search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாலு பிரசாத் யாதவ்"

    • செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றுவது இதுதான் கடைசி.
    • அடுத்த முறை நாமே கொடி ஏற்றுவோம் என லாலு பிரசாத் தெரிவித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், சுதந்திர தினத்தையொட்டி பாட்னாவில் உள்ள தனது வீட்டில் நேற்று தேசியக் கொடி ஏற்றினார். அவரது மனைவி ராப்ரி தேவி உடன் இருந்தார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத், இந்த சுதந்திர தினத்தில் நான் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், மவுலானா அபுல் கலாம் ஆசாத், அம்பேத்கர் போன்ற மாமனிதர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். தேசத்துக்கு அவர்கள் ஆற்றிய பங்கை மறக்க முடியாது என்றார்.

    அவரிடம், அடுத்த சுதந்திர தினம், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு வரும் என்பதால் அடுத்த ஆண்டு பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவாரா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு லாலு பிரசாத், இல்லை... பிரதமர் மோடி இந்த தடவை கடைசி முறையாக செங்கோட்டையில் கொடி ஏற்றியுள்ளார். அடுத்த முறை நாங்கள்தான் (எதிர்க்கட்சிகள்) அங்கு கொடி ஏற்றுவோம் என தெரிவித்தார்.

    • லாலு பிரசாத் யாதவ் தன் கையால் சமைத்த மட்டன் உணவை ராகுல் காந்திக்கு பரிமாறினார்.
    • பீகாரின் சிறப்பு பாணியில் ஆட்டிறைச்சி எப்படி சமைக்கப்படுகிறது என்பதை ராகுல் காந்திக்கு லாலு விளக்கியதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    மோடி பற்றிய அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிறுத்தி வைத்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவுக்கு பிறகு நேற்று இரவு ராகுல் காந்திக்கு பீகார் முன்னாள் முதல்- மந்திரியும், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் விருந்து கொடுத்தார்.

    லாலுபிரசாத் யாதவின் மகளும், எம்.பி.யுமான மிசா பார்தியின் டெல்லி இல்லத்தில் இந்த விருந்து நிகழ்வு நடைபெற்றது.

    விருந்துக்கு வந்த ராகுல் காந்தியை லாலுபிரசாத் யாதவ் கட்டியணைத்து வரவேற்றார். அவருக்கு பூச்செண்டும் வழங்கினார்.

    லாலு பிரசாத் யாதவ் தன் கையால் சமைத்த மட்டன் உணவை ராகுல் காந்திக்கு பரிமாறினார். பீகாரில் இருந்து மசாலா பொருட்களை கொண்டு வந்து மட்டன் உணவை அவர் சமைத்தார். பீகாரின் சிறப்பு பாணியில் ஆட்டிறைச்சி எப்படி சமைக்கப்படுகிறது என்பதை ராகுல் காந்திக்கு அவர் விளக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பின் போது இருவரும் பேசிக்கொண்டு மகிழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் தொடர்பான விவாதங்களும் நடைபெற்றது.

    இந்த விருந்து நிகழ்ச்சியில் லாலு பிரசாத் யாதவின் மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • சரத் பவார் உங்கள் ஆசீர்வாதங்களை எங்களுக்குக் கொடுங்கள்.
    • 82 ஆக இருந்தாலும் சரி, 92 ஆக இருந்தாலும் சரி, வயது ஒரு தடையல்ல.

    மகாராஷ்டிர மாநில சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அஜித் பவார் மற்றும் சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டங்கள் நேற்று தனித்தனியாக நடைபெற்றன.

    அப்போது மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார், "சரத் பவார் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்சிபியின் ஆட்சியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். பாஜக தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். உதாரணமாக எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் உள்ளனர். இது புதிய தலைமுறையை உயர்த்த அனுமதிக்கிறது. சரத் பவார் உங்கள் ஆசீர்வாதங்களை எங்களுக்குக் கொடுங்கள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ நாங்கள் பிரார்த்தனை செய்வோம்" என்று கூறினார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் இன்று நடைபெற்றது.

    அப்போது அஜித் பவாரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையல் சரத் பவார் பேசினார். அவர், "தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் நான் தான். 82 ஆக இருந்தாலும் சரி, 92 ஆக இருந்தாலும் சரி, வயது ஒரு தடையல்ல. நான் இப்போதும் உத்வேகத்துடன் இருக்கிறேன். இன்றைய சந்திப்பு எங்களின் மன உறுதியை அதிகரிக்க உதவியுள்ளது" என தெரிவித்தார்.

    மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தனது மாமா சரத் பவாரின் வயது குறித்து கிண்டல் செய்ததற்கு பதிலளித்த பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான லாலு பிரசாத் யாதவ், "அரசியலில் ஓய்வு இல்லை" என்று கூறினார்.

    இன்று மருத்துவப் பரிசோதனைக்காக புதுதில்லிக்கு வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், "அஜித் பவார் சொல்வதால் மட்டும் சரத் பவார் ஓய்வு பெறுவாரா? ஒரு முதியவர் அரசியலில் ஓய்வு பெறுவாரா? அரசியலில் ஓய்வு இல்லை" என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பீகார் தலைநகர் பாட்னாவில் லாலுபிரசாத் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
    • வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு குறைந்தது 300 இடங்கள் கிடைக்கும் என்றார்.

    பாட்னா:

    பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது, ராஷ்ட்ரீய ஜனதா தள நிறுவனர் லாலுபிரசாத் யாதவும் பேட்டி அளித்தார். பிரதமர் மோடியை எதிர்கொள்ள, தான் உடல்தகுதியுடன் இருப்பதாக அவர் கூறினார்.

    அதன்பின், தனக்கே உரிய பாணியில் 53 வயதான ராகுல் காந்தியிடம் நகைச்சுவையாக பேசினார். அவர் கூறுகையில், திருமணம் செய்து கொள்ளுமாறு உங்களிடம் (ராகுல்) ஏற்கனவே கூறியிருக்கிறேன். ஆனால் என் அறிவுரையை நீங்கள் கேட்பது இல்லை. நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதது, உங்கள் தாயாருக்கும் (சோனியா காந்தி) கவலை அளிக்கிறது. இன்னும் காலம் இருக்கிறது. திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் திருமண ஊர்வலத்தில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறோம். நீங்கள் அணிந்துள்ள அரைக்கை சட்டை நன்றாக இருக்கிறது. மோடியின் குர்தாவுக்கு சரியான போட்டியாக இருக்கும் என்றார்.

    லாலு சொன்னதைக் கேட்டு, இதர தலைவர்கள் உரக்கச் சிரித்து மகிழ்ந்தனர். வெட்கம் கலந்த புன்னகையுடன் லாலுவைப் பார்த்த ராகுல் காந்தி, நீங்களே சொல்லிவிட்டதால், அது நடக்கும் என்று கூறினார்.

    இந்நிலையில், பாட்னாவில் லாலுபிரசாத் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், யார் பிரதமரானாலும் மனைவி இல்லாமல் இருக்கக் கூடாது. மனைவி இல்லாமல் பிரதமர் இல்லத்தில் தங்குவது தவறு என்றார்.

    மேலும், வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என கேட்டதற்கு, குறைந்தது 300 இடங்களாவது கிடைக்கும் என தெரிவித்தார்.

    • நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதது, உங்கள் தாயாருக்கும் கவலை அளிக்கிறது.
    • நீங்கள் அணிந்துள்ள அரைக்கை சட்டை நன்றாக இருக்கிறது. மோடியின் குர்தாவுக்கு சரியான போட்டியாக இருக்கும்.

    பாட்னா:

    பாட்னாவில், எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக நிருபர்களை சந்தித்தபோது, ராஷ்டிரிய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவும் பேட்டி அளித்தார். பிரதமர் மோடியை எதிர்கொள்ள, தான் உடல்தகுதியுடன் இருப்பதாக அவர் கூறினார். பின்னர், தனக்கே உரிய பாணியில், 53 வயதான ராகுல்காந்தியிடம் நகைச்சுவையாக பேசினார். அவர் கூறியதாவது:-

    திருமணம் செய்து கொள்ளுமாறு உங்களிடம் (ராகுல்) ஏற்கனவே கூறியிருக்கிறேன். ஆனால் என் அறிவுரையை நீங்கள் கேட்பது இல்லை. நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதது, உங்கள் தாயாருக்கும் (சோனியாகாந்தி) கவலை அளிக்கிறது.

    இன்னும் காலம் இருக்கிறது. திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் திருமண ஊர்வலத்தில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறோம். நீங்கள் அணிந்துள்ள அரைக்கை சட்டை நன்றாக இருக்கிறது. மோடியின் குர்தாவுக்கு சரியான போட்டியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    லாலு சொன்னதை கேட்டு, இதர தலைவர்கள் உரக்க சிரித்து மகிழ்ந்தனர். வெட்கம் கலந்த புன்னகையுடன் லாலுவை பார்த்த ராகுல்காந்தி, ''நீங்களே சொல்லி விட்டதால், அது நடக்கும்'' என்று கூறினார்.

    • பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டம் முடிந்ததும் முதல் மந்திரி நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    பீகார் முதல்வரம், ஐக்கிய ஜனதா தளம் கட்சித்தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதற்கிடையே, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜிரிவால், ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பேனர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 6 மாநில முதல் மந்திரிகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், கூட்டம் முடிந்ததும் முதல் மந்திரி நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    அப்போது லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:-

    இப்போது நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன், மேலும்  நரேந்திர மோடியை எதிர்கொள்ளவும் உடல் தகுதியுடன் இருக்கிறேன். நாட்டின் நிலைமை தற்போது மோசமாக உள்ளது. ஜூலை மாதம் சிம்லாவில் மீண்டும் ஒரு கூட்ட நிரலை தயார் செய்வோம். 2024ல் பாஜகவை எதிர்த்துப் போராட அந்தந்த மாநிலங்களில் பணியாற்றும்போது ஒன்றிணைந்து முன்னேறுவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
    • அதே அரவணைப்புடன் அவர் என்னை வரவேற்று சமூக நீதியின் ஜோதியை உயர்த்த வாழ்த்தினார்.

    பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று (23-ந் தேதி) எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் பங்கேற் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார சென்றுள்ளார். அப்போது, பாட்னாவில் ராஷ்ட்ர ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாவை சந்தித்தார். மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின், பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "நான் பாட்னா வந்தடைந்தேன், மாண்புமிகு பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பீகார் தமிழ் சங்கத்தின் ஐ.ஏ.எஸ். ஆகியோரிடமிருந்து அன்பான வரவேற்பைப் பெற்றேன். 'ஆசியாவின் ஒளி' புத்தர், 'ஜன்நாயக்' கர்பூரி தாக்கூர் மற்றும் திரு பி.பி. மண்டல் போன்றோரை நமக்கு வழங்கிய மண்ணில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இந்த பாசிச, எதேச்சதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியாவின் மறுபிறப்பை அனுமதிக்க, சமூக நீதியின் பூமியான இங்கிருந்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் போர் முழக்கம் எழுந்ததில் ஆச்சரியமில்லை" என்று பதிவிட்டுள்ளர்.

    தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், "மூத்த தலைவர் லாலுபிரசாத்யாதவை அவரது இல்லத்தில் சந்தித்தேன். தலைவர் கலைஞர் மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பாசத்தை நாம் அனைவரும் அறிவோம், அதே அரவணைப்புடன் அவர் என்னை வரவேற்று சமூக நீதியின் ஜோதியை உயர்த்த வாழ்த்தினார். அவர் நம் அனைவருக்கும் வழிகாட்ட நீண்ட ஆயுளை வாழ்த்தினேன். நாளை (இன்று) வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு தயாராகி வருகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.

    • பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
    • மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின், பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை எதிர்க்கட்சிகள் இடையே சுமூகமான ஒருமித்த கருத்து உருவாகவில்லை.

    இந்த நிலையில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.

    இதைத் தொடர்ந்து பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று (23-ந் தேதி) எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    எதிர்க்கட்சி தலைவர்களில் தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை விமானம் மூலம் பீகார் புறப்பட்டார்.

    இந்நிலையில், பீகார் சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பாட்னாவில் ராஷ்ட்ர ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாவை சந்தித்தார்.

    மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின், பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

    மேலும், இரு தலைவர்களின் சந்திப்பின் அடையாளமாக கருணாநிதி பற்றிய நூல் ஒன்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.

    பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் இன்று காலை நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • டெல்லியில் மேலும் சில எதிர்க்கட்சி தலைவர்களை நிதிஷ் குமார் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார்.

    புதுடெல்லி:

    டெல்லி வந்த பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் இன்று, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசினார். லாலு பிரசாத் யாதவ் டெல்லியில் அவரது மகள் மிசா பார்தியின் வீட்டில் தங்கியிருக்கிறார். அவரைப் பார்த்து உடல்நலம் விசாரித்தார் நிதிஷ் குமார்.

    மேலும் இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தனர். வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்கொள்வதற்கு, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ரெயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் தொடர்புடைய பண மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.

    லாலு பிரசாத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட மேலும் சில எதிர்க்கட்சி தலைவர்களை நிதிஷ் குமார் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பாஜகவை 100 தொகுதிகளுக்குள் கட்டுப்படுத்தி விடலாம் என நிதிஷ் குமார் கூறியிருந்தார்.

    பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து ஆட்சியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரெயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் வாங்கிய வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருந்தது.
    • 3 மாதங்களுக்கு முன்பு லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    புதுடெல்லி:

    ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் 2004-2009 வரை மத்திய மந்திரியாக இருந்தார்.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அவர் மத்திய ரெயில்வே மந்திரியாக பணியாற்றினார்.

