search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்கெட்"

    • பொதுமக்கள் பொரி, பழங்கள், பூக்களை வாங்கி சென்றனர்
    • கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பூமார்க்கெட்டில் வழக்கத்தை விட இன்று மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    கோவை:

    நாளை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை பண்டிகை கொண்டா– டப்படுகிறது. இதனை–யொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பூக்கள், பழங்கள், பொரி, அவல், கடலை, சுண்டல் படைத்து வழிபடுவார்கள்.

    இதேபோல் அனைத்து நிறுவனங்களிலும் ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்படும். இதற்கு தேவையான பொருட்களை கடந்த சில தினங்களாக மக்கள் வாங்கி வந்தனர்.நாளை ஆயுதபூஜை கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் உள்ள கடை வீதிகள், மார்க்கெட்டுகளில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

    கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பூமார்க்கெட்டில் வழக்கத்தை விட இன்று மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.மக்கள் அங்கு சாமி கும்பிடுவதற்கு தேவையான எலுமிச்சம் பழம், பொரி, அவல், கடலை, பனஓலை, மாவிலை, வாழைகுலை, தேங்காய் மல்லி, செவ்வரளி, முல்லை, ரோஸ் என பல்வேறு வகையான பூக்களையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

    இதுதவிர ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட பழ வகைகளும் வாங்கினார்கள். ஆயுதபூஜை பண்டிகை காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் மற்ற நாட்களை விட சற்று உயர்ந்து காணப்பட்டது.

    கோவை பூ மார்க்கெட்டில் விற்பனையாகும் பூக்களின் விலை கிேலாவில் வருமாறு:-

    மல்லிகைப்பூ ரூ.800 முதல் 1000 வரை விற்பனையானது. ஜாதி மல்லி ரூ.600, செவ்வந்தி ரூ.400, ரோஜா ஒரு கிலோ ரூ.360, அரளி ரூ.350, தாமரை பூ ஒன்று ரூ.20, கோழி பூ ரூ.100, மருகு ஒரு கட்டு ரூ.30, மரிகொழுந்து ஒரு கட்டு ரூ.30, நந்தியா வட்டம்ரூ.200, சம்பங்கி ரூ.350, செண்டுமல்லி ரூ.80, வாடாமல்லி ரூ.80-க்கும் விற்பனையானது.

    இதுதவிர பனை ஓலை ஒன்று ரூ.5, வாழை குலை ஒன்று ரூ.20, எலுமிச்சை ஒரு கிலோ ரூ.120க்கும், வெள்ளை பூசணி ஒரு கிலோ ரூ.40, தேங்காய் ரூ.25 முதல் 30 வரையும், பொரி 1 பக்கா ரூ.20க்கும், மாலை இலை 1 கட் ரூ.20க்கும் விற்பனையானது.

    சாத்துகுடி ரூ.100, ஆரஞ்சு ரூ.150, மாதுளை ரூ.200, ஆப்பிள் ரூ.150, திராட்சை ரூ.120, கொய்யா ரூ.100-க்கும் விற்பனையானது.இதேபோன்று கோவையில் உள்ள கடைவீதியிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு மக்கள் சாமி கும்பிடுவதற்கு தேவையான பூஜை பொருட்களையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

    இதேபோல் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளிலும் காலை முதலே மக்கள் கூட்டமாக காணப்பட்டது. அங்கு மக்கள் ஆயுதபூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இதன் காரணமாக பல இடங்களிலும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • போக்குவரத்து நிறைந்து காணப்படும் பகுதியாகும். மக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருக்கும்.
    • வாகனங்களையும் கீழே தள்ளி சேதப்படுத்துவது தொடர்கதையாகி உள்ளது

    ஊட்டி 

    குன்னூர் நகரின் முக்கிய வீதிகளாக மவுண்ட்ரோடு, வி.பி., தெரு, டி.டி.கே., சாலை உள்ளன.

