search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனத்துறையினர்"

    • அரிசி கொம்பனை பிடிக்க வரவழைக்கப்பட்ட 3 கும்கிகளும் கம்பம் வனச்சரக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    • கம்பம், சின்னமனூர், சரகங்களைச் சேர்ந்த வனத்துறையினர் மட்டும் அரிசி கொம்பனை கண்காணித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றி வந்த அரிசி கொம்பன் காட்டு யானை கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி கேரள வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்டது.

    அதன் பின்பு அங்கேயே சுற்றித்திரிந்த அரிசி கொம்பன் கடந்த மாதம் 27-ந் தேதி தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் அதிரடியாக புகுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    அங்கிருந்து சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புகுந்த அரிசி கொம்பன் சண்முகா நதி அணைப்பகுதியில் தஞ்சமடைந்தது. கடந்த 5 நாட்களாக அதே பகுதியில் உள்ள அரிசி கொம்பன் யானைக்கு பார்வை குறைபாடு மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது.

    அதற்கு தேவையான உணவை வனத்துறையினர் வைத்து விட்டு வந்து விடுகின்றனர். குறிப்பாக அரிசி, பலாப்பழங்கள் ஆகியவற்றை வைப்பதால் அதனை உண்டு வருகிறது. மேலும் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் அதற்கு இதமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    சாந்தமாக இருந்தாலும் மக்கள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் சத்தம் போட்டவாறே நகர்ந்து வருகிறது. இதனால் அதன் செய்கையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் பத்மாவதி தலைமையில் நூற்றுக்கும் அதிகமான வனத்துறையினர் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து முகாமிட்டுள்ளனர்.

    அரிசி கொம்பனை பிடிக்க வரவழைக்கப்பட்ட 3 கும்கிகளும் கம்பம் வனச்சரக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. யானையை பிடிக்க வரவழைக்கப்பட்ட தெப்பாக்காடு மற்றும் குரங்கணி பகுதியைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் 22 பேரும் கடந்த 3 நாட்களாக ஓவுலாபுரம் வனப்பகுதியில் தங்கியுள்ளனர்.

    அங்குள்ள பெருமாள் கோவிலை அரிசி கொம்பன் சுற்றி வருகிறது. கம்பம், சின்னமனூர், சரகங்களைச் சேர்ந்த வனத்துறையினர் மட்டும் அதனை கண்காணித்து வருகின்றனர்.

    ஏற்கனவே அரிசி கொம்பனுக்கு மயக்க ஊசி செலுத்திய கேரள டாக்டர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. பொதுவாக மரங்கள் மற்றும் பாறைகளின் மேல் நின்று மயக்க ஊசி செலுத்த வேண்டும். ஆனால் அரிசி கொம்பனை அவ்வாறு செய்ய முடியாது. ஏதாவது வாகனங்களின் மீது அமர்ந்து 10 அல்லது 15 அடி தூரத்தில் இருந்து மயக்க ஊசியை செலுத்த வேண்டும். அந்த சமயத்தில் அது எதிர்தாக்குதல் நடத்த வாய்ப்பு உண்டு.

    அப்போது வாகனங்களை பயன்படுத்த வேண்டும். பொதுவாக யானைகளை விரட்ட பட்டாசு கொளுத்தினால் அது மிரண்டு ஓடும். ஆனால் அரிசி கொம்பன் பட்டாசு கொளுத்திய திசையை நோக்கி ஓடி வரும் என்பதால் அது போன்ற செய்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

    இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் அதிக நாட்கள் சுற்றி வந்த அரிசி கொம்பன் தற்போது உடல் நலம் குன்றி காணப்படுவதாக அறிந்த செய்தி கேட்டு அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், அரிசி கொம்பன் பார்ப்பதற்கு மற்ற யானைகளைக் காட்டிலும் பிரம்மிப்பான தோற்றத்தில் இருக்கும். அதற்கு தேவையான இரை கிடைத்து விட்டால் யாரையும் தொந்தரவு செய்யாது. யானைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதியில் குடியிருப்புகள் இருப்பதால் அதனை நோக்கி நகர்ந்து வருகிறது.

    பெரும்பாலும் அரிசி கொம்பன் கூரை வேயப்பட்ட வீடுகளையே குறி வைத்து சேதப்படுத்தும். ஏனெனில் அங்குதான் அரிசி இருக்கும் என்பதை அது நன்றாக உணர்ந்துள்ளது. கடந்த மாதம் ஹைவேவிஸ் தொழிலாளர்கள் குடியிருப்பில் 10 நாட்கள் சுற்றி வந்த போதும் யாரையும் எதுவும் செய்யவில்லை.

