search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனத்துறையினர்"

    • வனத்துறையினர் எலைட் படையினர் சல்லடை போட்டு தேடும் பணி தீவிரம்
    • மேலும் ஒரு பசுவை புலி தாக்கியது

    நாகர்கோவில் :

    பேச்சிப்பாறை அருகே சிற்றார் ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு மூக்கறைக்கல் பகுதியில் குடியிருப்புகளில் புலிகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    இதனால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் புலி சிக்கவில்லை. அந்த பகுதியில் 25 இடங்களில் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். ஆனால் புலியை பற்றி எந்த தகவலும் கிடைக்காத நிலையில் தினமும் ஆடு, மாடுகளை கடித்து குதறி வந்தது.

    இதையடுத்து புலியை பிடிக்க களக்காட்டில் இருந்து மருத்துவ குழுவினரும், தேனி மாவட்டம் வைகை ஆறு பகுதியில் இருந்து எலைட் படையினரும் குமரி மாவட்டம் வந்தனர்.

    அவர்கள் குமரி மாவட்ட அதிகாரி இளையராஜா உடன் இணைந்து புலியை பிடிக்க புதுவியூகம் வகுத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சிற்றாறு சிலோன் காலனி மூக்கறைக்கல் பகுதியில் வனத்துறையினர் ஆட்டு கொட்டகை போன்று கூண்டு அமைத்து புலியை பிடிக்க முயன்றனர்.

    ஆனால் புலி சிக்கவில்லை. வனத்துறையினரும், எலைட் படையினரும் பழங்குடி மக்களுடன் இணைந்து 2 குழுக்களாக பிரிந்து சென்று தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று புரத்தி மலைப் பகுதியில் மேலும் ஒரு மாட்டை புலி கடித்து உள்ளது. இதில் பசுவிற்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். புலி சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றி வருவது தெரியவந்துள்ளது. அந்த பகுதி முழுவதும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சிற்றாறு பகுதியில் ஒரு குழுவினரும், சிற்றாறிலிருந்து பத்துகாணி வரை மேலும் ஒரு குழுவினரும் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காட்டுப்பகுதி முழுவதும் சல்லடை போட்டு தேடும் பணி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மேலும் 25 இடங்களில் கண்காணிப்பு காமிராவை அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இன்று காலை அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சிற்றாறு முதல் பத்து காணி வரையில் உள்ள பகுதிகளில் காமிராக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி இளையராஜா கூறுகையில், புலியை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறையினர் எலைட் படையினரும் காட்டுப்பகுதியில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சிற்றாறு சிலோன் காலனி மற்றும் பேச்சிப்பாறை பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது சிற்றாறில் இருந்து பத்துகாணி வரை தேடும் பணி நடந்து வருகிறது. கூடுதலாக 25 இடங்களில் கண்காணிப்பு காமிராவும் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 குழுக்களாக பிரிந்து சென்று வனத்துறையினர் தீவிரம்
    • ஒரு குழுவில் வனத்துறையினர் 10 பேரும், பழங்குடி மக்கள் 5 பேரும் இடம்பெற்றுள்ளனர்

    கன்னியாகுமரி :

    சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு மூக்கறைகல் பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக புலி ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது.

    ஆடுகள், மாடுகள் மற்றும் நாய்களை கடித்து குதறி வருகிறது. இதனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் பழங்குடி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.

    புலியை பிடிக்க கண்கா ணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டதுடன் 2 இடங்களில் கூண்டு வைத் துள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள ஆடு, மாடுகளை இரவு நேரங்களில் அங்குள்ள முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் பாதுகாப்பாக கட்டி வைக்க வும் நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது. கடந்த ஒரு வாரமாக புலியை பிடிக்க வைக்கப்பட்டுள்ள கூண்டில் புலி சிக்கவில்லை.

    தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்ததையடுத்து அதை பிடிக்க களக்காடு முண்டந்துறையில் இருந்து டாக்டர் குழுவினரும், தேனி மாவட்டம் வைகை ஆறு பகுதியில் இருந்து எலைட் படையினரும் வருகை தந்தனர். அவர்கள் நேற்று அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிலோன் காலனி பகுதி, மூக்கறைகல் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    ஆனால் புலி சிக்கவில்லை. இந்த நிலையில் இன்றும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. வன அதிகாரி இளையராஜா தலைமையில் எலைட் படையினரும், டாக்டர் குழுவினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    2 குழுக்களாக பிரிந்து சென்று தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ஒரு குழுவில் வனத்துறையினர் 10 பேரும், பழங்குடி மக்கள் 5 பேரும் இடம்பெற்றுள்ளனர். 2 குழுக்களிலும் 30 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அந்த பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள னர்.

    பழங்குடி மக்கள் காட்டுப்பகுதிகளில் வழி களை அடையாளம் காட்டிக்கொடுக்க வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பேச்சிப்பாறை மூங்கில் காடு பகுதியில் இன்று தேடும் பணி நடந்தது. வனத்துறையின் மோப்பநாய் உதவியுடன் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் இன்று மதியம் வரை புலி சிக்கவில்லை. தொடர்ந்து புலியை பிடிக்க வனத்துறையினர் வியூகம் வகுத்து செயல்படுகிறார்கள். புலி நடமாட்டம் உள்ளதையடுத்து சிற்றாறு குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் மாலை 6 மணிக்கு பிறகு வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • 28 இடங்களில் காமிரா அமைப்பு
    • குமரி வனத்துறையினர் இரவு பகலாக கண்காணிப்பு

    நாகர்கோவில் :

    பேச்சிப்பாறை வனப்பகுதிகளை யொட்டியுள்ள சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு, மூக்கறைக்கல் பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் புலி அட்டகாசம் செய்து வருகிறது. மாடு, 2 ஆடுகளை கடித்து கொன்றது. ஒரு நாயையும் புலி கவ்வி சென்றது. இது ரப்பர் தோட்ட தொழிலா ளர்கள் மற்றும் பழங்குடி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. புலியை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    புலி நடமாட்டம் உள்ள பகுதியாக கருதப்படும் பகுதிகளில் காமிராக்கள் அமைக்கப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது 28 காமிராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 2 இடங்களில் புலியை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

    கூண்டு அமைக்கப்பட்ட பகுதியிலும் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்ட பகுதியிலும் கடந்த 2 நாட்களாக புலி நடமாட்டம் இல்லை. இருப்பினும் வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இது குறித்து வன அதி காரி ஒருவர் கூறியதாவது:-

    புலியை பிடிக்க இரவு பகலாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கண்காணிப்பு காமிராவில் புலி சிக்கவில்லை. ஒரு இடத்தில் புலி வந்து சென்றால் மீண்டும் அந்த இடத்திற்கு 3 நாட்கள் கழித்து வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    எனவே தற்போது வந்து சென்ற பகுதியில் இன்று அல்லது நாளைக்குள் புலி வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எனவே அந்த பகுதியை தீவிரமாக கண்காணித்து புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. புலி இன்று அல்லது நாளைக்குள் சிக்காத பட்சத்தில் புலியை பிடிக்க வெளியே இருந்து பயிற்சி பெற்ற கமாண்டோ வீரர்களை அழைத்து வரலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • குமரி வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
    • இரவு நேரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள மூக்கறைக்கல் மற்றும் சிற்றாறு சிலோன் காலணி பகுதிகளில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ஆடு-மாடுகளை வேட்டையாடியது

    காட்டில் இருந்து குடியி ருப்புகளுக்குள் இரவு நேரத்தில் வரும் புலி ஆடு, பசுமாடு ஆகியவற்றை கடித்து கொன்றது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமலும், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியாமலும் தவிப்புக் குள்ளானார்கள். அவர்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து புலியை பிடிப்ப தற்கு மாவட்ட வனத்துறை சார்பாக பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளன.

