search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமது சமி"

    • ஆடுகளங்களின் தன்மையை முன்கூட்டியே சரி பார்ப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
    • பொதுவாக பந்து வீச்சாளர்கள் மைதானத்திற்கு வந்த பிறகு ஆடுகளத்தை சரி பார்க்கிறார்கள்.

    இந்தியாவில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது.

    இதற்கிடையே உலக கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் கால் வைத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு பலர் கண்டனம், அதிருப்தி தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி கூறியதாவது:-

    உலக கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர் தனது கால்களை வைத்திருந்தது என் மனதை காயப்படுத்தியது.

    உலகில் உள்ள அனைத்து அணிகளும் வெல்ல போராடும் கோப்பை, உங்கள் தலைக்கு மேல் நீங்கள் தூக்க விரும்பும் கோப்பை மீது கால் வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை.

    ஆடுகளங்களின் தன்மையை முன்கூட்டியே சரி பார்ப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பொதுவாக பந்து வீச்சாளர்கள் மைதானத்திற்கு வந்த பிறகு ஆடுகளத்தை சரி பார்க்கிறார்கள்.

    நான் ஆடுகளம் அருகில் செல்வதில்லை. ஏனென்றால் நீங்கள் பந்து வீசும் போதுதான் அது எப்படி உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். பிறகு ஏன் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை எளிமையாக வைத்திருப்பது நல்லது. உங்களை நிதானமாக வைத்திருங்கள். அப்போது தான் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா 240 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

    50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 240 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்த தோல்வியால் இந்திய அணி வீரர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா, தோல்விக்குப்பின் வழக்கமான நடைமுறையின்படி பேட்டியளித்தார். மற்ற வீரர்கள் பேட்டியளிக்கவில்லை.

    ஆஸ்திரேலியா தொடரில் இடம் பிடிக்காத வீரர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் உள்ளனர். முகமது சமி தனது சொந்த மாநிலமான உத்தர பிரதேசம் திரும்பியுள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா சென்றடைந்த அவரிடம், உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைய காரணம் என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த முகமது சமி, "நாங்கள் போதுமான ரன்கள் எடுக்காததுதான் காரணம். நாங்கள் 300 ரன்கள் எடுத்திருந்திருந்தால், அந்த ரன்னுக்குள் ஆஸ்திரேலியாவை எளிதாக கட்டுப்படுத்தியிருப்போம்" என்றார்.

    மேலும், அவருடைய சொந்த கிராமத்தில் மைதானம் கட்ட உத்தர பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு "எனது கிராமத்தில் மைதானம் கட்ட நடவடிக்கை எடுத்த உ.பி. அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாம் திறமையான ஏராளமான இளைஞர்கள் பெற்றுள்ளோம். நம்முடைய பகுதியில் சிறந்த மைதானம், அகாடமி உருவாவது, முக்கியமானது. இளைஞர்கள் விளையாட்டை பற்றி அதிக அளவில் கற்றுக்கொள்ள முடியும்" எனத் தெரிவித்தார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அபாரமாக பந்து வீசிய முகமது சமி, 24 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
    • ஆஸ்திரேலியா அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை இந்திய வீரர் முகமது சமியின் தாயார் அனும் அரா உத்தர பிரதேச மாநிலத்தின் அம்ரோகா மாவட்டத்தை சேர்ந்த தனது கிராமத்தில் கண்டுகளித்தார். போட்டியின் போது பதட்டம் அடைந்த அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சை பெற மற்றொரு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார். அதன்படி சுகாதார மையத்திற்கு விரைந்த சமியின் தாயார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சைக்கு பிறகு அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    "அவர் காய்ச்சல் மற்றும் பதட்டம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல்நிலை, சீராக உள்ளது," என சமியின் உறவினர் மும்தாஸ் தகவல் தெரிவித்ததாக தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 