    ரேசன் கடை ஜன்னலை மட்டும் உணவுக்காக சேதப்படுத்தியது. தற்போது அதன் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் வனத்துறையினர் உரிய சிகிச்சை அளிக்க முன் வர வேண்டும் என்றனர். அரிசி கொம்பன் யானைக்கு மூணாறு பகுதியில் ரசிகர் மன்றம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்குள்ள ஜீப் டிரைவர்கள் சார்பில் அரிசி கொம்பன் தேனீர் கடை தொடங்கப்பட்டது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் யானை உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

    • அரிசி கொம்பன் யானை ஓர் இடத்தில் தொடர்ந்து நின்றால் மட்டுமே மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும்.
    • மருந்து செலுத்தியதும் அங்கும் இங்கும் 1 மணி நேரம் அரிசி கொம்பன் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதால் அந்த பாதையை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    உத்தமபாளையம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல், சாந்தம்பாறை பகுதியில் அட்டகாசம் செய்து 11 பேரை பழி வாங்கிய அரிசி கொம்பன் கடந்த ஏப்ரல் மாதம் கேரள வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

    அதன் பிறகு தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்ட அரிசி கொம்பன் கடந்த 27-ந் தேதி தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்தது. சாலைகள் மற்றும் தெருக்களில் நடந்து சென்றவர்களை விரட்டியதுடன் அங்கிருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோவையும் சேதப்படுத்தியது.

    சாலையில் நடந்து வந்த கம்பத்தைச் சேர்ந்த பால்ராஜ் (65) என்பவரை தாக்கியதில் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். நேற்று அவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்.

    இதனிடையே சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி பகுதிகளில் புகுந்த அரிசி கொம்பன் ராயப்பன்பட்டி சண்முகா நதி அணைப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனை பிடிப்பதற்காக அழைத்து வரப்பட்ட 3 கும்கி யானைகள் கம்பம் வனப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

    சண்முகநாதன் கோவிலில் புகுந்த அரிசி கொம்பன் அங்கே தங்கி இருந்து கோவிலில் பூஜை செய்து வரும் சரஸ்வதியம்மாள் (63) என்பவரது வீட்டை இடித்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து அவர் கோவிலுக்குள் சென்று கிரில் கேட்டை பூட்டிக் கொண்டார். அதன் பிறகு கோவிலுக்கு வந்த யானை அங்கிருந்த சமையலறை சுவற்றை சேதப்படுத்தி உள்ளே இருந்த பருப்பு, அரிசி, உப்பு ஆகியவற்றை தின்று விட்டு சென்றது. கடந்த 5 நாட்களாக கம்பம் சுற்று வட்டார பகுதிகளை பீதியில் ஆழ்த்தியுள்ள அரிசி கொம்பன் யானை சோர்வுடனும், தும்பிக்கையில் காயத்துடனும் சுற்றி வருகிறது.

    அரிசி கொம்பன் யானை ஓர் இடத்தில் தொடர்ந்து நின்றால் மட்டுமே மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும். அதிலும் கடந்த முறை நடந்த ஆபரேசனின்போது 6 மயக்க ஊசி செலுத்தியும் அரிசி கொம்பன் பிடிபடவில்லை. எனவே மருந்தின் அளவை அதிகரித்து மயக்க ஊசி செலுத்தும் முனைப்பில் மருத்துவ குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    மருந்து செலுத்தியதும் அங்கும் இங்கும் 1 மணி நேரம் அரிசி கொம்பன் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதால் அந்த பாதையை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் மற்றும் தோட்டத்தொழிலாளர்கள் யாரும் செல்லாமல் கண்காணித்து வருகின்றனர்.

    கடந்த 5 நாட்களாக வனத்துறையினர், போலீசார் என 150-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து அரிசி கொம்பனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் தற்போது பாதிக்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பப்பட்டனர். சிறு சிறு குழுக்களாக சுழற்சி முறையில் யானை இருக்கும் இடத்தை தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.

    தற்போது இருக்கும் இடம் மேகமலை அடிவார பகுதியாகும். இங்கிருந்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியிலேயே தொடர்ந்து வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். முதுமலை உள்ளிட்ட யானைகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் சமிக்ஞை மொழிகளை பேசி தைரியமாக நுழைபவர்கள் முதுமலை பழங்குடி இன மக்கள். இவர்கள் ஆக்ரோஷமாக சுற்றித்திரியும் யானைகளிடம் சங்கேத மொழிகளால் பேசி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திறமை பெற்றவர்கள்.