    இந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் பகுதியாகும். மக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருக்கும்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே இந்த சாலைகளில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன.

    அவ்வாறு சுற்றி திரியும் கால்நடைகள் சாலைகளில் செல்லும் வாகனங்களையும் மறித்து விடுகிறது. சில நேரங்களில் குறுக்கே வந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

    இதேபோல் குன்னூர் மார்கெட் பகுதி, குன்னூர் கேஷ்பஜார், சாமண்ணா பூங்கா, வி.பி., தெரு, கிருஷ்ணாபுரம் உட்பட பகுதிகளிலும் மாடுகள் உலா வருகிறது.

    மார்க்கெட் பகுதியில் சுற்றிதிரியும் கால்நடைகள், அங்குள்ள கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் காய்கறி மற்றும் பழங்களை சேதப்படுத்தி வருகிறது.

    அத்துடன் அங்கு நிறுத்த படும் வாகனங்களையும் கீழே தள்ளி சேதப்படுத்துவது தொடர்கதையாகி உள்ளது சில சமயங்களில், நகரின் மையப்பகுதியான பஸ் ஸ்டாண்டில் கூட கூட்டமாக சுற்றி திரிகின்றன. எனவே சாலைகள் மற்றும் குன்னூர் மார்க்கெட்டில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தஞ்சை மாநகராட்சியில் பல இடங்களில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை.
    • வெள்ளை பிள்ளையார் கோவில் ரவுண்டானாவில் இருந்து சரபோஜி மார்க்கெட் வரை செல்லும் சாலை பழுதடைந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு மேயர்.சண் ராமநாதன் தலைமை தாங்கினார்.

    துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வைகித்தனர்.

    இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு:-

    எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன்:-

    திருவையாறு பஸ் நிறுத்தத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டு, நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் பயன்பாட்டில் உள்ளதா? எந்த நிலையில் உள்ளது என்று கேள்வி கேட்டார்.

    கவுன்சிலர் கோபால்:‌‌

    தஞ்சை மாநகராட்சியில் பல இடங்களில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை.

    உடனே அனைத்து தெரு விளக்குகளையும் எரிய வைத்து அதனை முறையாக கண்காணிக்க வேண்டும்.

    கவுன்சிலர் காந்திமதி:

    கீழ அலங்கத்தில் 12 வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளது.

    அவர்கள் மாநகராட்சியில் பணிபுரிபவர்கள். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.

    உடனடியாக அந்த 12 வீடுகளில் வசிப்பவர்களுக்கு அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வல்லம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்க வேண்டும்.

    வெள்ளைப் பிள்ளையார் கோவில் ரவுண்டானாவில் இருந்து சரபோஜி மார்க்கெட் வரை செல்லும் சாலை பழுதடைந்து உள்ளது.

    அதனைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

    கவுன்சிலர் ரம்யா சரவணன்:

    3-வது மண்டலத்தில் உள்ள அண்ணாநகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கு இயற்பியல் ஆய்வுக்கூடமும், கூடுதல் வகுப்பறை கட்டிடமும், தொடக்கப் பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளும், வண்டிக்கார தெரு மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கிய மேயர், துணை மேயர், ஆணையர் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.

    தொடர்ந்து கவுன்சிலர்கள் கேசவன், ஜெய்சதீஷ், கன்னுக்கினியாள் உள்ளிட்ட பலரும் தங்களது வார்டு சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

    இதற்கு பதில் அளித்து மேயர் சண். ராமநாதன் பேசும்போது:-

    திருவையாறு பஸ் நிறுத்த வாகன நிறுத்தும் இடம் தற்போது இலவசமாக வானங்கள் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகை வரை இந்த நிலை தொடரும்.

    அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.

    நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டம் கடந்து சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதில் தினமும் ஆய்வு செய்ததில் சாலை வசதி, பாதாள சாக்கடை பிரச்சனை, பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.

    இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு மாநகராட்சி வளர்ச்சி திட்ட பணிக்கு நிதி கூறப்பட்டுள்ளது.

    அதாவது வார்டு 1 முதல் 13-வரை உள்ள முதல் டிவிசனுக்கு ரூ.120 கோடியிலும், வார்டு 14 முதல் 28 வரையிலான இரண்டாம் டிவிசனுக்கு ரூ.155.44 கோடியிலும், வார்டு 29 முதல் 41 வரையிலான மூன்றாம் டிவிசனுக்கு ரூ.466.94 கோடியிலும், வார்டு 42 முதல் 51 வரையிலான நான்காம் டிவிசனுக்கு ரூ.211.40 கோடி என மொத்தம் நான்கு டிவிசனுக்கும் சேர்த்து ரூ.1100 கோடிக்கு வளர்ச்சி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

    இதற்கான நிதி வந்தவுடன் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்படும்.

    காமராஜர் மார்க்கெட் கடைகள் அமைப்பதற்கான ஏலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

    விரைவில் காமராஜர் மார்க்கெட், சிவகங்கை பூங்கா ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • 5 ஆண்டுகள் கடந்தும் கடைகள் கட்டப்படாததால் வியாபாரிகள் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
    • மாவட்ட கலெக்டர் ஆகாஷ் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    புளியங்குடி:

    புளியங்குடியின் மையப்பகுதியில் இயங்கி வந்த காந்தி மார்க்கெட்டிற்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.

    புதிய கடைகள் கட்டும் வரை தற்காலிகமாக அரசு மருத்துவமனை அருகில் இயங்கி வந்தது. 5 ஆண்டுகள் கடந்தும் கடைகள் கட்டப்படாததால் வியாபாரிகள் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    இந்தநிலையில் நகர்மன்ற கூட்டத்தில் இடிக்கப்பட்ட காந்தி மார்க்கெட் பழைய இடத்தில் கட்டுவதற்கு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. பழைய இடத்திலேயே மார்க்கெட் கட்டுமான பணிகள் மேற்கொள்வதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. எனவே இது குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கருத்துக் கேட்க நேற்று மாவட்ட கலெக்டர் ஆகாஷ் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் சதன்திருமலை குமார் எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திர பாண்டியன், தி.மு.க. நகர செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான அந்தோணிசாமி, மார்க்கெட் வியாபாரிகள், நகர வர்த்தக சங்கத்தினர், கவுன்சிலர்கள் அரசியல் பிரமுகர்கள், சமூகஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அனைவரும் பழைய இடத்திலயே கடைகள் கட்டப்பட வேண்டும். மேலும் இது நகரின் மைய பகுதியில் இருப்பதால் அனைத்து பகுதி மக்களும், வெளியூர் மக்களும் வந்து செல்ல ஏற்ற இடம் என்று பல்வேறு காரணங்களை எடுத்து கூறினர்.

    பின்னர் பேசிய மாவட்ட கலெக்டர் உங்கள் அனைவரின் கோரிக்கைகளும் அரசுக்கு எடுத்து சொல்லப்படும். அனைவரின் விருப்படியே பழைய இடத்தில் கடைகள் கட்டுவதற்க்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் குமார் சிங், பொறியாளர் முகைதீன், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, மானேஜர் செந்தில் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • குறிப்பாக ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.
    • ஆவணி மாதம் முழுவதும் மாரியம்மனை வேண்டி பெரும்பாலான பக்தர்கள் விரதம் இருப்பது வழக்கம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாதம் பிரசித்தி பெற்றது.

    ஆவணி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும்.

    குறிப்பாக ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.

    மேலும் ஆவணி மாதம் முழுவதும் மாரியம்மனை வேண்டி பெரும்பாலான பக்தர்கள் விரதம் இருப்பது வழக்கம்.

    அதன்படி ஆவணி மாதம் தொடங்கி விட்டதால் பக்தர்கள் தங்களது விரதத்தை தொடங்கினர். இந்த நாட்களில் விரதம் இருக்கும் பக்தர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பர்.