    • துரதிர்ஷ்டவசமாக நேற்று நமது நாள் அல்ல.
    • போட்டி முழுவதும் எங்கள் அணிக்கும் எனக்கும் ஆதரவாக இருந்த அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று வந்த நிலையில், இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது. அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெறாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் போட்டி முழுவதும் எங்கள் அணிக்கும் எனக்கும் ஆதரவாக இருந்த அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி என முகமது சமி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து முகமது சமி கூறியிருப்பதாவது:-

    துரதிர்ஷ்டவசமாக நேற்று நமது நாள் அல்ல. போட்டி முழுவதும் எங்கள் அணிக்கும் எனக்கும் ஆதரவாக இருந்த அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். டிரெஸ்ஸிங் அறைக்கு வந்து எங்களை உற்சாகப்படுத்திய பிரதமருக்கு நன்றி...மீண்டும் வருவோம்...மீண்டு வருவோம்.

    இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

    • பல தலைமுறை ரசிகர்களாலும் சமியின் பந்து வீச்சானது கொண்டாடப்படும்.
    • அற்புதமான பேட்டிங் பந்து வீச்சுகளில் நமது அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

    உலக கோப்பையில் இந்திய அணி அரைஇறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதற்கு பிரதமர் நேற்று மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சாதனை படைத்த விராட்கோலி, முகமது சமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஒருநாள் போட்டியில் விராட்கோலி 50-வது சதத்தை மட்டும் அடிக்கவில்லை. சிறந்த வீரருக்கான வலிமை மற்றும் விடா முயற்சியை எடுத்துக் காட்டியுள்ளார். அவரின் அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கும் புதிய மைல்கல்லாக இந்த சாதனை அமைந்துள்ளது. நான் எனது வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். அவர் மேலும் பல சாதனைகள் புரிய வேண்டும்.

    இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முகமது சமிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். பல தலைமுறை ரசிகர்களாலும் அவரது பந்து வீச்சானது கொண்டாடப்படும். அற்புதமான பேட்டிங் பந்து வீச்சுகளில் நமது அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

    இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

    • 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் டோனி ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.
    • அரையிறுதி போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சமி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 398 என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து 48.5 ஓவர்களில் 327 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சமி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

    இந்நிலையில் டோனியின் ரன் அவுட்டுக்கு முகமது சமி பழி திர்த்தார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் டோனி ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார். அவர் களத்தில் நின்றிருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என இன்று வரை ஏங்காத ரசிகர்கள் இல்லை.

    அந்த நிலையில் நேற்றைய அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தியதற்கு முக்கிய காரணமாக இருந்த முகமது சமி 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டோனியின் ஜெர்சி நம்பர் 7 என்றும் முகமது எடுத்த விக்கெட்டும் 7 என்றும் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். 

    • உலகக் கோப்பையில் அதிகமுறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய பந்து வீச்சாளர்.
    • உலகக் கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்.

    மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 398 ரன் இலக்கை நோக்கி சென்ற நியூசிலாந்து 327 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி அபாரமாக பந்து வீசி 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் சாய்த்தார். இதன்மூலம் அவர் பல்வேறு சாதனைகள் படைத்தார்.

    அவரது சாதனைகள்....

    1. ஒருநாள் கிரிக்கெட் மற்றும் உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக ஸ்டூவர்ட் பின்னி 4 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் சாய்த்தது இந்திய பந்து வீச்சாளரின் சாதனையாக இருந்தது.

    2. ஒரு உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளராகியுள்ளார். சமி தற்போது வரை இந்த தொடரில் 23 விக்கெட் வீழ்த்தியுள்ளார். முன்னதாக ஜாகீர் கான் (2011) 21 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

    3. ஒரு உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். மிட்செல் ஸ்டார்க் (2019) 27 விக்கெட்டுகள் உடன் முதல் இடத்தில் உள்ளார். மெக்ராத் (2007) 26 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    4. உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். மெக்ராத் (7/15), பிக்கெல் (7/20), டிம் சவுத்தி (7/33), வின்ஸ்டன் டேவிஸ் (7/51) ஆகியோர் ரன் குறைவாக கொடுத்த அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றனர்.