    அப்போது இந்திய ரெயில்வேயில் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக லாலு பிரசாத் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டது. பலரிடம் நிலத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு ரெயில்வேயில் வேலை வழங்கியதாக அவர் மீது புகார் கூறப்பட்டது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தினரும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவி உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

    ரெயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் வாங்கிய வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருந்தது.

    இதற்கிடையே லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி, மகள் மிசா பாரதி உள்பட 14 பேர் இந்த வழக்கில் இன்று (15-ந்தேதி) ஆஜராக டெல்லி சிறப்பு கோர்ட்டு நீதிபதி கீதாஞ்சலி கோயல் கடந்த 27-ந்தேதி சம்மன் அனுப்பினார்.

    இதை தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜரானார். வீல் சேரில் அவர் கோர்ட்டுக்கு காலை 10 மணிக்கு வந்தார். 3 மாதங்களுக்கு முன்பு அவர் சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த சிகிச்சைக்கு பிறகு லாலு முதல் முறையாக கோர்ட்டு வந்தார்.

    மனைவி ராப்ரிதேவி, மகள் மிசா பாரதி ஆகியோரும் இன்று கோர்ட்டில் ஆஜரானார்கள்.

    காலை 11 மணிக்கு தான் கோர்ட்டு நடவடிக்கைகள் தொடங்கியது. ரெயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் லாலு பிரசாத் யாதவ், ராப்ரிதேவி, மிசா பாரதி ஆகியோருக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

    ஜாமீன் பெற்றதால் லாலுவுக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டது. அவர் கால்நடை தீவன ஊழல் வழக்கில் ஏற்கனவே பல ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து இருந்தார்.

    இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவின் உதவியாளர் போலோ யாதவ் கடந்த ஜூலை மாதம் கைதாகி இருந்தார்.

    • ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
    • எனது கட்சியினரோ, குடும்பத்தினரோ ஒருபோதும் பா.ஜ.க.வுக்கு பணிய மாட்டோம் என்றார்.

    பாட்னா:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த, 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரெயில்வே மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது பீகாரை சேர்ந்த சிலருக்கு, ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த வழக்கில் லாலு பிரசாத், அவரது மகன் மற்றும் துணை முதல் மந்திரியான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் 3 மகள்களுடன் தொடர்புடைய நாடு முழுவதும் உள்ள 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1.55 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள், 540 கிராம் தங்கம் மற்றும் 1.5 கிலோவுக்கு கூடுதலான தங்க நகைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    இதுவரை நடந்த சோதனை முடிவில் லாலு பிரசாத் குடும்பத்துடன் தொடர்புடைய வழக்கில் ஏறக்குறைய ரூ.600 கோடி அளவுக்கு பணமோசடி குற்றங்கள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், எனது கட்சியினரோ, குடும்பத்தினரோ ஒருபோதும் அவர்களுக்கு (ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா) பணிய மாட்டார்கள் என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அவசரநிலைக் காலத்தின் இருண்ட பகுதியையே பார்த்தவர்கள் நாங்கள். அப்போதும் நாங்கள் போராடியிருக்கிறோம். இன்று எனது மகள்கள், பேத்திகள், கர்ப்பிணி மருமகள் ஆதாரமில்லாத பழிவாங்கும் நோக்கிலான வழக்குகளுக்காக 15 மணிநேரத்திற்கும் மேலாக காக்க வைக்கப்பட்டுள்ளனர். எங்களுடனான அரசியல் ரீதியிலான சண்டைக்காக பா.ஜ.க. இவ்வளவு கீழ்த்தரமான அளவிற்கு இறங்குமா? என்றும், மற்றொரு டுவிட்டர் பதிவில், "எனக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வுடன் கருத்தியல் ரீதியிலான போராட்டம் இருந்து வருகிறது. அது தொடரும். நான் அவர்கள் முன் ஒருபோதும் பணிந்தது இல்லை. என்னுடைய குடும்பத்தினரோ, கட்சியினரே யாரும் அவர்களின் அரசியலுக்கு முன்பு பணியமாட்டார்கள்" என தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தோள்பட்டையில் ஏற்பட்ட காயம்.
    • தனது தந்தையாரின் உடல்நிலை சீராக உள்ளது என்று தேஜஸ்வி யாதவ் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை அறிந்து வருந்துகிறேன்.

    தனது தந்தையாரின் உடல்நிலை சீராக உள்ளது என்று தேஜஸ்வி யாதவ் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×