என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாலத்தீவு"
- இரு நாட்டு உறவுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி இருக்கிறது.
- இந்தியர்கள் நியாயமான கோபத்தில் உள்ளனர்.
மாலே:
பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சத்தீவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். ஆழ்கடலில் நீச்சல் பயிற்சியிலும் ஈடுபட்டார். இதையடுத்து தனது பயண அனுபவம் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்கள் தெரிவித்து இருந்தார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து இருந்தார்.
இதனை விமர்சிக்கும் வகையில் மாலத்தீவு மந்திரிகள் மரியம் ஷியூனா, மல்சா ஷரீப், அப்துல்லா மஹ்சூம் மஜீத் ஆகிய 3 பேரும் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். சுற்றுலாவை பொறுத்தவரை மாலத்தீவுடன் இந்தியா போட்டியிட முடியாது என்பது போன்ற கருத்துகளை தெரிவித்தனர். இது இரு நாட்டு உறவுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி இருக்கிறது.
மந்திரிகளின் இந்த கருத்துக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத், மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு இந்தியா தரப்பில் விளக்கமும் கேட்கப்பட்டது. இது மாலத்தீவு அதிபர் முகமது முய்சுக்கு நெருக்கடியை கொடுத்தது.
மந்திரிகளின் கருத்து அரசின் கருத்து இல்லை என்றும் அது அவர்களின் தனிப்பட்ட கருத்து என அந்நாட்டு அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சை கருத்துகளை தெரிவித்த 3 மந்திரிகளையும் சஸ்பெண்டு செய்து மாலத்தீவு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சூழ்நிலையில் மாலத்தீவின் முன்னாள் துணை சபாநாயகரும் தற்போதைய எம்.பி.யுமான ஈவா அப்துல்லா அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
#WATCH | On Maldives MP's post on PM Modi's visit to Lakshadweep, Maldives MP and Former Deputy Speaker, Eva Abdullah says "It is absolutely critical that the Government of Maldives distanced itself from the comments by the minister. I know that the government has suspended the… pic.twitter.com/RzgitjAfos
— ANI (@ANI) January 7, 2024
கருத்துக்கள் மீதான சீற்றம் புரிகிறது. இந்தியர்கள் நியாயமான கோபத்தில் உள்ளனர். இந்த கருத்துக்கள் மூர்க்கத்தனமானது. வெட்கக் கேடானது. இந்திய மக்களிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். விடுமுறையை கழிக்க மாலத்தீவுக்கு திரும்பி வாருங்கள் என இந்திய மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்டார்.
- மோடி பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் சர்ச்சை கருத்து.
இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 2ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பயணம் குறித்த அனுபவத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தார். அதில் "லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களுக்கான சான்று அது" என பதிவிட்டிருந்தார்.
மேலும், லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் அரவணைப்பையும் கண்டு நான் இன்னமும் பிரம்மிப்பில் இருக்கிறேன். அகத்தி, பயங்காரம், கரவட்டி ஆகிய இடங்களுக்கு சென்று மக்களோடு உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி கூறுகிறேன் என தெரிவித்திருந்தார்.
பிரதமரின் இந்த பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் சர்ச்சைக்குரிய வகையில் எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டார்.
அவர் கூறியதாவது, "இந்தியா மாலத்தீவை குறிவைக்கிறது என்றும், கடற்கரை சுற்றுலாவில் மாலத்தீவுடனான போட்டியில் இந்தியா பல சவால்களை சந்திக்க வேண்டியதிருக்கும்" என கூறினார். மேலும் சில மாலத்தீவு அமைச்சர்களும் மோடியின் பயணம் குறித்து கேலி செய்யும் விதமாக கருத்து பதிவிட்டிருந்தனர்.
பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்த மாலத்தீவு அமைச்சரின் ட்வீட் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் இந்தியர்கள் குறித்து விமர்சன பதிவுகளை வெளியிட்ட மரியம் ஷுயினா, மால்ஷா ஷரீப் மற்றும் ஹாசன் சிகான் ஆகிய 3 அமைச்சர்களை பணியிடை நீக்கம் செய்து மாலத்தீவு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
- பிரதமர் மோடி லட்சத்தீவுக்கு வந்து சென்றதை தொடர்ந்து மாலத்தீவு அமைச்சரின் எக்ஸ் பக்க பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது
- மாலத்தீவுக்கு எதிராக லட்ச தீவை புகழ்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் திரை பிரபலங்கள்
இந்தியாவில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 2ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பயணம் குறித்த அனுபவத்தை புகைப்படங்களுடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தார். இதனைத்தொடர்ந்து, இந்தியா மாலத்தீவை குறிவைத்துள்ளது என சர்ச்சைக்குரிய வகையில் மாலத்தீவு அமைச்சர் பதிவிட்டிருந்தார்.
இதன் எதிரொலியாக, திரை பிரபலங்கள் பலரும் மாலத்தீவுக்கு எதிராக லட்ச தீவை புகழ்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறி கருத்துகளை அனுப்பும் மாலத்தீவைச் சேர்ந்த முக்கிய பொது நபர்களின் கருத்துக்களைக் கண்டேன். அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாட்டுக்கு இப்படிச் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. நாம் அவர்களிடம் நல்லவர்களாக இருக்கிறோம். அதேசமயம் இப்படியான வெறுப்பை நாம் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும்? என பதிவிட்டிருந்தார். மேலும், நான் மாலத்தீவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். அதன் அழகை வியந்து பாராட்டியிருக்கிறேன். ஆனால், கண்ணியம் மிகவும் முக்கியமானது. இந்திய தீவுகளை ஆராய்ந்து நமது சொந்த சுற்றுலாவை ஆதரிப்போம்" என தெரிவித்திருந்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டூல்கர் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "சிந்துதுர்க் பகுதியில் எனது 50வது பிறந்தநாளை கொண்டாடி 250 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. நாம் கேட்பதை விட அதிகமாக கொடுக்கக்கூடியது இந்த கடல் நகரம். அற்புதமான விருந்தோம்பலுடன் இணைந்த அழகிய இடங்கள் நினைவுகளின் பொக்கிஷத்தை நமக்கு கொடுத்துச் செல்லும். இந்தியா அழகான கடற்கரைகள் மற்றும் அழகிய தீவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்
நடிகர் சல்மான் கான், "லட்சத்தீவின் அழகான சுத்தமான மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளில் நமது பிரதமர் நரேந்திர மோடியைப் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. இதன் சிறப்பான அம்சம் என்னவென்றால், அது இந்தியாவில் உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
நடிகை ஷ்ரத்தா கபூர், "பழமையான அழகிய கடற்கரையையும், உள்ளூர் கலாசாரத்தையும் உள்ளடக்கிய லட்சத்தீவில் எனது விடுமுறை நாட்களை செலவழிக்க ஆவலாக உள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.
- பிரதமர் மோடி மாலத்தீவு சென்ற போது கையெழுத்தானது.
- ஒப்பந்ததத்தில் இருந்து வெளியேறும் முடிவை மாலத்தீவு அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்று பதவி ஏற்றார். சீனாவின் ஆதரவாளராக கருதப்படும் அவர், மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் உடனே வெளியேற வலியுறுத்தினார். இந்த நிலையில் இந்தியாவுடனான நீரியல் துறை ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இருந்து மாலத்தீவு வெளியேறியுள்ளது.
இந்த ஒப்பந்தம் 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி மாலத்தீவு சென்ற போது கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இந்திய கடற்படை, மாலத்தீவில் விரிவான ஹைட்ரோகிராபிக் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்த ஒப்பந்ததத்தில் இருந்து வெளியேறும் முடிவை மாலத்தீவு அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
- மொஹமத் முய்சு, அடுத்த மாதம் அதிபராக முறைப்படி பதவியேற்கிறார்.
- அதிபராக பதவியேற்ற முதல் வாரத்தில் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் மொஹமத் முய்சு வெற்றி பெற்றார். இவர் சீன ஆதரவாளர் ஆவார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தின்போது மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ படைகள் வெளியேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். மொஹமத் முய்சு, அடுத்த மாதம் அதிபராக முறைப்படி பதவியேற்கிறார்.