    புலியின் கால் தடங்கள் கண்டறியப்பட்ட பகுதியில் சுமார் 25 கண்காணிப்பு கேமராக்கள் மாட்டப்பட்டது. அதன் மூலம் இரவு பகலாக தீவிரமாக கண்காணித்து வந்த நிலையிலும் புலியின் உருவம் எதுவும் பதிவாகவில்லை.

    ஆனால் புலியின் தாக்குதல் மட்டும் குடியிருப்பு பகுதிக்குள் தொடர்ந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு ஆடு மற்றும் நாய் புலியின் வாயில் சிக்கின. இதனால் மலைவாழ் மக்கள் மீண்டும் அச்சத்திற்கு உள்ளானார்கள். இதனை தொடர்ந்து புலியை பிடிப்ப தற்க்காக மூக்க றைக்கல் பகுதியில் வனத்துறையினர் நேற்று கூண்டு அமைத்தனர். ஆனாலும் அதில் புலி சிக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் 2-வது கூண்டு அமைக்கப்பட்டது. இது பற்றி வனத்துறையினர் கூறுகை யில், இந்த 2 பகுதிகளில் தான் அதிக அளவு புலியின் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இங்கு கூண்டுகள் வைத்து உள்ளோம். இந்த கூண்டு களுக்குள் ஆடு கட்டப்பட்டுள்ளது. அதனை பார்த்து புலி வரும் போது கூண்டில் சிக்கி விடும். அதேநேரம் ஆடு வேறு பகுதிக்கு சென்று தப்பிவிடும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. எனவே வெகு விரைவில் புலியை பிடித்து விடுவோம். பகல்நேரங்களில் மக்கள் நடமாட்டம் இருப்பதால் புலி வெளியே வருவதில்லை. இரவு நேரத்தில் தான் வருகிறது. எனவே மாலை 6 மணிக்கு மேல் சிறுவர்கள், குழந்தை களை வெளியில் விட வேண்டாம். தேவை யின்றி யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறி வுறுத்தி உள்ளோம்.

    மேலும் ஆடு, மாடு, நாய்களை இரவு நேரங்களில் கயிற்றினால் தான் கட்டி வைக்க வேண்டும் வெளியில் விடக் கூடாது. ஆடு, மாடு களை கட்டி வைத்திருக்கும் பகுதியில் இரவு நேரங்களில் மர கட்டைகள் வைத்து தீ மூட்டி வைக்க வேண்டும். கூண்டு அமைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் பகல் நேரங்களில் செல்லாமல் இருந்தால் புலி வெளியில் வர வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களும் தேவையான ஒத்துழைப்பை தர வேண்டும் என்றனர்.

    • 50 குழுக்களாக பிரிந்து சென்ற வனத்துறையினர் அந்த கும்பலை கண்காணித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    • வேட்டையாடியவர்கள் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    ஈரோடு:

    ஈரோடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பெருந்துறை அருகே உள்ள தோரணாவி, தொட்டிபாளையம் கிராமத்தில் உள்ள பட்டா நிலங்களில் கும்பல் கும்பலாக முயல்கள் வேட்டுயாடுவதாக, தமிழ்நாடு வனம் மற்றும் வன உரியின கட்டுப்பாடு கோவை மண்டல அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பாதுகாவலருக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட வனப்பாதுகாப்பு படையினர், ஈரோடு வனச்சரக குழுக்கள், ஈரோடு வனவியல் விரிவாக்க கோட்ட குழுக்கள் உள்பட பல்வேறு வனச்சரக குழுவினர் தொட்டி பாளையம் கிராமத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது ஒரு வாட்ஸ்-அப் செயலி மூலம் குழு அமைத்து முயல் வேட்டையாடுவது வனத்துறையினருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து 50 குழுக்களாக பிரிந்து சென்ற வனத்துறையினர் அந்த கும்பலை கண்காணித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பட்டா நிலங்களில் கும்பல் கும்பலாக ஏராளமானோர் காட்டு முயலை வேட்டையாடிக் கொண்டிருந்ததையடுத்து வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து மொத்தம் 107 பேரை பிடித்தனர். அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் அவர்கள் வேட்டையாடி வைத்திருந்த 5 முயல்கள் மற்றும் வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கம்புகள், ஏராளமான செல்போன்களையும் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவில் திருவிழாவையொட்டி குறிப்பிட்ட சமூகத்தினர் காட்டு முயலை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும், அதன்படி இந்தாண்டு திருவிழாவை யொட்டி வேட்டையாட வந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது:-