    அக்குழுவைச் சேர்ந்த பொம்மன், சுரேஷ், சிவா, ஸ்ரீகாந்த் ஆகிய 4 பழங்குடியினர் கம்பம் வந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் அரிசி கொம்பனை அதன் பாணியில் நடந்து வெளியே கொண்டு வர கும்கி யானைகளுடன் செல்ல உள்ளனர். எனவே அரிசி கொம்பன் யானை இன்று வனப்பகுதிக்குள் விரட்டப்படும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • தற்போது சண்முகா நதி அணை பகுதியில் அரிசி கொம்பன் யானை சுற்றித் திரிகிறது.
    • மருத்துவ குழுவினர் தெரிவிக்கையில், யானையை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்திய பிறகே கும்கிகளை வரவழைக்க முடியும்.

    கம்பம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 11 உயிர்களை பலி வாங்கிய அரிசி கொம்பன் காட்டு யானையை கடந்த மாதம் 27-ந் தேதி கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தேக்கடி வனப்பகுதியில் விட்டனர்.

    அதன் பிறகு மெல்ல மெல்ல தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது. கடந்த 27-ந் தேதி லோயர் கேம்ப் தனியார் திருமண மண்டபம், சுருளியாறு மின் நிலையம், நாட்டுக்கல், நந்தகோபாலன் கோவில் தெருக்களில் சுற்றித் திரிந்தது.

    அன்று கம்பத்தில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்த காவலாளியான மேற்கு ஆசாரிமார் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் (வயது 65) என்பவரை தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை அமைச்சர்கள் இ.பெரியசாமி, மதிவேந்தன் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறியதுடன் நிவாரண உதவியும் வழங்கினர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை பால்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    கம்பம் 28-வது மேற்கு ஆசாரிமார் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். 1 மகளுக்கும், மகனுக்கும் திருமணம் ஆகி விட்டது. விஷ்ணுபிரியா என்ற 2-வது மகளுக்கு திருமணம் ஆகவில்லை. அவருக்கு வரன் பார்த்து வந்த நிலையில் பால்ராஜ் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து அவரது மனைவி பிச்சையம்மாள் கூறுகையில், ஏழ்மையான எங்கள் குடும்பத்தில் ஒரே ஆதரவாக எனது கணவர் மட்டுமே இருந்தார். ஒரு மகனையும், ஒரு மகளையும் திருமணம் செய்து வைத்த நிலையில் 2-வது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு முன்பாகவே இறந்து விட்டார். இனி எங்கள் குடும்பத்துக்கு யார் ஆதரவு என்பது தெரியவில்லை. எனவே அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என்றார்.

    இதனிடையே அரிசி கொம்பன் யானையை பிடிக்க தொடர் வேட்டை நடந்து வருகிறது. அதனை பிடிக்க வந்த 3 கும்கி யானைகள், கம்பம் வனத்துறை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சண்முகா நதி அணை பகுதியில் அரிசி கொம்பன் யானை சுற்றித் திரிகிறது.

    இதனையடுத்து வனத்துறையினர் மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் பத்மாவதி, துணை இயக்குனர் ஆனந்த் தலைமையில் முகாமிட்டுள்ளனர். மருத்துவக்குழுவினர், மயக்க ஊசி செலுத்த தயாராகினர். ஆனால் சுதாரித்துக்கொண்ட அரிசி கொம்பன் டாக்டர்களை கண்டதும் அங்கிருந்து வெளியேறியது. அது செல்லும்போது மயக்க ஊசி செலுத்த முடியாது என்பதால் 'ட்ரேக்கிங் டீம்' ஊட்டி யானைகள் முகாமில் இருந்து வந்த சிறப்பு குழுவினர் பின் தொடர்ந்து சென்றனர். அதனையடுத்து சண்முகநாதன் கோவில் வழியாக பத்துக்கூடு பகுதிக்கு சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அரிசி கொம்பன் யானையை பிடிக்க ஏற்கனவே இருந்த டாக்டர்கள் விடுவிக்கப்பட்டு பிற மாவட்டங்களில் இருந்து வன உயிரின சிறப்பு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவ குழுவினர் தெரிவிக்கையில், யானையை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்திய பிறகே கும்கிகளை வரவழைக்க முடியும். அதற்கு முன்பாக கும்கிகள் இங்கு வந்தால் அது வேறு இடத்துக்கு சென்று விடும். வனப்பகுதியில் உள்ள பாதைகளை ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு சமப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக அது விரும்பும் உணவு கிடைக்காததால் மிகவும் சோர்வோடு காணப்படுகிறது. மேலும் 3 நாட்களில் ஒருமுறை மட்டுமே சாணமிட்டுள்ளது. எனவே காலி வயிற்றுடன் நடமாடுவதால் மலை ஏற முடியாமல் சுற்றி வருகிறது என்று தெரிவித்தனர்.

