search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் -  2-ந்தேதி ரத்து
    X

    கோப்புபடம். 

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் - 2-ந்தேதி ரத்து

    • தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை, நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
    • அடுத்த வாரம் 9-ந் தேதி முதல் வழக்கம்போல் செவ்வாய் தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை, வெள்ளிக்கிழமை நிலக்கடலை காய் ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை, நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    செவ்வாய்க்கிழமை நடைபெறும் தேங்காய் பருப்பு ஏலத்திற்கு விவசாயிகள் திங்கள் அன்று தங்களது தேங்காய் பருப்புகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வருவார்கள். நாளை மே 1 விடுமுறை தினம் என்பதால் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் செவ்வாய்க்கிழமை 2-ந் தேதி நடைபெறும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறாது. அடுத்த வாரம் 9-ந் தேதி முதல் வழக்கம்போல் செவ்வாய் தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும்.

    இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×