    பொதுவாக வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவது மிகப்பெரிய குற்றமாகும். முயல் வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இவர்கள் வனப்பகுதியில் வேட்டையாடவில்லை. பட்டா நிலங்களில் தான் வேட்டையாடி உள்ளனர். இருந்தாலும் இதுவும் சட்டப்படி தவறுதான். எனவே 107 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன் புலி இரவில் வந்து ஆடு மற்றும் பசு மாட்டை கடித்து குதறியது.
    • தோட்ட தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண ஏற்பாடு செய்தார்கள்.

    திருவட்டார்:

    பேச்சிப்பாறை-சிற்றாறு வனப்பகுதியில் புலி நடமாடுவதாக அந்த பகுதி மக்கள் கூறியதையெடுத்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் புலி இரவில் வந்து ஆடு மற்றும் பசு மாட்டை கடித்து குதறியது.

    இதனால் மேலும் அச்சம் அடைந்த வனப்பகுதி மக்கள் தோட்ட தொழிலாளர்கள் ஆகியோர் இடையே மீண்டும் அதிகாலை வேலைக்கு செல்வதற்கு மக்கள் மத்தியில் புலியின் நடமாட்டத்தை அறிந்து பெரும் அச்சம் அடைத்தனர். வனத்துறை ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆலோசனைப்படி சுமார் 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி புலியின் நடமாட்டத்தை தீவிரமாக இரவு பகலாக கண்காணித்து வந்தனர். புலியின் உருவம் கேமராவில் பதியவில்லை. இதையடுத்து வனத்துறையினர் மோப்ப நாயை வரவழைத்து புலியை தேடினார்கள். ஆனால் புலியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    அரசு ரப்பர் கழகத்தில் வேலைக்கு செல்லும் தோட்ட தொழிலாளர்கள் புலியை பிடித்தால் தான், அதிகாலையில் ரப்பர் பால் வடிப்பு தொழிலுக்கு செல்ல முடியும், இல்லை என்றால் வேலைக்கு செல்ல மாட்டோம் என்று ஆண்களும், பெண்களும் கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தனர்.

    இதனால் அரசுக்கு தினமும் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து தோட்ட தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண ஏற்பாடு செய்தார்கள். தோட்ட தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில் வனத்துறையினர் பல்வேறு விழிப்புணர்வை தோட்ட தொழிலாளர்களிடம் ஏற்படுத்தினார்கள்.

    அரசு ரப்பர் கழக தோட்ட தொழிலாளர்களிடம் அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி அதிகாலையில் பால் வடிப்பு தொழிலுக்கு தோட்ட தொழிலாளர்கள் செல்வதற்கு முன், வனத்துறை ஊழியர்கள் புலியின் நடமாட்டத்தை பார்த்து சென்ற பிறகு தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்வது என்றும், அதிகாலை வேலைக்கு செல்வதை தவிர்த்து சற்று தாமதமாக பணிக்கு செல்வது என்றும், தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு அருகில் அதிக மின் விளக்குகள் மாட்டுவது என்றும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    இதையடுத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் ஆனது. அதன் பிறகு இன்று பால் வடிப்பு தொழிலுக்கு தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு சென்றார்கள். அதேவேளையில் புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் இரவு பகலாக தீவிர கண்காணித்து வருகிறார்கள். கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • தேனியில் பிடிபட்ட அரிசி கொம்பன் யானை கடந்த ஜூன் 5-ந்தேதி களக்காடு பகுதியில் விடப்பட்டது.
    • அரிசி கொம்பன் யானையை அருகில் உள்ள யானை கூட்டத்துடன் இணைக்க வனத்துறையினர் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    கேரளா சின்னக்கானல் பகுதியிலும், தேனி மாவட்டம் குமுளி பகுதியிலும் அரிசி கொம்பன் யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதையடுத்து வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அரிசி கொம்பன் யானையை பிடித்தனர்.

