search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடு-மாடுகளை வேட்டையாடிய புலியை பிடிக்க மேலும் ஒரு கூண்டு
    X

    ஆடு-மாடுகளை வேட்டையாடிய புலியை பிடிக்க மேலும் ஒரு கூண்டு

    • குமரி வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
    • இரவு நேரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள மூக்கறைக்கல் மற்றும் சிற்றாறு சிலோன் காலணி பகுதிகளில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ஆடு-மாடுகளை வேட்டையாடியது

    காட்டில் இருந்து குடியி ருப்புகளுக்குள் இரவு நேரத்தில் வரும் புலி ஆடு, பசுமாடு ஆகியவற்றை கடித்து கொன்றது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமலும், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியாமலும் தவிப்புக் குள்ளானார்கள். அவர்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து புலியை பிடிப்ப தற்கு மாவட்ட வனத்துறை சார்பாக பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளன.

    புலியின் கால் தடங்கள் கண்டறியப்பட்ட பகுதியில் சுமார் 25 கண்காணிப்பு கேமராக்கள் மாட்டப்பட்டது. அதன் மூலம் இரவு பகலாக தீவிரமாக கண்காணித்து வந்த நிலையிலும் புலியின் உருவம் எதுவும் பதிவாகவில்லை.

    ஆனால் புலியின் தாக்குதல் மட்டும் குடியிருப்பு பகுதிக்குள் தொடர்ந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு ஆடு மற்றும் நாய் புலியின் வாயில் சிக்கின. இதனால் மலைவாழ் மக்கள் மீண்டும் அச்சத்திற்கு உள்ளானார்கள். இதனை தொடர்ந்து புலியை பிடிப்ப தற்க்காக மூக்க றைக்கல் பகுதியில் வனத்துறையினர் நேற்று கூண்டு அமைத்தனர். ஆனாலும் அதில் புலி சிக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் 2-வது கூண்டு அமைக்கப்பட்டது. இது பற்றி வனத்துறையினர் கூறுகை யில், இந்த 2 பகுதிகளில் தான் அதிக அளவு புலியின் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இங்கு கூண்டுகள் வைத்து உள்ளோம். இந்த கூண்டு களுக்குள் ஆடு கட்டப்பட்டுள்ளது. அதனை பார்த்து புலி வரும் போது கூண்டில் சிக்கி விடும். அதேநேரம் ஆடு வேறு பகுதிக்கு சென்று தப்பிவிடும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. எனவே வெகு விரைவில் புலியை பிடித்து விடுவோம். பகல்நேரங்களில் மக்கள் நடமாட்டம் இருப்பதால் புலி வெளியே வருவதில்லை. இரவு நேரத்தில் தான் வருகிறது. எனவே மாலை 6 மணிக்கு மேல் சிறுவர்கள், குழந்தை களை வெளியில் விட வேண்டாம். தேவை யின்றி யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறி வுறுத்தி உள்ளோம்.

    மேலும் ஆடு, மாடு, நாய்களை இரவு நேரங்களில் கயிற்றினால் தான் கட்டி வைக்க வேண்டும் வெளியில் விடக் கூடாது. ஆடு, மாடு களை கட்டி வைத்திருக்கும் பகுதியில் இரவு நேரங்களில் மர கட்டைகள் வைத்து தீ மூட்டி வைக்க வேண்டும். கூண்டு அமைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் பகல் நேரங்களில் செல்லாமல் இருந்தால் புலி வெளியில் வர வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களும் தேவையான ஒத்துழைப்பை தர வேண்டும் என்றனர்.

    Next Story
    ×