search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்து"

    • அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
    • பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்து வர் அணி சார்பில் நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசையும், கவர்ன ரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்ட த்தை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழி லாளர் நலத்துறை சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். 

    இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. க்கள் இள. புகழேந்தி, சரவணன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, பொதுக்குழு உறுப்பி னர் குறிஞ்சிப்பாடி பால முருகன், ஒன்றிய செய லாளர்கள் பொறியாளர் சிவக்குமார், காசிராஜன், சுப்பிரமணியன், நாராயண சாமி, வெங்கட்ராமன், தனஞ்ஜெயன், விஜய சுந்தரம், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்கள் கார்த்திகேயன், கணேஷ் குமார், மருத்துவர் அணி டாக்டர் கலைக்கோவன், நகர மன்ற தலைவர்கள் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், சிவகுமார், சங்கவி முருகதாஸ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், பகுதி செய லாளர்கள் சலீம், நடராஜன், இளையராஜா, வெங்கடேசன், மாநகர துணை செயலாளர் சுந்தர மூர்த்தி , மண்டல குழு தலை வர்கள் பிரசன்னா, சங்கீதா செந்தில் முருகன், சங்கீதா, பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலா குமார், துணை தலைவர் ராமர், பகுதி துணை செயலாளர்கள் லெனின், ஜெயசீலன், கார் வெங்கடேசன், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி நிர்வாகிகள் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, கிளை, பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முன்னதாக காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கப்பட்டு இன்று மாலை 5 மணி வரை நடை பெற உள்ளது.

    • ரெயில் பாதை இணைப்பு பணி காரணமாக ஹவுரா, புவனேசுவர் செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    மதுரை

    புவனேசுவர்- மஞ்சேசுவர் மற்றும் ஹரிதாஸ்பூர்-தன்மண்டல் ரெயில் நிலையங்களுக்கு இடையே 3-ம் ரெயில் பாதை இணைப்பு பணி நடைபெறுவதால் கன்னியாகுமரி-ஹவுரா-கன்னியாகுமரி மற்றும் ராமேசுவரம்-புவனேஷ்வர்-ராமேசுவரம் இடையே இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    ஹவுரா-கன்னியாகுமரி செல்லக்கூடிய அதிவிரைவு ரெயிலானது (வ.எண்.12665) ஆகஸ்ட் 21, 29 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    கன்னியாகுமரி-ஹவுரா செல்லக்கூடிய அதிவிரைவு ரெயிலானது (வ.எண்.12666) ஆகஸ்ட் 19, 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    புவனேசுவர்-ராமேசுவரம் செல்லக்கூடிய அதிவிரைவு ரெயிலானது (வ.எண்.20896) ஆகஸ்ட் 18,25 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    ராமேசுவரம்-புவனேஷ்வர் செல்லக்கூடிய அதிவிரைவு ரெயிலானது (வ.எண்.20895) ஆகஸ்ட் 20, 27 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே தெரி வித்துள்ளது.

    • பாதுகாப்பு சோதனை உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்து விட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.
    • என்ஜினீயர்கள் விமானத்திற்குள் ஏறி, தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முயன்றனர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 146 பயணிகள், அதிகாலை 4 மணிக்கு முன்னதாகவே, சென்னை விமான நிலையத்துக்கு வந்து, பாதுகாப்பு சோதனை உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்து விட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.

    இந்நிலையில், விமானத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்னதாக விமானி, விமானத்தில் இயந்திரங்களை சரி பார்த்தார். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை அறிந்து, பயணிகளை விமானத்தில் ஏற்றாமல், விமானம் தாமதமாக காலை 8 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. என்ஜினீயர்கள் விமானத்திற்குள் ஏறி, தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முயன்றனர். ஆனால் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு சரி செய்ய முடியவில்லை. இதை அடுத்து விமானம் இன்று ரத்து என்று அறிவிக்கப்பட்டது.