    பின்னர் அரிசி கொம்பன் யானையை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் அப்பர் கோதையாறு பகுதியில் கொண்டு விட்டனர். அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்ட யானை அந்த பகுதியிலேயே சுற்றித்திரிகிறது. முத்துக்குளி வயல் பகுதியில் இயற்கை உணவு அதிகம் கிடைத்து வரும் நிலையில் அங்கேயே யானை உள்ளது. விடப்பட்ட இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிலேயே யானை சுற்றி வருகிறது.

    யானை கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு நெல்லை, குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். கால்நடை மருத்துவர்களும், வனத் துறை ஊழியர்களும் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை உடல் மெலிந்து விலா எலும்புகள் தெரிவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.

    இதற்கு வனத்துறையினர் யானையின் உடல் மாற்றத்திற்கு காரணம் அதனுடைய உணவு பழக்க வழக்கமே என்று தெரிவித்திருந்தனர். அரிசி கொம்பன் யானை சுற்றி வரும் பகுதியில் இருந்து சிறிது தொலைவில் குட்டி யானை உட்பட 3 யானைகள் உள்ளது. அந்த யானையுடன் அரிசி கொம்பன் யானையை இணைக்கவும் வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    அரிசி கொம்பன் யானை மிகவும் ஆரோக்கியத்துடன் தனது வாழ்விடத்தில் வசதியாக உள்ளதாக மாநில வனத்துறை செயலாளர் சுப்ரியா தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து களக்காடு சரணாலயத்தின் துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேனியில் பிடிபட்ட அரிசி கொம்பன் யானை கடந்த ஜூன் 5-ந்தேதி களக்காடு பகுதியில் விடப்பட்டது. கடந்த வாரங்களில் பெரும் மாற்றத்தை அடைந்துள்ளது. கடந்த காலங்களில் தனது உணவிற்காக அரிசி மற்றும் பயிர்களை சாப்பிட்டு வந்த யானையானது காட்டுப் பகுதியில் விடப்பட்ட பின்பு 20 நாட்களாக மூணாறு வனப்பகுதி போன்ற வாழ்விடம் களக்காட்டிலும் உள்ளதால் நல்ல ஊட்டச்சத்துக்கள் உள்ள இயற்கையான உணவை எடுத்துக் கொண்டும் சுதந்திரமாக உலாவியும் வருகிறது.

    அரிசி கொம்பன் யானையை அருகில் உள்ள யானை கூட்டத்துடன் இணைக்க வனத்துறையினர் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். களக்காடு சூழலுக்கு ஏற்றவாறு யானையை பழக்கப்படுத்த வனத்துறை மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அரிசி கொம்பன் யானையை தினந்தோறும் கண்காணித்து வரும் களப் பணியாளர்கள் யானை நல்ல ஆரோக்கியமாகவும் நல்ல நிலையில் உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • யானை பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.

