search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூண்டு வைத்து"

    • சென்னம்பட்டி வனச்சரக எல்லை பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது.
    • மேலும் அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த சென்னம்பட்டி வனச்சரக எல்லைப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் அந்தியூர் அருகேயுள்ள கோவிலூர், புதுக்காடு பகுதியில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை அப்பகுதி விவசாயத் தோட்டத்தில் புகுந்தது.

    தொடர்ந்து அந்த சிறுத்தை அங்கிருந்த நாயைக் கடித்து இழுத்துச் சென்றது.

    இதைக் கண்ட அப்பகுதி மக்கள் சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்து க்கு வந்த வனத்துறையினர் அந்த பகுதியில் இருந்த காலடித் தடயங்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது வனத்துறையினர் அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.

    இதைத் தொடர்ந்து வன எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களிலும், விவசாயத் தோட்டத்து வீடுகளிலும் உள்ள மக்களுக்கு சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும், எச்சரிக்கையுடன் இருக்கு மாறும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

    மேலும் 5 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டன. இருந்த போதிலும் வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க முழு முயற்சியுடன் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் அதிருப்தி யில் உள்ளதாக கூறப்படு கிறது.

    இந்நிலையில் பல நாய்க ளை சிறுத்தை கவ்விச் சென்றது குறித்தும் வனத்துறைக்கு பொது மக்கள் தகவல் தெரி வித்தனர். இதனால் வன எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் பொதுமக்கள் பீதியில் காணப்பட்டு வந்த னர்.

    எனவே இந்த பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லை யெனில் வனத்துறையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொது மக்கள் முடிவு செய்தனர்.

    இந்நிலையில் புதுக்காடு பகுதியில் சிறுத்தையை பிடிக்க வத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். தொடர்ந்து வனத்துறை யினர் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என கண்காணித்து வருகிறார்கள்.

    சிறுத்தை நடமாட்டம் காணப்பட்ட பின்னர் 25 நாட்களுக்குப் பிறகு மிக தாமதமாக கூண்டு வைக்க ப்பட்டது அந்த பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வரு கின்றன. தாளவாடி வன ச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு ,காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மல்குத்தி புரம் பகுதியில் விவசாய தோட்டத்தில் புகுந்த சிறுத்தை ஆடு மற்றும் காவல் நாய்களை வேட்டை யாடி வந்தது. பின்னர் அங்குள்ள கரும்பு தோட்ட த்தில் பதுங்கி கொள்வது வாடிக்கையாக கொண்டி ருந்தது.

    இதையடுத்து சிறு த்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து தாளவாடி வனச்சரகர் சதீஸ் தலைமையில் சிறுத்தை நட மாட்டம் உள்ள பகுதியில் கால் தடங்களை ஆய்வு செய்தனர்.

    பின்னர் அப்பகு தியை சேர்ந்த செல்வராஜ் (48) என்ற விவசாயி பாக்கு தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தெரியவந்தது. பின்னர் பாக்கு தோட்டத்தில் 2 இடங்களில் கண்காணிப்பு கேமராவை பொருத்தினர்.

    மேலும் அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். கூண்டு உள்ளே காவல் நாயை கட்டி வைத்தனர்.

    நாயை பிடிக்கவரும் சிறுத்தை கூண்டில் சிக்கு வதற்கு வாய்ப்பு உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்

    ×