    இதனால் பயணிகள் ஆத்திரமடைந்து, ஏர் இந்தியா விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்து கொண்டு ஆவேசமாக வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். அதிகாலை 4 மணிக்கு முன்னதாகவே வந்து காத்திருக்கிறோம், இவ்வளவு நேரம் தாமதம் என்று கூறிவிட்டு, இப்போது திடீரென ரத்து என்று கூறுகிறீர்களே? இதை அப்போதே கூறியிருந்தால், நாங்கள் வேறு விமானத்தில் சென்று இருப்போமே என்று அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

    இதையடுத்து பயணிகளை விமான நிலைய அதிகாரிகளும், பாதுகாப்பு படையினரும் சமாதானம் செய்தனர். விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருக்கும்போது, விமானத்தை இயக்குவது பாதுகாப்பானது இல்லை. உங்களுடைய நலன் கருதி தான் விமானத்தை ரத்து செய்து இருக்கிறோம். நாளை காலை விமானம் புறப்பட்டு செல்லும். விருப்பப்பட்டவர்கள் நாளை பயணியுங்கள். மற்றவர்கள் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தனர். இதனால் பயணிகள் வேறு வழியின்றி அமைதி அடைந்தனர். சிலர் தங்களுடைய விமான டிக்கெட்டை வேறு விமானத்திற்கு மாற்றி பயணம் செய்கின்றனர்.

    இதற்கிடையே சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 6 மணி நேரம் தாமதமானதால், 328 பயணிகள், சென்னை விமான நிலையத்தில் அவதி அடைந்துள்ளனர்.

    லண்டனில் இருந்து சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், இன்று அதிகாலை 3:30 மணிக்கு, சென்னை வந்துவிட்டு மீண்டும், காலை 5:30 மணிக்கு, சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும். அந்த விமானத்தில் இன்று சென்னையில் இருந்து 328 பயணிகள் லண்டன் செல்ல இருந்தனர்.

    ஆனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக, லண்டனிலிருந்து தாமதமாக புறப்பட்டு, இன்று காலை 10 மணிக்கு மேல் தான் சென்னை வந்தது. எனவே சென்னையிலிருந்து அதிகாலை 5:30 மணிக்கு லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், இன்று 6 மணி நேரம் தாமதமாக, காலை 11:20 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் லண்டன் செல்ல வேண்டிய 328 பயணிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தவித்தனர்.

    • வேளாண்மை உற்பத்தியாளர்கள்‌ கூட்டுறவு விற்பனைச்‌ சங்கத்தில்‌ பிரதிவாரம்‌ சனிக்கிழமை மஞ்சள்‌ ஏலம்‌ நடைபெற்று வருகிறது.
    • மஞ்சள்‌ ஏலம்‌ போதிய கிடங்கு வசதி இல்லாத காரணத்தால்‌ ரத்து செய்யப்படுவதாக கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்‌.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் பிரதிவாரம் சனிக்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இன்று(சனிக்கிழமை) நடைபெற இருந்த மஞ்சள் ஏலம் போதிய கிடங்கு வசதி இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்படுவதாக கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு புது மஞ்சள் ஏலம் ஆரம்பித்த நாள் முதலே போதிய இடவசதி இல்லாமல் ஒவ்வொரு வாரமும் ஏலம் நடைபெறுமா? இல்லையா? என போன் மூலம் கேட்டுக் தெரிந்த பிறகே மஞ்சள் கொண்டு வரவேண்டி உள்ளது. இந்த ஆண்டு மஞ்சளுக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் விற்பனை செய்வதும் கடினமாக உள்ளது. இந்த ஆண்டு திருச்செங்கோடு நகரின் பல பகுதிகளில் வாடகை கிடங்குகளிலேயே ஏலம் நடைபெறுகிறது.

    அதனால் கிடங்குகள் உள்ள இடங்களை கண்டு பிடிக்க முடியாமல் சிரமப்படுகிறோம். இதனால் லாரி வாடகை உள்ளிட்ட கூடுதல் செலவினங்கள் ஏற்படுகிறது. வாடகை கிடங்கு உள்ள இடங்களில் குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் இல்லை. இந்த சங்கத்திற்காக 2000-ம் ஆண்டு அரசால் சுமார் 5 ஏக்கர் நிலம் கைலாசம்பாளை யத்தில் வழங்கப்பட்டு இதுவரை அந்த இடத்தில் கிடங்குகளோ, களமோ கட்ட சங்கத்தால் எவ்வித நடவடிக் கையும் மேற்கொள்ளப் படவில்லை.