    இதன் காரணமாக இன்று தஞ்சையில் உள்ள பெரும்பாலான இறை ச்சி, மீன் கடை களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

    தஞ்சையில் உள்ள மீன் மார்க்கெட்டில் இன்று வழக்கத்தை விட குறைவான அளவிலேயே பொதுமக்கள் மீன்களை வாங்கி சென்றதை காண முடிந்தது‌ .

    இதேபோல் இறைச்சி கடைகளிலும் கூட்டம் குறைந்தது. 

    • மேலூர் செக்கடி பஜாரில் செயல்பட்ட காய்கறி மார்க்கெட் நாளை முதல் சந்தைப்பேட்டைக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.
    • மேலூர் நகர மன்ற தலைவர் முகமது யாசின் தலைமையில் அதற்கான பூமி பூஜை நடந்தது .

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் செக்கடி பஜாரில் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வந்தது. அந்த மார்க்கெட்டின் கட்டிடங்கள் பழமையானதாகவும் இடிந்து விழும் நிலையிலும் இருந்ததால் அதனை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட சுமார் ரூ. ஏழேமுக்கால் கோடி மதிப்பீட்டில் 110 கடைகள் கட்ட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

    சில நாட்களுக்கு முன் அங்கு மேலூர் நகர மன்ற தலைவர் முகமது யாசின் தலைமையில் அதற்கான பூமி பூஜை நடந்தது . அதனை தொடர்ந்து தினசரி காய்கறி மார்க்கெட்டை மேலூர் சந்தைப்பேட்டைக்கு தற்காலி–கமாக இடமாற்றம் செய்வதற்காக அங்கு ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் 110 கடைகள் கட்டப்பட்டது.

    ஆனால் திடீர் என காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் அங்கு செல்ல மறுத்தனர். அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், என்ஜினீயர் பட்டுராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை செய்தனர்.

    அதன் பிறகும் காய்கறி வியாபாரிகள் செல்ல மறுத்ததால் நகராட்சி தலைவர் காய்கறி சங்க வியாபாரிகளை அழைத்து மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தினார். வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி தருவதாகவும், பொதுமக்கள் வந்து செல்ல வசதி செய்து தருவதாகவும் உறுதி அளித்தார்.

    அதன் பேரில் காய்கறி சங்க வியாபாரிகள் அங்கு செல்ல சம்மதம் தெரிவித்தனர். மேலூர் செக்கடி பஜாரில் இயங்கி வந்த தினசரி காய்கறி மார்க்கெட் புதிய கடைகள் கட்டும் வரை சந்தைப்பேட்டைக்கு தினசரி காய்கறி மார்க்கெட் மாற்றி நாளை முதல் அங்கு செயல்படும்.

    பொதுமக்கள் சந்தைப்பேட்டையில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் சென்று காய்கறி வாங்க நகராட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டனர்.

    • பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் தூய்மைப்பணிமேற்கொள்ளப்பட உள்ளது.
    • தன்னார்வலர்கள்இந்த சேவை பணியில் ஈடுபடுத்திக்கொள்ளலாம்.

    திருப்பூர்,

    திருப்பூர் மாநகராட்சி பகுதியை தூய்மை மாநகராட்சியாகமாற்றும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. என்குப்பை-என் பொறுப்பு-என் நகரம்-எனது பெருமை என்பதற்கேற்ப குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனதரம் பிரித்து வழங்க வேண்டும் என்று பொதுமக்களுக்குமாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாளை (சனிக்கிழமை) வடக்கு உழவர் சந்தை,தென்னம்பாளையம் தினசரி மற்றும் வார சந்தை பகுதியில்காலை பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் தூய்மைப்பணிமேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள், தன்னார்வலர்கள்இந்த சேவை பணியில் ஈடுபடுத்திக்கொள்ளலாம் என்றுஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    • வரத்து அதிகரிப்பு காரணமாக ஈரோடு மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விலை குறைந்தது
    • ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.