இந்த நிலையில் தான் அதிபராக பதவியேற்ற முதல் வாரத்தில் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள். இது தூதரக வழிகளில் மேற்கொள்ளப்படும் என்று மொஹமத் முய்சு தெரிவித்தார். மேலும், அவர் கூறும்போது, அதிபராக பதவியேற்ற பிறகு முதல் நாளில் இந்தியாவிடம் தனது படைகளை அகற்றுமாறு கோரப்படும். இதுவே எனது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும். சில நாட்களுக்கு முன்பு இந்திய தூதரை சந்தித்தேன். அப்போது இந்திய படைகள் வெளியேற்றத்தை வலியுறுத்தினேன் என்றார்.
- இரு நாடுகளும் தங்களது தூதரக உறவை முறித்துக் கொண்டன.
- அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.சபையின் 78-வது கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்றது.
டெஹ்ரான்:
ஈரானின் நட்பு நாடாக இருந்த மாலத்தீவுகள் சுமார் 40 ஆண்டுகள் அதனுடன் தூதரக உறவை கொண்டிருந்தது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் விவகாரத்தில் அதன் கொள்கைகள் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மாலத்தீவு கருதியது. இதனால் கடந்த 2016-ம் ஆண்டு இரு நாடுகளும் தங்களது தூதரக உறவை முறித்துக் கொண்டன.
இந்தநிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.சபையின் 78-வது கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஈரான் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் மாலத்தீவுகள் வெளியுறவு மந்திரி அகமது கலீல் ஆகியோர் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தூதரக உறவை தொடங்குவதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன. இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகம் இரு நாடுகளின் நலன்கள் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- பணியை விட்டு தாயகம் திரும்பவும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
- கடவுச்சீட்டுகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் சட்டவிரோதமாக பறித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:-
மாலத்தீவில் தனியார் நிறுவனமொன்றில் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்ட 13 தமிழர்கள் உள்ளிட்ட 48 இந்தியர்களுக்கு, அவர்கள் 6 மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்த நாளில் இருந்தே ஊதியம் வழங்கப்படவில்லை. அதைக் கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்!
பணியை விட்டு தாயகம் திரும்பவும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் கடவுச்சீட்டுகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் சட்டவிரோதமாக பறித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அங்குள்ள இந்திய தூதரகத்திடம் புகார் செய்தும் எந்த பயனும் ஏற்படவில்லை!
மாலத்தீவில் சிக்கித்தவிக்கும் தமிழர்களின் நிலை என்னவாகுமோ? என தமிழகத்திலுள்ள அவர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்டு சொந்த ஊர்களுக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மாலத்தீவுக்கு செல்ல விரும்பினால் அதை மறுத்திருக்க முடியாது எனவும் மாலத்தீவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- சபாநாயகர் நஷீத்தின் கோரிக்கையின் பேரில் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்திய அவர்கள், கடந்த 3 நாட்களுக்கு முன் இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அதை ஆக்ரமித்தனர்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்றும், இன்று அது முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் கோத்தபய ராஜபக்சே இலங்கை விமானப்படை விமானத்தில் மாலைதீவு தலைநகர் மாலே நகருக்கு புறப்பட்டுச் சென்றதாக இலங்கை குடியுரிமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்று அதிகாலையில் அவர் மாலே நகரை அடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கோத்தபயவுடன் 13 பேர் ஏஎன்32 விமானத்தில் மாலத்தீவு சென்றதாக தொலைக்காட்சி செய்தி சேனல்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பிச் செல்வது தொடர்பாக மாலத்தீவு பாராளுமன்ற சபாநாயகரும் முன்னாள் அதிபருமான மொஹமட் நஷீத் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ராஜபக்சே இன்னும் இலங்கையின் அதிபராக இருக்கிறார். அவர் ராஜினாமாவோ அல்லது வாரிசுக்கு தனது அதிகாரங்களையும் ஒப்படைக்கவில்லை என்றும் அதனால் அவர் மாலத்தீவுக்கு செல்ல விரும்பினால் அதை மறுத்திருக்க முடியாது எனவும் மாலத்தீவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாலத்தீவில் இராணுவ விமானத்தை தரையிறக்குவதற்கான கோரிக்கைகள் மாலத்தீவில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டதாகவும், பின்னர் சபாநாயகர் நஷீத்தின் கோரிக்கையின் பேரில் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் இருந்து நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட மாலத்தீவில் நடந்த அதிபர் தேர்தல் மிகவும் கவனிக்கப்பட்டது.