    அங்கு கிடங்கு கட்டினால் வாடகை கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏதும் இருக்காது. இதற்கு கூட்டுறவு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு புதிய கிடங்குகள் கட்ட வேண்டும்.

    விவசாயிகளின் நியாய மான கோரிக்கைகளை சங்கம் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் கலந்து பேசி மாவட்ட கலெக்டரிடம் முறையிட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ரெயில்வே சுரங்கப்பாதை பணிக்காக நாகர்கோவில்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் உள்பட 12 ரெயில்கள் நாளை மறுநாள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
    • தூத்துக்குடி, விருதுநகர் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

    மதுரை

    தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் யார்டு பகுதியில் நாளை மறுநாள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை ரெயில்வே சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து ரெயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    வருகிற 13-ந் தேதி ஈரோடு - நெல்லை செல்லும் விரைவு ரெயில் (வ.எண்.16845) திண்டுக்கல்- நெல்லை இடையேயும், நெல்லை - ஈரோடு விரைவு ரெயில் (வ.எண்.16846) நெல்லை,திண்டுக்கல் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

    கோவை-நாகர்கோவில் சந்திப்பு விரைவு ரெயில் (வ.எண்.16322) திண்டுக்கல் நாகர்கோவில் சந்திப்பு இடையேயும், நாகர்கோவில் சந்திப்பு- கோவை விரைவு ரெயில் (வ.எண்.16321) நாகர்கோவில் - திண்டுக்கல் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

    பாலக்காடு சந்திப்பு- திருச்செந்தூர் விரைவு ரெயில் (வ.எண்.16731) திண்டுக்கல்-திருச்செந்தூர் இடையேயும், திருச்செந்தூர்- பாலக்காடு சந்திப்பு விரைவு ரெயில்

    (வ.எண்.16732) திருச்செந்தூர், திண்டுக்கல் இடையேயும், பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    திருச்சி- திருவனந்தபுரம் விரைவு ரெயில் (வ.எண்.22627) திருவனந்தபுரம் இடையேயும், திருவனந்த புரம்-திருச்சி விரைவு ரெயில் (வ.எண்.22628) திருவனந்தபுரம், விருதுநகர் பகுதியாக ரத்து இடையேயும் செய்யப்படும்.

    மைசூர்-தூத்துக்குடி விரைவு ரெயில் விருதுநகர், தூத்துக்குடி இடையேயும், தூத்துக்குடி - மைசூர் செல்லக் கூடிய விரைவு ரெயில், (வ.எண்.16235) தூத்துக்குடி, விருதுநகர் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

    தாம்பரம்-நாகர்கோவில் செல்லக்கூடிய விரைவு ரெயில் (வ.எண்.20691) திருச்சி-நாகர்கோவில் சந்திப்பு இடையேயும், நாகர்கோவில்-தாம்பரம் செல்லக்கூடிய விரைவு ரெயில் (வ.எண்.20692) நாகர்கோவில், திருச்சி இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

    குருவாயூர்-சென்னை எழும்பூர் செல்லக்கூடிய விரைவு ரெயில் (வ.எண்.16128) நாளை (12-ந் தேதி) நெல்லை, தென்காசி, விருதுநகர் வழியாக சென்னை எழும்பூர் சென்றடையும்.