    நாகர்கோவில்:

    கேரளா எல்லை பகுதிகளிலும், தேனி மாவட்டத்திலும் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    பின்னர் அந்த யானையை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை வன சரக்கத்திற்குட்பட்ட அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது. காட்டுக்குள் விடப்பட்ட அரிசி கொம்பன் யானை குடியிருப்பு பகுதியில் வரக்கூடும் என்பதால் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அரிசி கொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோ காலர்கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அப்பர் கோதையாறு பகுதியில் அரிசி கொம்பன் யானைக்கு தேவையான உணவு, குடிநீர் கிடைத்து வருவதால் அந்த பகுதியிலேயே யானை சுற்றி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை மெலிந்து எலும்புகளுடன் சுற்றித்திரிவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. இது யானை பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    அரிசி கொம்பன் யானை மூணாறு பகுதியில் பிறந்தது. அதன் பிறகு தேனி பகுதியில் இருந்து தற்போது அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டுள்ளது.

    அப்பர் கோதையாறு பகுதியில் யானைக்கு தேவையான தண்ணீர், உணவு வகைகள் கிடைக்கிறது. தினமும் யானையை டாக்டர் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். தினமும் யானை சாப்பிடும் உணவு போன்றவையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானையின் சாணத்தையும் டாக்டர் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். யானை ஏற்கனவே இருந்த சீதோசண நிலையில் இருந்து தற்பொழுது புதிய சீதோசண நிலைக்கு வந்துள்ளது. அதன் காரணமாக உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.

    அதை டாக்டர் குழுவினர் கண்காணித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 14 நாட்களாக 5 கிலோ மீட்டர் சுற்றளவிலேயே யானை சுற்றி வருகிறது. அரிசி கொம்பன் யானை குடியிருப்பு பகுதிக்கு வரும் என மக்கள் அச்சப்பட தேவையில்லை. தற்பொழுது கடல் மட்டத்திலிருந்து 1350 மீட்டர் மேல் உள்ள கோதை ஆற்றின் பிறப்பிடம் அருகே வனப்பகுதியில் தான் அரிசி கொம்பன் யானை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரிசிக்கொம்பன் காதில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் தரும் சிக்னல் மூலம் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
    • அரிசிக்கொம்பனை மீண்டும் கேரள வனத்திலேயே விட வேண்டும் என கொச்சியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் ரேஷன் கடைகளை குறி வைத்து தாக்கி அரிசியை சாப்பிட்டதால் அரிக்கொம்பன் என்ற பெயர் பெற்ற யானை, மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால் அதனை வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் பெரியார் வன காப்பகத்தில் விடப்பட்ட அரிக்கொம்பன், தமிழகத்தின் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் அரிசிக்கொம்பன் என்ற பெயருடன் மக்களை அச்சுறுத்தியது. பின்னர் பலத்த போராட்டங்களுக்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி அரிசிக்கொம்பனை பிடித்த வனத்துறையினர், அதனை திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வனச்சரகம் அப்பர் கோதையாறு பகுதியில் விட்டனர்.

    தொடர்ந்து அரிசிக்கொம்பன் காதில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் தரும் சிக்னல் மூலம் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    அப்பர் கோதையாறு, குற்றியார், முத்துக்குழிவயல் என 5 கிலோ மீட்டருக்குள்ளேயே அரிசிக்கொம்பன் சுற்றி வந்தபோதும், குமரி மற்றும் நெல்லை மாவட்ட மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்துடனேயே உள்ளனர். அவர்கள் அரிசிக்கொம்பனை இங்கிருந்து அகற்றி கேரள வனத்திற்கு அனுப்புமாறு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    ஆனால் அரிசிக்கொம்பனை கண்காணித்து வரும் 2 மாவட்ட வனத்துறையினரும், மக்கள் அச்சப்பட தேவையில்லை. வனத்தில் அமைதியான சூழல், உணவு, குளிர்ந்த தண்ணீர் போன்றவை கிடைப்பதால் அரிசிக்கொம்பன் அங்கிருந்து வராது. அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் அரிசிக்கொம்பனை மீண்டும் கேரள வனத்திலேயே விட வேண்டும் என கொச்சியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி அவர்கள், பாலக்காடு அருகே உள்ள கணபதி கோவிலில் யாகமும் நடத்தினர். 2 மணி நேரம் நடைபெற்ற இந்த யாகத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும் கொச்சி மரைன் டிரைவ் பகுதியில் பேரணியும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள், அரிசிக்கொம்பன் யானையை மீண்டும் கேரளாவுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினர்.