    இதனிடையே அரிசி கொம்பன் யானையை பிடிக்க அங்குள்ள கூத்தநாச்சி கோவிலில் தலைமை வனப்பாதுகாவலர் பத்மாவதி ஆலோசனைப்படி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கம்பம், சுருளிப்பட்டி, காமையகவுண்டன்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு தொடர்கிறது. ராயப்பன்பட்டி அருகே விவசாய தோட்டங்களில் வேலை செய்து வந்த கூலித் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். சுருளி அருவிக்கு குளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

    அரிசி கொம்பன் யானையை பிடிக்கும் பணியில் 150 போலீசார் மற்றும் வனத்துறையினர், மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இருந்தபோதும் அவர்களுக்கு பிடி கொடுக்காமல் யானை தொடர்ந்து போக்கு காட்டி வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    • கண்காணிப்பு கேமராவில் நான்கிற்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் இரவு நேரங்களில் சுற்றுவது பதிவாகியுள்ளது.
    • இறைச்சிக்கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவது அதிகரித்துள்ளது.

     உடுமலை :

    உடுமலை அருகே தாந்தோணி, துங்காவி, இந்திராநகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக தோட்டங்களில், பராமரிக்கப்படும் ஆடுகள் மர்மவிலங்குகளால் வேட்டையாடப்படுவது தொடர்கதையாக உள்ளது. சின்னவீரம்பட்டி இந்திராநகர் பகுதியில், கந்தவேல் என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள், கழுத்து மற்றும் வயிறு பகுதியில் கடிபட்டு உயிரிழந்து கிடந்தது.அப்பகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் சில கன்றுக்குட்டிகள் இவ்வகையில் உயிரிழந்து ள்ளது.வனத்துறை சார்பில் மர்மவிலங்கு நடமாட்டம் குறித்து கண்காணிக்க பல்வேறு இடங்களில் கேமரா பொருத்தப்பட்டது.

    இது குறித்து உடுமலை வனச்சரக அலுவலர்கள் கூறியதாவது:- தாந்தோணி சுற்றுப்பகுதியில் குறிப்பிட்ட சுற்றளவில் மட்டுமே இத்தகைய சம்பவங்கள் நடக்கிறது.சம்பவ இடத்தில் கால்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டது.மேலும் கண்காணிப்பு கேமராவில் நான்கிற்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் இரவு நேரங்களில் சுற்றுவது பதிவாகியுள்ளது.சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டையாடினால் இறை ச்சியை அவ்விடத்திலேயே விட்டு செல்லாது.எனவே குறிப்பிட்ட சுற்றளவில் சுற்றித்திரியும் நாய்களே ஆடுகளை குறிவைத்து தாக்குவது உறுதியா கியுள்ளது என்றனர். உடுமலை சுற்றுப்பகுதியில் இறைச்சிக்கழிவுகளை திறந்தவெளியில் கொ ட்டுவது அதிகரித்துள்ளது. இத்தகைய கழிவுகளை உண்ணும் நாய்கள் தோட்டங்களில், வளர்க்கப்படும் கோழி, ஆடு, கன்றுக்குட்டிகளை குறிவைத்து தாக்குகின்றன.

    எனவே இறைச்சிக்க ழிவுகளை திறந்தவெளியில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அச்சத்திலுள்ள மக்களின் பாதுகாப்புக்காக சம்பவ இடங்களில் கூண்டு வைத்து நாய்களை பிடிக்க, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மான் வனப்பகுதிக்கு சென்று அதிகாலையில் மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வந்துவிடும்.
    • அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் மான் நுழைந்தது.

