search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்குகளுக்கு தீர்வு"

    • சிறப்பு மக்கள் நீதி மன்றம் மூலம் 798 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • தருமபுரியில் மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார்.

    தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் தாலுகா கோர்டுகளிலும் நடைபெற்றது.

    நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படியும், சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படியும், சிறப்பு மக்கள் நீதிமன்றம் தருமுபுரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.

    தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கான சமரச தீர்வு காணும் நிகழ்வை மாவட்ட முதண்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார்.

    தருமபுரி நீதிமன்ற வழக்கறிஞர்களும் வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். நீதிபதிகள் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். இதேபோல் அரூர், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய பகுதிகளில் உள்ள தாலுகா நீதிமன்றங்களிலும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள நில ஆர்ஜிதம் தொடர்பான இழப்பீடு வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக் கூடிய குற்ற வழக்குகள் என மொத்தம் 1741 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. விசாரணையின் முடிவில் 798 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 63 லட்சத்து 17 ஆயிரத்து 366 தொகைக்கு சமரச தீர்வு காணப்பட்டது. 

    • ரூ.2 கோடியே 62 லட்சத்து 70ஆயிரத்து 209 வழங்க நீதிபதி உத்தரவிட்டார்
    • வக்கீல்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் நேற்று நடைபெற்றது.

    மக்கள் நீதிமன்றத்திற்கு சார்பு நீதிபதி ஜெயசூர்யா தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சுஜாதா, கோபிநாத், அண்ணாதுரை ஆகியோர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வாலாஜா அடுத்த ஒழுகூர் கிராமத்தை சேர்ந்த மோகன் (32), பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சவுந்தரி (26). தம்பதியருக்கு 5வயதில் ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி மோகன் மாமண்டூர் - புதூர் சாலையில் வந்த போது எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்த மோகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே மோகனின் மனைவி சவுந்தரி ராணிப்பேட்டை 2வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ரூ.1 கோடியே 9 லட்சத்து 95 ஆயிரம் இழப்பீட்டு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக ரூ.37 லட்சத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வழங்க வேண்டுமென உத்தரவிட்டு, அதற்கான ஆணையையும் வழங்கினார். மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் பாண்டியன், விஜயகுமார் ஆகியோர் ஆஜராகினர்.

    நேற்று நடந்த லோக் அதாலத் மூலம் 22 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் உள்பட மொத்தம் 31 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2கோடியே 62 லட்சத்து 70ஆயிரத்து 209 வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இதில் வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • திருவண்ணாமலை கோர்ட்டில் மக்கள் நீதி மன்றம் நடந்தது
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3.76 கோடி நஷ்டஈடு

    வண்ணாமலை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் குறித்த மாவட்ட அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    முதன்மை மாவட்ட நீதிபதியும், சட்டப்பணி ஆணைக்குழு தலைவருமான இருசன் பூங்குழலி மேற்பார்வையில், தலைமை குற்றவியல் நடுவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். இதில் பார் அசோசியேசன் தலைவர், துணைத்தலைவர் மற்றும் மூத்த வக்கீல்கள் கலந்துகொண்டனர்.

    மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 368 எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 69 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக 3 கோடியே 76 லட்சத்து 95 ஆயிரத்து 38 ரூபாய் வழங்கப்பட்டது.

    • அரியலூரில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மகாலட்சுமி துவக்கி வைத்தார்,
    • அரியலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5 ஆயிரத்து 748 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது,

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அரியலூரில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மகாலட்சுமி துவக்கி வைத்தார்,

    அமர்வு நீதிபதி கர்ணன், குடும்ப நல நீதிபதி செல்வம், மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆனந்தன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணன், முதன்மை சார்பு நீதிபதி ஜெயசூர்யா, நீதித்துறை நடுவர்கள் அரியலூர் செந்தில்குமார், கற்பகவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஜெயங்கொண்டத்தில் சார்பு நீதிபதி லதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி கணேஷ், நீதித்துறை நடுவர் ராஜசேகர் ஆகியோரும், செந்துறை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி அக்னேஷ்ஜெயாகிருபா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி செந்தில்குமார், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அழகேசன், முதுநிலை நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி, மற்றும் வக்கீல் சங்க பிரதிநிதிகள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    அரியலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5 ஆயிரத்து 748 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, 21 சிவில் வழக்குகளும், 6 மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், 445 சிவில் குற்ற வழக்குகளும், 4 செக் வழக்குகளும், 1 பண மீட்பு வழக்கும், 12 நகராட்சி சம்பந்தப்பட்ட வழக்குகளும், 85 வங்கிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது.

    மேலும் 14,815 போக்குவரத்து காவல்துறை விதிமீறல் வழக்குகளுக்கும், கொரோனா காலத்தில் அரசு விதிமுறைகளை மீறிய 2587 வழக்குகளும், ஆக மொத்தம் 17 ஆயிரத்து 976 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.


    • நாடு முழுவதும் இன்று லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது.
    • குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பூதப்பாண்டி, பத்மநாபபுரம், குழித்துறை, இரணியல் கோர்ட்டுகளில் லோக் அதாலத் நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க லோக் அதாலத் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இன்று லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது.

    குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பூதப்பாண்டி, பத்மநாபபுரம், குழித்துறை, இரணியல் கோர்ட்டுகளில் லோக் அதாலத் நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது.

    நாகர்கோவிலில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன் தொடங்கி வைத்தார். தலைமை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன், சார்பு நீதிபதி நம்பிராஜன், முதன்மை சார்பு நீதிபதி சொர்ணகுமார் மற்றும் நீதிபதிகள் சிவசக்தி, கங்கராஜ், தாயுமானவர், அலிமாபயிற்சி நீதிபதி கீர்த்தனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் கோர்ட்டில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் சொத்து பிரச்சினை தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப பிரச்சினை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணைக்கு மனு தாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்கள் ஆஜரா னார்கள். இதில் ஒருசில வழக்கு சுமூகமாக பேசி முடிக்கப்பட்டது.

    நீதிமன்றங்களில் நேரடியாக தொடுக்கப்பட்ட2090 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மதியத்திற்குள் 23 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது.

    இதன் மூலமாக ரூ.84 லட்சத்து 45 ஆயிரம் தீர்வு தொகையாக வழங்கப்பட்டது.

    மேலும் மாநகராட்சிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் முக கவசம் தொடர்பாக 11800 வழக்குகளில் 11 ஆயிரத்து 471 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.41 லட்சத்து 60 ஆயிரத்து 100 வசூலிக்கப்பட்டது.

    வங்கி வழக்குகள் 14 ஆயிரத்து 908 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 11 ஆயிரத்து 946 வழக்குகள் தீர்வு காணப்பட்டு உள்ளது. இதன் மூலமாக ரூ.4 கோடியே 67 லட்சத்து 45 ஆயிரத்து 711 வசூல் செய்யப்பட்டுள்ளது.

    ×