    • ரேடியோ காலர் சிக்னல் திடீரென கிடைக்காததால் வனத்துறையினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
    • அரிசி கொம்பன் கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியையொட்டி உள்ள அப்பர் கோதையாறு வனத்தில் தான் உள்ளது.

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் மற்றும் தேனி மாவட்டம் சின்னமனூர் ஹைவேலிஸ் பகுதிகளில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய அரிசி கொம்பன் யானை, வனத்துறையின் பலத்த போராட்டங்களுக்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் அந்த யானை திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள அப்பர் கோதையாறு வனத்தில் விடப்பட்டுள்ளது.

    தற்போது காட்டுப்பகுதியில் அரிசி கொம்பன் சுதந்திரமாக சுற்றி வரும் நிலையில் அதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அரிசி கொம்பன் காதில் மாட்டப்பட்டுள்ள ரேடியோ காலர் தரும் சிக்னல்களை வைத்து திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையினர் யானை செல்லும் பாதைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ரேடியோ காலர் சிக்னல் திடீரென கிடைக்காததால் வனத்துறையினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது. யானையின் இருப்பிடம் தற்போது எங்கு உள்ளது? என்பது தெரியாமல் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. கன்னியாகுமரி பகுதியை நோக்கி அரிசி கொம்பன் செல்வதாகவும் கூறப்பட்டது. இதனால் பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டது.

    ஆனால் இதனை மறுத்த வனத்துறையினர், ரேடியோ காலர் சிக்னல் மீண்டும் கிடைக்கப்பெற்றதாகவும், தற்போது கிடைத்த தகவலின்படி அரிசி கொம்பன், கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியையொட்டி உள்ள அப்பர் கோதையாறு வனத்தில் தான் உள்ளது. அந்த பகுதியில் சுமார் 4 முதல் 5 கிலோ மீட்டர் பகுதிகளில் தான் சுற்றி வருகிறது என்றனர். அப்பர் கோதையாறு, முத்துக்குழி வயல், குற்றியார் பகுதிகளில் இருக்கும் உணவை சாப்பிட்டும், தண்ணீர் அருந்தியவாறும் யானை உள்ளதாக அதனை கண்காணித்து வரும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். குமரி மாவட்டம் வனத்துறையை சேர்ந்த 40 பேர் கொண்ட குழுவினரும், திருநெல்வேலி மாவட்ட வனத்துறையை சேர்ந்த 50 பேர் கொண்ட குழுவும் தொடர்ந்து அரிசி கொம்பன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • ஜி.பி.எஸ். கருவி மூலம் அறிந்த வனத்துறையினர் உடனடியாக களக்காடு சரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
    • களக்காடு, திருக்குறுங்குடி வனத்துறை ஊழியர்கள் யானை சென்று கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    களக்காடு:

    தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்து நேற்று முன்தினம் பிற்பகலில் நெல்லை மாவட்டத்துக்கு லாரியில் கொண்டு வந்தனர்.

    பின்னர் அந்த யானையை மணிமுத்தாறு வன சோதனைச்சாவடி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு வழியாக மேல் கோதையாறு அணை பகுதியில் கொண்டு விட்டனர். அங்கிருந்து வன ஊழியர்கள் மேற்பார்வையில் அடர்ந்த வனப்பகுதியான முத்துக்குழி வயல் பகுதியில் யானை விடப்பட்டது. அந்த யானையின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க வனத்துறையினர் அதன் காதில் ரேடார் கருவியை பொருத்தியிருந்தனர். அதன்மூலம் யானையின் இருப்பிடம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. மயக்க மருந்து செலுத்தியதில் இருந்து மீளாத அந்த யானை முத்துக்குழி வயல் பகுதியில் தனக்கான வாழ்விடத்தில் இருந்து வந்தது.