    விழுப்புரம்:

    செஞ்சிக் கோட்டை சுற்றியுள்ள வனப்பகுதியில் மான்கள் அதிகளவில் இருக்கின்றன. அவைகளில் ஒரு மான் நீண்ட நாட்களாக செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சுற்றித் வந்தது. சில நாட்களில் இரவு நேரத்தில் வனப்பகுதிக்கு சென்று அதிகாலையில் மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வந்துவிடும். அவ்வாறு நேற்று இரவு வனப்பகுதிக்கு சென்ற மான் இன்று அதிகா லையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தது.

    அலுவலக கேட் பூட்டப்பட்டிருந்ததால், அலுவலகம் அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் மான் நுழைந்தது. இதனை பார்ப்பதற்காக அப்பகுதி மக்கள் குவிந்தனர். தகவல் அறிந்த செஞ்சி வனத்துறை வனச்சரகர் வெங்கடேசன் தலைமை யிலான வனவர்கள் மானை பக்குவமாக பிடித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் விட்டனர். குடியிருப்பு பகுதியில் வந்த மானை காண பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் அரியவகை மரங்கள், செடிகள் கருகின.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அண்மையில் புலிகள் காப்பமாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. யானை, சிறுத்தை, புலிகள், சருகுமான்கள், புள்ளி மான்கள், மிளாமான்கள் போன்றவை அதிகளவில் உள்ளன.

    இங்குள்ள பேய் மலை கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் மலையில் உள்ள பெரும்பாலான இடங்கள் வறண்டு காணப்படுகிறது. வனவிலங்குகளும் தண்ணீரை தேடி ஊருக்குள் வரும் நிலை உருவாகியுள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு பேய் மலையில் உள்ள மொட்டை என்ற இடத்தில் இடி, மின்னல் தாக்கியது. இதனால் அங்கிருந்த காய்ந்த மரங்கள் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் அருகில் இருந்த மரம், செடி, கொடிகளிலும் தீ பரவ தொடங்கியது.

    இதைப்பார்த்த மலைவாழ் மக்கள் உடனே விருதுநகர் மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இரவு விரைந்து வந்த வனத்துறையினர் தீவிபத்து நடந்த பகுதிக்கு சென்று பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ பரவாமல் தடுத்தனர். இந்த தீவிபத்து மலையில் இருந்த அரியவகை மரம், செடி, கொடிகள் கருகின.  

    • ஒரு மாதம் கடந்த நிலையில் சிறுத்தை சிக்கவில்லை.
    • மலையடிவாரப்பகுதியில் ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது.

    காங்கயம் :

    காங்கயம் ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தை மலையடிவார பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்கள் ஆகிவற்றை இழுத்து சென்று கொன்று தின்றது. இந்த சம்பவம் தொடர்கதையானதால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். ஊதியூர் மலையடிவார பகுதிக்கு செல்லவே அஞ்சினர். எனவே சிறுத்தையை பிடித்துவனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கடந்த 30 நாட்களுக்கு மேலாக ஊதியூர் வனப்பகுதியில் 30 கண்காணிப்பு கேமராக்கள், 4 கூண்டுகள் ஆகிவற்றை வைத்து கண்காணித்து வந்தனர். ஆனால் இதுவரை சிறுத்தை குறித்த எந்தவித காட்சிகளும் கேமராக்களில் பதிவாகவில்லை. சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டுள்ள கூண்டிலும் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டி வந்தது. மேலும் சிறுத்தை ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி சுமார் 1 மாத காலம் ஆனநிலையில் ஊதியூர் மலையடிவார பகுதியில் வசிக்கும் மக்கள் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுமோ? என்று அச்சத்தில் உறைந்துள்ளனர். எனவே அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது :- ஒரு மாதம்கடந்த நிலையில் சிறுத்தை சிக்கவில்லை. அவ்வப்போது மலையடிவாரப்பகுதியில் ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. மாறாக சிறுத்தையின் கால்தடங்கள் மட்டுமே கிடைத்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் வனத்துறை வீரர்கள் சிலர் சிறுத்தையை நேரில் பார்த்ததாக தெரிவித்தனர்.

    இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிறுத்தை வனப்பகுதியை விட்டு வந்து ஆடு மாடுகளை வேட்டையாடவில்லை. சமீபத்திய கால்தடங்களும் கிடைக்க வில்லை. இதனால் எங்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இரவு நேரங்களில் வழக்கம் போல் இதுவரை வெளியே நடமாட முடியவில்லை. தற்போது ஊதியூர் வனப்பகுதியில் சிறுத்தை பதுங்கி உள்ளதா? எனவும் சந்தேகம் உள்ளது. இதனால் பெரும் குழப்பம் அடைந்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது :- வனப்பகுதிக்குள்ளேயே சிறுத்தை பதுங்கி இருந்து அங்குள்ள மான்களை வேட்டையாடி சாப்பிட்டு வரலாம். வனப்பகுதியில் அதற்கு உணவு கிடைக்காமல் போனால் வெளியே வந்து வேட்டையாடலாம். ஆனால் இதுவரை சிறுத்தை வேட்டையாடி சென்றதாக எந்த தகவலும் வரவில்லை. ஒருவேளை வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்ததா? என தெரியவில்லை. அப்படி சிறுத்தை இடம் பெயர்ந்தால் கண்டிப்பாக உணவிற்காக வெளியிடங்களில் வேட்டையாடி இருக்கும். இதுபோன்ற எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை. இதனால் எங்களுக்கே குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. எனவே மேலும் 2 அல்லது 3 நாட்கள் பொறுத்திருந்து சிறுத்தை குறித்த ஏதாவது தகவல் கிடைக்கிறதா? என்று பார்க்க வேண்டும். நாங்கள் தொடர்ந்து சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். பொதுமக்கள் யாராவது சிறுத்தையை பார்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் என தெரிவித்துள்ளனர்.

    • பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு கொடுக்காமல் யானை பயணம் செய்து தனது வாழ்க்கை பயணத்தை முடித்துக்கொண்டது.
    • வனப்பகுதியை விட்டு காட்டுயானைகள் வெளியே வராமல் இருக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியில் இருந்து கம்பைநல்லூர் அருகேயுள்ள கெலவள்ளி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பு வழியாக காட்டுயானை சென்றுள்ளது.

    அப்பொழுது விவசாய நிலத்தில் இருந்து ஏரிக்கரையின் மீது ஏறும் போது தாழ்வாக இருந்த மின் கம்பியில் யானை உரசியதால் தலை, காது பகுதிகளில் மின்சாரம் தாக்கியது.

    இதில் அப்படியே அந்த ஆண் யானை சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

    இதனையடுத்து பின் தொடர்ந்து வந்த பாலக்கோடு மற்றும் மொரப்பூர் வனத்துறையினர் யானை உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து உயிரிழந்த யானையை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர்.

    தருமபுரி மாவட்ட வனஅலுவலர் கார்த்தியாயினி (பொறு) தலைமையில் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் குழு யானை உயிரிழந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யபட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

    நல்லடக்கம் செய்யபட்ட இடத்தில் கெலவள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் இறந்தவர்களுக்கு செய்யும் சடங்கை போல் துத்தாரி ஊதியும், சாமதளம் அடித்து, மஞ்சள் தூவி, குங்குமிட்டு, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக யானை நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாரண்டஹள்ளி அருகே ஒரே இடத்தில் மூன்று காட்டு யானை மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது. இந்த சோகம் நீங்குவதற்குள் மீண்டும் 25 வயது மதிக்க தக்க ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு தனது பயணத்தை தொடங்கிய இந்த ஆண் யானை 17 மணி நேரம் எங்கும் நிற்காமல், உணவு எடுக்காமல் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு கொடுக்காமல் பயணம் செய்து தனது வாழ்க்கை பயணத்தை முடித்துக்கொண்டது.

    கடந்த 40 நாட்களாக தனது நண்பனை தேடி வனத்தை ஒட்டியுள்ள பகுதிகள் வழியாக ஊர் ஊராக சுற்றி பார்த்தும் தனது நண்பனை பார்க்காமலேயே உயிரிழந்த பரிதாபம் இந்த யானைக்கு மட்டும் தான் ஏற்பட்டுள்ளது.

    வனப்பகுதியை விட்டு காட்டுயானைகள் வெளியே வராமல் இருக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னம்பட்டி வனச்சரக எல்லை பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது.
    • மேலும் அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த சென்னம்பட்டி வனச்சரக எல்லைப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் அந்தியூர் அருகேயுள்ள கோவிலூர், புதுக்காடு பகுதியில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை அப்பகுதி விவசாயத் தோட்டத்தில் புகுந்தது.

    தொடர்ந்து அந்த சிறுத்தை அங்கிருந்த நாயைக் கடித்து இழுத்துச் சென்றது.

    இதைக் கண்ட அப்பகுதி மக்கள் சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்து க்கு வந்த வனத்துறையினர் அந்த பகுதியில் இருந்த காலடித் தடயங்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது வனத்துறையினர் அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.

