search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லோக் அதாலத்"

    • வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காண பயன் படுத்திக்கொண்டனர்.
    • தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் கோவை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    கோவை,

    நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகமாக தேங்வதை தவிர்க்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணவும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மற்றும் மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டப்பணி ஆனைக் குழுவின் தலைவர் மாவட்ட நீதிபதி ராஜசேகர் தலைமையில், நீதிபதிகள் கோவிந்தராஜன், குலசேகரன், முரளிதரன், ராமகிருஷ்ணன், சஞ்சீவி பாஸ்கர், மாவட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டக் குழு ஆணையத்தின் செயலாளர் சார்பு நீதிபதி கங்கா ராஜ் செய்திருந்தனர். இந்த மக்கள் நீதிமன்றமானது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலூர் ஆகிய கோர்ட்டுகளில் நடந்தது.

    இதில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், குடும்ப பிரச்சினை வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கு சமரச முறையில் இன்றைய தினமே தீர்வு காணும் வகையில் பல்வேறு அமர்வுகளாக நடைபெற்றது.

    பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நீதி மன்றங்களில் ஆஜராகி வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கை முடித்து கொண்டனர். இந்த லோக் அதாலத்தை பொதுமக்கள் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காண பயன் படுத்திக்கொண்டனர்.

    • தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க லோக்அதாலத் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
    • நாடு முழுவதும் இன்று லோக்அதாலத் நிகழ்ச்சி நடந்தது.

    நாகர்கோவில்:

    தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க லோக்அதாலத் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. காசோலை வழக்குகள், விபத்து காப்பீடு வழக்குகள்,குடும்ப நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு லோக் அதாலத் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது.

    நாடு முழுவதும் இன்று லோக்அதாலத் நிகழ்ச்சி நடந்தது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, இரணியல், பூதப்பாண்டி, குழித்துறை ஆகிய 5 நீதி மன்றங்களில் லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது.

    நாகர்கோவில் கோர்ட்டில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியை மாவட்ட நீதிபதியும் சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான அருள் முருகன் தொடங்கி வைத்தார்.

    முதன்மை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நம்பிராஜன், முதன்மை சார்பு நீதிபதி சொர்ண குமார், கூடுதல் சார்பு நீதிபதி அசன் முகமது, குற்றவியல் நீதிபதி தாயு மானவர், கிருத்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காசோலை வழக்குகள், காப்பீடு தொடர்பான வழக்குகள், குடும்ப நல வழக்குகள் தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அந்த வழக்குகள் மீது தீர்வு காணப்பட்டு வருகிறது.மாவட்டம் முழுவதும் இன்று 2084 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

    • தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் கோவை மாவட்டத்தில் நாளை (12-ந் தேதி) நடக்கிறது.
    • பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நீதி மன்றங்களில் ஆஜராகி வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கை முடித்து கொள்ளலாம்.

    கோவை,

    நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகமாக தேங்வதை தவிர்க்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணவும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மற்றும் மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் கோவை மாவட்டத்தில் நாளை (12-ந் தேதி) நடக்கிறது.

    இந்த மக்கள் நீதிமன்றமானது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலூர் ஆகிய நீதிமன்றங்களில் நடக்கிறது.

    இதில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், குடும்ப பிரச்சினை வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கு சமரச முறையில் அன்றைய தினமே தீர்வு காணும் வகையில் பல்வேறு அமர்வுகளாக நடக்கிறது.

    பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நீதி மன்றங்களில் ஆஜராகி வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கை முடித்து கொள்ளலாம். இந்த லோக் அதாலத்தை பொதுமக்கள் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காண பயன் படுத்திக்கொள்ளலாம்.

    • கர்நாடக மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 34 ஆயிரத்து 620 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • வருவாய்த்துறை தொடர்பாக 94 ஆயிரத்து 446 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்ட சேவைகள் ஆணைய தலைவர் நீதிபதி வீரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் லோக் அதாலத்(மக்கள் நீதிமன்றம்) நடத்தப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 34 ஆயிரத்து 620 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் 6 லட்சத்து 81 ஆயிரத்து 596 வழக்குகள் கோர்ட்டுக்கு வராத பிரச்சினைகள் ஆகும். போக்குவரத்து விதிமீறலில் மட்டும் அபராதம் ரூ.1,000 கோடி நிலுவையில் உள்ளது. இதுபோன்ற வழக்குகள் தான் லோக்அதாலத்தில் தீர்த்து வைக்கப்பட்டது. 2.46 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்கில் ரூ.14 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.