    நாகர்கோவில் சந்திப்பு- மும்பை சி.எஸ்.எம்.டி. செல்லக்கூடிய விரைவு ரெயில் (வ.எண் 16340) நாளை மறுநாள் 13-ந் தேதி நெல்லை, தென்காசி, விருதுநகர் வழியாக மும்பையை சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முசிறி அருகே பரபரப்பு கோவில் பூஜை ரத்து செய்யப்பட்டது
    • காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஊர் கோவிலில் வழிபாடு செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சினை

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே சூரம்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஒரு சமூகத்துக்கு சொந்தமான வேடிச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இதில் எட்டு பட்டி கிராமத்தைச் சேர்ந்த அந்த சமுதாய மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் அந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் வேற்று சமூகப் பெண்களை காதல் திருமணம் செய்து கொண்ட 8 வாலிபர்களுக்கு கோவிலில் வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவர்களில் 2 பேர் ஊருக்குள் குடியிருந்து வருகின்றனர். மற்றவர்கள் சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர். கோவில் திருவிழாவை முன்னிட்டு ஊர் திரும்பினர். ஆனால் ஊர் கட்டுப்பாடு காரணமாக கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்த அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட காதல் திருமண ஜோடிகள் முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து முசிறி தாசில்தார் அலுவலகத்தில் முத்தரப்பு சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் அந்த வாலிபர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற பூஜைகளிலும், வழிபாடுகளிலும் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மீண்டும் முசிறி போலீஸ் நிலையத்தை நாடினர்.அப்போது இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தினார். மேலும் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக யாரையும் ஒதுக்கி வைக்க சட்டத்தில் இடமில்லை. அவ்வாறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து நடைபெற இந்த பூஜை வழிபாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இது தொடர்பாக விசாரணை அதிகாரி கூறும் போது,

    காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் கோவிலில் வழிபட எதிர்ப்பு இல்லை. மற்றவர்களைப் போன்று அவர்களும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து மொட்டை அடித்துக் கொள்ளலாம்.ஆனால் அவர்களிடமிருந்து கோவில் நிர்வாகம் வரி வசூல் செய்யவில்லை. இதுதான் அங்குள்ள பிரச்சனையாக இருக்கிறது. இப்போது நடந்த பேச்சுவார்த்தையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் முப் பூஜைக்கு காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர்களிடம் வரி வசூல் செய்து ஊர் வழக்கப்படி சில சடங்குகளை செய்து அதன் பின்னர் அவர்களை சேர்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர் என தெரிவித்தார். ஆனால் இதற்கும் ஒரு தரப்பினர் முட்டுக்கட்டையாக உள்ளனர்.காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் கோவிலில் சாமி கும்பிட அனுமதி மறுத்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டுமனை பட்டாக்களை முறைகேடு செய்து விற்கப்படுகிறது.
    • பட்டாக்கள் மீதான ஒப்படைப்பு ஆணையை ரத்து செய்ய வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் காஞ்சிரங்குடி பகுதியில் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 1995-ம் ஆண்டில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. தற்போது அது தொடர்பான ஆணைகளில் திருத்தம் செய்ய வேண்டி இருப்பதாகவும், அதற்காக தாசில்தார் அவற்றைக் கேட்பதாகவும் கூறி, சில தனிநபர்கள் பட்டாக்களை பயனாளிகளிடம் வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் அந்த நபர்கள் பட்டா ஆவணங்களை வைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட இடங்களை வேலி அமைத்து ஆக்கிரமித்து வருவதாகவும், போலி ஆவணங்கள் தயாரித்து அந்த இடங்களை விற்பனை செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டுத்தர வேண்டும் என காஞ்சிரங்குடி காலனி கிராமத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீசிடம் மனு அளித்தனர்.

    அதில், கடந்த 1995-ம் ஆண்டு பட்டாக்கள் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்க வேண்டும் என்றும், புதிதாக வழங்கப்பட்டுள்ள பட்டாக்கள் மீதான ஒப்படைப்பு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தற்போது 40ம் எண்நூல் ஒரு கிலோ 245 ரூபாய்க்கும், 60ம் எண் நூல் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    • பல மில்கள் தினமும் ஒரு லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்ச ரூபாய் இழப்புடன் இயங்கி வருகின்றன.