    இதைத் தொடர்ந்து வன எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களிலும், விவசாயத் தோட்டத்து வீடுகளிலும் உள்ள மக்களுக்கு சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும், எச்சரிக்கையுடன் இருக்கு மாறும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

    மேலும் 5 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டன. இருந்த போதிலும் வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க முழு முயற்சியுடன் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் அதிருப்தி யில் உள்ளதாக கூறப்படு கிறது.

    இந்நிலையில் பல நாய்க ளை சிறுத்தை கவ்விச் சென்றது குறித்தும் வனத்துறைக்கு பொது மக்கள் தகவல் தெரி வித்தனர். இதனால் வன எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் பொதுமக்கள் பீதியில் காணப்பட்டு வந்த னர்.

    எனவே இந்த பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லை யெனில் வனத்துறையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொது மக்கள் முடிவு செய்தனர்.

    இந்நிலையில் புதுக்காடு பகுதியில் சிறுத்தையை பிடிக்க வத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். தொடர்ந்து வனத்துறை யினர் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என கண்காணித்து வருகிறார்கள்.

    சிறுத்தை நடமாட்டம் காணப்பட்ட பின்னர் 25 நாட்களுக்குப் பிறகு மிக தாமதமாக கூண்டு வைக்க ப்பட்டது அந்த பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வரு கின்றன. தாளவாடி வன ச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு ,காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மல்குத்தி புரம் பகுதியில் விவசாய தோட்டத்தில் புகுந்த சிறுத்தை ஆடு மற்றும் காவல் நாய்களை வேட்டை யாடி வந்தது. பின்னர் அங்குள்ள கரும்பு தோட்ட த்தில் பதுங்கி கொள்வது வாடிக்கையாக கொண்டி ருந்தது.

    இதையடுத்து சிறு த்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து தாளவாடி வனச்சரகர் சதீஸ் தலைமையில் சிறுத்தை நட மாட்டம் உள்ள பகுதியில் கால் தடங்களை ஆய்வு செய்தனர்.

    பின்னர் அப்பகு தியை சேர்ந்த செல்வராஜ் (48) என்ற விவசாயி பாக்கு தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தெரியவந்தது. பின்னர் பாக்கு தோட்டத்தில் 2 இடங்களில் கண்காணிப்பு கேமராவை பொருத்தினர்.

    மேலும் அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். கூண்டு உள்ளே காவல் நாயை கட்டி வைத்தனர்.

    நாயை பிடிக்கவரும் சிறுத்தை கூண்டில் சிக்கு வதற்கு வாய்ப்பு உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்

    • பாலபடுகை வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு தீ கொழுந்து விட்டு எரிந்தது.
    • போராடி நள்ளிரவில் காட்டுத் தீயை வனத்துறையினர் அணைத்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சர கங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    அதோடு இல்லாமல் ஏராளமான மலை கிராமங்களும் உள்ளன. மழை காலங்களில் அதிக அளவில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு வனப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும்.

    தற்போது மழை இல்லாததால் கடுமையான வெயிலின் காரணமாக வனப்பகுதியில் உள்ள அரிய வகை மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள் இலை உதிர்ந்து காய்ந்து வருகிறது.

    மேலும் வனப்பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியின் காரணமாக வன விலங்கு களும் குடிக்க தண்ணீர் இன்றி அருகில் உள்ள கிராமங்களுக்கு படை எடுத்து வருகிறது.

    மேலும் தண்ணீர் தேடி வன விலங்குகள் கூட்டம் கூட்டமாக மாயாறு பகுதிக்கும் சென்று வருகிறது.

    வனப்பகுதியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக பல்வேறு இடங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

    இதை வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து அணைத்து வருகின்றனர். மேலும் அடர்ந்த வனப்பகுதி களை தொடர்ந்து கண்கா ணித்தும் வருகின்றனர்.

    இந்த நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட பாலபடுகை என்ற வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் காட்டுத்தீ ஏற்பட்டு தீ கொழுந்து விட்டு எரிந்தது.

    இது பற்றி தெரிய வந்ததும், 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வனப்பகுதி முழுவதும் காய்ந்து சருகாக கிடப்பதால் தீ மளமளவென எரிந்து கொண்டே இருந்தது.

    இதனால் கடுமையாக போராடி நள்ளிரவில் காட்டுத் தீயை வனத்துறையினர் அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பில் மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள், செடி, கொடிகள் எரிந்து சேதமானது.

