என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
சாதனை நாயகர்களான விராட்கோலி, சமிக்கு பிரதமர் மோடி பாராட்டு
- பல தலைமுறை ரசிகர்களாலும் சமியின் பந்து வீச்சானது கொண்டாடப்படும்.
- அற்புதமான பேட்டிங் பந்து வீச்சுகளில் நமது அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
உலக கோப்பையில் இந்திய அணி அரைஇறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதற்கு பிரதமர் நேற்று மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சாதனை படைத்த விராட்கோலி, முகமது சமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஒருநாள் போட்டியில் விராட்கோலி 50-வது சதத்தை மட்டும் அடிக்கவில்லை. சிறந்த வீரருக்கான வலிமை மற்றும் விடா முயற்சியை எடுத்துக் காட்டியுள்ளார். அவரின் அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கும் புதிய மைல்கல்லாக இந்த சாதனை அமைந்துள்ளது. நான் எனது வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். அவர் மேலும் பல சாதனைகள் புரிய வேண்டும்.
இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முகமது சமிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். பல தலைமுறை ரசிகர்களாலும் அவரது பந்து வீச்சானது கொண்டாடப்படும். அற்புதமான பேட்டிங் பந்து வீச்சுகளில் நமது அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்