    வருவாய்த்துறை தொடர்பாக 94 ஆயிரத்து 446 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. வங்கி கடன் தொடர்பாக 8 ஆயிரத்து 571 வழக்குகளில் ரூ.25.80 கோடி திரும்ப பெறப்பட்டது. மின் கட்டண பாக்கி தொடர்பாக 95 ஆயிரத்து 756 வழக்குகள் தீர்க்கப்பட்டன. இதன் மூலம் ரூ.13.58 கோடி கட்டண பாக்கி வசூலிக்கப்பட்டது. குடிநீர் கட்டண பாக்கி தொடர்பாக 78 ஆயிரத்து 716 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.13.86 கோடி வசூலிக்கப்பட்டன.

    1,380 குடும்ப தகராறு வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டன. பிரிந்திருந்த 120 தம்பதிகள் லோக்அதாலத் மூலம் ஒன்றாக இணைந்தனர்.

    இவ்வாறு வீரப்பா கூறினார்.

    • காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், விபத்து தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தனித்தனி அறைகளில் வழக்குகள் விசாரணை நடந்தது.
    • மாவட்டம் முழுவதும் 2126 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தில் மதியம் 12 மணி வரை 314 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    நாகர்கோவில்:

    கோர்ட்டுகளில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க லோக் அதாலத் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் கோர்ட் டில் இன்று நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி அருள் முருகன் தலைமை தாங்கி னார். மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி மாய கிருஷ்ணன், முதன்மை சார்பு நீதிபதி சொர்ண குமார், நீதிபதி நம்பிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், விபத்து தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தனித்தனி அறைகளில் வழக்குகள் விசாரணை நடந்தது.

    பூதப்பாண்டி,குழித்துறை, தக்கலை, இரணி யல் கோர்ட்டுகளிலும் லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டம் முழுவதும் 2126 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தில் மதியம் 12 மணி வரை 314 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.இதன் மூலம் ரூ. 4 கோடியே 39 லட்சத்து 60 ஆயிரத்து 460 க்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    • வழக்குகளில் தீர்வு காண துண்டு பிரசுரங்கள் விநியோகம்
    • மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்

    நாகர்கோவில்:

    நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க லோக் அதாலத் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    வருகிற 25,27-ந் தேதி களிலும், அடுத்த மாதம் 8, 11 மற்றும் 13-ந் தேதி களிலும் குமரி மாவட்டத்தில் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கோர்ட்டுகளில் நிலுவை யில் உள்ள சிவில், காசோலை வழக்குகள், குடும்ப வழக்குகள், குடும்ப பராமரிப்பு வழக்குகள் போன்றவற்றில் வழக்கு தொடர்ந்தவர்களும், வழக்கில் சம்பந்தப்பட்ட வர்களும் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

    10 நாட்களுக்குள் சம்பந்த ப்பட்ட நீதிமன்றத்திலோ நாகர்கோவிலில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக் குழுவிலோ மனு அளித்து நடைபெற உள்ள லோக் அதாலத் நிகழ்ச்சியில் தீர்வு பெற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    நாகர்கோவில் கோர்ட் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அருள் முருகன் துண்டு பிரசுரங்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தலைமை குற்றவியல் நீதிபதி மாய கிருஷ்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான நம்பிராஜன், முதன்மை சார்பு நீதிபதி சொர்ணகுமார், நீதிபதி சிவசக்தி, மாவட்ட உரிமை யியல் நீதிபதி கங்காராஜ், காசோலை வழக்கு விசாரணை நீதிபதி கீர்த்திகா, சார்பு நீதிபதி மற்றும் நீதிபதிகள் அசார் அகமது மற்றும் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • ஜீவனாம்ச வழக்கு, செக் மோசடி, சிவில் வழக்கு, வங்கி வராக்கடன் உள்ளிட்ட 1,281 வழக்கு விசாரணை நடைபெற்றது.
    • 589 வழக்குகள் உடனடி தீர்வு காணப்பட்டு ரூ.45 கோடியே 27 லட்சத்து 3 ஆயிரத்து 83 நிவாரண தொகையாக வழங்கப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரியில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் கூடுதல் சார்பு நீதிமன்றம் முதன்மை நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றங்கள் 1, 2 இயங்கி வருகின்றன.