    5. உலகக் கோப்பையில் 4 முறை ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். முன்னதாக ஸ்டார்க் உடன் 3 முறை வீழ்த்தி சமன் நிலையில் இருந்தார்.

    6. உலகக் கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

    நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருது முகமது சமிக்கு வழங்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் "என்னுடைய வாய்ப்புக்காக நான் காத்திருந்தேன். நான் அதிக அளவில் ஒயிட் பால் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. நாங்கள் யார்க்கர், ஸ்லோவர் பந்துகள் பற்றி பேசும்போது, இது என்னுடைய மனதில் இருந்தது.

    புதுப்பந்தில் விக்கெட் வீழ்த்த நான் முயற்சி செய்தேன். என்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு முயற்சி செய்தேன். கேன் வில்லியம்சன் கேட்ச்-ஐ தவறவிட்டேன். அதை மோசமாக உணர்ந்தேன். நான் என்னுடைய முழு வேகத்தில் பந்து வீச முயற்சி செய்தேன். அவர்கள் அவர்களுடைய முறைப்படி விளையாடிக் கொண்டிருந்தனர்.

    ஆகவே, வாய்ப்பை நான் எடுத்துக் கொண்டேன். விக்கெட் நன்றாக இருந்தது. பனி இருக்குமோ என்ற அச்சம் இருந்தது. புற்கள் நன்றாக நறுக்கப்பட்டிருந்தது. பனி இறங்கியிருந்தால், நிலைமை மோசமாக இருந்திருக்கும.

    நான் இதை ஆச்சர்யமாக உணர்கிறேன். ஏனென்றால் இது மிகப்பெரிய மேடை. நாங்கள் 2015, 2019 அரையிறுதி போட்டிகளில் தோல்வியடைந்தோம். எனக்கு கிடைத்த வாய்ப்பை, சிறப்பாக மாற்ற பார்க்கிறேன். இனி எப்பொழுது நம் அனைவருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை." என்றார்.

    • ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளில் முகமது ஷமி 5 விக்கெட் எடுப்பது இது 4-வது நிகழ்வாகும்.
    • 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது சமி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இலங்கை - இந்தியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

    இந்த போட்டியில் 18 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது சமி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதன் மூலம் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.

    உலகக் கோப்பையில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்தியர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜாகீர்கான் (23 ஆட்டத்தில் 44 விக்கெட்), ஸ்ரீநாத் (34 ஆட்டத்தில் 44 விக்கெட்) ஆகியோரை பின்னுக்கு தள்ளினார். இந்த வரிசையில் 4-வது இடத்தில் பும்ரா (33 விக்கெட்) உள்ளார்.

    உலகக் கோப்பையில் முகமது ஷமி ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் மற்றும் அதற்கு மேல் சாய்ப்பது இது 3-வது முறையாகும். உலகக் கோப்பையில் அதிக தடவை 5 விக்கெட் வீழத்திய ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை (இவரும் 3 முறை) சமன் செய்தார்.

    ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளில் முகமது ஷமி 5 விக்கெட் எடுப்பது இது 4-வது நிகழ்வாகும். இந்தியர்களில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர் இவர் தான். ஸ்ரீநாத், ஹர்பஜன்சிங் (தலா 3 முறை) அடுத்த இடத்தில் உள்ளனர்.