மாலத் தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலத் தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது ஷோலியிடம் தோல்வியடைந்தார். இதனால், இப்ராகிம் முகமது ஷோலி மாலத்தீவின் புதிய அதிபராக வரும் நவம்பர் 17-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், மாலத்தீவு தேர்தலில் இப்ராகிம் முகமது ஷோலி வெற்றி பெற்ற பின்னர் பிரதமர் மோடி அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அப்போது தனது பதவியேற்பு விழாவிற்கு வருகை தருமாறு மோடிக்கு ஷோலி அழைப்பு விடுத்தார்.
இதைத்தொடர்ந்து இந்தியாவிற்கு வருமாறு ஷோலிக்கு மோடி அழைப்பு விடுத்தார் மோடியின் இந்த அழைப்பை ஷோலி ஏற்றுக்கொண்டார் என அவரது செய்திதொடர்பாளர் மரியா அகமது திதி கூறினார்.
மேலும், இந்தியா மாலத்தீவு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டனர் என மரியா தெரிவித்தார்.
சார்க் அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளிலேயே பிரதமர் மோடி இதுவரை செல்லாத நாடு மாலத்தீவுகள் மட்டும் தான். கடந்த 2015ம் ஆண்டு மாலத்தீவு செல்ல திட்டமிட்ட மோடியின் பயணம் அந்நாட்டின் உள்நாட்டு குழப்பம் காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடததக்கது. #Maldives #PMModi
1192 குட்டித்தீவுகளை கொண்ட மாலத்தீவில் சமீப காலமாக அரசியல் ஸ்திரமற்ற சூழல் நிலவி வருகிறது. முன்னாள் அதிபர் முகமது நஷீத்தை, தற்போதைய அதிபர் அதிபர் யாமீன் அப்துல் கயூம் கைது செய்து சிறையில் அடைத்ததார். அவரை விடுதலை செய்ய அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் அதை அதிபர் யாமீன் அப்துல் ஏற்காததால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாலத்தீவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் அங்கு கடந்த 23-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் யாமீன் அப்துல் கயூம், மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து இலங்கையில் வசித்து வருகிற முன்னாள் அதிபர் முகமது நஷீத், மாலத்தீவு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட விரும்பினார். ஆனால் பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகியதையடுத்து அவரது கட்சி சார்பில் இப்ராகிம் முகமது போடியிட்டார்.
ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும், தேர்தல் முறையாக நடத்தப்படாவிட்டால், பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்து இருந்தன. இதனால், உலக நாடுகளின் நெருக்கடிக்கு மத்தியில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
இந்திய பெருங்கடலில் உள்ள மாலத்தீவில் சமீப காலமாக சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள சூழலில், இந்தியாவும் இந்த தேர்தல் முடிவுகளை உன்னிப்பாக உற்று நோக்கியது.
இதில், துவக்கத்தில் இருந்தே அதிபர் அப்துல்லா யாமீன் பின்னடைவை சந்தித்தார். எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டு இருந்த இப்ராகீம் முகம்மது பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். மொத்த வாக்காளர்களில் 58.3 சதவீத வாக்குகள் பெற்று இப்ராகீம் முகம்மது வெற்றி பெற்றதாக மாலத்தீவு தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில், வெற்றி பெற்றா இப்ராகிம் முகமதுவிற்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது.
புதிய அதிபராக தேர்வாகியுள்ள இப்ராகிம் முகமதுவை பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். இப்ராகிம் தலைமையில் மாலத்தீவில் ஜனநாயகம் மற்றும் அமைதியை வலுப்பெற வேண்டும் என பிரதமர் மோடி அவரது நல்விருப்பங்களை தெரிவித்தார்.
மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த இப்ராகிம் முகமது, இருநாடுகளின் நட்புறவை வலுப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவேன் என கூறினார். #Maldivespolls #IbrahimMohamedSolih #PMModi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்