    இந்த நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில் முதன்மை சார்பு நீதிபதி அறிவுறுத்தலின் படி மெகா லோக் அதாலத் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    இதில் நிலமோசடி, குடும்ப நல வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நிலம் கையகப்படுத்தப்பட்ட வழக்குகள், ஜீவனாம்ச வழக்கு, செக் மோசடி, சிவில் வழக்கு, வங்கி வராக்கடன், உள்ளிட்ட 1,281 வழக்கு விசாரணை நடைபெற்றது. 589 வழக்குகள் உடனடி தீர்வு காணப்பட்டு ரூ.45 கோடியே 27 லட்சத்து 3 ஆயிரத்து 83 நிவாரண தொகையாக வழங்கப்பட்டது.

    • நீதிமன்றங்களில் லோக் அதாலத் எனப்படும் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    • மாவட்டத்தில் மொத்தம் 681 வழக்குகள் முடிக்கப்பட்டன. ரூ.3 கோடியே 50 லட்சத்து 5 ஆயிரத்து 192க்கு தீா்வு காணப்பட்டன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நீதிமன்றங்களில் லோக் அதாலத் எனப்படும் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. ஊட்டியில் மாவட்ட முதன்மை நீதிபதி முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், சொத்து சம்பந்தமான வழக்குகள், வங்கிக் கடன் தொடா்பான வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், மோட்டாா் வாகன நஷ்ட ஈடு கோரும் வழக்குகள், குடும்ப பிரச்சினை, சம்பந்தமான வழக்குகள், காசோலை வழக்குகள், சிவில் வழக்குகள், தேசிய வங்கிகளின் வாராக் கடன் சம்பந்தமான அனைத்து வகை வழக்குகளும் எடுத்துக் கொள்ளப்பட்டு சமரசம் மூலம் தீா்வு காணப்பட்டன.

    இதில், நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள்ஆணைக் குழுவின் செயலாளரும் சாா்பு நீதிபதியுமான சி.ஸ்ரீதா், ஊட்டி உரிமையியல் நீதிபதி ஏ.மோகன கிருஷ்ணன் மற்றும் ஊட்டி குற்றவியல் நீதித்துறை நடுவா் என்.தமிழினியன் ஆகியோா் ஊட்டி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளுக்கு தீா்வு கண்டனா்.

    அதேபோல, குன்னூா் நீதிமன்ற வளாகத்தில் சாா்பு நீதிபதி எஸ்.சந்திரசேகரன் தலைமையில் குற்றவியல் நீதித் துறை நடுவா் ஆா்.அப்துல் சலாம் மற்றும் கே.இசக்கி மகேஷ்குமாா் முன்னிலையில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளை எடுத்துக்கொண்டு சமரச தீா்வு கண்டனா்.

    கூடலூா் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் ஆா்.ஷஷின்குமாா் தலைமையில் கூடுதல் உரிமையியல் நடுவா் க.பிரகாஷ் முன்னிலையிலும், பந்தலூா் நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை நடுவா் டி.சிவகுமாா் மற்றும் என்.சிவசுப்பிரமணியன் முன்னிலையில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளுக்கு சமரச தீா்வு கண்டனா்.