    ஈரோடு, ஜூன். 9-

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு கொடைக்கானல், திண்டுக்கல், பெரியகுளம், தேனி, கம்பம் போன்ற பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது. தினமும் 3 டன் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்நிலையில் திடீரென விளைச்சல் குறைந்ததால் மார்க்கெட்டுக்கு குறைந்த அளவே பழங்கள் விற்பனைக்கு வந்தன. எலுமிச்சை பழம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மேலும் கோடை காலம் என்பதால் அதன் தேவையும் அதிகரித்தது.

    இதனால் எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையானது. மேலும் கோவில் விசேஷங்கள் அதிக அளவில் தொடர்ந்து வந்ததால் எலுமிச்சம்பழம் தேவை அதிகரித்து தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே இருந்தது.

    இந்நிலையில் மீண்டும் எலுமிச்சம்பழம் விளைச்சல் அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டுக்கு எலுமிச்சம் பழங்கள் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இன்று கொடைக்கானல், திண்டுக்கல், பெரியகுளம், தேனி, கம்பம், பெங்களூர், சேலம், கோவை, திருச்சி போன்ற பகுதிகளிலிருந்து எலுமிச்சை பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இன்று மட்டும் 5 டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

    வரத்து அதிகரிக்க தொடங்கியதன் எதிரொலியாக விலையும் சரிய தொடங்கியது. இன்று ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.80-க்கு விற்பனை யானது. சில்லறையில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.5-க்கு விற்பனையானது. ஒரு கிலோவில் 22 முதல் 25 எலுமிச்சை பழங்கள் உள்ளன.

    குமாரபாளையம் நகராட்சி தலைவருடன் மார்க்கெட் வியாபாரிகள் சந்தித்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 28 லட்சம் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளது. கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    கட்டுமான பணிகள் நடைபெற பூமி பூஜையும் போடப்பட்டது. பணிகள் துரிதமாக நடைபெற பழைய மார்க்கெட் கட்டிடம் சேர்மன் விஜய்கண்ணன் உத்தரவுப்படி இடிக்கப்பட்டது.

    இந்நிலையில் குமாரபாளையம் தினசரி மார்க்கெட் சிறு வியாபாரிகள் நலச்சங்க தலைவர் வெங்கிடு என்கிற வெங்கடேசன், செயலர் விஸ்வநாதன், பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணனை நேரில் சந்தித்து, மார்க்கெட் பழைய இடத்திலிருந்து தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்டில் மாற்றி அமைத்தமைக்காக நன்றி தெரிவித்தனர்.

    இதே போல் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் துரைசாமி, செயலர் தாமோதரன், பொருளாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகளும் நகராட்சி தலைவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    மேலும் விடுபட்ட பகுதியில் மின் இணைப்பு கொடுக்க வேண்டும், வியாபாரிகளுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.

    • மேலூரில் ரூ.8.87 கோடியில் அரசு மருத்துவமனை, மார்க்கெட் கட்ட பூமி பூஜை நடந்தது.
    • நகராட்சி சேர்மன் முகமது யாசின் தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டது.

    மேலூர்

    மேலூர் அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் நகர்ப்புற ஆதரவற்றோர் மற்றும் நோயாளிகள், காப்பாளர்கள் தங்கும் இல்லம், தினசரி மார்க்கெட்டில் ரூ.7.87 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுடன் கூடிய 185 புதிய கடைகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.

    நகராட்சி சேர்மன் முகமது யாசின் தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், அரசு தலைமை மருத்துவர் ஜெயந்தி, மருத்துவர் செந்தில் குமார், துணைத்தலைவர் இளஞ்செழியன், என்ஜினீயர் பட்டுராஜன், கவுன்சிலர்கள் சைபு நிஷா அலாவுதீன், கமால் மைதீன், பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×