    பல்வேறு சாதனைகளை படைத்த முகமது சமிக்கு ஆப்கானிஸ்தான் ரசிகை சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் மைதானம் அவருக்கு சொந்தமானது. என்ன ஒரு அற்புதமான வீரர் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஜாகீர் கான், ஸ்ரீநாத் ஆகியோர் தலா 44 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்
    • பும்ரா 33 விக்கெட்டுகளும், கும்ப்ளே 31 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா 357 ரன்கள் குவித்த நிலையில், இலங்கை 55 ரன்னில் சுருண்டது.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த தொடரின் தொடக்க ஆட்டங்களில் அவர் களம் இறக்கப்படவில்லை. நியூசிலாந்துக்கு எதிராக களம் இறங்கினார். அந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுகளும், தற்போது ஐந்து விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

    மூன்று போட்டிகளில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை முகமது சமி 45 விக்கெட்டுகள் வீழ்த்தி, உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன் ஜாகீர் கான் 44 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடம் இடத்தில் இருந்தார். தற்போது அவரை சமி பின்னுக்குத் தள்ளியுள்ளார். ஸ்ரீநாத் 44 விக்கெட்டுகள், பும்ரா 33 விக்கெட்டுகள், கும்ப்ளே 31 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

    உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் 5 விக்கெட் வீழ்த்துவது சமிக்கு இது 3-வது முறையாகும். இதன்மூலம் உலகக் கோப்பையில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையில் ஸ்டார்க் உடன் இணைந்துள்ளார்.

    இந்திய அணிக்காக அதிக முறை (4) ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ஸ்ரீநாத், ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 3 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

    ஒரே உலகக் கோப்பையில் அதிக முறை 4 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். அப்ரிடி (2011), ஸ்டார்க் (2019) ஆகியோர் 4 முறை 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

    சமி (2019), ஆடம் ஜம்பா (2023), முகமது சமி (2023) ஆகியோர் 3 முறை 4 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளனர்.

    • ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
    • முகமது சமி ஓவரில் ஸ்மித் இந்த ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.

    லண்டன்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்குகியது.

    தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 0 ரன்னிலும் டேவிட் வார்னர் 43 ரன்னிலும் லாபுசேன் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ட்திராவிஸ் ஹெட் - ஸ்மித் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஸ்மித் ரியாக்ஷன் தற்போது சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது. முகமது சமி ஓவரில் இந்த சம்பவம் அரங்கேறியது. அவர் தொடர்ந்து அவுட் ஸ்விங் வீசிய நிலையில் அந்த பந்தை இன் ஸ்விங் செய்தார். அதனை ஸ்மித் பேட்டில் வாங்காமல் விட்டுவிட்டார். அப்போது தான் அவர் அந்த ரியாக்ஷன் கொடுத்தார். ஓ.... இன் ஸ்விங் என கை சைகையில் காட்டினார்.

    இவரது ரியாக்ஷன் அடிக்கடி வைரலாகி வருவதுண்டு அதுபோல இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். 

    • ராகுல் திவேதியா அதிரடியாக விளையாடி எங்களை மீண்டும் ஆட்டத்திற்கு கொண்டு வந்தார்.
    • பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை அளித்துவிட்டனர்.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி பரபரப்பான ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. அகமதாபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்தது. இதனால் குஜராத் அணிக்கு 131 ரன் இலக்காக இருந்தது.

    பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த போட்டியில் டெல்லி அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் அணி 3-வது தோல்வியை தழுவியது. 131 ரன் இலக்கை எடுக்க முடியாமல் டெல்லியிடம் அந்த அணி தோற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹர்திக் பாண்ட்யா கடைசி ஓவரில் களத்தில் இருந்தபோது 12 ரன்னை எடுக்க முடியாமல் போனது பரிதாபமே. இஷாந்த்சர்மா கடைசி ஓவரில் 6 ரன்னே கொடுத்து திவேதியா விக்கெட்டை கைப்பற்றி டெல்லியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

    குஜராத் அணியின் தோல்விக்கு கேப்டன் ஹர்திக் பாண்டயா பொறுப்பேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த எளிய இலக்கை எந்த நாளாக இருந்தாலும் நாங்கள் வெற்றிகரமாக துரத்தி இருப்போம். முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். ராகுல் திவேதியா அதிரடியாக விளையாடி எங்களை மீண்டும் ஆட்டத்திற்கு கொண்டு வந்தார். இதனை பயன்படுத்திக் கொண்டு அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என நினைத்தேன்.

