கோடி கடலோர பகுதிக்கு இலங்கை அகதிகள் சிலர் வந்திருப்பதாக மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் தனியாக தவித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை மீட்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடலோர பகுதிக்கு இலங்கை அகதிகள் சிலர் வந்திருப்பதாக மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் தனியாக தவித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை மீட்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதில், அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் புங்குடு தீவு பகுதியை சேர்ந்த ஜெயபரமேஸ்வரன், அவரது மனைவி வேலு மாலினி தேவி, அவர்களது மகள் தமிழினி, மகன் மாதவன் என தெரிய வந்தது.

    அவர்கள் 4 பேரும் தலா ஒருவருக்கு ரூ.1 லட்சம் வீதம் கொடுத்து தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் அருகே உள்ள ஒத்தப்பட்டி தெற்கு கடற்கரை பகுதிக்கு கள்ளத்தோணி மூலம் வந்ததாக தெரிவித்தனர்.

    அவர்கள் 4 பேரையும் போலீசார் மண்டபம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இன்று காலை 4 பேரையும் மண்டபம் முகாமுக்கு அழைத்து சென்று தங்கவைத்தனர்.

    அவர்களிடம் மத்திய-மாநில போலீசார் மற்றும் புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் தமிழ்நாட்டுக்கு வந்ததாக தெரிவித்தனர்.

    • பொருளாதார நெருக்கடி காரணமாக சமீபகாலமாக இலங்கையில் இருந்து ஏராளமான தமிழர்கள் அகதிகளாக கடல் வழியாக படகு மூலம் தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
    • நேற்று சுமார் 7 பேர் படகில் வந்து தனுஷ்கோடி அருகே உள்ள 3-வது மணல் திட்டு பகுதியில் தவித்தபடி நின்றுள்ளனர்.

    ராமநாதபுரம்:

    எல்லைதாண்டி மீன் பிடிப்பதாக தமிழக மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் இலங்கை கடற்படையினர் தான், இந்திய எல்லைக்குள் அத்துமீறி வருவதாக ராமேசுவரம் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    பொருளாதார நெருக்கடி காரணமாக சமீபகாலமாக இலங்கையில் இருந்து ஏராளமான தமிழர்கள் அகதிகளாக கடல் வழியாக படகு மூலம் தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    அதேபோன்று நேற்று சுமார் 7 பேர் படகில் வந்து தனுஷ்கோடி அருகே உள்ள 3-வது மணல் திட்டு பகுதியில் தவித்தபடி நின்றுள்ளனர். அவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றுள்ளனர்.

    இந்திய எல்லையில் உள்ள அந்த மணல் திட்டு பகுதிக்கு இலங்கை கடற்படையினர் அத்துமீறி வந்து அகதிகளாக வந்தவர்களை இலங்கைக்கு பிடித்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    • அகதிகள் முகாமில் இருந்தபோது அடிப்படை வசதிகள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கும்.
    • எங்களுக்கு எல்லாம் புதிய வீடு என்பது கனவு இல்லம்போல்தான் இருந்து வந்தது.

    புதிய வீடு கிடைத்த அகதிகள் முகாமை சேர்ந்த சிவமலர் (வயது 35) என்பவர் தெரிவிக்கையில், நான் ஒரு வயதில் எனது பெற்றோருடன் தமிழகத்துக்கு வந்தேன். தற்போது எனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் முகாமில் பழுதடைந்த வீட்டில் வசித்து வந்தேன். மழைக்காலங்களில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீட்டிற்குள் வழிந்தோடும் நிலை இருந்தது. நமக்கும் புது வீடு கிடைக்கும் என்று கனவில்கூட நினைத்து பார்த்ததில்லை. எத்தனையோ முதல்வர்கள் ஆட்சியில் இருந்து வந்தாலும் எங்கள் நிலை குறித்து அறிந்து புதிய வீடு வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.

    அகதிகள் வாழ்க்கையிலும் ஒளியேற்றி வைத்து எங்கள் குழந்தைகளை தலைநிமிரச் செய்து சமூகத்தில் ஒரு அங்கமாக உணர்த்திய முதல்-அமைச்சருக்கு காலம் முழுவதும் நன்றி கடன் செலுத்துவோம் என்றார்.

    பயனாளி ஜோதிமலர் (30) என்பவர் தெரிவிக்கையில், எனது பெற்றோர் கடந்த 1990ம் ஆண்டு இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு வந்தனர். நான்பிறந்ததே தமிழகத்தில்தான். தற்போது எனக்கு திருமணம் ஆகி கணவர் தேவதாஸ் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். அகதிகள் முகாமில் இருந்தபோது அடிப்படை வசதிகள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கும். நாங்கள் கேட்டாலும் அது பல சமயங்களில் கிடைக்காது. அப்போதுதான் நாங்கள் அகதிகள் என்ற உணர்வே ஏற்படும். எங்களுக்கு எல்லாம் புதிய வீடு என்பது கனவு இல்லம்போல்தான் இருந்து வந்தது. தற்போது எங்களுக்கும் வீடு வழங்கி சமுதாயத்தில் தலைநிமிர செய்த முதல்-அமைச்சருக்கு நன்றி.

    என்னைப்போலவே இலங்கையில் இருந்து வந்த பெரும்பாலானோர் தற்போது புதிய வீட்டில் குடியேறி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும்போது அகதிகள் என்ற உணர்வே இல்லாமல் மறைந்து விட்டது என்றார்.

    ×