    திருப்பூர்:

    கோவை புறநகரில் சரவணம்பட்டி, கோவில்பாளையம், அன்னூர் மற்றும் புளியம்பட்டி பகுதியில் 3,000 முதல் 50 ஆயிரம் ஸ்பின்டில் திறன் வரை உள்ள ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து பருத்தி மற்றும் பஞ்சு கொள்முதல் செய்து நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு பெரும்பாலும் 40 மற்றும் 60ம் எண் நூல் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு உற்பத்தியாகும் நூல் சோமனூர், திருப்பூர், ஈரோடு மற்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    அன்னூர் தாலுகாவில் மட்டும் கரியாம்பாளையம், குன்னத்தூர், கெம்பநாயக்கன்பாளையம், பொகலுார், பசூர், கஞ்சப்பள்ளி உட்பட பல பகுதிகளில் 110 ஸ்பின்னிங் மில்கள் உள்ளன.கடந்த சில மாதங்களாக 3 ஷிப்டுகள் இயங்கி வந்த ஸ்பின்னிங் மில்கள், இரண்டு ஷிப்டுகளாக மாறின. தற்போது ஒரு ஷிப்ட் மட்டுமே இயங்கி வருகின்றன. ஒரு சில மில்கள் மட்டுமே இரண்டு ஷிப்டுகள் இயங்குகின்றன. சில ஸ்பின்னிங் மில்கள் வாரத்திற்கு 2 நாள் விடுமுறை அறிவித்துள்ளன.சில மில்களில் ஒடிசா, பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வரவழைத்திருந்த தொழிலாளர்களுக்கு நீண்ட விடுமுறை அளித்து அனுப்பி விட்டனர்.

    இது குறித்து ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:-

    கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு ஸ்பின்னிங் மில்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது, 356 கிலோ எடையுள்ள ஒரு கண்டி பஞ்சு 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பஞ்சில் நூல் உற்பத்தி செய்யும்போது ஒரு கிலோ நூல் வங்கிக் கடனுக்கான வட்டி இல்லாமல் 283 ரூபாய் அசல் ஆகிறது.

    தற்போது 40ம் எண்நூல் ஒரு கிலோ 245 ரூபாய்க்கும், 60ம் எண் நூல் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோவுக்கு 33 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதிலும் வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டியை சேர்த்தால் ஒரு கிலோவுக்கு 50 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. பல மில்கள் தினமும் ஒரு லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்ச ரூபாய் இழப்புடன் இயங்கி வருகின்றன. இந்த நிலை மீண்டு விடும் என்கிற நம்பிக்கையில் நஷ்டத்துடன் விற்பனை செய்து வருகின்றனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக தொழிலாளர்களுக்கு வேலை தரும் ஜவுளித்துறை நிலைத்து நிற்க மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    மத்திய மாநில அரசுகள் உடனடியாக நூற்பாலைகளுக்கு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். தற்போது வசூலிக்கப்படும் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும். ஸ்பின்னிங் மில் முதலீட்டுக்கு மானியம் அளிக்க வேண்டும். உள்ளூரிலேயே பருத்தி அதிக அளவில் விளைவிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு பருத்தி, பஞ்சு ஏற்றுமதி செய்யக்கூடாது. நூல் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும். அதிக கட்டுப்பாடு விதிக்க வேண்டும். நுால் ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் சலுகை தர வேண்டும் என்றனர்.

    இந்தநிலையில் பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில், மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இது குறித்து விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(பெடக்சில்) துணைத்தலைவர் பல்லடத்தை சேர்ந்த சக்திவேல் கூறியதாவது:-

    ஜவுளி தொழில் துறை சார்பில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் ஆகியோரை, குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடந்த நிகழ்ச்சியின்போது சந்தித்து, கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. விஸ்கோஸ் மற்றும் செயற்கை நூல் இழைகளுக்கு, மத்திய அரசின் பல்வேறு தர கட்டுப்பாட்டு ஆணைகள் மூலம் கட்டாய சான்று பெறும் விதிமுறை நடைமுறையில் உள்ளது. ஜவுளி உற்பத்தி தொழில் வளர்ச்சிக்கு, இது பெரும் தடையாக உள்ளது. விஸ்கோஸ் மற்றும் செயற்கை நூல் இழைக்கு அரசின் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தில் இருந்து,விலக்கு அளிக்க வேண்டும்.

