search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி அமாவாசையை முன்னிட்டுமேச்சேரி பத்திரகாளியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை
    X

    ஆடி அமாவாசையை முன்னிட்டுமேச்சேரி பத்திரகாளியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை

    • மேச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலுக்கு பண்டிகை மற்றும் விசேஷம் அமாவாசை நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
    • மேச்சேரி பத்திரகாளியம்மன் கோவிலுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி பத்திரகாளியம்மன் கோவிலுக்கு ஆடி அமாவா சையை முன்னிட்டு ஏராள மான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மேட்டூர் அருகே மேச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலுக்கு பண்டிகை மற்றும் விசேஷம் அமாவாசை நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    குறிப்பாக அமாவாசை நாட்களில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வந்து செல்வார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் ஆடி அமாவாசை என்பதால் பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பத்திரகாளி அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×