    கோத்தகிரி நீதிமன்ற வளாகத்தில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் வனிதா முன்னிலையிலும், குன்னூா் மாவட்ட உரிமையியல் நடுவா் ராஜ்கணேஷ் முன்னிலையிலும் வழக்கு களுக்கு தீா்வு கண்டனா். இதில் வழக்காடிகள், வங்கி மேலாளா்கள், மாவட்ட நீதிமன்ற ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

    மக்கள் நீதிமன்றத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளில் 1,137 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 652 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன. அதேபோல, வங்கி வாராக் கடன் வழக்குகளில் 29 வழக்குகள் தீா்வு காணப்பட்டன. அதன் மதிப்பு ரூ.84 லட்சத்து 5 ஆயிரத்து 897. மாவட்டத்தில் மொத்தம் 681 வழக்குகள் முடிக்க ப்பட்டன. ரூ.3 கோடியே 50 லட்சத்து 5 ஆயிரத்து 192க்கு தீா்வு காணப்பட்டன.  

    • நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
    • இதில் சார்பு நீதிபதி (பொ) முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சிறப்பு முகாம் நடந்தது. இதற்கு முதன்மை மாவட்ட நீதிபதி மதுசூதனன் தலைமை தாங்கினார்.

    இதில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப நல வழக்கு, காசோலை மோசடி வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள் மற்றும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

    இவற்றில் பல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்நிகழ்வில் சார்பு நீதிபதி (பொ) முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மக்கள் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது.

    • நாடு முழுவதும் இன்று லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது.
    • குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பூதப்பாண்டி, பத்மநாபபுரம், குழித்துறை, இரணியல் கோர்ட்டுகளில் லோக் அதாலத் நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க லோக் அதாலத் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இன்று லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது.

    குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பூதப்பாண்டி, பத்மநாபபுரம், குழித்துறை, இரணியல் கோர்ட்டுகளில் லோக் அதாலத் நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது.

    நாகர்கோவிலில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன் தொடங்கி வைத்தார். தலைமை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன், சார்பு நீதிபதி நம்பிராஜன், முதன்மை சார்பு நீதிபதி சொர்ணகுமார் மற்றும் நீதிபதிகள் சிவசக்தி, கங்கராஜ், தாயுமானவர், அலிமாபயிற்சி நீதிபதி கீர்த்தனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் கோர்ட்டில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் சொத்து பிரச்சினை தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப பிரச்சினை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணைக்கு மனு தாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்கள் ஆஜரா னார்கள். இதில் ஒருசில வழக்கு சுமூகமாக பேசி முடிக்கப்பட்டது.

    நீதிமன்றங்களில் நேரடியாக தொடுக்கப்பட்ட2090 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மதியத்திற்குள் 23 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது.

    இதன் மூலமாக ரூ.84 லட்சத்து 45 ஆயிரம் தீர்வு தொகையாக வழங்கப்பட்டது.

    மேலும் மாநகராட்சிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் முக கவசம் தொடர்பாக 11800 வழக்குகளில் 11 ஆயிரத்து 471 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.41 லட்சத்து 60 ஆயிரத்து 100 வசூலிக்கப்பட்டது.

    வங்கி வழக்குகள் 14 ஆயிரத்து 908 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 11 ஆயிரத்து 946 வழக்குகள் தீர்வு காணப்பட்டு உள்ளது. இதன் மூலமாக ரூ.4 கோடியே 67 லட்சத்து 45 ஆயிரத்து 711 வசூல் செய்யப்பட்டுள்ளது.

    • விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ள வழக்குகள் குறித்த ஆலோசனை கூட்டம்.
    • விபத்து வழக்குகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதிகளவிலான வழக்குகளுக்கு தீர்வுகாணும் வகையில் அறிவுறுத்தப்பட்டது.

    திருப்பூர் :

    மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வருகிற 26-ந்தேதி லோ அதாலத் என்னும்மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் விசாரணைக்குஎடுத்து கொள்ளப்படவுள்ள வழக்குகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட நீதிபதிசொர்ணம் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.விபத்து வழக்குகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதிகளவிலான வழக்குகளுக்கு தீர்வுகாணும் வகையில் அறிவுறுத்தப்பட்டது. இதில்குற்றவியல் நடுவர் புகழேந்தி, மோட்டார் வாகன விபத்து சிறப்பு நீதிபதி ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இன்சூரன்ஸ் நிறுவன அலுவலர்கள், வக்கீல்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

    ×