    உள்நாட்டில் போதிய அளவு பருத்தி சாகுபடி கிடையாது. துணி உற்பத்திக்கு தேவையான பருத்தி - பஞ்சினை வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்தாக வேண்டும் என்ற நிலை உள்ளது. இவ்வாறு, இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இது துணி உற்பத்தி செலவை அதிகரிக்க செய்கிறது.உள்நாட்டில் பருத்தி சாகுபடியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் துணி உற்பத்தியை பெருக்கி ஏற்றுமதி வாய்ப்பை அதிகப்படுத்த முடியும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • கோவில்பட்டி-குமாரபுரம் இடையே ெரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • ெரயில் இன்றும், வருகிற 17-ந் தேதியும் தேதியும் ரத்து.

    கோவை,

    கோவை-நாகர்கோவில் ெரயில் இன்றும், வருகிற 17-ந் தேதியும் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ெரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சேலம் ெரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை ெரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட கோவில்பட்டி-குமாரபுரம் இடையே ெரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ெரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி, இன்றும், வருகிற 17-ந் தேதியும் காலை 8 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை-நாகர்கோவில் விரைவு ரயில் (எண் 16322) திண்டுக்கல்-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தேதிகளில் இந்த ெரயிலானது கோவை-திண்டுக்கல் இடையே மட்டும் இயக்கப்படும்.

    இதேபோல மே 3 மற்றும் 17-ந் தேதி காலை 7.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில்-கோவை விரைவு ெரயில் (எண் 16321) நாகர்கோவில்-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தேதிகளில் இந்த ெரயிலானது, திண்டுக்கல்-கோவை இடையே மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • வருகிற 16ந் தேதி வரை கோவையில் இருந்து காலை 9:05 மணிக்கு புறப்படும் (06802) ரெயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
    • கோவை - இருகூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள வழித்தடத்தில் என்ஜினீயரிங் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    திருப்பூர்:

    கோவை என்ஜினீரியங் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை - சேலம் இடையிலான மெமு ெரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ெரயில்வே துறை அறிவித்துள்ளது.

    இது குறித்து தெற்கு ெரயில்வே சேலம் டிவிஷன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    கோவை - இருகூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள வழித்தடத்தில் என்ஜினீயரிங் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் வருகிற 16ந் தேதி வரை கோவையில் இருந்து காலை 9:05 மணிக்கு புறப்படும் (06802) ரெயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், சேலத்தில் இருந்து மதியம் 1:40 மணிக்கு புறப்படும் (06803) ரெயிலும் மே 1முதல் 16ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை, நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
    • அடுத்த வாரம் 9-ந் தேதி முதல் வழக்கம்போல் செவ்வாய் தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை, வெள்ளிக்கிழமை நிலக்கடலை காய் ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை, நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    செவ்வாய்க்கிழமை நடைபெறும் தேங்காய் பருப்பு ஏலத்திற்கு விவசாயிகள் திங்கள் அன்று தங்களது தேங்காய் பருப்புகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வருவார்கள். நாளை மே 1 விடுமுறை தினம் என்பதால் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் செவ்வாய்க்கிழமை 2-ந் தேதி நடைபெறும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறாது. அடுத்த வாரம் 9-ந் தேதி முதல் வழக்கம்போல் செவ்வாய் தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும்.

    இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • காவேரி டெல்டா பகுதிகளில் விவசாயம் பாதிக்கபடும்.
    • மத்திய அரசு இந்த திட்டத்தை தற்போது கைவிடுவதாக அறிவித்தது

    மதுக்கூர்:

    அண்மையில் மத்திய அரசு காவேரி டெல்டா பகுதிகள் உள்ளடக்கிய பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை அறிவித்தது.

    இந்த திட்டத்தால் காவேரி டெல்டா பகுதிகளில் விவசாயம் பாதிக்கபடும் என்பதால் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தது.

    மேலும் இந்த டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த திட்டத்தை தற்போது கைவிடுவதாக அறிவித்தது.

    இதைத் தொடர்ந்து மதுக்கூர் ஒன்றியம் கீழக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரகிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் ெபாது மக்கள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

    மேலும் இந்தத் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். 

    ×