    இந்நிலையில் மயக்கத்தில் இருந்து முழுமையாக மீண்ட அரிசிக்கொம்பன் இன்று அதிகாலை கோதையாற்றில் இருந்து சற்று தொலைவில் உள்ள குட்டியாறு வனப்பகுதியில் நடமாடியது. ஆனால் அதன்பின்னர் அந்த யானை மேற்கு திசையில் அதாவது குமரி மாவட்டம் பேச்சியாறு அணை வனப்பகுதியை நோக்கி வேகமாக சென்றது. இதனை ஜி.பி.எஸ். கருவி மூலம் அறிந்த வனத்துறையினர் உடனடியாக களக்காடு சரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து களக்காடு, திருக்குறுங்குடி வனத்துறை ஊழியர்கள் யானை சென்று கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் யானையை மீண்டும் குட்டியாறு வனப்பகுதிக்கு விரட்டி விட்டனர். தொடர்ந்து அவர்கள் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலய பகுதியிலேயே யானை வசிக்க அனுமதிக்க வேண்டும்.
    • அரிசிக்கொம்பன் யானையின் துதிக்கையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

    மதுரை:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரபேக்கா ஜோசப் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அரிசிக்கொம்பன் என்று அழைக்கப்படும் ஆண் காட்டு யானை கடந்த சில நாட்களாக தேனி, கம்பம் பகுதியில் சுற்றித்திரிந்து மக்களை அச்சுறுத்தியது. கேரளா அரசு அரிசி கொம்பனை கும்கியாக மாற்ற முயற்சி செய்தது.

    ஆனால் விலங்கு நல ஆர்வலர்கள், நீதிமன்றத்திற்கு சென்றதால், அரிசிக்கொம்பனை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பரம்பிக்குளம் புலிகள் சரணாலய பகுதியில் விட முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அரிசிக்கொம்பன் யானையை வளர்ப்பு யானையாக மாற்ற கேரள அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அரிசிக் கொம்பன் யானையை பெரியார் புலிகள் சரணாலய பகுதியில் விடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அப்போதுதான் யானை கம்பம் பகுதியில் நுழைந்தது. சின்னக்கானல் பகுதியிலும் ஏராளமான ரிசார்ட்டுகள், ஆக்கிரமிப்புகளால் யானையின் வலசை பாதை ஆக்கிரமிக்கப்பட்டதாலேயே அது ஊருக்குள் நுழையும் நிலை உருவானது.

    சின்னக்கானல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வாழும் பழங்குடியினர் அரிசிக்கொம்பன் யானையை கடவுளின் குழந்தையாக பார்ப்பதோடு, மீண்டும் அந்தப் பகுதியிலேயே யானையை விட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆகவே யானையை வேறு புது இடத்திற்கு மாற்ற முயற்சிப்பதோடு, மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலய பகுதியிலேயே யானை வசிக்க அனுமதிக்க வேண்டும்.

    அரிசிக்கொம்பன் யானையின் துதிக்கையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அரிசிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிக்கெட்டான் சோலை தேசிய பூங்கா, சின்னக்கானல் பகுதிக்கு செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு, "சில விஷயங்களில் அதிகாரிகள் தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த வழக்கு விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்காக தெரிகிறது. தமிழ்நாடு அரசு மிகுந்த சிரமப்பட்டு பல லட்சம் ரூபாய் செலவு செய்து யானையை தற்போது பிடித்துள்ளது.

    யானையை இங்கே விட வேண்டும், அங்கே விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. யானைகள்-காடுகள் தொடர்பான வழக்குகளை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றி உத்தர விடுகிறோம் என்று தெரிவித்தனர்.

    ×