    ஆனால் என்னால் அது முடியவில்லை. மிடில் ஓவர்களில் மிகப்பெரிய ரன்னை குவிக்கலாம் என்று எதிர்பார்த்தோம். நான் கடுமையாக முயற்சித்தேன். இந்த தோல்விக்கு நான்தான் முக்கிய காரணம். இந்த தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன்.

    டெல்லி அணியை நான் பாராட்டுகிறேன். அவர்கள் உண்மையிலேயே சிறப்பாக பந்துவீசி எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். ஆடுகளத்தை நான் குறை சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள் இங்கு தான் பயிற்சி பெற்றோம். இந்த தோல்விக்காக முகமது சமியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவருக்காக நான் நிச்சயம் வருந்துகிறேன். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை அளித்துவிட்டனர். முகமது சமி தனது திறமையான பந்துவீச்சால் எதிர் அணியை திணறடித்து விட்டார்.

    இன்னும் போட்டிகள் இருக்கிறது. இந்த போட்டி மூலம் நாங்கள் பல விஷயங்களை கற்றோம். நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்துவது அவசியமானது.

    இவ்வாறு ஹர்திக் பாண்டயா கூறியுள்ளார்.

    டெல்லி அணி 3-வது வெற்றியை பெற்றது. இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:-

    எங்களது பேட்டிங் மோசமாக இருந்தாலும் பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டனர். ராகுல் திவேதியா களத்துக்குள் வந்தபோது பதட்டம் இருந்தது. இஷாந்த்சர்மா மிகவும் சிறப்பாக பந்துவீசி வெற்றியை பெற்று தந்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லி அணி 10-வது ஆட்டத்தில் பெங்களூரை 6-ந்தேதி சந்திக்கிறது. குஜராத் அடுத்த போட்டியில் ராஜஸ்தானை 5-ந்தேதி எதிர்கொள்கிறது.

    • விரேந்தர் சேவாக் (90) முதல் இடத்திலும், எம்.எஸ்.டோனி (78) 2-ம் இடத்திலும் உள்ளனர்.
    • சச்சின் டெண்டுல்கர் (69) 3-ம் இடத்திலும், ரோகித் சர்மா (66) 4-ம் இடத்திலும் உள்ளனர்.

    நாக்பூர்:

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 177 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இதனை தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று நடந்த 2-ம் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது.

    கேப்டன் ரோகித் சர்மா 120 ரன்கள் குவித்து அவுட் ஆனார். 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 400 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் அக்சர் படேல் 84 ரன்களும், ஜடேஜா 70 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    இதையடுத்து 223 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி இன்னிங்சிஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் இந்தியாவின் இன்னிங்சில் பேட்டிங் ஆடிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 47 பந்தில் 37 ரன்கள் குவித்தார். இதில் அவர் 2 பவுண்டரியும், 3 சிக்சரும் பறக்க விட்டார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் பட்டியலில் அவர் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி உள்பட 4 இந்திய வீரர்களை முந்தி உள்ளார்.

    கோலி 24, ராகுல் டிராவிட் 21, கேஎல் ராகுல் 17, புஜாரா 15, விவிஎஸ் லஷ்மன் 5 ஆகியோரை பின்னுக்கு தள்ளினார் முகமது சமி. சமி இதுவரை 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 25 சிக்சர்கள் அடித்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் விரேந்தர் சேவாக் (90) முதல் இடத்திலும், எம்.எஸ்.டோனி (78) 2-ம் இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் (69) 3-ம் இடத்திலும், ரோகித் சர்மா (66) 4-ம் இடத்திலும் உள்ளனர்.

    ×