search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்ட கோர்ட்டுகளில் இன்று லோக் அதாலத்
    X

    குமரி மாவட்ட கோர்ட்டுகளில் இன்று லோக் அதாலத்

    • காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், விபத்து தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தனித்தனி அறைகளில் வழக்குகள் விசாரணை நடந்தது.
    • மாவட்டம் முழுவதும் 2126 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தில் மதியம் 12 மணி வரை 314 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    நாகர்கோவில்:

    கோர்ட்டுகளில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க லோக் அதாலத் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் கோர்ட் டில் இன்று நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி அருள் முருகன் தலைமை தாங்கி னார். மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி மாய கிருஷ்ணன், முதன்மை சார்பு நீதிபதி சொர்ண குமார், நீதிபதி நம்பிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், விபத்து தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தனித்தனி அறைகளில் வழக்குகள் விசாரணை நடந்தது.

    பூதப்பாண்டி,குழித்துறை, தக்கலை, இரணி யல் கோர்ட்டுகளிலும் லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டம் முழுவதும் 2126 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தில் மதியம் 12 மணி வரை 314 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.இதன் மூலம் ரூ. 4 கோடியே 39 லட்சத்து 60 ஆயிரத்து 460 க்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    Next Story
    ×