    வனப்பகுதியில் தீ பிடித்த நேரத்தில் அந்த பகுதியில் இருந்த வன விலங்குகள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டது.

    தொடர்ந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • சாலையை கடக்க நின்ற அந்த யானைகளை கடக்க விடாமல் காரை விட்டு மறித்து அதில் இருந்தவர்கள் புகைப்படம் எடுத்தனர்.
    • யானைகள் அச்சம் அடைந்து அங்கும் இங்குமாக சென்று மிரண்டன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூா், கெத்தை, முள்ளி வழியாக ஊட்டி செல்லக்கூடிய சாலை அடா்ந்த வனப்பகுதியையொட்டி உள்ளது. இந்த சாலையில் வன விலங்குகள் நடமாட்டம் காணப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், காரமடை வழியாக ஊட்டிக்கு இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த சுற்றுலா பயணிகள் கெத்தை மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த 5 காட்டு யானைகளை தொந்தரவு செய்ததுடன், ஆபத்தை உணராமல் அவற்றுடன் விளையாட்டில் ஈடுபட்டனா்.

    சாலையை கடக்க நின்ற அந்த யானைகளை கடக்க விடாமல் காரை விட்டு மறித்து அதில் இருந்தவர்கள் புகைப்படம் எடுத்தனர். இதேபோல அந்த வழியாக ஜீப்பில் வந்தவர்களும் இவ்வாறு புகைப்படம் எடுத்தனர்.

    இதனால் யானைகள் அச்சம் அடைந்து அங்கும் இங்குமாக சென்று மிரண்டன. யானைகள் ஆவேசப்பட்டால் நிலைமை என்னவாகும் என்பதை உணராமல் அந்த வாகன ஓட்டிகள் இவ்வாறு யானைகளை தொந்தரவு செய்து படம் பிடித்துள்ளனர்.

    இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. எனவே இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கின ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • நாயை, சிறுத்தை விரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வளை தலங்களில் பரவி வருகிறது.
    • வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கால் தடயங்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் விளா முண்டி வனப்பகுதியில் யானைகள், சிறுத்தை, மான் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த பகுதியில் இருந்து யானை கள் உள்பட பல வன விலங்குகள் அடிக்கடி வெளியேறி அருகே உள்ள பவானிசாகர் நீர் தேக்க பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்து விட்டு செல்கிறது.

    மேலும் வனப்பகுதியை யொட்டி உள்ள கிராம பகுதிகளில் யானை மற்றும் சிறுத்தைகள் புகுந்து வரு கிறது.

    இதே போல் விளாமுண்டி வனப்பகுதி அருகே கல் குவாரி மற்றும் குடியிருப்பு பகுதி அமைந்து உள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள்.

    அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் கண் காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் விளா முண்டி பகுதியில் இரவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதை கேட்டு பொதுமக்கள் வன விலங்கு ஏதாவது வந்து உள்ளதா? என அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை அங்கு வேலை செய்பவர்கள் ஆய்வு செய்தனர்.

    இதில் கல்குவாரி அடுத்த கிராம பகுதியில் ஒரு சிறுத்தை நுழைந்து அங்கு காவலுக்கு இருந்த நாயை துரத்தியது. இதையடுத்து அந்த நாய் சிறுத்தையிடம் சிக்காமல் தப்பி சென்று உயிர் தப்பியது பதிவாகி இருந்தது.

    மேலும் நாயை, சிறுத்தை விரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வளை தலங்களில் பரவி வருகிறது.

    இது குறித்து அவர்கள் விளாமுண்டி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கால் தடயங்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் பவானிசாகர் வனசரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறை குழுவினர் கண்காணிப்பு காட்சிகளை தொடர்ந்து ஆய்வு செய்து சிறுத்தை வனப்பகுதிக்கு சென்று விட்டதா? அல்லது அந்த பகுதியில் பதுங்கி உள்ளதா? என கண்காணித்து வருகிறார்கள்.

    இது குறித்து வனத்துறை யினர் கூறும் போது, விளா முண்டி வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளி யேறி ஊருக்குள் வருவது கண்காணிப்பு கேமிரா காட்சியில் பதிவாகி உள்ளது.

    எனவே இந்த பகுதியில் உள்ள பொது மக்கள் மற்றும் கல்குவாரி யில் வேலை செய்பவர்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றனர்.

    ×