search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் திட்டம் ரத்து; மதுக்கூர் பகுதி விவசாயிகள் மத்திய அரசுக்கு நன்றி
    X

    டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் திட்டம் ரத்து; மதுக்கூர் பகுதி விவசாயிகள் மத்திய அரசுக்கு நன்றி

    • காவேரி டெல்டா பகுதிகளில் விவசாயம் பாதிக்கபடும்.
    • மத்திய அரசு இந்த திட்டத்தை தற்போது கைவிடுவதாக அறிவித்தது

    மதுக்கூர்:

    அண்மையில் மத்திய அரசு காவேரி டெல்டா பகுதிகள் உள்ளடக்கிய பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை அறிவித்தது.

    இந்த திட்டத்தால் காவேரி டெல்டா பகுதிகளில் விவசாயம் பாதிக்கபடும் என்பதால் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தது.

    மேலும் இந்த டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த திட்டத்தை தற்போது கைவிடுவதாக அறிவித்தது.

    இதைத் தொடர்ந்து மதுக்கூர் ஒன்றியம் கீழக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரகிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் ெபாது மக்கள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

    மேலும் இந்தத் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×